என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
- சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
- இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவில் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. அதையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி முன்பு மின்அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளினார்.
பின்னர் அங்கிருந்து இரவு 7 மணிக்கு மேல் பூப்பல்லக்கில் மாரியம்மன் புறப்பாடாகி அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, யானைக்கல், வடக்கு வெளி வீதி, கீழவெளி வீதி, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் கோவிலை சென்றடைந்தார். அங்கு மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூடை, கூடையாக பூக்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கோவில் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்