என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Sekhar Babu"

    • கரையான் புற்றை அரிப்பது போல எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அரித்துக் கொண்டிருக்கிறார்.
    • முதலமைச்சரின் பலம் பொருந்திய கரத்தை மேலும் வலுவாக்குவதற்கு அனைவரும் வருவார்கள்.

    சென்னை:

    கரூர் சம்பவத்திற்கு விஜய் மட்டும் பொறுப்பல்ல அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என அஜித் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

    இதனிடையே, அஜித் பேட்டி குறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமைச்சர் சேகர்பாபு, நடிகர் அஜித்தின் பேட்டியை தான் இன்னும் பார்க்கவில்லை என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி தனது ராஜதந்திர நடவடிக்கைகளால் அ.தி.மு.க.வை அழித்து கொண்டிருக்கிறார். கரையான் புற்றை அரிப்பது போல எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை அரித்துக் கொண்டிருக்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி தனது செயல்பாடுகளால் அ.தி.மு.க.வை அழித்து பா.ஜ.க.வை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதை உண்மையான அ.தி.மு.க.வினர் உணர்ந்து இருக்கிறார்கள்.

    முதலமைச்சரின் பலம் பொருந்திய கரத்தை மேலும் வலுவாக்குவதற்கு அனைவரும் வருவார்கள் என்றார். 

    • கூடுதலாக 64.30 கோடி ரூபாய் செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகின்றது.
    • 12 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியினை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று வினா-விடை நேரத்தின் போது வேதாரண்யம் எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்து பேசியதாவது:-

    காடந்தேத்தியில் ஆதீன மலையார் கோவிலுக்கு பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்குண்டான போதிய இடவசதி இல்லை. இருப்பினும், அந்த கோவிலுக்கு சொந்தமான இடத்திலோ, மாவட்டத்தில் இருக்கின்ற கோவிலுக்கு சொந்தமான இடங்களிலோ ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து உறுப்பினரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குண்டான முயற்சியை துறை மேற்கொள்ளும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையை விட தற்போது சுமார் 70 சதவீதம் பக்தர்களின் வருகை கூடுதலாகி இருக்கின்றது.

    முதலமைச்சர், அந்த மாவட்டத்தின் அமைச்சர் வேலுவையும் அந்த மாவட்டத்தை சேர்ந்த துணை சபாநாயகர் பிச்சாண்டியையும், துறையின் அமைச்சரான என்னையும் 3 பேர் குழுவாக நியமித்து தினந்தோறும் திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். அதன்படியே பணிகளை மேற்கொண்டு வருகிறோம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் கூடுதலாக 64.30 கோடி ரூபாய் செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகின்றது.

    அதேபோல பொதுப்பணித்துறை சார்பில் முதலமைச்சரின் அனுமதியை பெற்று 12 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியினை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    மேலும், கிரிவலப் பாதையில் சுமார் 12 இடங்களில் கழிப்பிட வசதிகள் பொதுப்பணித்துறை அமைச்சரின் முயற்சியால் சி.எஸ்.ஆர். நிதியுதவி மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட முதலமைச்சர், திருவண்ணாமலை கோவிலில் கோபுரங்கள் மற்றும் விமானங்கள் மின்னொளியால் ஜொலிக்கின்ற வண்ணம் 7½ கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை தொடங்கி வைத்து இன்றைக்கு கோபுரங்கள் மின்னொளி பெற்று பிரகாசமாக இருக்கின்றது.

    அதோடு மட்டுமல்ல கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்ற போது நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு சுமார் ரூ.4.50 கோடி செலவில் கியூ வரிசை காம்ப்ளக்ஸ் ஏற்படுத்துகின்ற பணியும் தற்போது நடைபெற்று வருகின்றது.

    போர்க்கால அடிப்படையில் பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற ஒரு அரசாக, ஒரு துறையாக இந்த துறை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பெருந்திட்ட வரைவின் வாயிலாக கோவிலின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்த பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கும்பாபிஷேக விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

    15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பில் நடைபெற்ற பெருந்திட்ட வளாகப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகளில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

    தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 1-ந்தேதி மாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கும்பாபிஷேக விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்றும் வரும் இறுதிகட்ட பணிகளை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.

    அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் இளம்பகவத், கோவில் தக்கார் அருள்முருகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    முன்னதாக கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் இன்று 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டார். 

    • ஒருநாள் கூத்துக்கு மீசையை வைத்தான் மேடையிலே... என்பதுபோல் ஒருநாள் குல்லா அணிந்து விட்டு ஓடுபவர் அல்ல நம் முதல்வர்.
    • உங்களிடம் வாக்குகள் மட்டும் கேட்டு வருகின்ற தலைவர்கள் அல்ல எங்கள் தலைவர்.

    கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, கொளத்தூர் தொகுதி இஸ்லாமியப் பெருமக்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கினார்.

    இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்று பேசினார். அப்போது நமது முதல்வர் ஒருநாள் குல்லா அணிந்துவிட்டு ஓடுபவர் அல்ல எனப் பேசினார்.

    தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அக்கட்சி தலைவர் விஜய், ஒருநாள் முழுவதும் நோன்பு மேற்கொண்டு கலந்து கொண்டார். அப்போது தலையில் குல்லா அணிந்திருந்தார். அதனை மனதில் வைத்து சேகர் பாபு மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

    அமைச்சர் சேகர் பாபு பேசும்போது "இஸ்லாமியர் குடும்பங்களில் ஒளியேற்றி வைத்த இயக்கும் திமுக. இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். ஆனால் இன்று ஒருநாள் கூத்துக்கு மீசையை வைத்தான் மேடையிலே... என்பதுபோல் ஒருநாள் குல்லா அணிந்து விட்டு ஓடுபவர் அல்ல நம் முதல்வர். தொப்புல்கொடி உறவாம் இஸ்லாமிய நண்பர்களின் பாதுகாவலர்தான் நம் முதல்வர். ஒருநாள் கஞ்சி குடித்து ஓடுபவர்கள் மத்தியில், இஸ்லாமியர்களில் நெஞ்சில் குடியிருப்பவர் முதல்வர்.

    உங்களிடம் வாக்குகள் மட்டும் கேட்டு வருகின்ற தலைவர்கள் அல்ல எங்கள் தலைவர். உங்கள் வாழ்வுரிமையையும், வாழ்வாதார உரிமையையும், வழிபாட்டு உரிமையை மீட்டுத்தரும் தலைவர்கள்தான் மு.க. ஸ்டாலின்.

    2026 தேர்தலில் உங்களுடைய 200 இடங்கள் என்பது நிச்சயம். 234 என்பது லட்சியமாக கொண்டு செயல்படுவோம்.

    இவ்வாறு சேகர் பாபு பேசினார்.

    • கும்பகோணத்தில் உள்ள பழமையான துக்காச்சி அம்மன் கோவிலுக்கு இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோ விருது கிடைத்திருக்கிறது.
    • ஆயிரம் விளக்கு தர்மபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான அன்பழகன் தனது தொகுதிக்குட்பட்ட மானம்பாடி நாகநாதசுவாமி கோவிலில் திருப்பணி செய்ய அரசு ஆவன செய்யுமா ? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    உறுப்பினர் குறிப்பிட்டு உள்ள கோவிலுக்கு அடுத்த மாதம் 11-ந்தேதி பாலாபிஷேகம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் ஆண்டு தோறும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி 2022- 2023-ம் ஆண்டில் ரூ.100 கோடியும் 2023-2024-ம் ஆண்டில் 100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டும் ரூ 100 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர உபயதாரர் நிதியாக ரூ.60 கோடியும் திருக்கோவில்கள் சார்பாக ரூ.70 கோடியும் கிடைக்கப் பெற்று மொத்தம் ரூ.430 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கும்பகோணத்தில் உள்ள பழமையான துக்காச்சி அம்மன் கோவிலுக்கு இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோ விருது கிடைத்திருக்கிறது.

    ஆயிரம் விளக்கு தர்மபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஏற்கனவே 100 கோவில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 70 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டும் 100 கோவில்கள் கும்பாபிஷேகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. சுவாமிமலையில் மின் தூக்கி சீரமைக்கப்பட்டு வருகிற ஜூன் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதில் உறுப்பினர் ஜவாஹிருல்லா உடன் நானும் பங்கேற்க உள்ளேன்.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

    • கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம்.
    • மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மக்கள் முதல்வரின் மனித நேய விழா என்ற பெயரில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தினமும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று 72 ஜோடி திருமணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து 50 வகையான சீர்வரிசைகளை மணமக்களுக்கு வழங்கினார்.

    இந்த விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வரவேற்று பேசினார். மணமக்களை வாழ்த்தி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சேகர்பாபுவுக்கு 2 முகங்கள் உண்டு. ஏனென்றால் அத்தனை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். எல்லா இடத்திலேயும் இருக்கிறீர்கள். எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக போட்டியாக இருக்கிறீர்கள். முழு நேர அரசியல்வாதி. அவர் நடத்துகிற நிகழ்ச்சிக்கு பக்கத்திலே யாருமே நிற்க முடியாது. யாருமே தெரிய மாட்டார்கள். இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அது மேடையிலே இருக்கிற அத்தனை பேருக்கும் தெரியும். அவருக்கும் தெரியும். அமைச்சர் சேகர்பாபு ஆயிரக்கணக்கான திருமணங்களை செய்து வைத்து உள்ளார். 3 வருடத்தில் மட்டும் 1700 திருமணங்களை அவரது துறை சார்பாக நடத்தி வைத்துள்ளார். அந்த வகையில் இன்று 72 ஜோடி திருமணங்களை நடத்தி வைத்து உள்ளார்.

    சீர்திருத்த முறையில், சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம். இதில் கலப்பு திருமணங்கள் மட்டுமின்றி, காதல் திருமணங்கள் இருக்கும் என நம்புகிறேன்.

    இந்த காலத்தில் கலப்பு திருமணம் நடப்பது பெரிய விசயம். அதில் காதல் திருமணம் என்பது இன்னும்... எனக்கும் காதல் திருமணம்தான். ஆனால் எங்கள் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.

    கலைஞர் இருக்கிற காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் தொடர்ந்து காதல் திருமணம். கிட்டத்தட்ட இரண்டு தலைமுறையாக. எங்கள் வீட்டில் போய் யாராவது காதல் திருமணம் இல்லை, பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்றால் எங்கள் தாத்தா ஒரு மாதிரியாக பார்ப்பார். அந்த அளவுக்கு எங்கள் வீட்டில் காதல் திருமணம். பலருக்கும் பல அனுபவங்கள் இருக்கிறது.

    நமது அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கையெழுத்துதான். விடியல் பயணம் திட்டம். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம். கிட்டத்தட்ட 4 வருடங்களில் மட்டும் 625 கோடி முறை பயணங்கள் மேற்கொண்டு உள்ளனர். இதுதான் இந்த திட்டத்தோட வெற்றி. ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.800-ல் இருந்து 850 வரை சேமிக்கிறார்கள்.

    நம் தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டம், செயல்படுத்த முடியாத திட்டம் இப்போது கிட்டத்தட்ட 25 மாதமாக செயல்படுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கிக் கொண்டு இருக்கிறோம். இப்படி பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செய்து கொண்டு இருக்கிறார்.

    நம் தலைவர் 2019-ம் ஆண்டு முதல் சந்தித்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 11 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வெற்றியை தந்து உள்ளனர். மீண்டும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் வரப்போகுது. தலைவர் அதில் அத்தனை பேருக்கும் இலக்கு கொடுத்து உள்ளார். 243-ல் ஜெயித்து காட்ட வேண்டும் என்று சொல்லி உள்ளார். அது நீங்கள் இருக்கிற நம்பிக்கையில் தான்.

    எனவே மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். நிறைய பெற்றுக் கொள்ளாதீர்கள். அதிலும் மத்திய அரசு பார்த்து கொண்டிருக்கிறது.

    அதாவது ஒன்றிய அரசு குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி ஜனத்தொகை அதிகமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லியது. அதை வெற்றிகரமாக செய்து கொடுத்தது தமிழக அரசு. அதற்காக இப்போது நாம் தண்டிக்கப்படுகிறோம்.

    இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப் போகிறார்கள். இங்கு பாராளுமன்ற எம்.பி.க்கள் எண்ணிக்கை 39. இந்த மறுசீரமைப்பு வந்தால் 8 தொகுதி குறைந்து 31 தொகுதியாகி விடும்.

    தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடி. ஆனால் குடும்பக் கட்டுப்பாட்டை சரியாக செய்யாத, சரியாக விழிப்புணர்வை ஏற்படுத்தாத வட மாநிலங்கள் இதனால் பயன் அடைய போகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.
    • நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை - 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து, ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறையுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வரதராஜபுரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினை நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.

    ஆய்வுக்கு பின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், புதிய புறநகர் பேருந்து முனையம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

    கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை- 7 கிலோ மீட்டர் நீளத்திற்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை - 18 கிலோமீட்டர் நீளத்திற்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை - 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அ.அமல்ராஜ், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, போக்குவரத்து ஆணையர் இல.நிர்மல்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து ஆலோசனை செய்தார்.
    • கூட்டத்தில் பஸ்களை இயக்கும் பணியினை படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் மற்றும் சாலைப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து ஆலோசனை செய்தார். மேலும் இக்கூட்டத்தில் பஸ்களை இயக்கும் பணியினை படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, போக்குவரத்து ஆணையர் அ.சண்முக சுந்தரம், தலைமை வனப்பாது காவலர் கீதாஞ்சலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • புதிதாக அன்னதான கூடத்துக்கும் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • ஒன்பது நிலை, ஏழு நிலை, ஐந்து நிலை என தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 36 ராஜகோபுரங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகர ராஜா பேசுகையில், "கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவிலுக்கு 5 நிலை ராஜகோபுரம் கேட்டோம். அறநிலையத்துறை அமைச்சர் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். மேலும் பங்குனி உத்திரம் போன்ற திருநாளில் தேர் வேண்டும் என்றும் பக்தர்கள் விரும்புகிறார்கள்.

    எனவே அதை செய்து தருவதுடன் கோவில் தெப்பக்குளத்தையும் சீரமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    அதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:-

    "குறுங்காலீசுவரர் கோவிலுக்கு கடந்த கூட்டத்தொடரில் திருத்தேர் வேண்டும் என்று பிரபாகர ராஜா கேட்டார். ரூ.31 லட்சம் செலவில் தேருக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பசுமடம் கேட்டிருந்தார். அதற்கும் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. புதிதாக அன்னதான கூடத்துக்கும் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு பிரபாகர ராஜா எம்.எல்.ஏ.வுக்கும் அழைப்பு அனுப்பப்படும்.

    இந்த அரசு கேட்பதை மட்டுமல்ல. கேட்காததையும் செய்து கொடுக்கும் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் பேசுகையில், "பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் சித்தர் போகர் வடிவமைத்த முருகன் சிலை அமைந்துள்ள திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அதேபோன்று தினசரி 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பொதுமக்கள் அங்கு வருகை தரக்கூடிய நிலையில் சுபமுகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறுவதற்காக திருமண மண்டபமும் கட்டித்தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு, திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டி தரப்படும். ஒன்பது நிலை, ஏழு நிலை, ஐந்து நிலை என தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 36 ராஜகோபுரங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதே போன்று பூம்பாறை திருக்கோவில் புனரமைக்கும் பணிகளும் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.
    • முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் 2000-வது குடமுழுக்கு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பரசலூர் கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு இன்றுடன் 2005 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நிறைவு பெற்றுள்ளது. திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது.

    ஆதீனங்கள் ஒருசேர இந்த ஆட்சியோடு இணக்கமாக இருந்து பக்தி பரவசத்தோடு ஆட்சியை ஆதரிப்பது கடந்த காலங்களில் இல்லை.

    முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அனைவரும் எப்படி ஆதரிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்? எதிர்தரப்பினரின் கருத்தையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு எதிர்மறையாக வினையாற்ற இந்து சமய அறநிலையத்துறை தயாராக இல்லை.

    முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. உலகமே பாராட்டும் அளவிற்கு முத்தமிழ் மாநாடு சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.

    இதுவரை ரூ.6,750 கோடி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கிறது.

    கோவில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பல்வேறு வகையில் எதிர்ப்புகள் வந்தாலும், அந்தத் திட்டம் பயன் தரக்கூடிய திட்டமாகவே உள்ளது. பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாரம்பரிய நகைகளை தவிர்த்து புதிதாக பக்தர்கள் வழங்கிய நகைகள் மத்திய அரசின் நகை உருக்கு ஆலைக்கு கொண்டு சென்று உருக்கி எந்த கோவிலில் இருந்து எடுத்துச் சென்றோமோ அதே கோவிலில் டெபாசிட் செய்வதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும் கூறினார். மேலும் ரூ.15 கோடிக்கு வருவாய் வரும் அளவில் கோவில் நகைகள் மதிப்பீடும் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜகவினர் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.
    • பாஜகவினரை கிண்டலடிக்கும் விதமாக சேகர்பாபு பேசிய வீடியோ இணையத்தில் வைரல்

    சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு பூங்காவின் பணிகளை நேரில் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பூங்கா ஏரியில் தாமரை வளர்ந்திருப்பதை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர்பாபு, ஏரியில் கூட தாமரை வளரக்கூடாது என்று கிண்டலாக பேசினார். அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சை கேட்டு அதிகாரிகள் சிரித்தனர்.

    தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜகவினர் பல ஆண்டுகளாக கூறிவரும் நிலையில், அதனை கிண்டலடிக்கும் விதமாக சேகர்பாபு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • திமுக ஆட்சியில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் சில நாட்களாக தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சால் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு பேசிய கே. பாலகிருஷ்ணன், ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    நேற்றுவரை ஆட்சியை பாராட்டியவர் பாலகிருஷ்ணன். அவருக்கு என்ன நெருடல் என புரியவில்லை. அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசுகிறார் என்பதும் தெரியவில்லை. குற்றம்சாட்ட வேண்டுமென்ற நோக்கில் குறைசொன்னால் அதற்கெல்லாம் பதில் தர முடியாது. பாலகிருஷ்ணனின் கோரிக்கைகள் என்னவென்று அறிந்து நிவர்த்தி செய்வோம். திமுக ஆட்சியில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது மக்கள் பாதிக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம்.

    அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்தது கடந்த ஆட்சிக்காலம். போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை என்று கூறினார். 

    ×