search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poochorithal festival"

    செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
    செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் கொடை விழா கடந்த 17-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, தீபாராதனை, வில்லிசை நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான கொடை விழா கடந்த 24-ந்தேதி நடந்தது. அன்று பொங்கலிடுதல், முளைப்பாரி, பூந்தட்டு ஊர்வலம், சப்பர வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் 8-ம் நாள் பூஜையன்று காலை ஹோமங்கள் நடந்தது.

    தொடர்ந்து அம்பாளுக்கு நறுமண பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை ஆகியவை நடந்தது. இரவில் அம்பாளுக்கு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
    கரூர் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் கம்பம் ஆற்றில் விடும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவாகும்.
    கரூர் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் கம்பம் ஆற்றில் விடும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவாகும். இந்த விழாவின்போது கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூக்களால் ரதங்களை தயார் செய்து மாரியம்மனை அலங்கரித்து மின் விளக்குகள் ஜொலிக்க அலங்கார ரதத்தின் முன்பு நாதஸ் வரம், தவில், பேண்டு வாத்தியங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தியபடி வருவார்கள்.

    அப்படி வரும் போது அம்மன் பல்வேறு அவதாரங்கள் எடுத்தது போல் பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த காட்சியை காண கண் கோடி வேண்டும். கரூர் பகுதியில் இருந்து 46 பூத்தட்டு ஊர்வலம் கோவிலை அடைந்ததும்.

    கொண்டு வந்த பூக்களை கோவிலில் வழங்கி பக்தர்கள் சாமிதரிசனம் செய்வார்கள். அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். இந்த விழாவை காண பிற மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கரூரை நோக்கி படையெடுப்பார்கள்.
    ×