search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிழா"

    • வருகிற 16-ந் தேதி தேர் முகூர்த்தகால் நடுதலும், 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
    • 17-ந்தேதி கம்பம் போடுதலும், 25-ந்தேதி பொங்கல் விழாவும், 26-ந்தேதி மறுஅபிஷேகமும் நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் அருகே உள்ள கண்ணபுரத்தில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் விக்ரம சோழீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு சித்ராபவுர்ணமி அன்று விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 16-ந் தேதி தேர் முகூர்த்தகால் நடுதலும், 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    வருகிற 23-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சாமி ரதத்திற்கு எழுந்தருளலும், பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது.

    கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) பூச்சாட்டுலுடன் பொங்கல் விழா தொடங்குகிறது. 17-ந்தேதி கம்பம் போடுதலும், 25-ந்தேதி பொங்கல் விழாவும், 26-ந்தேதி மறுஅபிஷேகமும் நடைபெற உள்ளது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாட்டுச்சந்தைக்கு கோவை, திருப்பூர். ஈரோடு, திண்டுக்கல், கரூர், மதுரை, திருவாரூர், திருச்சி, தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு புது காங்கேய இன மாடுகளை வியாபாரிகள் வாங்கிச்செல்வார்கள்.

    இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, நேற்று அமாவாசை முடிந்து இன்று பாட்டி அம்மை என்பதால் மாடுகளின் வரத்து குறைவாக உள்ளது. நாளை (புதன்கிழமை) மாடுகளின் வரத்து அதிகமாக இருக்கும் என்றனர். 

    • தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும்.
    • திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது பங்குனி மாதம் என்பதால் அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் நடக்கும் திருவிழாக்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற்று நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதேபோல் திருமண மண்டபங்களில் திருமணம், திருமண வரவேற்பு, வளைகாப்பு, காதுகுத்து உள்ளிட்ட எந்த வகையான நிகழ்ச்சிகள் நடத்தினாலும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். இதன் பேரில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் கோவில், சர்ச், மசூதிகளில் விழாக்கள் நடத்திட அனுமதி பெற அதன் நிர்வாகிகள் ஏராளமானோர் விண்ணப்பித்து அனுமதி பெற்று செல்கின்றனர்.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கோவில் விழாக்கள் நடத்திட முறையாக அனுமதி பெற வேண்டும். கோவில் நிர்வாகிகள் அனுமதிகேட்டு விண்ணப்பிக்கும்போது, அதன் உண்மை தன்மை ஆராய்ந்து உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி பெற்று கோவில் விழாக்கள் நடத்தும்போது, அவர்கள் எப்போது போல ஒலி பெருக்கிகள் வைத்து நிகழ்ச்சி நடத்தலாம்.

    ஆனால் அங்கு எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்தோ அல்லது வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்ளவும் கூடாது. அவ்வாறு செயல்பட்டால் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல் திருமண மண்டபங்களில் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் இதுவரை சர்ச், ரம்ஜான் பண்டிகையொட்டி மசூதியில் சிறப்பு தொழுகை நடத்துவது, ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் திருவிழா உள்ளிட்ட 80 மத வழிபாட்டு தலங்களில் விழாக்கள் நடத்திட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதில் 80 மத வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்திட தேர்தல் விதிமுறைகளின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • முக்கிய நிகழ்வான இலவச திருமணம் மற்றும் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
    • மணமக்களின் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு குடும்பம், குடும்பமாக சிவராத்திரிஸ்வரர் சாமியை தரிசனம் செய்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சின்கூடு அருகே உள்ள கபிலாநதி கரையில் அமைந்துள்ளது ஸ்ரீசுத்தூர் மடம் ஆதி ஜெகத்குரு சிவராத்திரிஸ்வரர் கோவில். ஒவ்வொரு ஆண்டும் இக்கோவில் திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒரு வார காலம் நடைபெறும். குறிப்பாக விழாவின் முக்கிய நிகழ்வான இலவச திருமணம் மற்றும் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நடப்பாண்டு கோவிலில் திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான இலவச திருமணம் மற்றும் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இலவச திருமண நிகழ்ச்சி ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. மணமக்களுக்கு மாங்கல்யம் வழங்கி நடத்தி வைத்தார். இந்த நிகழ்வில் சேலை உள்ளிட்ட பொருட்கள் மணமகள்களுக்கு வழங்கப்பட்டது. மணமகனுக்கு வேட்டி, சட்டை வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதிகளை சேர்ந்த 24 மணமக்கள் கலந்து கொண்டது குறுப்பிடத்தக்கதாகும். இத்திருமணத்தில் 118 ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஒரே அரங்கில் நடைபெற்றது.

    இந்த திருமண நிகழ்வில் மணமக்களின் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு குடும்பம், குடும்பமாக சிவராத்திரிஸ்வரர் சாமியை தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீசுத்தூர் மடம் ஏழை மக்களுக்கு இலவச திருமணம் செய்து வைத்ததன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை கொடுத்துள்ளது. இந்த திருமணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். 

    • தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி முப்பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம்.
    • கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஆர்.புதுப்பட்டியையொட்டியுள்ள போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. மலைவாழ் மக்களுக்கான இந்த கோவிலில் வருடம் தோறும் தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டி முப்பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    நேற்று வழக்கம்போல் விழா நடைபெற்றது. கள்ளவழி கருப்பனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக 45 ஆடுகள், 60 பன்றிகள், 25 சேவல்கள், 2 ஆயிரம் கிலோ பச்சரிசியை காணிக்கையாக வழங்கினர்.

    இந்த விழாவில் ஆட்டு இறைச்சி 500 கிலோ, கோழி இறைச்சி 75 கிலோ, பன்றி இறைச்சி 1300 கிலோ என மொத்தம் 1875 கிலோ இறைச்சியை கொண்டு 50-க்கும் மேற்பட்டவர்கள் அசைவ உணவு சமைத்தனர். அதன் பிறகு பக்தர்களுக்கு விருந்து வழங்கினர். இந்த விருந்தில் புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, ஆயில் பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து அசைவ உணவு சாப்பிட்டனர்.

    • 89-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
    • விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மற்றும் வெளி மாநிலம், வெளி நாடுகளில் ஓட்டல்கள் நடத்தும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களுக்கு இந்த கோவில் குலதெய்வ கோவிலாக விளங்கி வருகிறது.

    வருடந்தோறும் முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து விமரிசையாக திருவிழா நடத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

    89-வது ஆண்டாக நடை பெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் தயார்செய்து அதிகாலை ஐந்து மணிக்கு கோவிலில் உள்ள கருப்பசாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.

    இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.

    இந்த பிரியாணியை பிரசாதமாக உண்டால் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம். இந்த விழாவின் போது பெண்பார்க்கும் படலமும் நடைபெறும் என பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
    • ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர்.

    கடலூர்:

    பொங்கல் திருவிழா கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்று திருவிழா இன்று நடந்தது.

    இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர் வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நானமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன. சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.

    கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடினர். ஆற்று கரையோரம் கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இங்கு பொருட்கள், குழந்தைகளுக்காண விளையாட்டு பொருட்கள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர். இந்த கிழங்கினை ஏராளமானோர் வாங்கிச்சென்றனர். . ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ம் நாள் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆற்று திருவிழா இன்று நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. 

    • சென்னை சங்கமத்தில் எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு திருவிழா.

    சென்னை தீவுத்திடலில் இன்று முதல் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேளம் கொட்டி தொடங்கி வைத்தார்.

    பிறகு, கலைநிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

    தமிழகத்தின் பாரம்பரியாத்தை பிரதிபலிக்கும் 40 வகையான கலைகளுடன் சென்னை சங்கமம் திருவிழா நடைபெறுகிறது.

    சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு சென்னை சங்கமம் திருவிழா நடைபெறுகிறது.

    • திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகள் நேர்த்திக் கடனாக விடப்பட்டு, கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.
    • சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் விருந்தை ருசி பார்த்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் கரடிக்கல் அருகே அனுப்பப்பட்டியில் உள்ளது கரும்பாறை முத்தையா கோவில். இந்த கிராமத்தின் காவல் தெய்வமாக கரும் பாறை முத்தையாவை வழிபட்டு வருகின்றனர். இங்கு மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ விருந்து திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.

    இந்த விழாவுக்கு, பிறந்த பச்சிளம் பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பங்கேற்க அனுமதி கிடையாது. ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகள் நேர்த்திக் கடனாக விடப்பட்டு, கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.

    கரடிக்கல், குன்னம்பட்டி, அனுப்பப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின்னர், கிடாய்களை இந்த கோவி லில் விட்டுச் செல்வார்கள். அப்படி விடப்பட்ட கிடாய்கள் இந்த கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் வயல்வெளிகளில் மேயும். கோவில் கிடாய்களை யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையா சாமியே தங்களது வயலில் இரை தேடுகிறார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


    இந்த ஆண்டு திருவிழாவில் நேர்த்திக்கடனாக விடப்பட்டு 62 ஆடுகள் கோவிலில் பலியிடப்பட்டன. பின்னர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட 85 மூடை அரிசியை கொண்டு 2 ஆயிரம் கிலோ சாதம் சமைத்து பிரமாண்ட அசைவ விருந்து தயாரானது. கம கம கறி வாசனையுடன் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.

    சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் விருந்தை ருசி பார்த்தனர்.

    கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவி லிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த அசைவ விருந்தை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காய்ந்து, அந்தப் பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோவிலில் சாமி கும்பிட வருவது வழக்கமாக .

    மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் திருவிழா விற்காக சிறிய கிடாய்கள் கோவில் வளாகத்தில் நேர்த்திக்கடனாகவும் விடப்பட்டன. 

    • இத்திருக்கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.
    • சித்திரை : திருவோணத்தில் நடராசர் அபிஷேகம்.

    நித்திய பூஜைகள்

    இத்திருக்கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

    அவையானவ:

    1. திருப்பள்ளி எழுச்சி காலை மணி 6.00 முதல் 7.00

    2. காலசந்தி காலை மணி 8.30 முதல் 10.00

    2. உச்சிக்காலம் காலை மணி 11.00 முதல் 12.00

    4. சாயரட்சை மாலை மணி 5.30 முதல் 6.30

    5. இரண்டாம் காலம் மாலை மணி 7.30 முதல் 8.30

    6. அர்த்தசாமம் இரவு மணி 8.30 முதல் 9.30

    திருவிழாக்கள்

    திங்கள் தோறும் நடைபெறுவன.

    சித்திரை: திருவோணத்தில் நடராசர் அபிஷேகம்.

    வைகாசி : அமாவாசையில் சிவப்பிரியர் மணி கர்ணிகையில் தீர்த்தமாடுதல், வெள்ளை யானைக்குச் சாப விமோசனம்.

    ஆனி: உத்திரத்தில் நடராசர் அபிஷேகம்.

    ஆடி: பட்டினத்தார் சிவதீட்சை பெறத் திருவெண்காட்டிற்கு வருதல், சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் மணிகர்ணிகையில் தீர்த்தம் கொடுத்தல், சிவபூஜை செய்வித்தல், இரவு இடப வாகனராய்க் காட்சி தருதல். அம்பாளுக்கு ஆடிப்பூர -பத்து நாள் விழா. ஆடி அமாவாசைக்கு சங்கமத்திற்கு சுவாமி எழுந்தருளல்.

    ஆவணி: வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிஷேகம். கோகுலாட்டமி பெருமாள் சேவை. விநாயகர் சதுர்த்தி. ஆவணி மூலம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.

    புரட்டாசி: வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிஷேகம். நிறைபணி, தேவேந்திரபூஜை, நவராத்திரி விழா, விசயதசமி அன்று சுவாமி மணிகர்ணிகை ஆற்றின் கரையில் அம்பு போடல், அம்பாளுக்கு இலட்சார்ச்சனை.

    ஐப்பசி: அசுபதியில் அன்னஆபிஷேகம், வளர்பிறை பிரதமை தொடங்கி கந்தசஷ்டி விழா.

    கார்த்திகை: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஸ்ரீ அகோர மூர்த்திக்கு அபிஷேகமும், பூஜையும் நடைபெறும். மூன்றாவது ஞாயிறு அன்று மகாருத்ராபிஷேகமும், விபூதி அலங்காரமும் நடைபெறும். சோமவாரந்தோறும் சுவேதாரண்யேசுவரருக்கு 1008 சங்கா அபிஷேகமும் நடைபெறும். பரணி, கார்த்திகை தீபவிழாக்கள்.

    மார்கழி: தனுர்மாத பூஜை, சதயத்தன்று மாணிக்கவாசகர் விழா, டோலோற்சவம் திருவாதிரையில் நடராசர் தரிசனம் நடைபெறும்.

    தை: சங்கராந்தி, மறுநாள் அம்பாள் கனுகுளிக்க மணிகர்ணிகைக்குப் போதல், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்குச் செல்லுதல். ஐயனாருக்குப் பந்துநாள் விழா. பிடாரிக்குப் பத்துநாள் விழா.

    மாசி: இந்திரப் பெருவிழா, வளர்பிறை துவாதசி புனர்பூசத்தில் கொடியேற்றம்.

    பங்குனி: சுக்லபட்சப் பிரதமையில் அகோரமூர்த்திக்கு இலட்சார்ச்சனை ஆரம்பம், பங்குனி உத்திரத்தில் (பவுர்ணமியில்) பூர்த்தி, மறுதினம் விடையாற்றி.

    • 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் அசன உணவு வழங்கப்பட்டது.
    • தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பழமை வாய்ந்த உலக மீட்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் மாலை சிறப்பு திருப்பலி, இறைமக்களுக்கு அசன உணவும் வழங்கப் பட்டது. நேற்று முன்தினம் நற் கருணை பவனி நடை பெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை பங்கு ஆலயத்தில் வெய்கா லிப்பட்டி புனித ஜோசப் கல்வியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயலர் அருட்பணி சகாய ஜான், பண்டாரகுளம் பங்குத் தந்தை அருட்பணி மிக்கேல் ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி னர்.

    இதைதொடர்ந்து திருத்தேர் அர்ச்சிக்கப்பட்டது. உலக மீட்பர் திரு உருவ தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி ஆலங் குளம்-தென்காசி சாலை வழியாக அண்ணாநகர் மற்றும் ஆலங் குளத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது. தேர் பவனியில் இறைமக்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் உலக மீட்பர் ஆலயம் பங்குத்தந்தை அருட்பணி எஸ்.எம்.அருள் ராஜ் மற்றும் வின்சென்ட் தே பவுல் சபை இறை மக்கள் செய்திருந்தனர்.

    • நாளை மறுநாள் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது
    • 9 மணிக்கு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நிகழ்ச்சியும், மாபெரும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    என். ஜி. ஓ. காலனி :

    குமரி மாவட்டம் பறக்கை அருகே உள்ள புல்லுவிளை யில் பெருமாள் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு அந்தப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இந்தக் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 6:30 மணிக்கு சிறப்பு பூஜையும், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணிக்கு பஜனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜையும், 7.30 மணிக்கு சாமி, வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வருதல் ஆகியவையும் நடக்கிறது.

    விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு முகிலன்விளை ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் பஜனை குழுவினரின் பக்தி இன்னிசை பாடல்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு கடல் நீராட செல்லுதல் நிகழ்ச்சியும், 8 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் 21 வகை காய்கறிகள் படைத்து பூஜையும், பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், பகல் 1 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. ெதாடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், 7 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவராக ஆஞ்சநேயர் வாகனத்தில் திருக்கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலும், 8:00 மணிக்கு சமயவகுப்பு மாணவ, மாணவி யரின் கலை நிகழ்ச்சி களும் நடை பெறுகிறது.

    விழாவின் 8-ம் நாளான நாளை காலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜையும், 7 மணிக்கு பக்தர்கள் சிங்காரி மேளதா ளத்துடன் சொக்கப்பனை வெட்ட செல்லுதல் நிகழ்ச்சியும், பகல் 11 மணிக்கு சொக்கப்பனை நாட்டுதல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு திருக்கார்த்திகை சிறப்பு பூஜையும், 1 மணிக்கு மகா அன்னதானமும், மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் போட்டியும், இரவு 8 மணிக்கு ராஜமேளமும், 9 மணிக்கு சாஸ்தா கதை வில்லிசையும், 11 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜையும், 11.30 மணிக்கு பெருமாள் சுவாமி கதை வில்லிசையும், நள்ளிரவு 1 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு அலங்கார தீபாரா தனையும் நடைபெறுகிறது.

    9-ம் திருநாளான நாளை மறுநாள் (27-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவராக ஆஞ்சநேயர் வாகனத்தில் பக்தர்கள் புடை சூழ மேளதாளத்துடன் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், 4.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும், 5:30 மணிக்கு வான வேடிக்கையும், 6.30 மணிக்கு சிறப்பு பூஜையும், 8 மணிக்கு ராஜ மேளமும், 9 மணிக்கு வில்லிசையும், பகல் 1 மணிக்கு பெருமாள் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அலங்கார தீபாராதணைகளும், மாலை 3 மணிக்கு வண்ண கோலப் போட்டியும், பிற்பகல் 3:30 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவரராக சிங்காரி மேளதாளத்துடன் பக்தர்கள் புடை சூழ வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அலங்கார தீபாராதனையும், 8:30 மணிக்கு சோமாண்டி கதை வில்லிசையும் நடைபெறு கிறது.

    விழாவின் 10-ம் நாளான 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வில்லிசையும், நண்பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவரராக கருடர் வாகனத்தில் திருக்கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும், 7:30 மணிக்கு சிறப்பு பூஜையும், 8.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலும், 9 மணிக்கு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மாபெரும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருக்கார்த்திகை திரு விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் சுரேஷ், செயலாளர் அய்யப்பன், துணைச் செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் பாஸ்கர் மற்றும் ஊர் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • கால்வின் மருத்துவமனை சார்பில் நடக்கிறது
    • இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே பட்டகசாலியன்விளையில் கால்வின் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை சார்பில் நாகர்கோவில் கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவி ழாவை முன்னிட்டு பொது மக்கள் பயன்பெறும் வகை யில் ஆலய திருவிழாவின் அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்லும்பாதை அருகே இலவச கண் மருத்துவ முகாம் நடை பெறுகிறது.

    முகாமானது இன்று (25-ந்தேதி) முதல் 5-ம் நாள் திருவிழா வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், 6-ம் நாள் திருவிழா முதல் திருவிழா வின் கடைசி நாள் வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை பெறுகிறது.

    இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

    மேலும் மருத்துவ குழுவினரால் கண் பரிசோதனை செய்யப் பட்டு பரிசோத னைக்கு பிறகு தேவைப்படும் நபர்க ளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி விலையில் கண் கண்ணாடி கள் வாங்கிக்கொள்ளலாம். மேலும் கண்புரை உள்ள வர்களுக்கு குறைந்த செல வில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் முகா மில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    ×