search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvizha"

    • இத்திருக்கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.
    • சித்திரை : திருவோணத்தில் நடராசர் அபிஷேகம்.

    நித்திய பூஜைகள்

    இத்திருக்கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

    அவையானவ:

    1. திருப்பள்ளி எழுச்சி காலை மணி 6.00 முதல் 7.00

    2. காலசந்தி காலை மணி 8.30 முதல் 10.00

    2. உச்சிக்காலம் காலை மணி 11.00 முதல் 12.00

    4. சாயரட்சை மாலை மணி 5.30 முதல் 6.30

    5. இரண்டாம் காலம் மாலை மணி 7.30 முதல் 8.30

    6. அர்த்தசாமம் இரவு மணி 8.30 முதல் 9.30

    திருவிழாக்கள்

    திங்கள் தோறும் நடைபெறுவன.

    சித்திரை: திருவோணத்தில் நடராசர் அபிஷேகம்.

    வைகாசி : அமாவாசையில் சிவப்பிரியர் மணி கர்ணிகையில் தீர்த்தமாடுதல், வெள்ளை யானைக்குச் சாப விமோசனம்.

    ஆனி: உத்திரத்தில் நடராசர் அபிஷேகம்.

    ஆடி: பட்டினத்தார் சிவதீட்சை பெறத் திருவெண்காட்டிற்கு வருதல், சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் மணிகர்ணிகையில் தீர்த்தம் கொடுத்தல், சிவபூஜை செய்வித்தல், இரவு இடப வாகனராய்க் காட்சி தருதல். அம்பாளுக்கு ஆடிப்பூர -பத்து நாள் விழா. ஆடி அமாவாசைக்கு சங்கமத்திற்கு சுவாமி எழுந்தருளல்.

    ஆவணி: வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிஷேகம். கோகுலாட்டமி பெருமாள் சேவை. விநாயகர் சதுர்த்தி. ஆவணி மூலம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.

    புரட்டாசி: வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிஷேகம். நிறைபணி, தேவேந்திரபூஜை, நவராத்திரி விழா, விசயதசமி அன்று சுவாமி மணிகர்ணிகை ஆற்றின் கரையில் அம்பு போடல், அம்பாளுக்கு இலட்சார்ச்சனை.

    ஐப்பசி: அசுபதியில் அன்னஆபிஷேகம், வளர்பிறை பிரதமை தொடங்கி கந்தசஷ்டி விழா.

    கார்த்திகை: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஸ்ரீ அகோர மூர்த்திக்கு அபிஷேகமும், பூஜையும் நடைபெறும். மூன்றாவது ஞாயிறு அன்று மகாருத்ராபிஷேகமும், விபூதி அலங்காரமும் நடைபெறும். சோமவாரந்தோறும் சுவேதாரண்யேசுவரருக்கு 1008 சங்கா அபிஷேகமும் நடைபெறும். பரணி, கார்த்திகை தீபவிழாக்கள்.

    மார்கழி: தனுர்மாத பூஜை, சதயத்தன்று மாணிக்கவாசகர் விழா, டோலோற்சவம் திருவாதிரையில் நடராசர் தரிசனம் நடைபெறும்.

    தை: சங்கராந்தி, மறுநாள் அம்பாள் கனுகுளிக்க மணிகர்ணிகைக்குப் போதல், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்குச் செல்லுதல். ஐயனாருக்குப் பந்துநாள் விழா. பிடாரிக்குப் பத்துநாள் விழா.

    மாசி: இந்திரப் பெருவிழா, வளர்பிறை துவாதசி புனர்பூசத்தில் கொடியேற்றம்.

    பங்குனி: சுக்லபட்சப் பிரதமையில் அகோரமூர்த்திக்கு இலட்சார்ச்சனை ஆரம்பம், பங்குனி உத்திரத்தில் (பவுர்ணமியில்) பூர்த்தி, மறுதினம் விடையாற்றி.

    • அம்மன் வீதிஉலா வந்தபோது, ஆரவாரத்தோடு பக்தர்கள் மாலைகளை போட்டனர்.
    • பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    மணப்பாறை நகரின் மையப்பகுதியில் பிரசித்திபெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 30-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் விழாவின் சிகர நிகழ்ச்சியாக பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேடபரி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தரளி வேடபரி வீதிஉலா வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ராஜவீதிகளின் வழியாக சென்று வேடபரி வாகனம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அம்மன் வீதிஉலா வந்தபோது, ஆரவாரத்தோடு பக்தர்கள் மாலைகளை போட்டனர். மணப்பாறை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    முன்னதாக பாரம்பரிய கலைகளான நெருப்பு தீப்பந்தம் ஏந்தி ஆடுதல், சிலம்பம், கரகம் என பல்வேறு நடனங்கள் நடைபெற்றது. பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கிடா, கோழி வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றுது. மேலும் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டில் கட்டியும் வந்தனர்.

    நாளை (புதன்கிழமை) காலை காப்பு களைதல் நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மணப்பாறை நகராட்சி நிர்வாகமும், பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை போலீசாரும் செய்திருந்தனர்.

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 24-ந் தேதி பள்ளிவேட்டை நடைபெறும்.

    மார்த்தாண்டம் நல்லூர் கரவிளாகத்தில் கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இங்கு 49-வது பஜனை பட்டாபிஷேக திருவிழா, இந்து சமய மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இன்று அதிகாலை 4.15 மணிக்கு நிர்மால்ய பூஜை, 5 மணிக்கு அபிஷேகம், காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 7.30 மணிக்கு கொடியேற்றம், 9 மணிக்கு கலச பூஜை, பகல் 12 மணிக்கு உச்சபூஜை, 12.45 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 7.45 மணிக்கு பஜனை, 9 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் கணபதி ஹோமம், உஷ பூஜை, பாராயணம், உச்சபூஜை, அன்னதானம், தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    18-ந் தேதி காலை 6.20 மணிக்கு கிருஷ்ணசாமி கருட வாகனத்தில் பவனி வருதல், 9 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பண்பாட்டு போட்டிகள், 20-ந் தேதி காலை 8 மணிக்கு பொங்கல் வழிபாடு, 21-ந் தேதி இரவு 7 மணிக்கு இந்து சமய மாநாடு, 22-ந் தேதி இரவு 7 மணிக்கு முளை பூஜை, 8.45 மணிக்கு சாமி கருட வாகனத்தில் எழுந்தருளல், 24-ந் தேதி மாலை 3.22 மணிக்கு சாமி பவனி வருதல், இரவு 10 மணிக்கு பள்ளிவேட்டை போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நிர்மால்ய பூஜை, 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 9 மணிக்கு கீதாபாராயணம், பகல் 12.45 மணிக்கு அன்னதானம், மாலை 3.30 மணிக்கு ஆராட்டு பூதபலி, 4 மணிக்கு ஆராட்டு விழா, இரவு 8.10 மணிக்கு தீபாராதனை, 8.45 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • திருவிழா 13 மற்றும் 14-ந்தேதிகளில் விமர்சையாக நடக்க உள்ளது.
    • திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் கடந்த ஆண்டுகளை போலவே மிக விமர்சையாக நடக்க உள்ளது.

    திருவிழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் வெளியீட்டு விழா ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்தனர். அதன்பிறகு மேற்கண்ட அனைவரும் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா சுவரொட்டிகளை வெளியிட்டனர்.

    • 5-ந்தேதி சனி பகவானுக்கு அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    • 6-ந்தேதி ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.

    கூடலூர் 27-வது மைல் பகுதியில் சனி பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீப திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் தீப திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 3-ந் தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், நவகிரக பூஜை நடக்கிறது.

    தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. 4-ந் தேதி காலை 6 மணி முதல் பல்வேறு விசேஷ பூஜைகள், அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை அய்யப்ப பக்தர்களின் பஜனை வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. பின்னர் 5-ந் தேதி காலை 6 மணிக்கு விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள், தொடர்ந்து இரவு 8 மணி வரை சனி பகவானுக்கு அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 6-ந் தேதி காலை 5 மணிக்கு ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு கார்த்திகையை ஒட்டி தீப திருவிழா நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • அஷ்ட பைரவர் யாகம் நடந்தது.
    • 6 நாட்களும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    திருப்பத்தூரில் குன்றக்குடி ஐந்து கோவில் தேவஸ்தானத்திற்குட்பட்டது திருத்தளிநாதர் கோவில். இக்கோவிலில் உள்ள யோகபைரவருக்கு ஆண்டுதோறும் சம்பக சஷ்டி விழா தொடர்ந்து 6 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இதையொட்டி இந்தாண்டு இந்த விழா நேற்று முன்தினம் காலை யோக பைரவர் சன்னதி முன்பு யாகசாலையில் பூர்வாங்க பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பாஸ்கர் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் அஷ்ட பைரவர் யாகம் நடத்தினர். தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாரதனைகள் நடைபெற்று யாக கலசங்கள் மூலவர் சன்னதிக்கு புறப்பாடு நடைபெற்று மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    சுவாமிக்கு மஞ்சள்காப்பு அலங்காரம், மஞ்சள் வஸ்திரம் சாத்துதல் நிகழ்ச்சியும், மாலையில் அஷ்ட பைரவர் யாகமும் நடந்தது. இதேபோல் 6 நாட்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சம்பக சஷ்டியினர் செய்து வருகின்றனர்.

    ஜெயங்கொண்டநாதர் கோவிலில் உள்ள வியாசர் லிங்கத்துக்கும், ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கும் திரட்டுப்பால் ஆராதனை செய்து அதை யானையின் மீது ஏற்றி ராஜகோபாலசுவாமிக்கு ஊர்வலமாக எடுத்து வந்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது.
    மன்னார்குடியில் திரட்டுப்பால் ஆராதனை விழா நடந்தது. மன்னார்குடி பாமணிஆற்றின் வடகரையில் உள்ள ஜெயங்கொண்டநாதர் கோவிலில் உள்ள வியாசர் லிங்கத்துக்கும், ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கும் திரட்டுப்பால் ஆராதனை செய்து அதை யானையின் மீது ஏற்றி ராஜகோபாலசுவாமிக்கு ஊர்வலமாக எடுத்து வந்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது.

    இதை நினைவு கூறும் வகையில் மன்னார்குடியில் கடந்த 17 ஆண்டுகளாக செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி அறக்கட்டளை சார்பில் திரட்டுப்பால் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் 18-வது ஆண்டாக வைகாசி மாத ரோகிணி நட்சத்திரத்தை யொட்டி நடத்தப்பட்ட இவ்விழாவில், மன்னார்குடி ஜெயங்கொண்ட நாதர் கோவிலில் ஆராதனை செய்யப்பட்ட திரட்டுப்பால் ராஜகோபால சுவாமி கோவில் யானை செங்கமலத்தின் மீது ஏற்றி, ராஜகோபால சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    எல்லை கட்டும் விழாவையொட்டி தேரடி தெருவில் பிடாரி அம்மன் சிலை வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது.
    கடலூர் திருப்பாதிரிபுலியூரில் பிரசித்திபெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டு களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பிடாரி அம்மன் எல்லை கட்டும் விழா நடந்தது. முன்னதாக வண்ணாரப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் உற்சவம் நடைபெற்றது.

    எல்லை கட்டும் விழாவையொட்டி தேரடி தெருவில் பிடாரி அம்மன் சிலை வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் தேரடி தெருவில் இருந்து அண்ணாபாலம் சிக்னல் வரையிலும், வண்டிபாளையம் சாலையில் இருந்து சுப்புராயலுசெட்டி தெரு, போடிசெட்டிதெரு பகுதியிலும் பக்தர்கள் தீ பந்தங்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை ஏந்தி வந்தனர். அதன் பின்னர் எல்லை கட்டும் விழா நடந்தது.

    இன்று (30-ந் தேதி) அமர்ந்தவாலி உற்சவமும், இரவு 10 மணி அளவில் பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 3-ந் தேதி பிடாரி அம்மன் வீதி உலாவும், 4-ந் தேதி விக்னேஷ்வர பூஜை நடக்கிறது. 5-ந் தேதி பாடலீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறும். மேலும் 13-ந் தேதி தேர்திருவிழா நடைபெற உள்ளது.
    திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக் கருப்பணசாமி கோவிலில் ஆண் பக்தர்கள் மட்டும் திரண்டு இருந்து சுவாமிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை படைத்து வழிபட்ட வினோத திருவிழா நடந்தது.
    திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் செல்லும் வழியில் உச்சிக் கருப்பணசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுாமிக்கு உருவம் கிடையாது. ஆனால் பெரிய அளவில் 2 கல்தூண்கள் கருவறையாக அமைந்து உள்ளது. அதன் மையத்தில் சுமார் 5 அடி உயரம் உள்ள 2 அரிவாள் உள்ளது. மேலும் காற்று ஓசைக்கு ஒலித்து கொண்டே இருக்ககூடிய ஏராளமான மணிகள் உள்ளன. இந்த கோவிலில் பாரம்பரியமாக தொன்று தொட்டு ஆண் பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வருகிறார்கள்.

    கோவிலுக்கு வந்து செல்லக்கூடிய ஒவ்வொரு பக்தரும் அவரவர் நெற்றியில் விபூதியை பூசிக்கொள் கிறார்கள். அதே சமயம் கோவிலை விட்டு வெளியேறும்போது நெற்றியில் பூசிய விபூதியை அழித்துவிட்டுசெல்கிறார்கள். மேலும் பெண்கள் கண்களுக்கு தெரியக்கூடாது என்பதால் சாமிக்கு படைக்க கூடிய பழங்களை கோவிலை விட்டு வெளியே கொண்டு செல்லக்கூடாது.

    இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஒரு வெள்ளிக் கிழமை அன்று கனிகள் மாற்றும் திருவிழா தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் உள்ள சாமிபெட்டி இருக்கும் இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாழைப் பழங்கள், மாம்பழங்கள் மற்றும் பலாபழங்கள் ஆகிய முக்கனிகளை ஒரு டிராக்டரில் வைத்து ஊர்வலமாக புறப்பட்டு உச்சிக்கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர்உச்சிக்கால வேளையில் சாமிக்கு குவியலாக முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண் பக்தர்கள் திரண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
    12 சிவபெருமான்களும் தங்களுடைய தேவியருடன் ஒருசேர நாங்கூர் மதங்கீஸ்வரர் கோவிலில் மதங்க மகரிஷி என்பவருக்கு காட்சி அளிக்கும் வைபவம் ரிஷபாரூட சேவையாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
    சீர்காழி அருகே நாங்கூர் கிராமத்தில் உள்ள மதங்கீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் நம்புவாருக்கு அன்பர் சாமி கோவில், சுந்தரேஸ்வரர் கோவில், அமிர்தபுரீஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், நயனிபுரம் நயன வரதேஸ்வரர் கோவில், அல்லிவிளாகம் நாகநாதர் கோவில், திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோவில், மங்கைமடம் யோகநாதன் கோவில், காத்திருப்பு சொர்ணபுரீஸ்வரர் கோவில், அன்னப்பன்பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில், பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர் கோவில் என 12 சிவபெருமான் கோவில்கள் உள்ளன.

    இந்த 12 சிவபெருமான்களும் தங்களுடைய தேவியருடன் ஒருசேர நாங்கூர் மதங்கீஸ்வரர் கோவிலில் மதங்க மகரிஷி என்பவருக்கு காட்சி அளிக்கும் வைபவம் ரிஷபாரூட சேவையாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த ஆண்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது.

    30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் 12 சிவபெருமானும் மதங்கீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து ஜெப ஹோமமும், அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன. இரவு 7 மணி அளவில் 12 சிவபெருமானுக்கும் ஒருசேர திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 10 மணி அளவில் 12 சிவபெருமானும் நந்தி பகவானுடன் மதங்க மகரிஷிக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் பின்னர் வீதிஉலாவும் நடக்கின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள், பொறுப்பாளர்கள் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.
    காரைக்காலில் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அசுரனை வதம் செய்யும் புராண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    காரைக்காலை அடுத்த அம்ப கரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகிஷ சம்ஹார பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது தேவர்களையும், மக்களையும் கொடுமை செய்த அசுரன் அம்பரனை பத்ரகாளியம்மன் சம்ஹாரம் செய்த புராண நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அம்பாள் புஷ்ப பல்லக்கு வீதியுலா நேற்று நள்ளிரவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மதியம் 12 மணிக்கு மகிஷ சம்ஹார நினைவு வைபவம் கோவிலில் நடைபெற்றது.

    பின்னர் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பாலாறு அன்னை ரதயாத்திரைக்கு ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் மற்றும் உலக சிவனடியார்கள் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    வேலூரில் பாலாறு பெருவிழா அடுத்த மாதம் (ஜூன்) 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாலாறு அன்னை ரதயாத்திரை தொடக்கவிழா வேலூர் தங்கக்கோவிலில் கடந்த 14-ந் தேதி நடந்தது. இதற்கு சத்திஅம்மா தலைமை தாங்கி ரகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி காண்பித்து தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து ரதம் கர்நாடக மாநிலம் நந்தி துர்க்கம் மலைக்கு சென்று அங்கு தீர்த்தம் பெற்றது. அதன்பின்னர் ரதம் திருப்பத்தூர் மாவட்டம் கனகநாச்சியம்மன் கோவில், வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, பொய்கை வழியாக வேலூருக்கு வந்தடைந்தது. பாலாறு அன்னை ரதயாத்திரைக்கு ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் மற்றும் உலக சிவனடியார்கள் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், ருத்ரவேள்வி, பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், திருவாசக விண்ணப்பம், ஆன்மிக சொற்பொழிவு, பாலாற்று அன்னையின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கு கலவை சச்சிதானந்தா சுவாமிகள், செங்காநத்தம் பகவதி சித்தர் சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாலை 6 மணியளவில் மேள, தாளங்கள் முழங்க பாலாறு அன்னை ரதயாத்திரை ஊர்வலம் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு வேலூர் மண்டித்தெரு, மெயின்பஜார், பில்டர்பெட்சாலை, அண்ணாசாலை வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. இதில் திரளான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ×