என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு
- சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
- 8,423 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் தி.மு.க. ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன.
சென்னை :
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து அனைத்துலக வள்ளலார் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* அறநிலையத்துறை இவ்வளவு சிறப்பாக செயல்படமுடியும் என காட்டியவர் சேகர்பாபு.
* தான் செயல்பாபு என்பதை தொடர்ந்து நிரூபித்து கொண்டிருப்பவர் அமைச்சர் சேகர்பாபு.
* தி.மு.க. ஆட்சியில் 4,192 கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
* சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
* 8,423 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் தி.மு.க. ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன.
* 19 திருக்கோவில்களில் முதலுதவி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* 12 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
* 5 லட்சம் பேர் கலந்து கொண்ட முருகன் மாநாட்டை நடத்தி காட்டினோம்.
* உலகிற்கே தனிப்பெருங்கருணை என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார்.
* பசிப்பிணியை போக்கும் திட்டங்கள் தான் திராவிட மாடல் அரசின் திட்டங்கள்.
* வள்ளலார் தமிழ் சமூகத்தில் உதித்த புரட்சியாளர்.
* வள்ளலாரை போற்ற வேண்டியது தமிழ் சமூகத்தின் கடமை.
* அனைத்துலக வள்ளலார் மாநாட்டை குறிக்கும் விதமாக நினைவுத்தூண் அமைக்கப்படும்.
* வள்ளலார் சன்மார்க்க பயிற்சி பள்ளி அரசு சார்பில் அமைக்கப்படும்.
* 3 இடங்களில் வள்ளலார் அன்னதான கூடங்கள் அமைக்கப்படும்.
* வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும்.
* தலைநகர் சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றார்.






