search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
    X

    பசுமலை மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

    • மதுரை பசுமலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சி 93-வது வார்டுக்கு உட்பட்ட பசுமலை முனியாண்டிபுரம் கருணாநிதி நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இவர்கள் பலகாலமாக பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் மிகவும் சிரமப்பட்ட இப்பகுதி மக்கள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், திருமங்கலம் கோட்டாட்சியர், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

    அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பசுமலையில் மதுரை திருமங்கலம் சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சாலையின் இரு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் போலீசார் பொதுமக்களிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.மறியலால் சுமார் அரை மணி நேரம் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×