search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை-கும்பகோணம் சாலையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் போராட்டம்
    X

    தேங்கி நிற்கும் தண்ணீரில் பொதுமக்கள் குடைபிடித்தப்படி போராட்டம் நடத்தினர்.

    சென்னை-கும்பகோணம் சாலையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் போராட்டம்

    • சென்னை-கும்பகோணம் சாலையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடு வெட்டி பகுதியில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைக்காக சாலை விரிவாக்க பணி மேற்கொள் ளப்பட்டு சாலை யில் மண் குவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மழை நீர் தேங்கி தெருக்களில் புகும் அபாயம்ஏற்பட்டது. மேலும் இது சம்பந்தமாக அவ்வப்போது நெடுஞ்சா லை களில் விபத்தும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வட கிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலையில் நீர் தேங்கி இருந்தது. இதனை அகற்று வதற்கு பலமுறை நெடுஞ்சா லை துறை அதி காரி மற்றும் வட்டாட்சி யரிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் குடையுடன் காடுவெட்டி குருவின் மகன் குரு கணல ரசன் தலைமையில் பொது மக்கள் ஒன்று திரண்டு சென்னை- கும்ப கோணம் சாலையில் திடீர் மறியல் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்த மீன்சு ருட்டி மற்றும் சோழத் தரம் போலீசார் மற்றும் ஜெயங் கொண்டம் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு உடனடியாக மண் குவி யல்கள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டதுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×