விருத்தாசலத்தில் தொழிலாளர்கள் நிற்பதற்கு மாற்று இடம் வழங்கியதால் சாலை மறியல்

தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அழைத்து சென்று பல்வேறு பணிகளை வழங்குவர்.தொழிலாளர்களை பஸ் நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி நிற்க போலீசார் கூறினர்.
சாலை விபத்தில் ஈடுபட்ட கூலித்தொழிலாளர்களை படத்தில் காணலாம்.
சாலை விபத்தில் ஈடுபட்ட கூலித்தொழிலாளர்களை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் கூலித் தொழிலாளர்கள் நிற்பதற்கு மாற்று இடம் வழங்கியதால் சாலை மறியல். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை யில் மும்முனை சந்திப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் எதிரில் விருத்தாசலம் அடுத்த சிக்கலூர், விளங்காட்டூர், கண்டபாங்குறிச்சி, பரனூர், பரவலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் தினமும் காலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கட்டுமான பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் வருவர். இவர்களை இங்கு வரும் என்ஜினியர்கள் மற்றும் கட்டுமான மேஸ்திரிகள் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அழைத்து சென்று பல்வேறு பணிகளை வழங்குவர்.

மும்முனை சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தம் எதிரில் 200-க்கும் மேற்பட்டோர் நிற்பதால், இவர்களை பணிக்கு அழைக்க 100-க்கும் மேற்பட்டோர் வருதா லும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நேற்று காலை விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்ய னார் மற்றும் போலீ சார் அதிரடியாக பாலக்கரை பஸ் நிறுத்தத் திற்கு வந்து அங்கு நின்றிருந்த 200-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களை பஸ் நிறுத்தத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி நிற்க போலீ சார் கூறினர். இதனையடுத்து இன்று காலை அனைத்து கூலித் தொழிலாளர்களும் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் ஒன்று திரண்டு அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கூலித்தொழிலாளிகள் கூறியதாவது:-

நாங்கள் நீண்ட நாட்களாக பாலக்கரை பஸ் நிருத்தம் அருகே நின்று தான் வேலைக்கு செல்வோம். தற்போது நீங்கள் எங்களை மாற்று இடத்தில் நிற்க கூறினர். ஆனால் காலையில் இங்கு வந்து எங்களை அழைத்து கொண்டு சென்று பணி வழங்கும் கட்டுமான மேஸ்திரிகள், என்ஜினி யர்கள் வழக்கமான இடத்தில் நாங்கள் நிறகிறோமா என்று பார்த்துவிட்டு நாங்கள் இல்லை என்று நினைத்து விட்டு அவர்கள் சென்று விடுகின்றனர் இதனால் நாங்கள் வேலையின்றி அல்லல்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே நாங்கள் வழக்கமாக நிற்கும் இடத்தில் நிற்கிறோம் என்று கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கூலித் தொழிலாளர்கள் கூறி யதை கேட்ட போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாத வண்ணம் சிறிது தூரம் தள்ளி நில்லுங்கள் என்று கூறினர். பின்னர் போலீ சார் அங்கு பேரி கார்டை அமைத்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழி லாளர்களை அப்புறப் படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com