search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamiraparani river"

    • தன்னார்வ தொண்டு அமைப்புகளும் சாப்பாடு, பிரட், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
    • பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாலகங்கள் முன்பு நீண்ட வரிசையின் நின்று பால் பாக்கெட்டுகள் வாங்கி சென்றனர்.

    நெல்லை:

    நெல்லையில் பெய்த மிக கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாநகர பகுதி மற்றும் மாவட்டத்தில் தாமிரபரணி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் முற்றிலுமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு 75 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சுமார் 3,500 பேர் நேற்று முன்தினம் முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் மாநகர பகுதியில் மட்டும் 12 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில் தன்னார்வலர்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு உதவினர். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தன்னார்வ தொண்டு அமைப்புகளும் சாப்பாடு, பிரட், பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.

    இன்று மழை குறைந்துவிட்டதால் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. சந்திப்பு சிந்துப்பூந்துறை உள்ளிட்ட பகுதியில் படகு மூலம் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. சுமார் 20 படகுகள் மூலமாக பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மழை வெள்ளத்தின் காரணமாக சுமார் 36 கிராமங்கள் மற்றும் 2 பேரூராட்சிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    மாநகரில் பொதுமக்களின் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாக கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பாலகங்கள் முன்பு நீண்ட வரிசையின் நின்று பால் பாக்கெட்டுகள் வாங்கி சென்றனர்.

    • மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இன்று காலை வரை அதிகபட்சமாக அம்பையில் 49 மில்லி மீட்டரும், கருப்பா நதி பகுதியில் 35 மில்லி மீட்டரும், ஆய்க்குடியில் 32 மில்லி மீட்டரும், கடம்பூரில் 40 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

    இதே போல் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, நாங்குநேரி, கடனாநதி பகுதி, ராமநதி பகுதி குண்டாறு பகுதி, கொடு முடியாறு பகுதி, அடவி நயினார் அணைக்கட்டு, சங்கரன்கோவில், சிவகிரி, தூத்துக்குடி, கயத்தாறு, கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் வைப்பாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    ஏற்கனவே பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிர பரணி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப் படுகிறது.

    இந்நிலையில் முக்கூடல், அரியநாயகிபுரம் அணைக்கட்டை கடந்து தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 5,400 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவை குண்டம் அணை கட்டு பகுதிகள் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிர பரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் நெல்லை மாவட்ட தாமிரபரணி பகுதிகளை கடந்து தண்ணீர் செல்வதால் நெல்லை மாவட்டத்திலும் தாமிர பரணி ஆற்றுக்கு செல்வோர் கவனமாக இருக்குமாறும், முடிந்த அளவு கரையோரம் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 120.70 அடியாக உள்ளது. அணைக்கு 870.509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 407.25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதே போல் மணி முத்தாறு அணையின் நீர்மட்டம் 86.30 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 133.89 கன அடியாகவும் உள்ளது. இதே போல் தென்காசி மாவட்ட அணைகளை பொறுத்த வரையில் குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 அடியை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. அடவி நயினார் அணை நீர்மட்டம் 113.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.88 அடியாகவும், ராமநதி அணை 82 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளது. கடனா நதி அணை 81.40 அடியாக உள்ளது.

    • மேலப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கழிவு நீர் நேரடியாக பாளையங்கால்வாயில் கலந்து வருகிறது.
    • மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உடனடியாக ஆற்றில் நேரடியாக கலக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    நெல்லை தாமிரபரணி ஆற்றில் சில இடங்களில் அடிக்கடி கழிவு நீர் கலந்து ஓடுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மேலப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கழிவு நீர் நேரடியாக பாளையங்கால்வாயில் கலந்து வருகிறது. அந்த சாக்கடை தண்ணீர் மேலநத்தம் பகுதியில் நேரடியாக ஆற்றில் கலந்து நீர், கருப்பு நிறமாக காட்சி அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இன்று காலை ஆற்றில் குளிக்க சென்ற பொது மக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சாக்கடை நீர் கலப்பது குறித்து அந்தப் பகுதி கவுன்சிலரிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேலநத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் செல்லும் நீரை பாட்டில்களில் பிடித்து வைத்துள்ளனர். அதனை கலெக்டரிடம் காண்பித்து நிரந்தர தீர்வு காண மனு அளிக்க உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உடனடியாக ஆற்றில் நேரடியாக கலக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, இதுபற்றிய தகவல் என்னுடைய கவனத்திற்கு காலையில் வநதது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்களை அனுப்பி சாக்கடை நீர் தாமிரபரணி நதியில் கலப்பதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    • ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த நாட்களுக்கு எல்லாம் மகுடமாக இருப்பது ஆடிப்பெருக்கு நாள் ஆகும்.
    • தாமிரபரணி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

    நெல்லை:

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த நாட்களுக்கு எல்லாம் மகுடமாக இருப்பது ஆடிப்பெருக்கு நாள் ஆகும். ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ந்தேதியை குறிக்கும்.

    இந்த நாளில் பெண்கள் தங்களது கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி ஆற்றங்கரை யோரம் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். பெண் குழந்தைகளுக்கு கழுத்திலும், ஆண்களுக்கு கையிலும் மஞ்சள் கயிறு கட்டி விடுவார்கள்.

    திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர். இதன் மூலமாக அவர்களுக்கு அடுத்த ஆடி மாதத்திற்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளான இன்று நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தாமிரபரணி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.

    தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். இதைத் தொடர்ந்து பெண்கள் நதிக்கரைகளில் தாலி பிரித்து கோர்த்தனர். இளம் வயது பெண்கள், சுமங்கலி பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
    • நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆறு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்தப்பகுதி களுக்கு செல்லக்கூடிய குடிநீர், தற்போது சாக்கடை கலந்து துர்நாற்றம் வீசுவதால் பொது மக்கள் குடிக்க முடியாத நிலைக்கு மாறி வருவதாக புகார் எழுந்து வருகிறது.

    மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

    நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி நேற்று தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதியான மீனாட்சி புரம், சிந்துபூந்துறை, குறுக்குத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து நெல்லை மாந கராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-

    நெல்லை மாநகரப் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக நீண்டகாலமாக புகார்கள் உள்ளது. இதை தடுக்க ரூ.295 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதில் 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.

    ஒரு குழுவை அமைத்து மாநகராட்சி பகுதியில் தாமிர பரணி ஆற்றின் நதிக்கரைகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் கட்டமாக நோட்டீஸ் வழங்க உள்ளோம். மேலும் அந்தந்த பகுதியில் கழிவுநீர் ஓடைகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காத வண்ணம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளோம். மேலும் அவர்கள் வீட்டிற்கு அருகே பாதாள சாக்கடை திட்டம் இருந்தால் பாதாள சாக்கடை திட்டத்தில் உடனடியாக அந்த இணைப்புகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீண்டும் அதேபோல் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாங்களே அவர்கள் வீட்டிற்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

    ஆய்வின்போது, முன்னாள் மண்டல சேர்மனும், 3-வது வார்டு கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் எஸ்.வி.சுரேஷ், கண்ணன், செல்வம், சிவா, போஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் தன்னார்வலர்கள் சிலர் இணைந்து ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது குளிக்க வரும் பொதுமக்கள் ஆற்றுக்குள் விட்டுச் சென்ற கந்தல் துணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

    முக்கூடல்:

    முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் தன்னார்வலர்கள் சிலர் இணைந்து ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குளிக்க வரும் பொதுமக்கள் ஆற்றுக்குள் விட்டுச் சென்ற கந்தல் துணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

    மேலும் ஆற்றின் கரைகள் மற்றும் தண்ணீரில் கிடந்த மது பாட்டில்களையும் அவர்கள் அகற்றினர். இதில் சுமார் 1½ டன் அளவிலான குப்பை கழிவுகள் அகற்றப்பட்டதாக தன்னார்வலர்கள் தெரி வித்தனர். மது பாட்டில்கள் மற்றும் கண்ணாடி துண்டுகளை சமூக விரோதிகள் ஆற்றுக்குள் வீசுவதால் அப்பகுதியில் குளிக்க வரும் பொது மக்க ளுக்கு காயம் ஏற்பட்டு மிகுந்த சிரம த்திற் குள்ளவ தாகவும் அவர்கள் கூறினார். தாமாக முன் வந்து ஆற்றை சுத்தம் செய்த தன்னார் வலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • நெல்லை வண்ணார் பேட்டையில் பேரிடர் மீட்பு குழு சார்பில் மாநகர போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி இன்று நடைபெற்றது.
    • பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் நடந்த இந்த ஒத்திகை பயிற்சியில் மாநகர பகுதியை சேர்ந்த சுமார் 60 போலீசார் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டையில் பேரிடர் மீட்பு குழு சார்பில் மாநகர போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி இன்று நடைபெற்றது.

    மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா மேற்பார்வையில் வண்ணார்பேட்டை பேராச்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் நடந்த இந்த ஒத்திகை பயிற்சியில் மாநகர பகுதியை சேர்ந்த சுமார் 60 போலீசார் கலந்து கொண்டனர்.

    வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதால் சென்னை யில் இருந்து பயிற்சி அளிப்பதற்காக பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாநகர போலீசாருக்கு கடந்த 2 நாட்களாக எழுத்துத்தேர்வு பயிற்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் அதில் சிக்கிய வர்களை மீட்பது எப்படி என்பது குறித்து இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது படகில் எவ்வாறு சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் போலீசாருக்கு எடுத்துரைத்தனர்.

    • மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.
    • அஞ்சலி செலுத்த வந்த கட்சியினர் அரசு விருந்தினர் மாளிகை அருகே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்து சென்று தாமிரபரணி ஆற்றில் மரியாதை செலுத்தினர்.

    நெல்லை:

    மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியானார்கள். இந்த சம்பவத்தின் 23- வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் தாமிரபரணி ஆற்றில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் நீலகிருஷ்ணமுரளி யாதவ், மாவட்ட செயலாளர் குட்டி என்ற வெங்கடாசலபதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் லெட்சுமணன் தலைமையில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் காசி விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் உடையார், மாநகர தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் பொதுச்செயலாளர் பால முருகன் நிர்வாகிகள் முத்து கருப்பன், பிரேம்குமார், பால்ராஜ், பச்சை தங்கவேலு. சிவாஜி உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நிர்வாகிகள் நெல்லையப்பன், துரைபாண்டியன் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர். தமிழர் விடுதலை களம் சார்பில் முத்துகுமார், தமிழர் உரிமை மீட்பு களத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையில் நிர்வாகிகள் மரியாதை ெசலுத்தினர். அஞ்சலி செலுத்த வந்த கட்சியினர் வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்து சென்று தாமிரபரணி ஆற்றில் மரியாதை செலுத்தினர்.

    ×