என் மலர்
நீங்கள் தேடியது "Corporation commissioner"
- திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி கருதப்படுகிறது.
- தகவல்களுக்கு 155304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர்பவன்குமார் ஜி.கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனமாக சொத்துவரி கருதப்படுகிறது. சொத்துவரி, தொழில்வரி போன்ற வரிகள் மூலம் பெறப்படும் வருவாயினை கொண்டு, திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தூய்மைப் பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பொது மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குதல் போன்ற சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 31.12.2022ல் சொத்துவரி ரூ. 50.73 கோடி, காலியிட வரி ரூ. 1.75 கோடி, தொழில் வரி ரூ.2.21 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.11.84 கோடி, வாடகை - குத்தகை இனங்கள் ரூ.3.56 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 46 லட்சம் என மொத்தம் ரூ. 79.13 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 31.1.2023ல் சொத்துவரி ரூ. 66.47 கோடி, காலியிட வரி ரூ. 1.99 கோடி, தொழில் வரி ரூ.2.53 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.15.66 கோடி, வாடகை -குத்தகை இனங்கள் ரூ.3.66 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 58 லட்சம் என மொத்தம் ரூ. 101.83 கோடி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
அதன்படி 16.2.2023ல் சொத்துவரி ரூ. 73.66 கோடி, காலியிட வரி ரூ. 2.12 கோடி, தொழில் வரி ரூ. 3.20 கோடி, குடிநீர் கட்டணம் ரூ.17.68 கோடி, வாடகை - குத்தகை இனங்கள் ரூ. 3.68 கோடி, பாதாள சாக்கடை கட்டணம் ரூ. 64 லட்சம் என மொத்தம் ரூ. 13.58 கோடி பொது மக்கள் கட்டணங்களாக செலுத்தியுள்ளனர்.
மேற்கண்ட தகவலின்படி டிசம்பர் 2022 ல் 36.36 சதவீதமும், ஜனவரி 2023ல் 44.22 சதவீதமும் பிப்ரவரி 2023 நாளது வரை 47.96 சதவீதமும் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வரி, வாடகை மற்றும் குத்தகை இனங்கள் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் விடுமுறை நாட்களில் வரி செலுத்த ஏதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகங்கள், குமரன் வணிக வளாகம், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாக செலுத்தமேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் தகவல்களுக்கு 155304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எளிய முறையில் இணையதளம் வழியாக வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தும் சேவையை பயன்படுத்த.Use "Quick Payment" or "Register & Login" tohttps://tnurbanepay.tn.gov.in. மேலும்,அனைத்து மண்டலங்களிலும் சொத்துவரி மற்றும் காலியிடவரி வரி விதித்தல் தொடர்பிலும், பெயர் மாறுதல்கள் செய்தல் தொடர்பிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உரிய காலகெடுவிற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மேலப்பாளையம், பாளை விரிவாக்கப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட காலமானதால் அவற்றில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யுள்ளதாவது:-
நெல்லை மாநகராட்சி பகுதிகளான மேலப் பாளையம், பாளை விரிவாக்கப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட காலமானதால் அவற்றில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. இதனால் சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் அடிக்கடி தடங்கல் ஏற்படுகிறது.
இவ்வாறு குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்யும் பொருட்டு அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றை மாற்றுவதற்காக தனியாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டி னை போக்குவதற்கு நிரந்திர தீர்வாகவும் சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலை யத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யும் பழைய பிரதான குழாய்களை அகற்றி அங்கு புதிதாக குழாய் அமைப்பதற்காக ரூ.8.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மேலப்பாளை யம், பாளை விரிவாக்க பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்க தற்காலிகமாக மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் நிரந்தர தீர்வாக இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு அரியநாயகிபுரம் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சேவியர் காலனி குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டியில் இருந்து மகிழ்ச்சிநகர் மற்றும் ஆசிரியர்காலனி பகுதிகளில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி ஆசிரியர் காலனி, தமிழ்நகர், மகிழ்ச்சிநகர்,என்.ஜி.ஓ. 'பி' காலனி, எழில்நகர், திருமால்நகர், பெருமாள்புரம் சி காலனி, குமரேசன் காலனி,கனரா பேங்க் காலனி,பி.ஏ.பிள்ளை நகர் (தியாகராஜநகர்),எல்.கே.எஸ். நகர், அன்புநகர் ஆகிய இடங்களில் உள்ள 12 குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே தேவைப்படும் இடங்களில் சிறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மத்திகள் குடிநீர் விநியோகம் தொடர்பாக வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. மாநகராட்சி குடிநீர் விநியோக வால்வு களை மாநகராட்சி சம்பந்தமில்லாத நபர்கள் யாரேனும் இயக்கினால் அவர்கள் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 10-ந் தேதி முதல் அனுமதியற்ற பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், அனைத்து வணிக மற்றும் வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக, உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள், விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எனவே அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளையும் வருகிற 9-ந் தேதிக்குள் தாங்களாகவே அகற்றிட வேண்டும். இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலமாக வருகிற 10-ந் தேதி முதல் அனுமதியற்ற பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
- தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரோச் பார்க் அருகே தற்காலிகமாக ஒரு படகு குழாம் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தனர்.
- ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி நல்ல பெருமாள் பூங்கா மற்றும் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறை அமைப்பது குறித்தும், பழைய மாநகராட்சி அருகில் இருந்து ெரயில்வே நிலையம் செல்வதற்கு மக்களின் பயன்பாட்டில் ஏற்கனவே இருந்த பாதையை செப்பனிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் திறந்து விடுவது குறித்தும் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரோச் பார்க் அருகே தற்காலிகமாக ஒரு படகு குழாம் மற்றும் ஏற்கனவே கயாக்கியில் உள்ள படகு குழாமில் மாலை நேரத்திலும் பயன்படுத்தும் வகையில் மின் கோபுரம் அமைக்கும் பணிகளையும், முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன.
- நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், காலியிடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியன மாநகராட்சிக்கு பல்வேறு இனங்களில் வரி செலுத்துகின்றன. இவை தவிர மாநகராட்சி கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் ஏலம், குத்தகை அடிப்படையில் உரிமம் பெற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது. காலியிட வரியில் ரூ. 7.97 கோடி, தொழில் வரி ரூ.3.30 கோடி,குடிநீர் கட்டணம்ரூ. 18.81 கோடி, குத்தகை இனத்தில் ரூ. 15.05 கோடி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் ரூ. 13.61 கோடி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ. 1.81 கோடி நிலுவை உள்ளது. மொத்தம் 143.89 கோடி ரூபாய் வரியினங்கள் நிலுவையில் உள்ளது. பல கோடி ரூபாய் வரிகள் செலுத்தப்படாமல் உள்ளன. நிர்வாகத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டப்பணிகள்,குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, அலுவலக பராமரிப்பு மற்றும் ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், ரோடுகள் பராமரிப்பு, கடன்களுக்கான வட்டி, தவணை செலுத்துதல் என மாநகராட்சி நிர்வாகம் கடுமையாகத் தள்ளாடிக் கொண்டுள்ளது.
எனவே மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய வகையில் பொதுமக்கள் செலுத்தி சீரான நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கமிஷனர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். வரி செலுத்துவோர் வசதிக்காக மைய அலுவலகம், வரி வசூல் மையங்கள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9:30 மணி முதல் மாலை5 மணி வரை செலுத்தலாம். மேலும் ஆன்லைன் வாயிலாகhttps://tnurbanepay.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மாநகரத்தில் உள்ள மேம்பால தூண்களில் பசுமை செடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
- செடிகளை பராமரிப்பதற்காக சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டு, மேல்நிலை தொட்டியில் இருந்து குழாய்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
நெல்லை:
சென்னை மாநகரத்தில் உள்ள மேம்பால தூண்களில் பசுமை செடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது பெரிய அளவில் தடுக்கப்படுகிறது.
அதேபோல் நெல்லை மாநகரத்தின் மையப்பகுதியில் உள்ள வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதியில் உள்ள தூண்களில் பசுமை செடிகள் அமைக்க மாநகராட்சி கமிஷன் சிவகிருஷ்ணமூர்த்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதன் முதல் கட்டமாக தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பசுமை செடிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மேம்பால தூண்களில் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு அதில் பசுமை செடிகள் நடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செடிகளை பராமரிப்பதற்காக சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டு, மேல்நிலை தொட்டியில் இருந்து குழாய்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
விரைவில் அனைத்து தூண்களிலும் செடிகள் அமைக்கப்படும் என கமிஷனர் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு வகையான மூலிகை செடிகளும் நட்டு பராமரிக்கப்படும் என்றும், வண்ணார்பேட்டை எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளதால் சுற்றுச்சூழலை பராமரிக்கும் வண்ணம் பசுமை செடிகள் நடப்பட்டுள்ளதாக கமிஷனர் தெரிவித்துள்ளார். மாநகராட்சி கமிஷனரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- நெல்லை மாநகர பகுதியில் தற்போது ஓரளவு குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது.
- பாளை மண்டலத்தில் சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் பெரும் அளவில் கண்டுபிடிக்கப்பட்டன.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி யில் உள்ள 4 மண்டலங்களிலும் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு
இங்குள்ள மக்களுக்கு தினமும் சராசரியாக 75 முதல் 79 எம்.எல்.டி. குடி தண்ணீர் தேவைப்படுகிறது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு மாநகரப் பகுதியில் ஓடி தூத்துக்குடி மாவட்டத்தை அடைகிறது.
இதன் காரணமாக மாநகரப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்கக் கூடாது. ஆனால் ஆற்றின் கரையை ஒட்டி அமைந்திருக்கும் கொக்கிரகுளம் பகுதியில் கூட வாரம் ஒரு முறை தான் தண்ணீர் கிடைக்கிறது என்ற நிலைதான் தற்போது நெல்லை மாநகராட்சியில் நிலவி வருகிறது.
அரியநாயகிபுரம் திட்டம்
மொத்த தேவையான 79 எம்.எல்.டி. தண்ணீருக்கு இதுவரை பழைய திட்டத்தின்படி 47 முதல் 48 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே மாநகரப் பகுதி மக்களுக்கு கிடைத்து வந்தது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட அரியநாயகிபுரம் திட்டத்தின் மூலம் இந்த குடிநீர் தேவை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போது 65 எம்.எல்.டி. தண்ணீர் கிடைப்பதால் மாநகர பகுதியில் ஓரளவு குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது. குறிப்பாக நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம் மண்ட லங்களில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு பெரு மளவுக்கு குறைந்துள்ளது.
பாளை மண்டலம்
ஆனால் பாளை மண்ட லத்தில் மட்டும் குறிப்பாக அந்த மண்டலத்துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளில் மட்டும் குடிநீர் தட்டுப்பாடு என்பது இன்னும் தீரவில்லை.
இதற்காக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
ஆனாலும் தொடர்ந்து அந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து கொண்டு தான் இருக்கிறது.
மின்மோட்டார்கள்
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:-
பாளை மண்டலத் துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் குடிநீரை மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுக்கிறார்கள். இது தொடர்பாக பலமுறை மனு அளித்து இருக்கிறோம்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் பெரும் அளவில் பாளை மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. 2 நாட்களுக்கு முன்பு குடிநீர் உறிஞ்சிய 59 மின் மோட்டார்கள் அந்த மண்டலத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
செயற்கை தட்டுப்பாடு
இந்த பகுதியில் செயற்கையாக தான் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. ஒரு சில குடிநீர் வால்வு ஆபரேட்டர்கள் அரசியல் பிரமுகர்களுக்கு சாதகமாக செயல்பட்டு அவர்களுக்கு தேவையான நபர்கள் உள்ள தெருக்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது.
எனவே செயற்கை குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் கண்டுபிடித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என்று ஆதங்கமாக கூறினர்.
இது தொடர்பாக கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, பாளை பகுதியில் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதாக தகவல் கிடைத்ததால் அங்கு சிறப்பு குழு மூலமாக அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் 59 சட்ட விரோத மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இது போன்ற செயற்கை குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கம்ப்யூட்டர் மூலம் தண்ணீர் சப்ளை மேற்கொள்ள திட்டம் செயல்படுத்த உள்ளோம். முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கல் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வார்டுக்கும் எத்தனை மணிக்கு தண்ணீர் திறந்து விடப்படும், எத்தனை மணிக்கு தண்ணீர் நிறுத்தப்படும், எவ்வளவு தண்ணீர் ஒரு வார்டுக்கு தேவை என்று அனைத்து விபரங்களும் கம்யூட்டரில் ஏற்றப்பட்டு அதன் மூலம் எவ்வித தட்டுப்பாடும் இன்றி குடிநீர் சப்ளை செய்ய ஒரு திட்டத்தை பரிசீலனை செய்து வருகிறோம்.
இது தவிர பாளை மண்டலம் விரிவாக்கப் பகுதிகளில் மாற்று ஏற்பாடாக முறப்பநாட்டில் இருந்து வரும் குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் சப்ளை செய்வதற்கு ஒரு திட்டம் பரிசீலனையில் உள்ளது.
விரைவில் அந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் விரிவாக்கப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறைக்கப்படும். வால்வு ஆபரேட்டர்கள் குறித்து தொடர்ந்து புகார் வந்ததால் முருகேசன், மந்திரம் என்ற 2 பேரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்துள்ளோம். தொடர்ந்து வேறு எந்த பகுதியிலும் இது போல் புகார்கள் வந்தால் அங்கும் வால்வு ஆபரேட்டர்கள் மாற்றம் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநகர பகுதி சாலைகளில் மாடுகள் சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததது
- மாடுகளை பிடித்து மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி அருகே உள்ள வாட்டர்டேங்க் பகுதிக்கு கொண்டு வந்து கட்டி வைத்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றிதிரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.
அதிரடி உத்தரவு
இதனால் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை பிடித்து அவற்றை ஏலம் விடுமாறு மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
நேற்று மேலப்பாளையம் மண்டலத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு அவை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வைத்து ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் வசூல் கிடைத்தது.
2-வது நாள்
இந்நிலையில் இன்று 2-வது நாளாக பாளை மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மண்டல உதவி கமிஷனர் ஜகாங்கீர் பாஷா மேற்பார்வையில் மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி அருகே உள்ள வாட்டர்டேங்க் பகுதிக்கு கொண்டு வந்து கட்டி வைத்தனர்.
தொடர்ந்து அந்த மாடுகளை ஏலம் விடப்படுவதாக அறிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் அங்கு வந்து முற்றுகையிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உதவி கமிஷனரிடம் மாட்டின் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாடுகள் தெருக்களில் தான் சுற்றிதிரிந்தது. சாலைகளில் நாங்கள் விடவில்லை. மேலும் நீங்கள் பிடித்து வந்திருப்பது அனைத்தும் பசுமாடுகள். எனவே அவைகளை ஏலம் விடாமல் அபராதத்தொகை மட்டும் விதித்து எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கூறினர்.
ஆனாலும் ஏற்கனவே உத்தரவிட்டபடி ஏலம் தொடர்ந்து நடைபெற்றது. இதனையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- தேர்வு செய்யப்படும் இலச்சினை வடிவமைத்தவருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
- திட்டத்துக்கான லச்சினை (லோகோ) வடிவமைக்கப்பட உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியை திறன்மிகு மாநகராட்சியாக மேம்படுத்தும் வகையில் 'திறன்மிகு திருப்பூர்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சியில் தொழில் வளர்ச்சி பெருக்கவும், பசுமை மாநகராட்சியாக வளப்படுத்தவும், தொழிலாளர் நலன் காக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும், மாநகரை அழகுபடுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்துக்கான லச்சினை (லோகோ) வடிவமைக்கப்பட உள்ளது. திறன்மிகு திருப்பூர் திட்டத்துக்கு இலச்சினை வடிவமைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இலச்சினையை வடிவமைத்து protiruppurcorp@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் இலச்சினை வடிவமைத்தவருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.