search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roadblocks"

    • பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
    • மத்திய தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    தொழிலாளர்களுக்கு மாதம் 26 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் , வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும், ரெயில்வே, பாதுகாப்பு , மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.

    ஒப்பந்த தொழிலாளர் முறையை முற்றாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில் இன்று பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    அதன் ஒரு பகுதியாக இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி அமைப்பினர் திருப்பூர் ரெயில் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் குமரன் நினைவகத்தில் இருந்துகோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத்தினர் மத்திய தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் திருப்பூர் குமரன் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    • புதிய சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.
    • அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் செல்லும் சாலை பழுதடைந்து சேதம் அடைந்துள்ளது. இதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு புதிய சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் புதிய சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

    இதே போல் வனப்பகுதியில் சுற்றி அகழிகள் அமைக்காமல் யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும், இது குறித்து வனத்துறையினரிடம் கூறினால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வலியுறுத்தியும், இதே போல் மலைப்பகுதியில் தொலை தொடர்பு சேவை இல்லாததால் அவசரகால உதவிக்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், இங்கு உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை ஆசனூர் ஆரேப்பாளையம் பிரிவு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் தங்களது குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மலை கிராம மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் வாகனங்கள் 2 புறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம், வட்டாட்சியர் ரவிசங்கர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    சாலை மறியல்

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்ந்து இன்று காலை ஓமலூரில் இருந்து மாட்டுக்காரன்புதூர் செல்லும் சாலையில் தும்பிப்பாடி ஊராட்சி ஒட்டதெரு பகுதியில் அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உப்பு தண்ணீரை குடிப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், எனவே சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ேபாக்குவரத்து பாதிப்பு

    உடனடியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மது போதையில் இளைஞர்களுக்கிடையே மோதல்-சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் வடபுறம் சர்ச் தெரு, எதிர்புறம் 7 தெருக்களும் உள்ளன. இதில் இரு சமுதாயத்தினர் குடியிருந்து வருகின்றனர்.

    நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்ச் தெரு பகுதியில் சில இளை ஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் அந்த பகுதியில் 7-வது தெருவை சேர்ந்த இளை ஞர்கள் சென்று கொண்டி ருந்தனர். அப்போது மது அருந்திவிட்டு மதுபாட்டில் களை தட்டி விட்டதாக கூறப்படுகிறது.

    இதில் இருதரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சர்ச் தெருவை சேர்ந்த ஏசா. மணிகண்டன், மணி உள்ளிட்ட 4 இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப் பட்டது. இதை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் பழைய பஸ் நிலையம் அருகே மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்பொழுது விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அந்த வழியாக வந்த பொழுது அவர் வாகனத்தை மறித்து தங்கள் பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட னர். உடனடியாக போலீசார் அவர்களை அப்புற படுத்தினர்.

    பின்னர் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த மறியல் போ ராட்டத்தால் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    • 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அனைவரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
    • அதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அப்பகுதியில் உள்ள கோவில் நிலம் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அண்ணா நகர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அனைவரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அப்பகுதியில் உள்ள கோவில் நிலம் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவில் இடத்திற்கு தற்போது கம்பி வேலி அமைத்து வழக்கமாக செல்லும் பாதை மறிக்கப்பட்டதால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் செல்ல முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் உடனடியாக அந்த கம்பி வேலியை அகற்ற வலியுறுத்தி ஜேடர்பாளையம்- திருச்செங்கோடு பிரதான சாலையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 72-வது வார்டு பைக்காரா பகுதியில் இ.பி. காலனி, முத்துராமலிங்க புரம், திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    மேலும் குடிநீரோடு கழிவுநீர் சேர்ந்து வருவதால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பல்வேறு தெருக்களில் குடிநீர் சரி வர வருவ தில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறபப்படுகிறது.

    இதுகுறித்து சில நாட்க ளுக்கு முன்பு நடந்த மாநகராட்சி குறைதீர்க்கும் முகாமிலும் புகார் அளித்த தாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிைலயில் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்தனர். அவர்களிடம் தங்களது குறைகளை முறையிட்டு பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.

    அவர்களை சமாதானப் படுத்திய சுவிதா விமல் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். அதன் பின்னர் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பிரதான சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை- திருமங்கலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்ட லத்தில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. மேற்கு மண்டலத்திற்கு என தனியாக பொக்லைன், ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்கள் மாநகராட்சி யால் வழங்கப்படவில்லை.

    இதனால் வேறு மண்ட லங்களில் உள்ள எந்திரங் களை நாட வேண்டி உள்ளது. அங்கும் பணிகள் இருக்கும்பட்சத்தில் எந்திரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் கழிவுநீர், மழைநீர் வடிகால் பாதைகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • இதனையடுத்து விவசாயிகள் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    காவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவாக சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வ தற்காக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை நோக்கி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பம் பகுதியில் விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார், சென்னைக்கு செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனை யடுத்து விவசாயிகள் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இருந்தபோதும் போலீசார் அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கரும்பு மற்றும் நெற்பயிர்களை கையில் பிடித்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் ஈடுபட்ட விவசா யிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சென்னை போராட்ட த்திற்கு செல்ல அனுமதி அளித்த னர். தொடர்ந்து விவசாயி கள் தங்கள் மறியலை கைவி ட்டனர். விவசாயி களின் இந்த மறியல் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் இன்று நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித் துறை அறிவித்தி ருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி இன்று நடந்தது.

    இந்த நிலையில் விருது நகர் மாவட்ட பள்ளி ஆசிரி யர்களுக்கு விருது நகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இன்று காலை பயிற்சி நடைபெறும் கல்லூரிக்கு வந்த

    200-க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததால் அதிருப்தியடைந்தனர். அவர்கள் பயிற்சியை புறக்கணித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போதிய அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத கல்லூரியில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மையத்திற்கு வந்து செல்வது மற்றும் பயிற்சியில் பங்கேற்பது சிரமமாக உள்ளதாகவும், இதனால் பயிற்சியை வேறு மையத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அப்போது அவர்கள் கூறினர்.

    போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அங்கிருந்த கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

    • குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், காமாட்சி உள்பட போலீசார் மறியலில் ஈடு பட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே உள்ள செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக கிடைக்க வில்லை.

    இது குறித்து பல முறை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டியிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் ஊராட்சி நிர் வாகம் சார்பில் அருகில் உள்ள கம்மாயில் போர் வெல் போட்டு குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்தனர்.

    இதில் தனிநபர் ஒருவர் குடிநீர் எடுக்கக் கூடாது என்று தகராறு செய்ததாக வும் இதனால் இக்கிராமத் திற்கு குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை கீழப்பட்டி அரசு பள்ளி மெயின் ரோட்டில் காலி குளத்துடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகே சன், காமாட்சி உள்பட போலீசார் மறியலில் ஈடு பட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் குடிநீர் பிரச் சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • மேல்மலையனூர் அருகே மழைநீர் கால்வாய் சரி செய்ய கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
    • அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே தேவனூர் கிராமத்தில் கீழண்டை தெரு உள்ளது. இப்பகுதியில் மழை பெய்தால் கால்வாய்மூலம் தண்ணீர் வெளியேறும்படி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு ஒரு பாலம் உயர்த்திக் கட்டியதாலும் சிலரது ஆக்கிரமிப்பாலும் மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி உள்ளது. அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தேவனூர-கெங்கபுரம் சாலையில் இன்று காலை 10.15 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    மழைநீர் வீதியில் தேங்காதவாறு இருந்தது. தற்போது கீழண்டை தெரு ஆரம்பத்தில் ஒரு சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்து தண்ணீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கவில்லை இதனால் கடந்த சில நாட்களாக பெய்யும் மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி உள்ளது.மேலும் வீட்டின் உட்புறம் தண்ணீர் தேங்கியதால் இரவு முழுவதும் தூங்காமல் வீட்டில் தேங்கிய நீரை வெளியேற்றி வருகிறோம். மழைநீர் செல்லும் இடத்தில் சிலர் ஆக்கிரமித்து இருப்பதால் கால்வாய் அமைக்க முடியாத நிலை உள்ளது. இதை நாங்கள்அதிகாரிகளிடம் முறையிட்டும், மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சாலைமறியல் குறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சம்பந்தப்பட்ட அதிகரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கிளியனூர் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • நேற்றிரவு அதே ஊரைச் சேர்ந்த மணி கண்டன் (35), சண்முகம் (30), கார்த்திக் (29) ஆகியோருடன் புதுவை நோக்கி காரில் சென்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தந்தி ராயன்பேட்டையை சேர்ந்த வர் சந்திரன் (வயது 40). இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராகவும், கவுன்சிலராகவும் உள்ளார். இவர் நேற்றிரவு அதே ஊரைச் சேர்ந்த மணி கண்டன் (35), சண்முகம் (30), கார்த்திக் (29) ஆகியோருடன் புதுவை நோக்கி காரில் சென்றார். அப்போது கிளியனூர் அருகே தென் கோடிப்பாக்கம் மேம்பா லத்தை கடந்தபோது, சாலை யில் இருந்த தடுப்புக் கட்டை யில் மோதி கார் விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த கவுன்சிலர் சந்திரன் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அந்த ஊரைச் சேர்ந்த பொது மக்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இத்தகவல் அறிந்து தென்கோடி பாக்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர். மேம்பாலம் அருகில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் இங்கு அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனால் இங்கு உயர்மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்க வேண்டு மென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், இன்ஸ்பெக்டர் பால முரளி மற்றும் போலீ சார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நெடுஞ்சா லைத் துறை அதிகாரி கள் வந்து உயர்மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்க உறுதியளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோ மென பொதுமக்கள் கூறினர். இதையடுத்து நெடுஞ்சா லைத் துறை அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் பேசி னார். ஒரு மாதகாலத்திற்குள் மேம்பாலம் பகுதியில் உயர்மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்கப்படு மென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதி யளித்ததாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் கூறினார். இதனையேற்ற பொது மக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் புதுவை - திண்டிவனம் சாலையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நகராட்சியின் 8,9-வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
    • தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கிய பெரும் பகுதி ஆகும். இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    குடிநீர் வினியோகம் இல்லை

    இந்த நிலையில் நகராட்சியின் 8,9-வது வார்டுகளை சேர்ந்த கைலாஷ் நகர், வேடப்பட்டி பிரிவு ரோடு, ஓமலூர் மெயின் ரோடு, அருணாசலம் புதூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    சாலை மறியல்

    இதையடுத்து இப்பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திரண்டு வந்து 8-வது வார்டு உறுப்பினர் ஜெயந்தி தலைமையில் தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினர். மேலும் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    போக்குவரத்து பாதிப்பு

    அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் தாரமங்கலம் - ஓமலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×