search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து   பஸ்களை  சிறை பிடித்து  கிராம மக்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியல் செய்த பொது மக்களை படத்தில் காணலாம். 

    கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பஸ்களை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியல்

    • குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் நிற்பதாக புகார் மனு அளித்தனர்.
    • அரசு மற்றும் தனியார் பஸ்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேலூர் கிராமத்தில் முறையாக கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தராமல் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் நிற்பதாகவும் பலமுறை இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அங்கு தேங்கி நிற்கும் கழிவு நீர்களால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது என கூறினர்.

    எனவே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் வேப்பூர் -பெண்ணாடம் சாலையில் வேப்பூரில் இருந்து பெண்ணாடம் நோக்கி சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனி பாபு மற்றும் ஆவினங்குடி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை செய்து ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அதற்கான பணிகளை துவங்கி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×