search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Sekhar Babu"

    • புதிதாக அன்னதான கூடத்துக்கும் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • ஒன்பது நிலை, ஏழு நிலை, ஐந்து நிலை என தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 36 ராஜகோபுரங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகர ராஜா பேசுகையில், "கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவிலுக்கு 5 நிலை ராஜகோபுரம் கேட்டோம். அறநிலையத்துறை அமைச்சர் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். மேலும் பங்குனி உத்திரம் போன்ற திருநாளில் தேர் வேண்டும் என்றும் பக்தர்கள் விரும்புகிறார்கள்.

    எனவே அதை செய்து தருவதுடன் கோவில் தெப்பக்குளத்தையும் சீரமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    அதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:-

    "குறுங்காலீசுவரர் கோவிலுக்கு கடந்த கூட்டத்தொடரில் திருத்தேர் வேண்டும் என்று பிரபாகர ராஜா கேட்டார். ரூ.31 லட்சம் செலவில் தேருக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பசுமடம் கேட்டிருந்தார். அதற்கும் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. புதிதாக அன்னதான கூடத்துக்கும் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு பிரபாகர ராஜா எம்.எல்.ஏ.வுக்கும் அழைப்பு அனுப்பப்படும்.

    இந்த அரசு கேட்பதை மட்டுமல்ல. கேட்காததையும் செய்து கொடுக்கும் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் பேசுகையில், "பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் சித்தர் போகர் வடிவமைத்த முருகன் சிலை அமைந்துள்ள திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அதேபோன்று தினசரி 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பொதுமக்கள் அங்கு வருகை தரக்கூடிய நிலையில் சுபமுகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறுவதற்காக திருமண மண்டபமும் கட்டித்தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு, திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டி தரப்படும். ஒன்பது நிலை, ஏழு நிலை, ஐந்து நிலை என தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 36 ராஜகோபுரங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதே போன்று பூம்பாறை திருக்கோவில் புனரமைக்கும் பணிகளும் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    • சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து ஆலோசனை செய்தார்.
    • கூட்டத்தில் பஸ்களை இயக்கும் பணியினை படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் மற்றும் சாலைப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து ஆலோசனை செய்தார். மேலும் இக்கூட்டத்தில் பஸ்களை இயக்கும் பணியினை படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, போக்குவரத்து ஆணையர் அ.சண்முக சுந்தரம், தலைமை வனப்பாது காவலர் கீதாஞ்சலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.
    • நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை - 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து, ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறையுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வரதராஜபுரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினை நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.

    ஆய்வுக்கு பின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், புதிய புறநகர் பேருந்து முனையம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

    கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை- 7 கிலோ மீட்டர் நீளத்திற்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை - 18 கிலோமீட்டர் நீளத்திற்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை - 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அ.அமல்ராஜ், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, போக்குவரத்து ஆணையர் இல.நிர்மல்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முடிவுரை எந்த இயக்கத்திற்கு எழுதப்பட போகிறது என்பது நாடாளுமன்றத் தேர்தலினுடைய முடிவுகளில் காண்பிக்கப்படும்.
    • திராவிட முன்னேற்ற கழகம் எப்போதெல்லாம் அதிகாரத்திற்கு வருகின்றதோ அப்போதெல்லாம் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும்.

    சென்னை:

    2021- 2022 மற்றும் 2022- 2023 -ம் ஆண்டுகளுக்கான மானியக்கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டமன்ற மானியக் கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், நிறைவு பெற்ற பணிகளின் செயல்பாடுகள் குறித்தும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்களின், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மண்டலங்கள் வாரியாக இணை ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்த வேண்டிய கோவில்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகளை மேற்கொள்ளப்பட்டு இதுவரையிலும் குடமுழுக்கு நடைபெறாத கோவில்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், நகரங்களில் இருக்கின்ற சிறிய சிறிய கோவில்கள் என்று அனைத்து கோவில்களும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு வருகிறோம்.

    கடந்த 15 மாதங்களில் 310 கோவில்களில் குடமுழுக்கு நடந்திருக்கின்றது. அதேபோல் ஆக்கிரமிப்பு செய்திருந்த சுமார் 3,118 ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி 2,710 ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்து சுமார் 3566 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மீட்கப்பட்டிருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் மீட்கப்பட்ட சொத்துக்களை வாடகைக்கு விடவும், அதேபோல் ஏற்கனவே கோவிலுக்கு சொந்தமான எந்தவித பயன்பாட்டிலும் இல்லாத இடங்கள், காலி மனைகள், கட்டிடங்களை வருவாய் ஈட்டுகின்ற அளவிற்கு அதை வாடகைக்கு விடுவதற்கு உண்டான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    கே: சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி?

    பதில்: இந்த ஆட்சியைப் பொறுத்தளவில் இன்னார், இனியவர் என்ற பாகுபாடே கிடையாது. தவறு யார் செய்திருந்தாலும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை திருமணம் என்பது சட்டத்திற்கு புறம்பானது. அதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். ஆகையால் சட்டம் தன் கடமையை செய்கிறது.

    கே: தி.மு.க. அரசு தமிழுக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறது என்று பா.ஜ.க.வினர் விமர்சித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது குறித்து?

    பதில்: 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முடிவுரை எந்த இயக்கத்திற்கு எழுதப்பட போகிறது என்பது நாடாளுமன்றத் தேர்தலினுடைய முடிவுகளில் காண்பிக்கப்படும். திராவிட முன்னேற்ற கழகம் எப்போதெல்லாம் அதிகாரத்திற்கு வருகின்றதோ அப்போதெல்லாம் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும். அதற்கு உதாரணம் என்று எடுத்துக் கொண்டால் அருகில் இருக்கின்ற ரிப்பன் மாளிகையில் தமிழ் வாழ்க என்று இருக்கும். கடந்த பத்தாண்டு காலமாக அந்த ஒளி பொருந்தி அந்த பலகை செயல்பாட்டிலேயே இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அது செயல்பாட்டிற்கு வந்தது.

    அதேபோல அன்னைத் தமிழில் வழிபாடு கூட எந்த கோவிலிலும் நடைபெறாத சூழல் இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் 48 முதுநிலை கோவில்களில் தமிழில் அர்ச்சனை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பார்ப்போம் என தெரிவித்தார்.

    • கோவில் மற்றும் கோவிலை சுற்றி உள்ள சுற்று பிரகாரத்தை ஆய்வு செய்தோம். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
    • 2009-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும்.

    சென்னை:

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்ம சுவாமி கோவில், அரங்கநாத சுவாமி கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சேகர்பாபு தெரிவித்ததாவது:-

    கோவில் மற்றும் கோவிலை சுற்றி உள்ள சுற்று பிரகாரத்தை ஆய்வு செய்தோம். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 20 ரூபாய் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    2009-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு விரைவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும். திருப்பணிகள் தொடங்குவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

    அருகில் உள்ள நரசிம்ம சுவாமி கோவிலில் ஆய்வு செய்தோம். இந்த கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. சிதிலமடைந்த பழைய தல விருட்சக மரத்தின் பாகங்கள் கண்ணாடி பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி, துணை ஆணையர் ரமேஷ், கோவில் உதவி ஆணையர் இளையராஜா, கோவில் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    • திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு, அங்கும் கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.
    • யாகசாலையை ஆய்வு செய்த அவர் வெக்காளியம்மனை தரிசனம் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் மற்றும் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் வருகிற 6-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    இதையொட்டி இரண்டு கோவில்களிலும் யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் இன்று காலை சமயபுரம் மற்றும் உறையூர் கோவில்களில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    அதிகாலை சுமார் 5 மணியளவில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற அமைச்சர் சேகர் பாபு, அங்கு பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் இன்று மாலை தொடங்க உள்ள யாகசாலை பூஜைக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதிகாரிகளுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார்.

    இதையடுத்து காலை 7 மணிக்கு திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு, அங்கும் கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார். யாகசாலையை ஆய்வு செய்த அவர் வெக்காளியம்மனை தரிசனம் செய்தார்.

    பின்னர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் அனைத்தும் மிகுந்த திருப்தி அளிப்பதாகவும், பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக கடைபிடித்து விழாவை சிறப்பாக நடத்திட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு அமைச்சர் சேகர்பாபு சென்றார். அங்கு கோவில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் வழங்கி ஆசீர்வாதம் பெற்றார். பின்னர் மூலவர் ரெங்கநாதர், தாயார் சன்னதிகளில் வழிபாட்டை முடித்துவிட்டு அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். இதையடுத்து அவர் சென்னை புறப்பட்டார்.

    • சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பின்னி மில் மைதானம் அந்தோனியார் சர்ச் அருகில் நடைபெற்றது.
    • தையற்கலை மாணவர்கள் 271 பேருக்கு தையல் இயந்திரங்களையும் கணினி பயின்ற 309 மாணவிகளுக்கு மடிகணினிகளையும் கல்லூரி மாணவர்கள் 500 பேருக்கு ரூ. 5000 வீதம் கல்வி உபகரணங்களையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் தொடர் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பின்னி மில் மைதானம் அந்தோனியார் சர்ச் அருகில் நடைபெற்றது.

    அமைச்சர் பி.கே சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் பயின்ற தையற்கலை மாணவர்கள் 271 பேருக்கு தையல் இயந்திரங்களையும் கணினி பயின்ற 309 மாணவிகளுக்கு மடிகணினிகளையும் கல்லூரி மாணவர்கள் 500 பேருக்கு ரூ. 5000 வீதம் கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் எம். பி. பர்வீன் சுல்தானா, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, எ.வெற்றியழகன், ஜோசப் சாமுவேலு மற்றும் பகுதி கழக செயலாளர் எஸ். முரளி, எஸ்.ராஜசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ் குமார்,மண்டல தலைவர்கள் கூ.பி. ஜெயின் சோ வேலு, டி, எஸ்.பி ராஜகோபால், கவுன்சிலர்கள் வே. பரிமளம், பி.ஸ்ரீராமுலு, இசட். ஆசாத், ராஜெஷ் ஜெயின், கே.சரஸ்வதி பகுதி செயலாளர்கள் சுதாகர், முரளிதரன், ஏன், நாகராஜன், டிஎஸ்பி எம்.டி.ஆர் நாகராஜ், செ. தமிழ்வேந்தன், என். சாமி, வே.வாசு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் டி.வி செம்மொழி, எம், விஜயகுமார், மாவட்ட பிரதிநிதிகள் டீ. தம்பிதுரை, ஜி.பாலாஜி எஸ்.எம் ஹாஜி,எம்.எம். மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பார்த்திபன், கே. கவியரசு ஆகியோர் நன்றி கூறினர்.

    • கடந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி தற்போது வடபழனி ஆண்டவர் கோவிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
    • வரும் காலங்களில் இத்திட்டம் கோவிலில் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றும் செயல்படுத்த தேவையான நிதியினை கோவிலில் வரவு செவவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

    கடந்த 2021-2022 சட்டமன்ற மானியக்கோரிக்கையில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோவிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

    மேலும் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கோவில்கள் மற்றும் மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணங்கள் நடைபெற்று வருகின்றது.

    2022 -2023-ம் ஆண்டு சட்டமன்ற மானியக்கோரிக்கையில் கோவில்களில் மற்றும் கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்கு கோவில் சார்பாக புத்தாடைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் மணமகன் பி.சிவா மற்றும் மணமகள் ஆர். சுகந்தி ஆகியோர்களுக்கு திருமணம் நடைபெற்று புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

    முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிகள் திருமணம் கடந்த ஆண்டு முதல் கோவில் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் திருமணங்களுக்கு கட்டணம் இல்லாமல் நடைபெற்று வருகிறது.

    கடந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி தற்போது வடபழனி ஆண்டவர் கோவிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. வரும் காலங்களில் இத்திட்டம் கோவிலில் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றும் செயல்படுத்த தேவையான நிதியினை கோவிலில் வரவு செவவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர்ஜெ.கருணாநிதி, இணை ஆணையர் தனபால், வடபழனி துணை ஆணையர் முல்லை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை அகரம் ஜெயின் பள்ளி வளாகத்தில் “குறளோவியரின் புகழரங்கம்” என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது.
    • பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப்.முரளிதரன், எ.நாகராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர். மேயர் பிரியாராஜன், எம்.பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் கருணாநிதி பிறந்தநாள் விழா "வேருக்கு விழா" என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக சென்னை அகரம் ஜெயின் பள்ளி வளாகத்தில் "குறளோவியரின் புகழரங்கம்" என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. கே.ஜார்ஜ்குமார் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப்.முரளிதரன், எ.நாகராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர். மேயர் பிரியாராஜன், எம்.பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ப.ரங்கநாதன், சங்கரி நாராயணன், சரிதா மகேஷ்குமார், தேவஜவகர், கே.சந்துரு, சி.மகேஷ்குமார், எஸ்.பன்னீர் செல்வம், எம்.தாவுத்பீ, துரைகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ந.பொன்முடி நன்றி கூறினார்.

    ×