

திருச்சுழி
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக தென் மாவட் டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாலை முதல் விருதுநகர் மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது.
சில இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. திருச்சுழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்தது. இதன் காரணமாக மறவர் பெருங்குடி ஓடை யில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடக்க முடியாமல் கடும் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் நகர், காரியாபட்டி, சிவகாசி, சாத்தூர், வத்திராயிருப்பு போன்ற பகுதிகளில் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகள் மும்முரமடைந்துள்து.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருச்சுழி-81, காரியா பட்டி-13.2, ஸ்ரீவில்லி புத்தூர்-3.3, விருதுநகர்-91, சாத்தூர்-15.2, சிவகாசி-28.4, பிளவக்கல் அணை-22.6, வத்திராயிருப்பு-31.2, கோவிலாங்குளம்-58.3, வெம்பக்கோட்டை-14.2, அருப்புக்கோட்டை-40.
மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 398.4 மில்லி மீட்டர் ஆகும்.