search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் பேச்சியம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி
    X

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் பேச்சியம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள பேச்சியம்மன் சிலை புதுப்பிக்கப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியையொட்டி பரமேஸ்வரர், மாசாணியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×