search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சொரிதல்"

    • மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.
    • தேரோட்டம் இன்று மாலை 4.15 மணிக்கு தொடங்குகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று மாலை விமரிசையாக நடைபெறுகிறது.

    கடந்த 9-ந்தேதி பூச்சொரிதல் மற்றும் நோம்பு சாட்டுதலுடன் தொடங்கிய இந்த விழாவில் அடுத்தடுத்த நிகழ்வுகளாக கொடியேற்றம், பூவோடு, மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல், கண்மலர் செலுத்துதல், பறவை காவடி தீர்த்தம், பால்குடம் எடுத்தல் நடைபெற்றது.

    பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பயபக்தியுடன் நேர்த்திக் கடன்களை மாரியம்மனுக்கு செலுத்தினார்கள்.

    நாள்தோறும் இரவு 7 மணி அளவில் மாரியம்மன் சூலத் தேவருடன் வெவ்வேறு வாகனங்களில் உடுமலை நகருக்குள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். தேரோட்டத்திற்கு முந்தைய முக்கிய நிகழ்வாக மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று கோவில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலை 4.15 மணியளவில் கோவில் வளாகத்தில் தொடங்குகிறது. தேரானாது உடுமலை-பொள்ளாச்சி சாலை, தளிரோடு, சதாசிவம் வீதி, தலைகொண்ட அம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை வழியாக பொள்ளாச்சி-உடுமலையை சாலையை அடைந்து கோவிலை வந்தடைகிறது.

    தேரோட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து ள்ளனர். இதை யடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    • பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது.
    • காவிரி தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவம் சிறப்பு.

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பனையத்தூர் கிராமத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி அம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமியின் முகத்தில் ஆடிப்பெருக்குக்கு ஒரு வாரம் முன்பும், ஆடிப்பெருக்குக்கு ஒருவாரம் பின்பும், தினமும் காலை 8 முதல் 8.05 மணி வரை சூரிய ஒளி விழுகிறது. இந்த அதிசய நிகழ்வை பக்தர்கள் கண்டுகளிக்கிறார்கள்.

    பூக்கள் நிரப்பும் விழா

    சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

    தலைப்பாகை அணியும் அகத்தியர்

    ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு அன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அகத்தியர் இங்கு வந்து காவிரி உருவாகக் காரணமானார் என்பது நம்பிக்கை. அதனால் ஆடிப்பெருக்கு அன்று, ஒரு நாள் மட்டும் அகத்தியருக்கு இங்கு தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்து மரியாதை செய்யப்படுகிறது.

    கல்லுமடை மீனாட்சியம்மன்

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கல்லுமடை இங்கு 1300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருநாகேசுவர முடையார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பவுணர்மி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது.

    பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இங்கு ஆடி மாத விழாக்களில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    காவிரி தாயாருக்கு சீர்வரிசை!

    ஸ்ரீ ரங்கத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கு நன்னாளில், காவிரி நதி நுங்கும் துரையுமாக பெருக்கெடுத்து ஓடும். இதனை காண அரங்கள், காவிரிக்கரைக்கு எழுந்தருள்வார்!

    ஆலயத்தில் இருந்து அம்மா மண்டபத்துக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் வரும் அழகே அழகு! அங்கே திருவாராதனம் முடிந்து, மாலை வேளைகளில், காவிரி தாயாருக்கு மாலை, தாலி, பொட்டு முதலான சீர்வரிசைகள், யானையின் மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்படும். காவிரித் தாயாருக்கு, திருமால் மாலை சமர்ப்பிக்கும் வைபவத்தை காண, எண்ணற்ற பக்தர்கள் திரளாக கூடி பெருமாளையும் காவிரித்தாயையும் வணங்கி மகிழ்வர்!

    • சிவகங்கை தெப்பக்குளத்தில் இருந்து பூ கரகம் எடுத்து வந்தனர்.
    • அம்மன் சன்னதி முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவகங்கை பஸ் நிலையம் எதிரில் உள்ள பிள்ளை வயல் காளி கோவிலில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 8 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டும் விழா கடந்த 7-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. சிவகங்கை தெப்பக்குளத்தில் இருந்து பூ கரகம் எடுத்து வந்தனர்.

    பின்னர் அம்மன் சன்னதி முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தது. ஆனி கடைசி வெள்ளியான நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் காளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • 14-ந்தேதி பூச்சொரிதல் விழா நடக்கிறது.
    • 7-ந்தேதி மாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    சிவகங்கை பையூர் பகுதியில் சிவகங்கை நகர் மக்களுக்கு வேண்டும் வரம் தரும் அம்மனாக பிள்ளைவயல் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 69-வது ஆண்டு திருவிழாவாக வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது.

    முன்னதாக காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து பூக்கரகம் எடுத்து வந்து கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி ஒருவார காலம் அம்மன் தினந்தோறும் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 14-ந்தேதி பூச்சொரிதல் விழா காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணிக்குள் அம்மனுக்கு பால் மற்றும் பல்வேறு திரவிய பொருட்கள் மூலம் அபிஷேகம் நடக்கிறது. மாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    இரவு முழுவதும் சிவகங்கை நகரில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் மற்றும் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து பூ காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கொல்லங்குடி கோவில் செயல் அலுவலர் நாராயணி தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
    செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் கொடை விழா கடந்த 17-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, தீபாராதனை, வில்லிசை நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான கொடை விழா கடந்த 24-ந்தேதி நடந்தது. அன்று பொங்கலிடுதல், முளைப்பாரி, பூந்தட்டு ஊர்வலம், சப்பர வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் 8-ம் நாள் பூஜையன்று காலை ஹோமங்கள் நடந்தது.

    தொடர்ந்து அம்பாளுக்கு நறுமண பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை ஆகியவை நடந்தது. இரவில் அம்பாளுக்கு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
    கரூர் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் கம்பம் ஆற்றில் விடும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவாகும்.
    கரூர் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் கம்பம் ஆற்றில் விடும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவாகும். இந்த விழாவின்போது கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூக்களால் ரதங்களை தயார் செய்து மாரியம்மனை அலங்கரித்து மின் விளக்குகள் ஜொலிக்க அலங்கார ரதத்தின் முன்பு நாதஸ் வரம், தவில், பேண்டு வாத்தியங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தியபடி வருவார்கள்.

    அப்படி வரும் போது அம்மன் பல்வேறு அவதாரங்கள் எடுத்தது போல் பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த காட்சியை காண கண் கோடி வேண்டும். கரூர் பகுதியில் இருந்து 46 பூத்தட்டு ஊர்வலம் கோவிலை அடைந்ததும்.

    கொண்டு வந்த பூக்களை கோவிலில் வழங்கி பக்தர்கள் சாமிதரிசனம் செய்வார்கள். அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். இந்த விழாவை காண பிற மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கரூரை நோக்கி படையெடுப்பார்கள்.
    ×