search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mariamman"

    • உளுந்தால் ஆன பலகாரங்களை அம்மனுக்குப் படைக்கின்றனர்.
    • நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    நாகப்பட்டினம்-திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தால் ஆன பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம்முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இதுவரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, தோசை முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள்.

    இந்த கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானது தான். திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நடத்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. இந்த குழந்தை பிறந்தால் நாட்டுக்கு கேடு விளையும் என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார்.

    இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும், அவள் கருவில் வளரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார். ஒரு நாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. அப்போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பெச்சாயி அம்மன். மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தாள். அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள். அரசியை தன்மடியில் கிடத்தி அவளுக்கு பிரசவம் பார்த்து குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள். தனது தவறை உணர்ந்த மகாராஜா, பெச்சாயி அம்மனிடம் பாவபரிகாரம் குறித்து வேண்டினார். கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள் என்று கட்டளையிட்டாள் அம்மன். அதன் படியே செய்தார் மகாராஜா.

    அவரால் உருவாக்கப்பட்ட குளம் தான் வல்லங்குளம் எனப்பட்டது. காலம் உருண்டோடியது. ஏறத்தாழ 500-700 ஆண்டு களுக்குப் பிறகு அந்த குளத்தில் இருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர்.

    • அம்மனுக்கு வாசனை திரவியங்களுடன் அபிஷேக பூஜை நடைபெற்றது.
    • பெண் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி தாலாட்டி அம்மனை வழிபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி நம்பியூர் சாலையில் மாரியம்மன் மற்றும் பிளாக் மாரியம்மன் கோவில்கள் உள்ளது. கோவிலில் ஆடி 4 வெள்ளிக்கிழமைகளில் அரசன், வேம்பு, மாவலிங்க மூன்றும் இணைந்த மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் போன்ற வாசனை திரவியங்களுடன் அபிஷேக பூஜை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு உற்சவ சிலைகள் கோவிலை சுற்றி வளம் வந்து ஊஞ்சலில் வைக்கப்பட்ட மாரியம்மன், பிளேக் மாரியம்மன் உற்சவர்களை பெண் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடி தாலாட்டி அம்மனை வழிபட்டனர்.

    பின்பு அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் வைத்துள்ள இரு உற்சவர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விளக்கு பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் கயிறு, வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து விழாவில் கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஞாயிறன்று அம்மனுக்கு வீட்டில் படையிலிட்டு வழிபடுவர்.
    • வரங்களை அள்ளித்தரும் தாயாக இருப்பவள் முத்துமாரியம்மன்.

    மாரியம்மன் திருவிழாவிற்குச் செல்லும் முன் ஞாயிறன்று அம்மனுக்கு வீட்டில் படையிலிட்டு வழிபடுவர். அப்போது வீட்டில் விளைந்த தானியங்கள், காதாலைக்கருகமணி, கொழுக்கட்டை, அரிசிமாவு போன்றவற்றைப் படைத்திடுவர். மாரியம்மன் படையலுக்கு வைத்த தானியங்களை அம்மன் திருவிழா அல்லது பஞ்சபிரகாரம் அன்று கோவிலில் வறியோருக்குப் போட்டுவிடுவர்.

    உலகம் எங்கும் உள்ள அனைத்து உயிரினங்கள், மரம் செடி கொடிகள் என்று எல்லாவற்றுக்கும் தண்ணீரை வாரி வழங்குவது மழை. வேறுபாடுகள், பேதங்கள் ஏதுமின்றி மழை தனது தண்ணீரை அளிப்பதுபோல, மக்களின் மனங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் கருதாது வரங்களை அள்ளித்தரும் தாயாக இருப்பவள் முத்துமாரியம்மன்.

    அதனால் நாமும் எங்கெங்கும் பரவிக்கிடக்கும் முத்துமாரியம்மனை தொழுது வேண்டிய வளங்களைப் பெறுவோம்.

    "மகமாயி சமயபுரத் தாயே உன் மகள் எனக்கு எல்லாமும் நீயே

    கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்"

    "வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு

    அது வினை தீர்க்க நீ அமைத்தக் கூடு

    திருநீரே அம்மா உன் மருந்து

    அதை அணிந்தாலே நோய் ஓடும் பறந்து"

    • முத்துமாரியம்மன் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    ஆடி வெள்ளி அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் குடும்ப தெய்வமான பூவாடைகாரியை பூஜித்து வழிபட்டால் குடும்பம் தழைக்கும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் கடந்த முதல் ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவிலுக்கு பெண்கள் குடும்பத்துடன் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    2-வது ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    இந்நிலையில் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று, திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தில் உள்ள முத்துக்கண் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உலக மக்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி முத்துக்கண் மாரியம்மனுக்கு 3.50 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

    இதில் ரூ.500, ரூ.200, ரூ .50, ரூ20 மற்றும் ரூ10 என ஆகிய நோட்டுகள் இடம்பெற்றிருந்தன.

    இதனை தொடர்ந்து முத்துமாரியம்மன் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    • அம்மனை ஆடி மாதம் விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்கள் பறந்தோடும்.
    • ஆடி மாதம் இந்த போற்றியை சொன்னால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    ஓம் அன்னையே போற்றி

    ஓம் அன்னை மாரியே போற்றி

    ஓம் அக்கினி சட்டி வளர்ந்தாய் போற்றி

    ஓம் அகிலம் ஆண்ட ஈஸ்வரியே போற்றி

    ஓம் அம்மை முத்தின் மூலமே போற்றி

    ஓம் அபிராமி அன்னையே போற்றி

    ஓம் அஷ்டலட்சுமியும் நீயே போற்றி

    ஓம் ஆயிரம் கண்ணுடை போற்றி

    ஓம் ஆதியின் பாதியே போற்றி

    ஓம் ஆதிபராசக்தியே போற்றி

    ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி

    ஓம் இமயத்தரசியே போற்றி

    ஓம் இளநீர்ப் பிரியை போற்றி

    ஓம் ஈஸ்வரன் துணைவி போற்றி

    ஓம் ஊஞ்சல் விழா உமையே போற்றி

    ஓம் ஊத்துக்காடு அன்னையே போற்றி

    ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி

    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

    ஓம் ஐயப்பன் மாதா போற்றி

    ஓம் ஓங்காரப்பெருமாளே போற்றி

    ஓம் கனக துர்க்கா போற்றி

    ஓம் கன்னி வல்லித்தாயே போற்றி

    ஓம் கன்னிகா பரமேஸ்வரி போற்றி

    ஓம் கருமாரித்தாயே போற்றி

    ஓம் கங்கா தேவி தாயே போற்றி

    ஓம் கன்னியாகுமரியே போற்றி

    ஓம் கற்பூர நாயகியே போற்றி

    ஓம் கண்ணின் மணியே போற்றி

    ஓம் கன்னபுரத்தாளே போற்றி

    ஓம் கலைமகளும் நீயே போற்றி

    ஓம் கரகத்தழகியே போற்றி

    ஓம் காத்யாயன்யளே போற்றி

    ஓம் காயத்திரி தேவி நீ போற்றி

    ஓம் காசி விசாலாட்சி போற்றி

    ஓம் காவல் தெய்வமே போற்றி

    ஓம் குங்கும அர்ச்சனை பிரியை போற்றி

    ஓம் கூஷ்மாண்டினி தேவியே போற்றி

    ஓம் காஞ்சி காமாட்சி போற்றி

    ஓம் கோட்டை மாரி போற்றி

    ஓம் கோபிநாதன் தங்காய் போற்றி

    ஓம் கவுமாரி கவுரி போற்றி

    ஓம் சமயபுர சக்தி போற்றி

    ஓம் சங்கரன் துணைவி போற்றி

    ஓம் சர்வேஸ்வரி போற்றி

    ஓம் சந்திரகண்டினி போற்றி

    ஓம் சாம்பிராணி வாசகி போற்றி

    ஓம் சாமுண்டீஸ்வரி போற்றி

    ஓம் சிவகாம சுந்தரி போற்றி

    ஓம் சவுபாக்கியம் அருள்வாய் போற்றி

    ஓம் கொடியேற்றம் விழைவாய் போற்றி

    ஓம் ஞானப் பிரசன்னாம்பிகை போற்றி

    ஓம் தட்சிணி தேவி போற்றி

    ஓம் தண்டினி தேவி போற்றி

    ஓம் தாழங்குறைக்கூடை தழைப்பாய் போற்றி

    ஓம் திண்டி நகருறை தேவி போற்றி

    ஓம் திருவிளக்கின் ஒளியே போற்றி

    ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

    ஓம் திருமகள் உருவே போற்றி

    ஓம் திருமாலழகன் தங்காய் போற்றி

    ஓம் துர்க்கையும் நீயே போற்றி

    ஓம் துலக்கணத்தீஸ்வரி போற்றி

    ஓம் தெப்போற்சவம் விழைந்தனை போற்றி

    ஓம் நல்லமுத்துமாரி போற்றி

    ஓம் நவகாளி அம்மா போற்றி

    ஓம் நவதுர்க்கா தேவியே போற்றி

    ஓம் நாரணார் தங்காய் போற்றி

    ஓம் நாககுடைக்கொள் நாயகியே போற்றி

    ஓம் நான்முகி போற்றி

    ஓம் நாராயிணி போற்றி

    ஓம் நீலிகபாலி போற்றி

    ஓம் பர்வதபுத்திரி போற்றி

    ஓம் நீலாம்பிகை போற்றி

    ஓம் பவானி தேவி போற்றி

    ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி

    ஓம் பவளவாய் கிளியே போற்றி

    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

    ஓம் பாம்புரு ஆனாய் போற்றி

    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

    ஓம் பிரம்மராம்பிகை போற்றி

    ஓம் புவனேஸ்வரி போற்றி

    ஓம் பூச்சொறிதல் பெற்றனை போற்றி

    ஓம் பெரியபாளையத்தம்மை போற்றி

    ஓம் மணிமந்தர சேகரி போற்றி

    ஓம் மஹேஸ்வரி போற்றி

    ஓம் மங்கள ரூபணி போற்றி

    ஓம் மஞ்சள் நீராடல் மகிழ்ந்தனை போற்றி

    ஓம் மகிஷா சூரமர்த்தினி போற்றி

    ஓம் மஞ்சள் மாதா போற்றி

    ஓம் மாளி மகமாயி போற்றி

    ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி

    ஓம் மாங்காடு போற்றி

    ஓம் மாசி விழா மாதா போற்றி

    ஓம் மாவிளக்குப் பிரியை போற்றி

    ஓம் மீனாட்சித் தாயே போற்றி

    ஓம் முண்டினி தேவி போற்றி

    ஓம் முனையொளி சூலி போற்றி

    ஓம் முக்கண்ணி போற்றி

    ஓம் முக்கோண சக்கர மூலமே போற்றி

    ஓம் மூகாம்பிகையே போற்றி

    ஓம் ராஜராஜேஸ்வரி போற்றி

    ஓம் லலிதாம்பிகை போற்றி

    ஓம் வஜ்ரமணித்தேராள் போற்றி

    ஓம் வளம் சேர்க்கும் தாயே போற்றி

    ஓம் விராட் புரவி மலி போற்றி

    ஓம் விஷ்ணு துர்க்கா போற்றி

    ஓம் வேப்பம்பால் உண்டவளே போற்றி

    ஓம் வேப்பிலைக்காரியே போற்றி

    ஓம் வேலவனுக்கு வேல் தந்த வித்தகி போற்றி.

    • ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம்.
    • மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம்.

    ஆடி மாத வெள்ளி கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக்காலமாக இதனை கருதுவர். ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்குமாடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும்.

    உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாக தரும் மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகள் வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி செவ்வாய் என்பது, கோவில்களுக்கு சென்று அம்மனை முறைப்படி வழிபட வேண்டிய தினம். ஆடி வெள்ளி என்பது, நம் முன்னோர்களோடு சேர்த்து அம்மனை வழிபடவேண்டிய தினம். ஆடி ஞாயிறு என்பது, அன்னதானத்திற்கு உகந்த தினம்.

    ஆடி மாதம் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுவார் என்பது ஐதீகம். முதன்மையான சிறப்பு ஆடி மாதம் அம்மனுக்கு உரியது. ஆடி மாத அம்மன் வழிபாடு என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒட்டி வந்த ஒன்று. ஆடி மாதம்முழுவதும் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட உகந்தது. மாரியம்மன் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தான்.

    பக்தர்கள் கூட்டத்திற்கு எப்போதும் குறைவில்லை என்றாலும், ஆடி வெள்ளிகிழமைகளில் கூட்டம் கட்டுக்கடங்காது. பக்தர்கள் வேண்டியதை நிறைவேற்றும் கோட்டை மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். அன்றையதினம் மாரியம்மனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து பக்தி பரவசம் அடைவர்.

    இந்நாளில் அம்மனிடம் என்ன வேண்டினாலும் நிறைவேற்றி கொடுக்கிறாள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி, அங்கு ஊழியம் செய்து, நேற்றிக்கடனை நிறைவேற்றலாம். உடல் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள் , கண்பார்வை குறையுள்ளவர்கள் இத்தலத்தில் வணங்கி குணமாகின்றனர். வியாபார விருத்தி, விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர்.

    • இக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
    • 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள்.

    சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னக் கடை வீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன் ஆகிய 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள்.

    இதனாலேயே கோட்டை பெரிய மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டுப்பேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையானவள் என்பதற்கு மற்றொரு சான்றையும் சொல்லலாம்.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோவிலையும், ஒரு பெருமாள் கோவிலையும் அமைத்தார்கள்.

    இந்த அம்மன் கோவிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது.

    இக்கோட்டையில் அமைந்த இக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் தெரியவருகிறது.

    • இந்த அம்மன் கோட்டை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கினாள்.
    • இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது

    சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் அன்னை கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குவதால் 8 பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள், சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரியமாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகப்பெரிய விழாவாகும். இவ்விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கும்.

    இந்த பூச்சாட்டுதலின்போது சேலத்தில் உள்ள மற்ற 7 மாரியம்மன் கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச்சென்று அந்தந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொன்றுதொட்டு வரும் நிகழ்ச்சியாகும்.

    சேலத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது கோட்டை மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். இந்த அம்மன் கோட்டை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கினாள்.

    இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பக்கவுண்டரின் பாடல்கள் அம்மனின் மகிமையை எடுத்து கூறுகின்றன.

    சேலம் கோட்டை பெரியமாரியம்மன் அருளே வடிவாக காட்சியளிக்கிறாள். அன்னையின் சிரசில் ஜூவாலா கிரீடம் அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது. அக்கிரீடத்தில் நாகம்படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள்.

    வலது மேற் கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். இடது மேற்கரத்தில் அங்குசமும் அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது.

    அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு ஈசான திசை நோக்கி அமைதி வடிவமாய், ஆனந்தம் பொங்கும் முகத்தாளாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாட்சி செய்து வருகின்றாள்.

    ஆரம்பத்தில் இந்த கோவிலின் கருவறை சிறயதாகவும் மிக அழகிய முறையிலும் அமைந்தது. தற்போது அன்னை வீற்றிருக்கும் கருவறை கம்பீரமாய் உருவாகி உள்ளது. விரைவில் இந்த ஆலயம் கும்பாபிஷேகம் காண இருக்கிறது. வாழ்வின் அடித்தளத்தில் இருக்கும் தன் பிள்ளைகளை உயர்த்துவதற்காக அன்னை உயரமான கருவறையில் அமர இருக்கிறார். அன்னையின் ஆலயம் வளர வளர சேலம் மாநகர் யாரும் எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது.

    சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கருங்கல் கட்டுமானப் பணி

    சேலம் என்றாலே உணவுப்பிரியர்களுக்கு மாம்பழமும், கலைப் பிரியர்களுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ்ம், ஆன்மிகப் பிரியர்களுக்கு கோட்டை மாரியம்மன் கோவிலும் நினைவுக்கு வந்து செல்லும். ஆடி மாதம் வந்துவிட்டால் மாரியம்மன் பண்டிகைகள் வேறெங்கும் இல்லாத வகையில் இக்கோயில் களைகட்டும்.

    சேலம் மாநகரின் காவல் தெய்வம் என பக்தர்களால் போற்றப்படும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலின் கட்டுமானம் பழமை காரணமாக, பழுதடைந்து இருந்தது. பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கும் நோக்குடன் அக்கட்டிடத்தை அகற்றிவிட்டு புதியதாக கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். இதை பரிசீலித்த அரசு, கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து ராஜகோபுரம் தவிர்த்து, கோவிலின் கருவறை, மகா மண்டபம் உள்ளிட்டவை அடங்கிய பழைய கட்டுமானம் முழுவதும் அகற்றப்பட்டு, 2017-ம் ஆண்டு நவம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

    ஆனால் கோவிலில் திருப்பணி தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்து கொண்டே இருந்தது. பழமையான மூலவர் அம்மனின் கருவறையை அகற்றாமல் திருப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அம்மன் கருவறை கருங்கற்களால் கட்டப்பட வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

    பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அதற்கான தீர்வுகளுடன் மீண்டும் கட்டுமான பணி சுறுசுறுப்படைந்தது. இந்த நிலையில் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனாவால் 2 வருடங்களாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டு கட்டுமானம் நடைபெறாமல் போனது. கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிய பின் கடந்த ஆண்டு முதல் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    திருப்பணியில் கருவறை, மகாமண்டபம், எடுத்துக்காட்டு மண்டபம் ஆகியவை கருங்கல் கட்டுமானமாகவும், சுற்றுப்பிரகார மண்டபம் சிமென்ட் கான்கிரீட் கட்டுமானமாகவும் அமைக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டன.

    கருங்கற்களால் கட்டுவதால், கோவிலின் கட்டுமானம் ஆயிரம் ஆண்டுக்கு மேல் உறுதியாக இருக்கும். மேலும் கருங்கல் கட்டுமானத்தில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் என்பதால், பணிகள் மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. தற்போது 90 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துவிட்டன.

    தொடர்ந்து, சிமென்ட் கான்கிரீட்டைப் பயன்படுத்தி சுற்றுப் பிரகார மண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.

    கும்பாபிசேகப் பணிகளின் பகுதியாக ராஜகோபுரத்திற்கு வண்ணம் பூசும் பணிகள் துவங்கியுள்ளது. கோபுரத்தில் வண்ணம் பூசப்படும் பணிகள் முழுமையாக முடிந்த பின் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, விரைவில் கோவில் தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து கும்பாபிசேக விழாவில் கலந்துகொண்டு, தங்கள் இஷ்ட தெய்வமான கோட்டை மாரியம்மனை தரிசிக்கும் ஆவலுடன் சேலம் மக்கள் காத்திருக்கின்றனர்.

    கோவில் திருப்பணியில் இடம் பிடித்த கற்கள்

    கோவில்கள் இந்திய கலை, அறிவு, கலாச்சாரம், ஆன்மீகம், புதுமை மற்றும் கல்வி ஆகியவற்றின் மையங்களாக திகழ்ந்து வருகின்றன. கோவில்களின் தத்துவ, ஆன்மீக, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப, அறிவியல், கலை மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் தனித்துவமான இடத்தை பிடிக்கிறது. இந்திய வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக கோவில்கள் எப்போதுமே இருந்து வருகின்றன. கோவில் கட்டுமானம் என்பது ஒரு புனிதமான செயலாக மட்டுமில்லாமல், வரலாறு, சமயம், பரிணாமம் மற்றும் மேம்பாடு உள்ளிட்டவைகளில் நீங்கா இடம் பிடிக்கிறது.

    2017-ம் ஆண்டு கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் தவிர்த்து, பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. திருப்பணிகள் வேலை செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் சேலம் அருகாமையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இத்திருக்கோவிலில் புதியதாக விமானத்துடன் கூடிய கர்ப்ப கிரகம் மற்றும் அர்த்த மண்டபம் (கருங்கல் பணி) கட்டுதல், கருங்கற்களிலான மகா மண்டபம் கட்டுதல், சுற்றுப்பிரகாரம் மண்டபம் கட்டுதல், எடுத்துக்காட்டு மண்டபம் கட்டுதல் போன்ற திருப்பணிகள்யாவும் தொல்லியல் வல்லுநர்களின் கருத்துரு அறிக்கையின் அடிப்படையிலும் மண்டல, மாநில மற்றும் உயர்நீதிமன்ற குழுவின் ஒப்புதல்களின் அடிப்படையிலும் ஆணையரின் நிர்வாக அனுமதி, தொழில் நுட்ப அனுமதி, மதிப்பீடு அங்கீகாரம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகாரத்தின்படியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அருகாமையில் அமைந்துள்ள கோவில்கள் வருமாறு:

    500 மீட்டர் தூரத்தில் சுகவனேஸ்வரர் கோவில், 1 கி.மீட்டர் தூரத்தில் கோட்டை அழகிரிநாதர் கோவில், 7 கி.மீட்டர் தொலைவில் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில், 5 மீட்டர் தூரத்தில், குமரகுரு சுப்ரமணியசாமி கோவில், 1 கி.மீட்டர் தூரத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்களும் பிரசித்தி பெற்ற கோவில்களாகும்.

    ஜொலிக்கும் கோட்டை மாரியம்மன் கோவில்

    சேலம் திருமணிமுத்தாறு ஆற்றங்கரையோரம் கோட்டை மாரியம்மன் கோவில் வீற்றிருக்கிறது. இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னதிகளும் பிரசித்தி பெற்றவை. இக்கோவிலில் உள்ள ஒவ்வொரு கட்டுமானமும் பார்த்து, பார்த்து மிகவும் கவனமாக நடைபெற்றுள்ளது. கோவிலில் உள்ள ஒவ்வொரு சிற்பங்களும் பல்வேறு கலை நுணுக்கங்களுடன் அற்புதமாக செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் மைய பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவில் பிரமாண்டமாக ெஜாலிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி (சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்) அன்னதான மண்டபத்தில் உள்ளது. பெண்களுக்கு தனியாக 4 குளியலறைகள் வசதி உள்ளது. குறிப்பாக கோவிலுக்குள் வரும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. மேலும் அருகாமையில் ஈரடுக்கு பஸ் நிலையம் உள்ளதால் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பஸ்சில் வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கோவிலுக்கு வருகின்றனர்.

    இதோ ஒரு தகவல்

    தமிழக முதல்-அமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத் திட்டம் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து இத்திருக்கோவிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 150 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், மற்றும் ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. இக்கோவிலில் அன்னதான கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் மதியம் 12.15 -01.30 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான நன்கொடை செலுத்த விரும்புவோர் குறைந்தது ரூ.100 முதல் செலுத்தலாம். நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.3750 என்ற வீதம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

    பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் கோட்டை மாரியம்மன் கோவில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் வசதிக்காக இக்கோவில் இணையதளத்தில் இ- சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத் தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள், செயல் அலுவலர், அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில், சேலம் மாநகர் என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். பக்தர்கள் வேறு யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தையொட்டி கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிப்படுவார்கள். இதைதவிர கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், பொங்கலிட்டு, அலகுகுத்தி கோவிலுக்கு பயபக்தியுடன் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசிக்கின்றனர்.

    கோட்டை மாரியம்மன் திருத்தல சிறப்பு

    சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் அம்மாப்பேட்டை மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், சின்னக் கடை வீதி சின்னமாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன் ஆகிய 8 மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். சக்தி வாய்ந்தவள். இதனாலேயே கோட்டை பெரிய மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டுப்பேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையானவள் என்பதற்கு மற்றொரு சான்றையும் சொல்லலாம்.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோவிலையும், ஒரு பெருமாள் கோவிலையும் அமைத்தார்கள்.

    இந்த அம்மன் கோவிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது.

    இக்கோட்டையில் அமைந்த இக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோட்டைக்கு காவல் தெய்வமாக இருந்ததால் கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பகவுண்டரின் பாடல்கள் மூலம் தெரியவருகிறது.

    சேலத்தில் கொண்டாடப்படும் இன்னும் சில முக்கியப் பண்டிகைகள்

    ஆடி 1 - தேங்காய் உருட்டி நார்நீக்கி, ஒரு கண்ணை மட்டும் நோண்டி அதில் அரிசி, வெல்லம், பருப்பு இட்டு நெருப்பில் சுட்டு பிள்ளையாருக்குப் படைப்பது.

    ஆடி பதினெட்டு - மேட்டூர், பவானி, சித்தர்கோவில், கந்தாசிரமம் போன்ற நீருள்ள இடங்களுக்குச் சென்று நீராடுவது.

    ஆடி இருபத்தி எட்டு - மேட்டூர் முனியப்பன் கோவில் விழா.

    ஆவணி - ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தியும் இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடப்படும். நாடகம் பட்டி மன்றம் ஆர்க்கெஸ்ட்ரா என அமர்க்களப்படும்.

    புரட்டாசி - ஐப்பசி ஆயுத பூஜை / தீபாவளி. தீபாவளி என்றாலே வெடி. இரவு முழுக்க வெடி. தீபாவளி அன்று சினிமா பார்க்காதவர்களுக்கு மோட்சம் கிடையாது.

    22 நாட்கள் கோலாகல விழா

    மாரி வளம் சுரக்க, மக்கள் நலம் பெற்று பசியும் பிணியும் நீங்கி வளமுடன் வாழ ஆடிப்பெருந்திரு விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா ஆடி மாதம் 22 நாட்கள் சிறப்புற கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் 18-ந் தேதியை அடிப்படையாக கொண்டே முக்கிய விழாக்கள் நிர்ணயிக்கப்ப டுகிறது. ஆடி 18-ந் தேதிக்கு முந்தைய செவ்வாய்க்கி ழமைகளில் முதல் செவ்வாய் பூச்சாட்டுதலும், 2-ம் செவ்வாய் கம்பம் நடுதலும் நடைபெறுகிறது. ஆடி 18-ந் தேதிக்கு பிறகு வரும் முதல் செவ்வாய்க்கிழமை சக்தி கரகமும், அதைத்தொடந்து பொங்கல் வைத்தல், உருளுதண்டம் விழாக்களும் நடைபெறும். கடைசி செவ்வாய்க்கிழமை மகா அபிசேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. சேலம் மாநகரில் எட்டுப்பேட்டைகளிலும் உள்ள மாரியம்மன் கோயில்களிலும் ஆடிப்பெருந் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

    பூப் போட்டு பார்த்தல்

    இத்திருக்கோயில் பூப்போட்டு கேட்டல் பிரசித்தமானது. குடும்பத்தில் ஏற்படும் சிக்கல் தீருமா? மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறுமா? தந்தைக்கு வந்திருக்கும் நோய் தீருமா? மகனுக்கு வேலை கிடைக்குமா? போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க வெள்ளை, சிவப்பு நிறங்களில் பூக்களைப் பொட்டலங்களாகக் கட்டி அம்மனின் திருவடியில் வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துப் பார்த்தால், நினைத்த பூ வந்தால், தாம் எண்ணி வந்த செயல் விரைவில் நிறைவேறும் என்று நம்பிக்கையோடு செல்வர், இதற்குப் பூப்போட்டு பார்த்தல் என்று பெயர். பக்தர்கள் பூப்போட்டு பார்த்து தம் பிரச்சனைகளைத் தீர்த்து செல்வதுண்டு. நோயால் பீடித்தவர்களும், துயர் கொண்டவர்களும் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்களும் இத்திருக்கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கிறார்கள்.

    வேண்டுதலும், நேர்த்திக்கடனும்

    மதம் என்பது நம்பிக்கை, சடங்குகள், ஐதீகங்கள் ஆகிய 3 முக்கிய அம்சங்களைக் கொண்டது. அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கை என்கின்றோம். அது ஒன்றின் உண்மையை ஏற்றுக்கொள்வதாகும். நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் சமுதாயத்தின் தேவையின் அடிப்படையில் தோன்றியவையாகும் என்பார்கள் அறிஞர்கள். பக்தர்கள் கோட்டை பெரிய மாரியம்மனை தங்கள் குறைகளைப் போக்கும் மகாசக்தியாக நம்பி வழிபட்டு வருகிறார்கள். அதனால் தான் தாம் மேற்கொள்ளும் முக்கிய செயல்களுக்கு அம்மனின் இசைவு பெற்றே செயல்படுகின்றனர்.

    கண்ணடக்கம் சாத்துதல்

    கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ கோட்டை பெரிய மாரியம்மனிடம், தமது கண்ணிற்கு ஏற்பட்ட நோயை நீக்குமாறு வேண்டிக்கொள்வர். அதன் காரணமாக நோய் நீங்கி நலமடைவர். தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப மாரியம்மனுக்கு பொன்னாலோ (அ) வெள்ளியாலோ (அ) தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்தி நேர்த்திக் கடனைச் செலுத்தவார்கள். சில நேரங்களில் திருக்கோயிலுக்கு வந்து மொட்டை அடித்து முடிக்காணிக்கை செலுத்துவதும் உண்டு.

    கம்பம் நடுதல்

    ஒவ்வொரு ஆண்டும் பூச்சாட்டுதலுக்கு அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை கம்பம் நடுதல் விழா நடைபெறும். வேப்பமரம், பலா மரம், அரச மரம் ஆகிய மரங்களில் ஏதாவது ஒன்றில் முப்புரி ஆக உள்ள கிளையை வெட்டி எடுத்து நன்கு சீவப்படும். இறைவன் திருஉருவம் எழுதி அழகிய முறையில் ஒப்பனைச் செய்து மங்கல இசையுடன் திருக்கோயிலை மூன்று முறை வலமாக வந்து பலிபீடத்தின் முன்பு அம்மனின் நேர் எதிரே கம்பம் நடப்படும்.

    இவ்விழா அம்மனின் திருக்கல்யாணத்தைக் குறிக்கும். அதன் பிறகு திருமணம் கூடிவராத இளம்பெண்கள் காலையில் நீராடி திருக்கோயிலுக்கு வந்து கம்பத்திற்கு நீர் ஊற்றி மங்கல கோலத்துடன் உள்ள அம்மனை வணங்கி திருமணம் நடைபெற அருளுமாறு வேண்டிக்கொள்வர். மேலும், மழை வளம் வேண்டி பக்தர்கள் குறிப்பாக பெண்கள் திருக்கோயில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி நீர் ஊற்றி மூன்று முறை வலம் வருவர். இதன் நோக்கம், மாரி குளிர்ந்தால் மண் குளிரும் என்பதே. மாரியம்மனை குளிர வைத்து மழை வளம் பெறுவார்கள்.

    • சேலத்தில் பல மாரியம்மன் கோவில்கள் உண்டு.
    • 15 நாட்கள் ஊரே குதூகலமாக இருக்கும்.

    சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் அன்னை கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குவதால் 8 பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்ற காலங்களில் கூட கோவில் நடை சாத்தப்படுவதில்லை. நவகிரகங்களுக்கும் நாயகி என்பதால் இந்த கோவிலில் கிரகண காலங்களின் போது சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது என்பது கூடுதல் சிறப்பு. ஆடிப்பெருக்கு நிகழ்வுக்கு பிறகு வரும் 22 நாளும் இங்கு விழாக்கோலம் தான்.ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம், உற்சவம் என அம்மன் கண் கொள்ளா, காட்சியளிப்பாள்.

    ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூச்சாட்டலுடன் விழா தொடங்கி 22 நாட்கள் நடைபெறும். இங்கு அம்மனுக்கு பூச்சாட்டப்பட்ட பூ கொண்டே மற்ற அம்மன் கோவிலில் பூச்சாட்டல் நடைபெறுவது வழக்கம். பண்டிகையின் போது கோட்டை பெருமாள் கோவிலில் இருந்து தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு சீர்வரிசை வருகிறது.

    பெரிய மாரியம்மனின் கண்களும், பலி பீடத்திலுள்ள அம்மனின் கண்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பாகும். சேலத்திற்கு பல சிறப்புகள் உண்டு. சேலத்தில் ஆடி மாதத் திருவிழா மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு ஒப்பானது சேலம் கோட்டை மாரியம்மன். சுத்து பட்டு எட்டு ஊர்களுக்கு அவள்தான் கண்கண்ட தெய்வம், ஆடி பதினெட்டு முடிந்து வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என 4 நாட்கள் திருவிழா.

    சேலத்தில் பல மாரியம்மன் கோவில்கள் உண்டு. அத்தனைக்கும் தலைமையிடம் கோட்டை பெரியமாரியம்மன். குகை மாரியம்மன், செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி மாரியம்மன், சஞ்சீவராயன்பேட்டை மாரியம்மன் என எல்லாக் கோவில்களிலும் ஒரே நேரத்தில் திருவிழா நடைபெறும். ஊரே மிக பரபரப்பாய் இருக்கும் காலம் ஆடி மாதம்.

    15 நாட்கள் ஊரே குதூகலமாக இருக்கும். பட்டிமன்றங்கள், நாடகங்கள், சினிமா, ஆர்க்கெஸ்ட்ரா என தினம் எதாவது நிகழ்ச்சி இருக்கும். போஸ் மைதானத்தில் அரசு பொருகாட்சி இடம்பெறும். இதுவரை இவ்வளவு பெரிய கண்காட்சியை வேற எங்கும் பார்த்ததில்லை. கண்காட்சியிலும் தினம் ஒரு நாடகம், தினம் ஒரு சினிமாவும் உண்டு.

    மாரியம்மன் பண்டிகையில் செவ்வாய் கிழமை சக்தி அழைப்பு மற்றும் உருளு தண்டம், புதன் பூமிதித்தல், வியாழன் வண்டி வேடிக்கை, வெள்ளி வாணவேடிக்கை மற்றும் சத்தாபரண ஊர்வலம், சனிக்கிழமை கம்பம் விடுதல் என ஊரே கோலாகலமாக இருக்கும்.

    நையாண்டி மேளம், கரகாட்டம் என கிராமியக் கலைகளும் உண்டு. வண்டி வேடிக்கைதான் ஹைலைட். மக்கள் புராண காட்சிகள் போல அலங்கரிக்கப்பட்ட மின்னொளி வண்டிகளில் குகை மாரியம்மன் கோவிலுக்கு வருவார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ், புலிக்குத்தித் தெரு நண்பர்கள், கார்கானா நண்பர் குழு, ஜிக்க பக்கா நண்பர் குழு என பல பெரிய பெரிய குழுக்கள் இதில் பங்கேற்க சிறந்த அலங்கார வண்டிகளுக்குப் பரிசளிக்கப்படும். இரவு 12 மணிவரை கூட லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்து இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பார்கள்.

    சேலத்தில் கொண்டாடப்படும் இன்னும் சில முக்கியப் பண்டிகைகள்

    ஆடி 1 - தேங்காய் உருட்டி நார்நீக்கி, ஒரு கண்ணை மட்டும் நோண்டி அதில் அரிசி, வெல்லம், பருப்பு இட்டு நெருப்பில் சுட்டு பிள்ளையாருக்குப் படைப்பது.

    ஆடி பதினெட்டு - மேட்டூர், பவானி, சித்தர்கோவில், கந்தாசிரமம் போன்ற நீருள்ள இடங்களுக்குச் சென்று நீராடுவது.

    ஆடி இருபத்தி எட்டு - மேட்டூர் முனியப்பன் கோவில் விழா.

    ஆவணி - ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தியும் இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடப்படும். நாடகம் பட்டி மன்றம் ஆர்க்கெஸ்ட்ரா என அமர்க்களப்படும்.

    புரட்டாசி - ஐப்பசி ஆயுத பூஜை / தீபாவளி. தீபாவளி என்றாலே வெடி. இரவு முழுக்க வெடி. தீபாவளி அன்று சினிமா பார்க்காதவர்களுக்கு மோட்சம் கிடையாது.

    • சேலத்தில் பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை தொடங்குகிறது.
    • கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செல்வார்கள் என்பதால்கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. எட்டு பட்டியை கட்டு ஆளும் அன்னை முதன்மை பெற்ற கோட்டையில் எழுந்தருளி பெரிய மாரியம்மன் என்னும் திருநாமத்தில் பொது மக்களுக்கு அருளாட்சி புரிகிறார்.

    21 நாட்கள்

    தற்போது திருப்பணிகள் நடைபெறுவதையொட்டி பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால் வழக்கமான திருவிழாவில் சில மாற்றங்கள் செய்ய ப்பட்டு நாளை 25-ந் தேதி முதல் (ஆடி மாதம் 9-ந் தேதி) அடுத்த மாதம் 15-ந் தேதி வைரை 21 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இந்தாண்டு ஆடித்திருவிழா கடந்த 17-ந் தேதி மூகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூைஜகள் நடக்கிறது.

    பூச்சாட்டுதல் விழா

    விழாவின் முக்கிய நிகழ்வான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நாளை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கொடுக்கும் பூக்களை அம்மனுக்கு சாத்தி சிறப்பு பூைஜகள் நடைபெறும். கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி சக்தி அழைப்பு நிழ்ச்சியும், 9,10 மற்றும் 11-ந் தேதிகளில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு பிரார்த்தனை செலுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 15-ந் தேதி பால்குட ஊர்வலம், மகா அபிஷேகம், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதானை நடக்கிறது.

    கூடுதல் பாதுகாப்பு

    இந்த நாட்களில் கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செல்வார்கள் என்பதால்கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    • தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • இந்த கோவிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    சர்வதேச சுற்றுலா தலமாகவும், கோடை வாசஸ்தலமாகவும் விளங்கும் கொடைக்கானலில், ஆனந்தகிரி முதல் தெருவில் பிரசித்திபெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கொடைக்கானல் மலைப்பகுதி பக்தர்கள் மட்டுமின்றி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவோரும் அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். வரங்களை அள்ளிதரும் கொடை வள்ளலாக கொடைக்கானல் மாரியம்மன் இருக்கிறார்.

    இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதுதவிர தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சுமார் 15 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவில் கொடைக்கானல் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள மலைக்கிராம மக்கள், தேனி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பங்கேற்பார்கள். திருவிழாவின்போது அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சிகள், கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த திருவிழாவில் முதல் நாளில் போலீசார் சார்பில் முதல் மண்டகப்படி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாதி, மத பேதமின்றி ஒன்றாக கொண்டாடும் திருவிழாவாகவும் இது உள்ளது.

    இதற்கிடையே கோவிலில் கடந்த 1978-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 1996-ம் ஆண்டும், மீண்டும் கடந்த 2010-ம் ஆண்டும் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆகமவிதிப்படி கொடைக்கானல் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

    இந்தநிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    • 6-ந்தேதி கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    கொடைக்கானல் ஆனந்தகிரி உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்தநிலையில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி கடந்த 6-ந்தேதி கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அப்போது கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மறுநாள் யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இந்தநிலையில் இன்று காலை 10.30 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் பல்வேறு பரிவார சாமிகளுக்கு பூஜைகள் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ம ற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

    ×