search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic disruption"

    • கனமழை காரணமாக பச்சை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
    • பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 8கி.மீ. தூரம் சுற்றி மாற்று பாதையில் சென்று வருகின்றனர்.

    பழனி:

    பழனி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கன மழை கொட்டி தீர்த்தது. மேலும் பழனியை அடுத்துள்ள பெருமாள் புதூர், பெரியம்மாபட்டி, பச்சையாறு கிராமங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெருமாள்புதூர் கிராமத்திற்கு முன்பாக பச்சை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆற்றின் குறுக்கே கிராம மக்கள் கடந்து செல்லும் வகையில் தற்காலிகமாக மண்ணைக் கொட்டி பாதை அமைத்துக் கொடுத்து ள்ளனர். கன மழை காரணமாக பச்சை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

    தற்போது பாலம் சேதமடைந்துள்ளதால் பச்சையாறு கிராமத்திலிருந்து பெருமாள்புதூர் கிராமத்திற்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 8கி.மீ. தூரம் சுற்றி மாற்று பாதையில் சென்று வருகின்றனர். உடனடி யாக தற்காலிக பாதையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பாலம் சீரமைப்பு உடனடியாக நடைபெறாது என்பதால் மேலும் சில நாட்களுக்கு பணியில் தொய்வு ஏற்படும் எனவும் தெரிகிறது.

    • விருதுநகர் அருகே திருச்சுழி ஓடையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருச்சுழி

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தென் மாவட் டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாலை முதல் விருதுநகர் மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது.

    சில இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. திருச்சுழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்தது. இதன் காரணமாக மறவர் பெருங்குடி ஓடை யில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடக்க முடியாமல் கடும் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் நகர், காரியாபட்டி, சிவகாசி, சாத்தூர், வத்திராயிருப்பு போன்ற பகுதிகளில் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகள் மும்முரமடைந்துள்து.

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருச்சுழி-81, காரியா பட்டி-13.2, ஸ்ரீவில்லி புத்தூர்-3.3, விருதுநகர்-91, சாத்தூர்-15.2, சிவகாசி-28.4, பிளவக்கல் அணை-22.6, வத்திராயிருப்பு-31.2, கோவிலாங்குளம்-58.3, வெம்பக்கோட்டை-14.2, அருப்புக்கோட்டை-40.

    மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 398.4 மில்லி மீட்டர் ஆகும்.

    • கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டது.
    • மூணாறிலிருந்து சின்னக்கானல், பூப்பாறை மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் குஞ்சித்த ண்ணி, ராஜாக்காடு திருப்பி விடப்படுகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மூணாறு பகுதி யில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

    கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மூணாறிலிருந்து சின்னக்கானல், பூப்பாறை மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் குஞ்சித்த ண்ணி, ராஜாக்காடு திருப்பி விடப்படுகிறது. கேப்ரோ ட்டில் பாதுகாப்பற்ற சாலை நிர்மாணம் காரணமாகவே அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனை தொடர்ந்து கேப்ரோடு பகுதியில் உருண்டு விழுந்த பாறைகள் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கனமழை காரணமாக அப்பகுதியை சேர்ந்த அன்னக்கிளி என்பவரின் வீடு இடிந்தது. ராஜாக்காடு ஊராட்சிக்குட்பட்ட மம்பட்டிகானம் பகுதியில் சுரேஷ் என்பவரின் வீடு மீது மரம் முறிந்து விழுந்த தில் சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர் மழை காரணமாக போடிமெட்டு-மூணாறு சாலையில் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.

    வாகன ங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


    • தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அழைத்து சென்று பல்வேறு பணிகளை வழங்குவர்.
    • தொழிலாளர்களை பஸ் நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி நிற்க போலீசார் கூறினர்.

    கடலூர்:

    விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் கூலித் தொழிலாளர்கள் நிற்பதற்கு மாற்று இடம் வழங்கியதால் சாலை மறியல். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை யில் மும்முனை சந்திப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் எதிரில் விருத்தாசலம் அடுத்த சிக்கலூர், விளங்காட்டூர், கண்டபாங்குறிச்சி, பரனூர், பரவலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தினமும் காலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கட்டுமான பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் வருவர். இவர்களை இங்கு வரும் என்ஜினியர்கள் மற்றும் கட்டுமான மேஸ்திரிகள் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அழைத்து சென்று பல்வேறு பணிகளை வழங்குவர்.

    மும்முனை சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தம் எதிரில் 200-க்கும் மேற்பட்டோர் நிற்பதால், இவர்களை பணிக்கு அழைக்க 100-க்கும் மேற்பட்டோர் வருதா லும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நேற்று காலை விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்ய னார் மற்றும் போலீ சார் அதிரடியாக பாலக்கரை பஸ் நிறுத்தத் திற்கு வந்து அங்கு நின்றிருந்த 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களை பஸ் நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி நிற்க போலீ சார் கூறினர். இதனையடுத்து இன்று காலை அனைத்து கூலித் தொழிலாளர்களும் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் ஒன்று திரண்டு அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கூலித்தொழிலாளிகள் கூறியதாவது:-

    நாங்கள் நீண்ட நாட்களாக பாலக்கரை பஸ் நிருத்தம் அருகே நின்று தான் வேலைக்கு செல்வோம். தற்போது நீங்கள் எங்களை மாற்று இடத்தில் நிற்க கூறினர். ஆனால் காலையில் இங்கு வந்து எங்களை அழைத்து கொண்டு சென்று பணி வழங்கும் கட்டுமான மேஸ்திரிகள், என்ஜினி யர்கள் வழக்கமான இடத்தில் நாங்கள் நிறகிறோமா என்று பார்த்துவிட்டு நாங்கள் இல்லை என்று நினைத்து விட்டு அவர்கள் சென்று விடுகின்றனர் இதனால் நாங்கள் வேலையின்றி அல்லல்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே நாங்கள் வழக்கமாக நிற்கும் இடத்தில் நிற்கிறோம் என்று கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கூலித் தொழிலாளர்கள் கூறி யதை கேட்ட போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாத வண்ணம் சிறிது தூரம் தள்ளி நில்லுங்கள் என்று கூறினர். பின்னர் போலீ சார் அங்கு பேரி கார்டை அமைத்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழி லாளர்களை அப்புறப் படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது.

    • இதற்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் நாட்டாமங்கலம் கூட்டுரோட்டில திரண்டனர்.
    • இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது.

    விழுப்பபுரம்:

    செஞ்சி அருகே உள்ள வல்லம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் நாட்டா மங்கலம் கூட்டு ரோட்டில திரண் டனர். அங்கு ஆர்ப்பாட்டத்திற்காக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் அ.தி.மு.க.பிரமுகர்கள் பேசிக்கொண்டு இருந்தனர் .அப்போது நாட்டாமங்கலம் கூட்டு ரோட்டிற்கு வந்த தி.மு.க.வினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டதற்கு இனிப்பு வழங்க முற்பட்டனர்.

    அவர்கள் அ.தி.மு.க.வினர்ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த இடத்தில் பட்டாசு வெடித்ததுடன் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த இடத்தை கடந்து சென்று பஸ் நிலையத்தில் இனிப்பு வழங்கினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. நாங்கள் ஏற்கனவே அனுமதி பெற்று ஆர்ப்பா ட்டம் செய்யும் இடத்தில் தி.மு.க.வினருக்கு எப்படி அனுமதி வழங்கலாம் என போலீசாரை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சென்னை-கும்பகோணம் சாலையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடு வெட்டி பகுதியில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைக்காக சாலை விரிவாக்க பணி மேற்கொள் ளப்பட்டு சாலை யில் மண் குவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மழை நீர் தேங்கி தெருக்களில் புகும் அபாயம்ஏற்பட்டது. மேலும் இது சம்பந்தமாக அவ்வப்போது நெடுஞ்சா லை களில் விபத்தும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வட கிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலையில் நீர் தேங்கி இருந்தது. இதனை அகற்று வதற்கு பலமுறை நெடுஞ்சா லை துறை அதி காரி மற்றும் வட்டாட்சி யரிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் குடையுடன் காடுவெட்டி குருவின் மகன் குரு கணல ரசன் தலைமையில் பொது மக்கள் ஒன்று திரண்டு சென்னை- கும்ப கோணம் சாலையில் திடீர் மறியல் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்த மீன்சு ருட்டி மற்றும் சோழத் தரம் போலீசார் மற்றும் ஜெயங் கொண்டம் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு உடனடியாக மண் குவி யல்கள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டதுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.

    • காய்கறிகள் வாங்குவதற்காக தினம்தோறும் உழவர் சந்தைக்கு வந்து செல்கின்றனர்.
    • வாகனங்கள் ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தையில் உடுமலை மற்றும் கிராம பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உடுமலை மட்டுமன்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் காய்கறிகள் வாங்குவதற்காக தினம்தோறும் உழவர் சந்தைக்கு வந்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பொது மக்கள் வரும் வாகனங்கள் ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. மேலும் வடக்கு பகுதியில் செல்லும் ரோட்டில் ரோட்டை அடைத்து இரண்டு புறமும் தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்படுவதால் வாகனங்கள் அந்த வழியாக உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்ததை சரி செய்ய போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை வெங்கடகிருஷ்ணா ரோட்டில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு உடுமலை வெங்கட கிருஷ்ணா ரோட்டில் வாகனங்களை ரோட்டிலும் ஓரங்களிலும் தாறுமாறாக நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது இதனால் இந்த வழியாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு வாகனங்கள் இடையூறாக இருக்கிறது. மேலும் இந்த வழியாகத்தான் சந்தைக்கு செல்ல வேண்டும். பெரும்பாலானோர் இந்த வழியைத் தான் பயன்படுத்துகின்றனர். மேலும் சந்தை நாட்களில் இந்த ரோட்டில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்வதால் ரோட்டை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே போக்குவரத்து இடையூறு ஏற்படும் நேரங்களில் காவலர்களை நிறுத்தி போக்குவரத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்ட கல்வராயன்மலையில் 3 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • பாலத்தை பயன்படுத்தி தான் அந்த 3 கிராம மக்களும் சென்று வருவார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியம் சேராப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட தும்பராம்பட்டு. தாழ்தும்பராம்பட்டு.. காட்டுகொட்டாய் என மூன்று கிராமம் உள்ளது இந்த 3 கிராமத்திலும் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அந்த 3 கிராமத்திற்கும் செல்ல வேண்டுமென்றால் தும்பராம்பட்டு கிராமத்தில் ஆறு உள்ளது. இந்த ஆற்றை கடந்துதான் 3 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் இதனால் ஆற்றின் குறுக்கே தரைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்தி தான் அந்த 3 கிராம மக்களும் சென்று வருவார்கள். இந்த 3 கிராமத்திற்கு தேவையான ரேஷன் பொருட்கள் பால் வண்டிகள் சென்று வரும் இந்நிலையில் இந்த தரைபாலம் கடந்த ஒரு வருடம் முன்பு பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு ஒத்தையடி பாதை வழியாக சென்று வந்தார்கள். இதனால் மூன்று கிராமத்திற்கு செல்லக்கூடிய ரேஷன் பொருட்கள் பால் வண்டிகள் கூட அந்த கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு ஒரு வருட காலமாக பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சேதமடைந்த பாலம்் அருகே புதிதாக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதற்காக காலையிலே 9 மணிக்கு அந்த மூன்று கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் தினந்தோறும் தும்பரம்பட்டு ஆற்றுக்கு வந்து அடித்துச் செல்லப்பட்ட பாலம் அருகே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டு கற்கள் சிமெண்ட் பைப்புகள் பயன்படுத்தி ஆற்றின் குறுக்கே போட்டு தற்காலிகமாக பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளை நம்பியது போதும் அதனால் களத்தில் நாமலே இறங்கலாம் என்று அப்பகுதி மக்கள் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இது தற்காலிக பாலம் தான் தவிர நிரந்தரம பாலம் அல்ல எங்களுக்கு புதிதாக மேம்பாலம் கட்டி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நேற்று இரவு ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
    • லவ்டேல் டி.எப்.எல்.பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது. இதனால் சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மண்சரிவும் ஏற்பட்டது.

    ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. வீடுகள் சேதம் அடைந்தனர். கடந்த சில தினங்களாக மழை சற்று ஒய்ந்து காணப்படுகிறது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.

    இந்த நிலையில் நேற்று இரவு ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீரும் தேங்கியது.

    இன்று காலை ஊட்டி அடுத்த லவ்டேல் டி.எப்.எல்.பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

    தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மணல் குவியல்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சாலை ஓரம் உள்ள மணல்களை அகற்றாமல் உள்ளதால் விபத்து ஏற்பட்டு விலை மதிப்பு இல்லாத மனித உயிர்கள் பலியாக கூடிய நிலை ஏற்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மதுரை - செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இரு புறங்களிலும் மணல் திட்டுகள் நிறைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் மணல் திட்டில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாக கூடிய நிலைமை ஏற்படுகிறது.

    இதனை தடுக்கும் விதமாக உடனடியாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் நகரின் ஆரம்பப்பகுதியான ராமகிருஷ்ணாபுரம் முதல் நகர் எல்லை முடியும் பகுதி மடவார் வளாகம் வரை உள்ள 2 புறங்களிலும் சாலை ஓரத்தில் உள்ள மணல் குவியல்களை அகற்றி வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மணல் குவியல்களால் பல நேரங்களில் அதிவேகமாக எதிரே வரும் வாகனத்தை கவனித்து ரோட்டை கடக்க வாகன ஓட்டிகள் சாலையில் ஓரப்பகுதிக்கு செல்லும் போது சாலையில் மணலால் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைகின்றனர்.

    இதுகுறித்து பல்வேறு வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஓரம் உள்ள மணல்களை அகற்றாமல் உள்ளதால் விபத்து ஏற்பட்டு விலை மதிப்பு இல்லாத மனித உயிர்கள் பலியாக கூடிய நிலை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் வாகன விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

    ×