search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செங்கோட்டில் கோவில் திருவிழாக்களையொட்டி பக்தர்கள் ஊர்வலம்
    X

    திருச்செங்கோட்டில் கோவில் திருவிழாக்களையொட்டி பக்தர்கள் ஊர்வலம்

    • பெண்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர்.
    • அனைத்து கோவில்களிலும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    திருச்செங்கோட்டில் பழமைவாய்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இதுதவிர மண்ணுக்குட்டை மாரியம்மன், தொண்டிக்கரடு மகா மாரியம்மன், சேலம் சாலை சாட்டை மாரியம்மன், நாமக்கல் சாலை சமயபுரத்து மாரியம்மன், 5 ரோடு அழகுமுத்து மாரியம்மன், சி.எச்.பி. காலனி மாரியம்மன் கோவில் என நகரை சுற்றி உள்ள 15 மாரியம்மன் கோவில்களிலும் கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி கம்பங்கள் நடப்பட்டன.

    தினமும் ஏராளமான பெண்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர். இதையடுத்து தீர்த்தகுடம் எடுத்தல், மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    திருவிழா நிறைவாக அனைத்து கோவில்களிலும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கம்பம் எடுக்கப்பட்டு தெற்கு ரத வீதியில் ஒன்றாக இணைந்து ஊர்வலமாக சென்று திருச்செங்கோடு- ஈரோடு ரோட்டில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் கம்பங்கள் விடப்பட்டன. கம்பங்களுக்கு முன்பு பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து சென்றனர். வழி நெடுகிலும் குவிந்திருந்த திரளான பக்தர்கள் கம்பங்களின் மீது உப்பு, மிளகு போட்டு அம்மனை வழிபட்டனர்.

    Next Story
    ×