கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு கோவில்-வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில்-வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்
கோவிலை சூழ்ந்த  தண்ணீரை படத்தில் காணலாம். 
கோவிலை சூழ்ந்த தண்ணீரை படத்தில் காணலாம். 
Published on

கடலூர்:

கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர்அணையில் இருந்து உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு ,திருச்சி வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளதால் கொள்ளிடத்தில் 2 கரைகளையும் தொட்டு வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது. இந்த வெள்ளம் எய்யலூரில் புகுந்து உள்ளது. இதனால் கரையோரத்தில் உள்ள சொர்ணபுரீஸ்வரர் கோவிலை மூழ்கடிக்கும் வண்ணம் தண்ணீர் செல்கிறது. அந்த பகுதி யில் வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்து உள்ள தால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்து க்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com