search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "floodplain"

    • வெள்ளப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது.
    • கால்வாய்களை உருவாக்கி தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், நகரின் நீர் சேமிப்புத் திறனை மேம்படுத்தவும் அடையாறு மற்றும் கோவளம் ஆற்றுப் படுகைகளில் உள்ள 200 நீர் நிலைகளை இணைக்க அரசு திட்டமிட்டு உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர், ஆதனூர், மண்ணிவாக்கம் பகுதிகளில் போதுமான சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால் 90 சதவீத மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை கருத்தில் கொண்டு ஆங்காங்கே நீர்நிலைகளை தூர்வாரி இணைப்பு கால்வாய்களை உருவாக்கி தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    அடையாறு படுகையில் 196 குளங்களில் 134, கோவளம் படுகையில் உள்ள 120 குளங்களில் 66 நீர் நிலைகளை கட்அண்ட் கவர் முறையில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள கால்வாய்களை தூர்வாரி அதிகப்படியான தண்ணீரை நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வசதியாக தரைமட்டத்திற்கு கீழே மூடப்பட்ட கட்டமைப்புடன் வடிகால் கட்டப்படும். இவற்றை ஜப்பான் சர்வ தேச கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் செயல்படுத்த திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் தண்ணீர் தேவை ஆண்டுக்கு தற்போது 22 டி.எம்.சி.யாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழில் துறை விரிவாக்கம் காரணமாக 2030-ம் ஆண்டுக்குள் 28 டி.எம்.சி.யாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய நகரின் நீர்நிலைகளின் சேமிப்புத் திறனை அதிகரிப்பது இன்றியமையாதது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில்-வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
    • அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

    கடலூர்:

    கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர்அணையில் இருந்து உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு ,திருச்சி வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளதால் கொள்ளிடத்தில் 2 கரைகளையும் தொட்டு வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது. இந்த வெள்ளம் எய்யலூரில் புகுந்து உள்ளது. இதனால் கரையோரத்தில் உள்ள சொர்ணபுரீஸ்வரர் கோவிலை மூழ்கடிக்கும் வண்ணம் தண்ணீர் செல்கிறது. அந்த பகுதி யில் வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்து உள்ள தால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்து க்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    ×