search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabishekam"

    • மயிலத்தில் மிக பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது.
    • மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சாமிகள் கும்பாபிஷேகம் செய்தார்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மிக பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் மயில் வடிவ மலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த முருகன் கோவிலுக்கு கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம்.

    அதன்படி இக்கோவிலை புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (21-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

     முன்னதாக கும்பாபிஷேக விழாவிற்காக யாக சாலையில் பூஜைகள் நடைபெற்றது. இதனை மயிலம் மொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சாமிகள் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 9.15 மணியளவில் விநாயகர், பாலசித்தர், வள்ளி தெய் வானை உடனுறை முருகப் பெருமான் மற்றும் உற்சவ மூர்த்திகள் விமான கோபுர கலசத்தின் மீது மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சாமிகள் கலச நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தார். மாலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகனுக்கு திருமண விழா நடைபெற உள்ளது.

    விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், குப்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம், திண்டிவனம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மயிலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டது.

    கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சாமிகள் தலைமையிலான பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • 2019ம் ஆண்டில் அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு.
    • கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு.

    உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவிலை வரும் 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

    கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு, திரைப் பிரபலங்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 2019ம் ஆண்டில் அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • விழாவை காண கிராமங்களில் திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

    உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 

    மேலும், ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் அன்றைய தினத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக விழாவை காண கிராமங்களில் திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை ஒட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிர விட ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது.
    • ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுகள்.

    அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் கட்டும் பணி முடிவடைந்த நிலையில், நாளை அயோத்தியாவில் வால்மீகி விமான நிலையம் திறக்கப்படுகிறது.

    ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது. 

    இதை முன்னிட்டு, ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுகளின் 7 நாள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, ஜனவரி 16 : கோயில் அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட புரவலர் மூலம் பரிகாரம், சரயு நதிக்கரையில் தசவித் குளியல், விஷ்ணு வழிபாடு மற்றும் கோடன் நடைபெறுகிறது.

    ஜனவரி 17: ராம்லாலா சிலையுடன் அயோத்திக்கு ஊர்வலம் வரும், பக்தர்கள் மங்கள கலசத்தில் சரயு நீரைச் சுமந்து கோவிலை அடைவார்கள்.

    ஜனவரி 18: கணேஷ் அம்பிகா பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன், வாஸ்து பூஜை போன்றவற்றுடன் முறையான சடங்குகள் தொடங்கும்.

    ஜனவரி 19: அக்னி ஸ்தாபனம், நவக்கிரக ஸ்தாபனம் மற்றும் ஹவன்.

    ஜனவரி 20: கோயிலின் கருவறையை சரயுவின் புனித நீரால் கழுவிய பின், வாஸ்து சாந்தியும், அன்னதானமும் நடைபெறும்.

    ஜனவரி 21: 125 கலசங்களுடன் தெய்வீக ஸ்நானம் செய்த பிறகு, ஷயதிவாஸ் செய்யப்படும்.

    ஜனவரி 22: காலை வழிபாட்டிற்குப் பிறகு, மதியம் மிருகசிர நட்சத்திரத்தில் ரமலாவின் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்படும். 

    பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு வருகை தர உள்ளதால், அயோத்தி நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அயோத்தி பயணத்தின் போது பிரதமர் மோடி 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    • கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் புதிய வடிவமைப்பில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • இன்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, விசேஷந்தி ஹோமம் நடந்தது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் புதிய வடிவமைப்பில் நவீன கலைநயத்துடன் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபி ஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதனையொட்டி கடந்த 21-ந் தேதி மாலை பரிகார பூஜை நடந்தது.நேற்று காலை அனுக்ஞை, எஜமானர் சங்கல்பம், தேவதா சங்கல்பம், விநாயகர் பூஜை, புன்யா ஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, விநாயகர் ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரம்மா சாரிய பூஜை, தனபூஜை, கோ பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை யும் நடந்தது.

    மாலையில் தீர்த்த சங்கிரஹணம், வாஸ்து சந்தி, பிரவேச பலி, மிருத சங்கிரஹரணம், பாலிஹாஸ்தா பனம், ரஷாபந்தனம், கலா கர்ஷணம், கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை நடந்தது.

    இன்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, விசேஷந்தி ஹோமம் நடந்தது. மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாகுதி, தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.

    நாளை (வெள்ளிக் கிழமை) காலை 6 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, ஸ்பரு ஷாஹீதி, நாடிசந்தானம், நாமகரணம் ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி தீபாரா தனையும், காலை 8.15 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம்புறப்பட்டு முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விமான கலசத்திற்கு ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதில் ஊர் மக்கள் மற்றும் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து காலை 10 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு சஷர நாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலியும், 1008 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சி யை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் முத்து ஹரிஹர சுப்பிரமணியன் என்ற ஹரிஷ் பட்டர் நடத்துகிறார்.

    ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு தலைவரும், முன்னாள் யூனியன் துணைத் தலைவருமான ராஜதுரை, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பட்டுராஜன், துணை செயலாளர் தங்க ராஜ், துணை பொருளாளர் சேர்மத்துரை மற்றும் ஊர் பொது மக்கள் செய்து உள்ளனர்.

    • கள்ளழகர் கோவில் ராஜ கோபுர கும்பாபிஷேகம் நாளை விமரிசையாக நடக்கிறது.
    • இன்று 2-ம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரைக்கு எழுந்தருளுவார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கள்ளழகர் கோவிலில் ராஜகோபுரத்தில் 18ம் படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. காவல் தெய்வமாக விளங்கும் இங்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். வருடத்தின் ஆடி அமாவாசை நாளில் மட்டும் ராஜ கோபுரத்தின் 18-ம் படி வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்த நிலையில் 18-ம்படி கருப்பண்ணசாமி கோவிலில் ராஜ கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.2 கோடியில் பழமை மாறாமல் கோபுரத்தை புனரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. பணிகள் முடிந்த நிலையில் நாளை (23-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று கோவில் திருமண மண்டபத்தில் முதல்கால யாகபூஜைகள் தொடங்கின. முன்னதாக நூபுர கங்கையில் இருந்து 160 குடங்களில் தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து யாகசாலையில் 8 குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இன்று 2-ம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் நாளை (23ந்தேதி) காலை 9.15 மணி முதல் 10 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை யொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்ககப்பட்டுள்ளது.

    நாளை கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கோவிலில் செய்யப்பட்டு ள்ள பாதுகாப்பு ஏற்பாடு களை ஆய்வு செய்தார்.

    • நெற்குப்பையில் சொக்கலிங்க கருப்பர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை சொக்காண்டான் பங்காளி வகையறாக்கள் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மேலநெற்குப்பை நவனிக் களம் பகுதியில் அமைந் துள்ள சொக்கலிங்கம் கருப் பர் பொன்னழகி அம்மன் ஆலய கோவில் வீடு 20 வருடங்களுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக 2 நாட் கள் கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாக வேள்வியில் மூன்று கால பூஜையாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக் கிரக ஹோமம் போன்ற பல்வேறு ஹோமங்களோடு பூர்ணாகுதி தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து கலசங்களில் புனித நீர் ஊற்றி வைக்கப்பட்டதை தலையில் சுமந்தவாறு பக்தர்கள் கோவில் வீட்டை வலம் வந்தனர்.

    அதனை தொடர்ந்து கலச நீருடன் கடம் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் அபிஷேக நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    பின்பு பரிகார தெய்வங்களுக்கும் அபிஷேக நிகழ்ச்சியும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சொக்காண்டான் பங்காளி வகையறாக்கள் செய்திருந்தனர். இவ்விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதென ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
    • 8.35 மணிக்கு கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்த தளி பகுதியில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதென ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் வருகின்ற 3-ந்தேதி கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், மகாலட்சுமி, துர்க்கை, கருப்பராயசாமி, சப்த கன்னிமார் மற்றும் கோஸ்ட சக்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    விழாவின் முதல் நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி காலை 9.15 மணிக்கு வாஸ்து சாந்தி, கணபதி பூஜையும், மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜை நடைபெற உள்ளது. 2-ந் தேதி காலை 9.15 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.

    3-ந்தேதி காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், 8.15 மணிக்கு யாக சாலையில் இருந்து கலசங்கள் உலா வருதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து 8.35 மணிக்கு கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • கரூர் மின்னாம்பள்ளி குளக்கரை வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    கரூர் 

    கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, மின்னாம்பள்ளி கிராமத்தில் கொங்கு வெள்ளாள விளையன் குல மக்களின் குலதெய்வமாக விளங்கும் பிரசித்தி பெற்ற குளக்கரை வன்னியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு விநாயகர், கருப்பண்ண சுவாமி, மதுரை வீரன் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதனை முன்னிட்டு முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை யாகசாலையில் வைத்து புனித நீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    பின்னர் வன்னியம்மன் கோவில் கோபுர கலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் உற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒயிலாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,201 பேர் கலந்து கொண்ட கொங்கு ஒயிலாட்டம், ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி பெருஞ்சலங்கை ஆட்டம், உருமியாட்டம் போன்றவை நடந்தது.

    இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என ஒரே வண்ணத்தில் ஆன பாரம்பரிய உடை அணிந்து புதிய உலக சாதனை படைத்தன.ர் அதற்காக டிஸ்கவர் வேல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    • கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி 23 யாக குண்டங்கள், 16 கலசங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கும்பாபிஷேக விழா யாக சாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. இதில் சிவாச்சாரியார்கள், தமிழ் ஓதுவார்கள் 45 பேர் கலந்து கொண்டு யாக சாலை பூஜையை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று காலை 2-ம் கால யாக சாலை பூஜை தொடங்கி நடந்தது. தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    மாலை 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    நாளை (27-ந் தேதி) அதிகாலை 4.30 முதல் 7.30 மணி வரை 4-ம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.

    8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

    நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவிலில் தடுப்புகள் அமைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கும்பாபிஷேக விழாவினை காண்பதற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கும்பாபிஷேகத்தை எளிதாக காணும் வகையில் விழாவின் நேரடி ஒளிபரப்பை பெரிய டிஜிட்டல் திரையின் மூலம் காண கன்னிகா பரமேஸ்வரி கோவில், திருவள்ளுவர் சிலை, பழைய பஸ் நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா ஆகிய 4 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு ஆதினங்கள் பங்கேற்கிறார்கள்.

    மேலும் கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக நாளை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. அதனை ஏற்று நாளை (27-ந் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்களும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடை பெற்றது
    • மாலையில் சீதா ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த டி.குமராபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற 41 அடி காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில் புனரமைக்க ப்பட்டு இன்று (ஞாயிற்று க்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி காலை மகா சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. மாலையில் தேவதா பிரதிஷ்டை நடைபெற்றது. நேற்று மாலை வாஸ்து சாந்தி ஹோமம், அங்கு ரார்பணம், வேத திவ்ய பிரபந்தம் தொடக்கம், அக்னி பந்தனம், மகா சாந்தி ஹோமம், முதல் கால யாகசாலை நடைபெற்றது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹூதி நடை பெற்றது. பின்னர் யாக சாலையில் வைக்க ப்பட்டுள்ள புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலமாக புறப்பட்டது. தொடர்ந்து "ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்" என்ற பக்தி முழக்க த்துடன் புனித நீர் கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரபந்த சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தி யுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சீதா ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • அலங்காநல்லூர் அருகே அழகி நாசியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • தொடர்ந்து நேற்று மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி, வலசை கிராமத்தில் அமைந்துள்ள அழகி நாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

    விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி, துணை சேர்மன் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    ஏற்பாடுகளை நிர்வாககுழு தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் பொருசுப்பட்டி பங்காளிகள் செய்திருந்தனர்.

    ×