search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tenpenna River"

    • சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
    • ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர்.

    கடலூர்:

    பொங்கல் திருவிழா கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்று திருவிழா இன்று நடந்தது.

    இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர் வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நானமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன. சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.

    கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடினர். ஆற்று கரையோரம் கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இங்கு பொருட்கள், குழந்தைகளுக்காண விளையாட்டு பொருட்கள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர். இந்த கிழங்கினை ஏராளமானோர் வாங்கிச்சென்றனர். . ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ம் நாள் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆற்று திருவிழா இன்று நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. 

    • வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. ஆனால் தமிழகத்தில் மழை நீடித்தபடி உள்ளது. இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
    • தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சித்தேரி, கொமந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. ஆனால் தமிழகத்தில் மழை நீடித்தபடி உள்ளது. இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

    மேலும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் சாத்தனூர் அணை முழு கொள்ளளவு எட்டியது இதனால் அணையின் பாதுகாப்பு கருதி சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தென் பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக தண்ணீர் தெளிந்த நிலையில் சென்றது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் அதிக அளவில் இருகரையும் தொட்டு செல்கிறது.

    இந்த நிலையில் பாகூரில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒரே நாளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் பாகூர் பகுதி 21 ஏரிகளில் பாகூர் உள்பட 18 ஏரிகள் நிரம்பியது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சித்தேரி, கொமந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

    சித்தேரி கொமந்தான்மேடு தடுப்பணை வழியாக யாரும் செல்லாத வகையில் போலீசார் பேரிகார்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீன் பிடித்தவர்களை போலீசார் எச்சரிக்கை அனுப்பி வைத்தனர்.

    • பண்ருட்டி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • மேட்டூர் பகுதியில் கனமழைகாரணமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர்அணைக்குநீர்வரத்துஅதிகரித்துள்ளது.

    கடலூர்:

    மேட்டூர் பகுதியில் கனமழைகாரணமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர்அணைக்குநீர்வரத்துஅதிகரித்துள்ளது. இதனால் சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    சாத்தனூர் அணையிலிருந்து நீர் வரத்து வர தொடங்கியதால் கடலூர்மாவட்டம்பண்ருட்டி, எனதிரிமங்கலம், கண்டரக்கோட்டை பகுதியில் தென்பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவி உள்ளது.

    இந்தஅணையின் மூலம் 100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரம் கிடைப்பதோடு 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.

    மேலும் பல்வேறு பகுதி்களுக்குசாத்தனூர்அணையின் மூலம்கூட்டு குடிநீர் திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணை வேகமாக நிரம்பி வருவதால் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால்சாத்தனூர் அணையை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்பெண்ணைஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல், இன்ஸ்பெக்டர் நந்தகுமார், துணை தாசில்தார் சிவக்குமார் நேரில்பார்வையிட்டுஆய்வுசெய்தனர் .

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் பெண்ணை ஆற்று நீரில் இறங்கி குளிக்கவோ செல்பி எடுக்கவோ கூடாது என அறிவித்துள்ளனர்.

    • தமிழக, கர்நாடக எல்லையில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    தமிழக, கர்நாடக எல்லையில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் கிருஷ்ணகிரி அணைகளில் இருந்தும் தென்பெண்ணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி சாத்தனூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    தென்பெண்ணை ஆற்றில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், படிப்படியாக குறைந்து சொர்ணவூர் அணைக்கட்டுக்கு தற்போது 4000 கன அடி நீர் வருகிறது. அனைத்து நீரும் கடலில் கலக்கிறது. ஆனாலும், தென்பெண்ணை கரையோர மக்களுக்கு தொடர்ந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கால் சித்தேரி மற்றும் கொமந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கி இருந்த நிலையில் தற்போது நீர் வடிந்து வருகிறது. மேலும் கொமந்ததான் மேடு தரைப்பாலத்தில் பாலத்தை இணைக்கக் கூடிய மண் சாலை அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. தண்ணீர் அளவு குறைந்தால் தரை பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியுமா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.

    தென்பெண்ணை சொர்ணாவூர் அணைக்கட்டிலிருந்து பங்காரு வாய்க்கால் மூலம் பாகூர் ஏரிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 3 மீட்டர் உயரமுள்ள பாகூர் ஏரி தற்போது 2.10 மீட்டருக்கு நிரம்பி உள்ளது. மேலும் சில நாட்களில் பாகூர் ஏரி நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×