என் மலர்
நீங்கள் தேடியது "திருவிழா"
- அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம்.
- ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.
பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து, முருகனை வேண்டினால், பிறவிப் பலனையும், நாற்பத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இந்த விரதத்தை கடைபிடித்தால்,
அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம் எனப் புராணங்கள் கூறுகின்றன.
அதே நேரம் வருடம் முழுவதும் ஒழுக்கக் கேடாக இருந்து விட்டுப் பலன்கள் பெறும் நோக்கோடு
பங்குனி உத்திர விரதத்தை மட்டும் தொடர்ந்து இருப்பவர்களை சூரியன் சுட்டெரித்து விடுவான் என சூரிய புராணம் எச்சரிக்கிறது.
ஏனெனில் பாவங்களை சுட்டுப்பொசுக்கக்கூடிய உத்திர நட்சத்திரத்தின் அதிபதியான சூரியன்,
மார்கழி மாதம் துவங்கி புரட்டாசி மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக சக்தி பெற்று பங்குனியில் உச்சத்தை நோக்கிச் செல்கின்றான்.
முருகனுக்கு உகந்த இந்நாளில், சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக் கோலத்தில் நினைத்து தியானம் செய்து,
வீட்டிலோ அல்லது ஆலயத்திற்கு சென்றோ வழிபட்டு,
ஒரு தம்பதியருக்கு வயிறு நிரம்ப உணவும், உடுத்திக் கொள்ள வேட்டி, புடவையும் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்து வந்தால் முருகப்பெருமாளின் அருளோடு சிவபெருமானின் அருளையும் பெறலாம்.
- இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.
- அன்று தல விருட்சமான குரா மரம் பூக்கள் நிறைந்து எழில் பொங்கக் காட்சி தரும்.
சிதம்பரம்-சீர்காழி பேருந்து சாலையில் சிதம்பரத்திலிருந்து 5 கி.மீ ெதாலைவில் இருக்கிறது கொள்ளிடம்.
இத்தலத்தில் உள்ள புலீஸ்வரி அம்மன் மிகவும் பிரசித்தமானவள்.
இக்கோயிலின் தல விருட்சம் குராமரம். இந்த மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.
இக்கோயிலில் பங்குதி உத்திரத் திருவிழா நடக்கும் போது தான் அந்த அற்புதம் நிகழ்கிறது.
திருவிழாவின் முதல் நாள் இங்கு கொடியேற்றம் நடத்துவார்கள்.
அன்று தல விருட்சமான குரா மரம் பூக்கள் நிறைந்து எழில் பொங்கக் காட்சி தரும்.
திருவிழா நடக்கும் 10 நாட்களும் இம்மரத்தில் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும்.
பதினோராம் நாள் திருவிழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்து கொடியினை இறக்குவார்கள்.
அன்றைய தினம் தலமரமான குராமரத்தில் இருந்து எல்லா மலர்களும் உதிர்ந்து பேசுகின்றன.
தெய்வத் திருவிழாவான பங்குனி உத்திரவிழாவில் நடக்கும் இந்த அற்புதம் கண்டவர்கள் மெய்சிலித்துப் போவது கண்கூடான உண்மை.
- ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்.
- இந்நாளில் தான் முருகன் தெய்வானை திருமணமும் நடந்தேறியது
வைகாசி விசாகம், தைப்பூசம் போன்றே கந்தக் கடவுளுக்கும் உகந்த திருநாளாக பங்குனி உத்திரம் திகழ்கிறது.
தெய்வத் திருமணங்கள் நடந்தேறிய இந்நாளில் தான் முருகன் தெய்வானை திருமணமும் நடந்தேறியது
மேலும் முருகப் பெருமானின் இச்சா சக்தியான வள்ளி அவதரித்த திருநாளும் இந்த பங்குனி உத்திர திருநாள் என கந்தபுராணம் பேசுகிறது.
திருமுருகன் மகிமைப் பெற்ற இந்நாளில் முருகன் திருத்தலங்கள் அனைத்தும் திருவிழா காண்கின்றன.
பங்குனிப் பெருவிழா காணும் பழனியில் பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து கந்தனை தரிசிப்பது வழக்கம்.
குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறவும், திருமண வரம் பெறவும்,தோஷங்கள் நீங்கவும் பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்து
ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்.
- ஆண்டாள் நாச்சியார் திருவரங்கனைக் கணவனாக அடைந்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே.
- இந்நாளில் தான் ஸ்ரீ ராமன் சீதாதேவி திருக்கல்யாணம் நடந்தது.
தெய்வ முகூர்த்த நாளாகக் கருதப்படும் இந்நாளில் தான் ஸ்ரீ ராமன் சீதாதேவி திருக்கல்யாணம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.
மேலும் ஸ்ரீ ரங்கநாதனையே மணாளனாக தன் மனத்தில் வரித்துக்கொண்ட
ஆண்டாள் நாச்சியார் திருவரங்கனைக் கணவனாக அடைந்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே.
இறைச் சித்தப்படி திருமாலைப் பிரிந்து பூலோகம் வந்த திருமகள் வஞ்சுளவல்லி நாச்சியாராய்
அவதரித்த திருநாளும் பங்குனி உத்திர திருநாளே என்று நாச்சியார் கோயில் தலப்புராணம் பேசுகிறது.
எனவே சிறப்பு மிக்க இந்நாளில் வைணவத் தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
- இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதால் பெரும் பாக்கியம் கிடைக்கும்.
- இதன்மூலம் சைவத்தலங்களில் பங்குனி உத்திரம் பெறும் சிறப்பை நாம் உணர முடிகிறது.
சைவத் திருக்கோயில்களில் பங்குனி உத்திரத் திருநாள் பண்டைய காலந் தொட்டே கொண்டாடப்பட்டு வந்தது என்பதை புராணங்கள் வாயிலாக நாம் அறியலாம்.
சுந்தரேஸ்வரர் மீனாட்சியம்மையை ஒரு பங்குனி உத்திர திரு நாளில் தான் மணம் செய்தார் என புராணங்கள் பேசுகின்றன.
எனவே இந்நாளில் சிவாலயங்களில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது மரபு.
இத்திருக்கல்யாண வைபவத்தை காண்பதால் பெரும் பாக்கியம் கிடைக்கும்.
இதை நாயன்மார்களின் வாழ்வின் மூலம் அறியலாம்.
இறைவனின் தோழராக போற்றப்படும் சுந்தரர் பங்குனி உத்திரநாளில் திருவாரூர் சென்று தியாகராஜரின் திருமண வைபவத்தை கண்டு தரிசிப்பது வழக்கம்.
சுந்தரமூர்த்தி நாயனர் தம் துணைவியார் பரவையாரை விட்டுப்பிரிந்து திருவொற்றியூரில் சங்கலியாரைத் திருமணம் செய்து கொண்ட காலத்தில் பங்குனி உத்திர விழாவன்று திருவாரூர் செல்ல முடியாத நிலையில்,
தன் தோழரான சிவபெருமானிடமே பங்குனி உத்திரத்தன்று தியாகராஜர் திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் தன் விருப்பதைச் சொல்லி பரவையாரிடம் தூது அனுப்பியதாக பெரிய புராணம் பேசுகிறது.
இவ்வரலாற்றில் இருந்து சைவத்தலங்களில் பங்குனி உத்திரம் பெறும் சிறப்பை நாம் உணர முடிகிறது.
- சிவபெருமான் மீது தனது மலர்க் கணைகளை ஏவி அவரது தியானத்தைக் கலைத்தான்.
- இப்படி மன்மதன் உயிர்ப்பெற்று எழுந்தது பங்குனி உத்திர திருநாளன்று தான்.
சிருஷ்டித் தொழிலுக்கு ஆக்கப்பூர்வ மாக உதவுபவன் காமன் ஆகிய மன்மதன்.
இவனது மனைவி ரதி. ஒரு சமயம் மன்மதன் தேவர்கள் வேண்டுகோளின்படி தன் மனைவியைப் பிரிந்து வந்து தியானத்தில் இருந்த
சிவபெருமான் மீது தனது மலர்க் கணைகளை ஏவி அவரது தியானத்தைக் கலைத்தான்.
இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தம் நெற்றிக் கண் அக்னியால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார்.
இதையே காமதகனம் என்பர்.
தன் கணவனின் மரணத்தை அறிந்து வருந்திய ரதி ஓடோடி வந்து சிவபெருமானை வேண்டி, மன்மதனை உயிர்ப்பிக்க வேண்டினாள்.
அவள் வேண்டுதலை ஏற்ற சிவபெருமானும் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் படியாக காமனை உயிர்ப் பெற்று எழச்செய்தார்.
இப்படி மன்மதன் உயிர்ப்பெற்று எழுந்தது பங்குனி உத்திர திருநாளன்று தான்.
அன்று மன்மதன் ரதியை வழிபடுவோருக்கு சிவன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- இவை தவிர மேலும் பல மகிமைகளும் இந்த பங்குனி உத்திரத் திருநாளுக்கு உண்டு.
- தெய்வ மணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத் திருநாளும் ஒன்று.
தெய்வ மணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத் திருநாளும் ஒன்று.
இத்திருநாளை தெய்வீகத் திருமண நாளாகவே இந்து சமயம் போற்றி கொண்டாடுகிறது.
பங்குனி மாதம் பவுர்ணமி திதியோடு உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளான
பங்குனி உத்திர திருநாளில் தான் அநேக தெய்வீக திருமணங்கள் நடந்தேறியுள்ளன.
இந்த புராண அடிப்படையிலேயே பங்குனி மாதத்தில் சைவத் திருத்தலங்களோடு, வைணவ ஆலயங்களிலும்
திருக்கல்யாண உற்சவ மாத பங்குனி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
இவை தவிர மேலும் பல மகிமைகளும் இந்த பங்குனி உத்திரத் திருநாளுக்கு உண்டு.
- நரிக்குடி அருகே அம்மன் கோவில் திருவிழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
- இரு தரப்பினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் அழகிய மீனாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக பள்ளப்பட்டி கிராமத்தினருக்கும், நரிக்குடியில் ஒரு பிரிவை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளப்பட்டி கிராமத்தினர் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக திருச்சுழி வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து வட்டாட்சியர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். 2 மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி கோவில் திருவிழாவை நடத்திக் கொள்வதும் என்றும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப் படவும் முடிவு செய்யப் பட்டது.
வருகிற 3-ந் தேதி மாலை 4 மணிக்கு கோவிலில் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 பேர் மட்டும் பொங்கல் வைத்து சாமி கும்பிட வேண்டும். முக்கிய நிகழ்ச்சிகளின்போது மேள தாளம் இன்றி அமைதியான முறையில் வழிபாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந் தனைகள் விதிக்கப்பட்டது. இதற்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.
மேலும் புரட்டாசி மாத திருவிழா வழக்கமான நடைமுறைகளுடன் நடக்கும் எனவும், வைகாசி மாதத்தில் கோவில் திருவிழாவை அனைத்து ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து வழக்கமான நடைமுறையை பின்பற்றி நடத்துவது எனவும் கூட்டத் தில் முடிவு செய்யப் பட்டது. இதனை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
கூட்டம் முடிந்த பின் நேற்று மாலை பள்ளப்பட்டி கிராம மக்கள் கோவில் முன்பு காப்பு கட்டும் விழாவுக்காக வேப்பிலை கட்ட முயன்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வேப்பிலை தோரணத்தை கட்ட அனுமதி அளித்தனர். இதையடுத்து பள்ளப்பட்டி கிராம மக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
இதில் பெண்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஆரல்வாய்மொழி :தோவாளையில் அஞ்சலக திருவிழா பேரணி
தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார்
தோவாளையில் கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகத் துறை சார்பாக அஞ்சலக திருவிழா பேரணி முதுநிலை கோட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடை பெற்றது. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, பொதுமக்களிடையே, மாணவ- மாணவி யரிடையே சேமிப்பு பழக்கத்தை வளர்க்க வேண்டும். மத்திய- மாநில அரசு நலத்திட்ட உதவிகளை அஞ்சலக மூலம் பெற்றுக் கொள்கிற வளர்ச்சியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தினி பகவதியப்பன், தொழிலதிபர் பகவதி யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத்தலைவர் தாணு, ஊர் தலைவர்கள் கேசவ முருகன், வேலாயுதம், ஒன்றிய அ.தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் முத்துசாமி மற்றும் அஞ்சலக அதிகாரிகள், பொதுமக்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
அஞ்சலக திருவிழாவை யொட்டி அஞ்சலக துறை சார்பாக வினாடி-வினா நிகழ்ச்சி, ஆதார் அட்டை திருத்தம்-புதுப்பித்தல் போன்ற நிகழ்வுகள் நடை பெற உள்ளது.
- 100-வது ஆண்டு தொடக்க திருவிழா நாளை மறுநாள் தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.
- திருக்கொடியிறக்கம் தொடர்ந்து பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
இரணியல் :
இரணியல் அருகே உள்ள கண்டன்விளையில் புகழ் பெற்ற குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் உள்ளது. 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந் தேதி அன்றைய ஆயர் அலோ சியஸ் மரிய பென்சிகர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு திறக்கப்பட்ட இந்த ஆலயத்தின் 100-வது ஆண்டு தொடக்க திருவிழா நாளை மறுநாள் தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.
தொடக்க நாள் திருவிழா வான நாளை மறுநாள் (29-ந் தேதி) காலை 6.30 மணிக்கு முன்னோர் நினைவு சிறப்புத் திருப்பலி, கல்லறை தோட்டம் மந்திரிப்பு, சிற்றுண்டி, காலை 11 மணிக்கு ஜெபமாலை மலை சிற்றாலய குணமளிக்கும் திருப்பலி, மாலை 5 மணிக்கு திருக்கொடி பவனி, 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை நடக்கிறது. மாலை 6.45 மணிக்கு குழித்துறை மறை மாவட்டம் தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் முன்னி லையில், மார்த்தாண்டம் மறை மாவட்டம் ஆயர் டாக்டர் வின்சென்ட் மார் பவுலோஸ் நூற்றாண்டு நினைவு கட்டிடத்தை அர்ச்சித்து திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொ டர்ந்து திருக்கொடியேற்றம், திருப்பலி, அன்பு விருந்து ஆகியவை நடக்கிறது. 2-ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு திரு முழுக்குத் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெறுகிறது.
குழந்தை தெரேசாவின் பெயர் கொண்ட திருவிழா அக்டோபர் 1-ந் தேதி காலை 9 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை 6.45 மணிக்கு ஆயர் அத்தனாசியுஸ் ரத்தினசாமி தலைமையில் மலர் சாற்று தல், நூற்றாண்டு நினைவுச் சின்னம் அர்ச்சிப்பு, தொ டர்ந்து திருப்பலி, இரவு 9 மணிக்கு தங்கத்தேர்ப்பவனி, அன்பின் விருந்தும் நடக்கி றது.
4, 5, 6, 7 மற்றும் 8-ம் திரு விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 8-ம் நாள் விழாவில் காலை 11 மணிக்கு ஜெபமாலை மலை சிற்றாலய குண மளிக்கும் திருப்பலி நடைபெறுகிறது.
9-ம் நாள் விழாவில் அக்டோபர் 7-ந் தேதி காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்புத் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை ஏற்று அருளுரை வழங்கும் திருப்பலி நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு திருத்தேர் பவனியும், 10-ம் நாள் விழாவில் 8-ந் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு பெருவிழா சிறப்புத் திருப்பலி, காலை 10 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 7 மணிக்கு திருக்கொடியிறக்கம் தொடர்ந்து பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
நூற்றாண்டு தொடக்க திருவிழா ஏற்பாடுகளை பங்குப் பணியாளரும் காரங் காடு வட்டார முதல்வருமான சகாயஜஸ்டஸ், இணைப் பணியாளர்கள் ஏசுதாசன், ராபின்சன், பங்கு அருட் பணி பேரவை துணைத் தலைவர் ஜெஸ்டஸ், செய லாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணைச் செயலாளர் லில்லிமலர் மற்றும் பங்கு இறைமக்கள், அருட்பணி பேரவையினர் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர்.
- பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் இது.
- பிரம்மாவிற்கு தமிழ்நாட்டில் முதல் தனி சன்னதி அமைந்த இடம் திருக்காட்டுப்பள்ளியே ஆகும்.
பொதுவாக பக்தர்கள் திருவிழா நாட்களில் தெய்வ தரிசனம் காண ஆலயங்களுக்கு செல்வது வழக்கம்.
ஆனால் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சிவாலயத்தில் பங்குனி உத்திர நாளில் சிவனும், அம்பிகையும் மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரும் புதுமை நடந்து வருகிறது.
பங்குனி உத்திர நாளன்று காவிரி ஆற்று மணலில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரங்களும்,
அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.
விழாநாளில் சில பக்தர்கள் நாவில் அலகு குத்திக் கொள்கிறார்கள்.
வேறு சிலர் தீ மிதிக்கிறார்கள்.
இந்த ஊரில் பல ஜாதி, மதத்தைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையோடு வாழ்ந்து வருவதால்
இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு அனைவரும் மத வேறுபாடு இல்லாமல் வருகிறார்கள்.
முஸ்லீம்கள் கூட சிவாலய விழாக்களுக்கு வருவது உண்டு!
முன்னொரு காலத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் இந்த தலத்திற்கு வந்து அக்னி கடவுளையும், சவுந்தர நாயகியையும் வணங்கினார்கள்.
அப்பொழுது அக்னி தேவன் தொட்ட பொருட்கள் சுட்டெரிக்கப்பட்டு நாசமானது அந்தப் பழியிலிருந்து விடுபட வழி இல்லையா என்று அக்னிதேவன் வேண்டினான்.
உடனே சிவபெருமான், அக்னி தேவன் முன் தோன்றி இங்குள்ள தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு உன் பெயரை இடு!
அந்தக் குளத்து நீரைக்கொண்டு வந்து எனக்கு அபிஷேகம் செய்து என்னை வழிபட்டால் உனக்கு அந்த பழிதீரும்.
அதில் நீராடும் மக்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கும் என்று அருளினார்.
அப்படிப்பட்ட அக்னி தேவனால் உண்டாக்கப்பட்ட மகிமை பெற்ற குளம் கொண்ட தலம் திருக்காட்டுப்பள்ளி.
இங்கு திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வந்து சன்னதியின் முன் அமர்ந்து பதிகங்கள் பாடியிருக்கிறார்கள்.
அவர்களின் பக்திப் பாடல்கள் பிரகாரச் சுவர்களில் பொறிக்கப்பட்டு உள்ளன.
இந்தத் திருத்தலத்தில் இறைவனுக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது.
பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் இது.
அவர் இங்கு வந்து தனக்கும் மும்மூர்த்திகளில் ஒருவர் என்னும் அங்கீகாரம் தரப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவே அப்படியே சிவன் கூற அவருக்கு தனி இடம் தந்து தங்க அனுமதித்தார்.
பிரம்மாவிற்கு தமிழ்நாட்டில் முதல் தனி சன்னதி அமைந்த இடம் திருக்காட்டுப்பள்ளியே ஆகும்.