search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruvenkadu temple"

    ஒன்பது கிரகங்களிலும் மிகவும் வித்தியாசமான கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் பகவானுக்கு உகந்த 108 போற்றியை பார்க்கலாம்.
    ஓம் அழகனே போற்றி
    ஓம் அருளாகரனே போற்றி
    ஓம் அறிவிற்கு உவமையே போற்றி
    ஓம் அனைவருக்கும் காவலே போற்றி
    ஓம் அறிவுருவே போற்றி
    ஓம் அழகுருவே போற்றி
    ஓம் அம்பு பீடனே போற்றி
    ஓம் அலிக்கிரகமே போற்றி
    ஓம் அலங்காரனே போற்றி
    ஓம் ஆனந்தனே போற்றி
    ஓம் ஆயில்ய நாதனே போற்றி
    ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
    ஓம் இரு வாகனனே போற்றி
    ஓம் இளை நாதனே போற்றி
    ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
    ஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி
    ஓம் உயர்ந்தவனே போற்றி
    ஓம் உகந்தவனே போற்றி
    ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி
    ஓம் உடலிற் தோலானவனே போற்றி
    ஓம் கலைவாணனே போற்றி
    ஓம் கல்வியருள்பவனே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
    ஓம் கவியரசே போற்றி
    ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
    ஓம் கிரஹபதியே போற்றி
    ஓம் கிரகபீடாஹரனே போற்றி
    ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
    ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
    ஓம் குஜன் பகைவனே போற்றி
    ஓம் குதிரை வாகனனே போற்றி
    ஓம் கேடயதாரியே போற்றி
    ஓம் கேட்டை நாதனே போற்றி
    ஓம் சசி சுதனே போற்றி
    ஓம் சந்திர குலனே போற்றி
    ஓம் சத்வ குணனே போற்றி
    ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
    ஓம் சிவனடியானே போற்றி
    ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
    ஓம் சிங்க வாகனனே போற்றி
    ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
    ஓம் சுந்தரனே போற்றி
    ஓம் சுப கிரகமே போற்றி
    ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
    ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
    ஓம் ஞானியே போற்றி
    ஓம் ஞான நாயகனே போற்றி
    ஓம் தவசீலனே போற்றி
    ஓம் தவயோகியே போற்றி
    ஓம் தயாகரனே போற்றி
    ஓம் தனிக்கோயிலானே போற்றி
    ஓம் தாரை மகனே போற்றி
    ஓம் தரித்ர நாசகனே போற்றி
    ஓம் திருவுருவனே போற்றி
    ஓம் திருவெண்காட்டில் அருள்பவனேபோற்றி
    ஓம் துதிக்கப்படுபவனேபோற்றி
    ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனேபோற்றி
    ஓம் தேவனேபோற்றி
    ஓம் தேரேறி வருபவனேபோற்றி
    ஓம் நட்சத்ரேசனேபோற்றி
    ஓம் நல்லுரு அருள்பவனேபோற்றி
    ஓம் நாற்கரனேபோற்றி
    ஓம் நாயுருவி சமித்தனேபோற்றி
    ஓம் நான்காமவனேபோற்றி
    ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனேபோற்றி
    ஓம் பயிர்க் காவலனேபோற்றி
    ஓம் பசும்பயறு விரும்பியேபோற்றி
    ஓம் பச்சை வண்ண கிரகமேபோற்றி
    ஓம் பதினேழாண்டாள்பவனேபோற்றி
    ஓம் பித்தளை உலோகனேபோற்றி
    ஓம் பின் னகர்வுடையோனேபோற்றி
    ஓம் பிரமனருள் பெற்றவனேபோற்றி
    ஓம் புராணத் தேவனேபோற்றி
    ஓம் புலவர் பிரானேபோற்றி
    ஓம் புலமையளிப்பவனேபோற்றி
    ஓம் பூங்கழலடியனேபோற்றி
    ஓம் புண்ணியனேபோற்றி
    ஓம் புரூரவன் தந்தையேபோற்றி
    ஓம் புகழ் சேர்ப்பவனேபோற்றி
    ஓம் பொன்னணியனேபோற்றி
    ஓம் பொற்கொடியோனேபோற்றி
    ஓம் பொன்மேனியனேபோற்றி
    ஓம் பொன்னாடையனேபோற்றி
    ஓம் போகமளிப்பவனேபோற்றி
    ஓம் மணிமுடியனேபோற்றி
    ஓம் மரகதப் பிரியனேபோற்றி
    ஓம் மனோகரனேபோற்றி
    ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனேபோற்றி
    ஓம் மதுரையில் பூசித்தவனேபோற்றி
    ஓம் ரவி மித்ரனேபோற்றி
    ஓம் ரவிக்கருகிருப்பவனேபோற்றி
    ஓம் ரேவதிக் கதிபதியேபோற்றி
    ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியேபோற்றி
    ஓம் வள்ளலேபோற்றி
    ஓம் வல்லபிரானேபோற்றி
    ஓம் வாட்கரனேபோற்றி
    ஓம் வடகீழ் திசையனேபோற்றி
    ஓம் வாக்கானவனேபோற்றி
    ஓம் வாழ்வளிப்பவனேபோற்றி
    ஓம் வித்தகனேபோற்றி
    ஓம் விஷ்ணுரூபனேபோற்றி
    ஓம் விஷ்ணு அதிதேவதையனேபோற்றி
    ஓம் விதி மாற்றுபவனேபோற்றி
    ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனேபோற்றி
    ஓம் ‘ஜம்’ பீஜ மந்திரனேபோற்றி
    ஓம் புத பகவானே போற்றிபோற்றி
    திருவெண்காடு தலம் நால்வர் மற்றும் பல்வேறு நாயன்மார்களால் பாடல் பெற்ற சிறப்புக் குரியது. இது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருவெண்காடு தலம் நால்வர் மற்றும் பல்வேறு நாயன்மார்களால் பாடல் பெற்ற சிறப்புக் குரியது. அது பற்றிய விபரம் வருமாறு:-

    திருஞானசம்பந்தர்- இவர் இத்தலத்தின் இறைவன் பேரில் மூன்று தேவாரத்திருப்பதிகங்கள் அருளி உள்ளார். இத்திருப்பதிகங்களில் திருவெண்காட்டின் இயற்கைக் காட்சியையும், இறைவன் அழகையும் இறைவனுடைய வியா பகத்தன்மையையும், அடியார்களுக்கு அருளும் பெற்றியையும், எமன் திறலைழித்த வன்மையையும், முக்குளநீர்ப் பெருமையையும் கூறியிருக்கின்றார்.

    பசுங்கிளிகளும் இறைவன் திருநாமத்தைப் பண்மொழியால் பயில்கின்றன என்றும், முக்குள நீராடி வழிபடுவர் பிள்ளைப்பேறடைவதுடன் நினைத்த வரம் பெறுவர் என்றும், அவர்களைத் தீவினைகள் தாக்காது என்றும், தொழுவார் தங்கள் நோய்கள் தள்ளிப்போக அருளும் தலைவன் என்றும் இன்னும் பலவாறாக சிவபெருமான் பெருமைகளை பாடி உள்ளார்.

    திருநாவுக்கரசர்- இவர் இத்தலத்தைப்பற்றி இரண்டு திருப் பதிகங்கள் அருளியுள்ளார். மேலும், சேத்திரக் கோவைத் திருத்தாண்டகம், பலவகைத் திருத்தாண்டகம் இவைகளிலும் திருவெண் காட்டைப்பற்றிபாடி அருளி யுள்ளார்.

    திருமுதுகுன்ற திருப்பதிகப்பாடல் ஒன்றில் “ வெண் பாடு மேவிய விகிர்தன் தன்னை” என்று கூறி யிருக்கிறார். சம்பந்தர் பதிகத்தின் முதற்பாடலான “கண் காட்டு நுதலானும்” என்பதைப்போலவே, அப்பர் திருப்பதிக முதல் பாடலும் அமைந்திருப்பது கண்டு இன்புறத்தக்கது.

    திருக்குறுத் தொகைப்பாடல்கள் நெஞ்சைப்பார்த்து அறிவுறுத்துவதாக உள்ளன. “நெஞ்சமே! இறைவன் உறை யும் திருவெண்காடடைந்து உய்வாயாக” என்று கூறுகிறார்.

    திருத்தாண்டகத்தில் சிவபெருமான் திருமேனி அழகையும் இறைவர் எங்கும் தங்கி நிற்கும் எழிலையும் பிச்சை ஏற்றுத்திரியும் தன்மையையும், அடியார்களுக்கு வேண்டும் வரம் அளிக்கும் பண்பையும், இன்னும் இறைவனது செயல்கள் பலவற்றையும் அகப் பொருட்டுறையியல் அழகு பெற அமைத்துத்திருவாய் மலர்ந்தருளியுள்ளார். தாண்டகச் செய்யுளில் “வெண் காடே என்பீராகில் வீடாத வல்வினைநோய் வீட்டலாமே” என அறிவுறுத்துகிறார்.

    சுந்தரமூர்த்தி சுவாமிகள்- இவர் இத்தலத்திற்கு ஒரு திருப்பதிகம் பாடி அருளியுள்ளார். ஒவ்வொரு பாடலின் முற்பகுதியில் இறைவனது சிறப்புக்களை கூறி, பிற்பகுதியில், “இவ்வளவு பெருமைகளை உடைய நீர் மனைகள் தோறும் தலைகையேந்தி விடங்கராகித்திரிவதும், காமனைக் கண்ணழலால் எரித்ததும், பிச்சை ஏற்க எருகேறி அலைவதும், கடலின் நஞ்சுமுண்டதும், வேதம் ஓதித்திரிவதும், யானையை உரித்ததும், அயனும் மாலும் அணுகாவண்ணம் அனல் பிழம்பாய் நின்றதும் எதற்காக” என்று கேட்கும் முறையில் அமைந்திருக்கிறது.

    மாணிக்கவாசக சுவாமிகள்- இவர்அருளிய திரு வாசகத்தின் கீர்த்தித் திருஅகவலில் “விருந்தி னனாகி வெண்காடதனில் குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்” என்று கூறியிருக்கின்றனர். மேலும் திருக்கோவையாரில் “வேலன் புகுந்து வெறியாடுக” என்று தொடங்கும் பாடலிலும் வெண்காட்டைக்குறிப்பிடுகிறார்.
    கபிலதேவ நாயனார்- இவர் இயற்றிய சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்னும் இரண்டு பிரபந்தங்களும் பதினொராந் திரு முறையில் இடம் பெற்றுள் ளன. வெண்காடர் அன்பர் சித்தத்தடங்குவர் என்றும், துயரத்தைத் தீர்ப்பரென்றும் இந்த நூல்களிலுள்ள இரண்டு பாடல்களில் கூறி இருக்கிறார்.

    பரணதேவ நாயனார்-இவர்அருளிய சிவபெருமான் திருவந்தாதி என்ற நூலும் பதினொராம் திருமுறையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. “புகலூர் உடையாய்” என்று தொடங்கும் பாசுரத்தில் “வெண்காடா வேலை விட முண்டாய் வெள்ளேற்றாய் வெண்காடா என்பேனா நான்” என்று அருளிஇருக்கிறார்.

    பட்டினத்தார்- இவர் பாடி அருளிய திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, திருவேகம் முடையார் திருவந்தாதி ஆகியவைகளும் பதினொராம் திருமுறையிலுள்ளன. மும்மணிக்கோவை, “ தெய்வத்தாமரை” என்று தொடங்கி “தெய்வத்தாமரையே”என்று முடிகிறது. அதன் கடைசி பாடலில் “வெண்காடன்” என்று குறித்திருக்கிறார். திருவந்தாதியில், “நினைவார்கருளும் பிரான்” என்று தொடங்கும் பாடல்களில் சொல்லும் போது திருவெண்காட்டையும் சொல்லி இருக்கிறார்.

    சேக்கிழார்- இவர் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தில் சம்பந்தர் புராணத்திலும்,ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்திலும், திருவெண்காட்டைப் பற்றிக்கூறியிருக்கிறார். திருச்சாய்க்காட்டை வணங்கிய பின் சம்பந்தர் திருவெண்காடு போய் வழிபட்டதை நான்கு பாடல்களில் சொல்லியிருக்கிறார். ஏயர்போன் கலிக்காம நாயனார் புராணத்தில் சுந்தரரர் திருச்சாய்காட்டை வணங்கி, திருவெண்காட்டிற்கு வந்து வழிபட்டுப் பதிகம் பாடி திருநனிபள்ளிக்குச் சென்றதைக் கூறியிருக்கிறார்.
    திருவெண்காடு தலத்தில் புதனுக்குத் தனி சன்னிதி உள்ளது. இவரை வழிபட நரம்பு தொடர்புடைய நோய்கள் மட்டுமின்றி சகல நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
    உலகத்திலுள்ள உயிர்கள் தம்மை வழிபட்டு உய்யும் பொருட்டு இறைவன் திருமேனி தாங்கித் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றுள் திருப்பதிகம் பெற்றவை மிகச் சிறந்தவை. அவைகளைப் பாடல் பெற்ற பதிகள் என சொல்வார்கள். சோழ நாடு, ஈழ நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, கொங்கு நாடு, நடு நாடு, தொண்டை நாடு, துளுவ நாடு, வடநாடு என நாட்டு வகையாக அத்தலங்களை நம் முன்னோர்கள் பிரித்திருக்கின்றனர். அதிலும் சோழ நாட்டை இரு பகுதிகளாக வகுத்துள்ளனர்.

    அவை காவிரியாற்றுக்கு வடகரையில் 63, தென்கரையில் 127 திகழும் தலங்களாகும். இதில் திருவெண்காடு தலம் காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.

    சோழ நாட்டில் இரண்டு ஆரண்யேசுவரர்கள் மிகவும் புகழ் வாய்ந்தவர்கள். ஒருவர் வேதாரண்யேசுவரர். இன்னொருவர் திருவெண்காட்டில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சுவேதாரண்யேசுவரர். மூர்த்தி தல தீர்த்தத்தில் காசிக்கு நிகரான தலம் இது. திருவெண்காடு தலத்திலும் சிவ பெருமான் தம் வீரத்தை நிலை நாட்டி அந்தநார்ந்த திருக்கோலத்தை இன்னமும் காட்டி வருகிறார். அவர் தான் அகோரசிவம்.

    அசுரர்கள் தவம் கிடந்து வரம் கேட்டனர். இறைவனிடம் வரம் பெற்ற பின் தங்களது அசுரக்குணத்தை வெளிப்படுத்துவர். மருத்துவாசுரனும் அப்படித்தான் சிவபிரானிடம் வரம் பெற்ற பின்பு தேவர்களை வருத்த ஆரம்பித்திருக்கிறான். தீய சக்தியை இனியும் வளர்த்தால் ஆகாது என்னும் நிலை உருவாகிட, பெருமான் மண்ணுலகும் விண்ணுலகும் அஞ்சும்படியாக அகோர சிவமாக ஆர்த்தெழுந்துச் சென்று மருத்துவாசுரனை அடக்கினார். அதை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் ஈசன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார்.

    இத்திருத்தலம் நாகை மாவட்டத்தில், சீர்காழி வட்டத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
    திருவெண்காட்டிற்கு தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் காவிரியாறும், வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் மணிகர்ணிகை என்னும் மண்ணியாறும் ஓடுகின்றன. திருச்சாய்காடு (சாயாவனம்), காவிரி பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம், திருவலம்புரம், கீழைத் திருக்காட்டுப்பள்ளி, திருக்கலிக்காமூர் முதலிய தலங்கள் திருவெண்காட்டைச் சூழ்ந்துள்ளன. திருநாங்கூர், திருவாலி, திருநகரி என்ற வைணவப் பதிகளும் இதன் அருகே இருக்கின்றன.

    காசிக்கு சமமாகத் திகழும் ஆறு தலங்களுள் திருவெண்காடும் ஒன்று. பிற தலங்கள் திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், சாய்க்காடு, ஸ்ரீவாஞ்சியம் ஆகியனவாகும். வால்மீகி ராமாயணத்தில் இத்தலத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சுவேதாரண்ய ஷேத்திரத்தில் எமனை சுவேதாரண்யேசுவரர் எவ்வாறு சம்ஹாரம் செய்தாரோ அவ்வாறு கரதூஷனாதிகளை ராமன் சம்ஹாரம் செய்தான் என்று வால்மீகி முனிவர் ஆரண்ய கண்டத்தில் குறிப்பிட்டுள்ளது இத்தலத்தின் தொன்மைக்கு சான்றாகத் திகழ்கிறது.

    ஆதி சிதம்பரம் இதுவாகும். உலகத்தில் உள்ள உயிர்கள் வாழும் வண்ணம் பெருமான் 1008 விதமான தாண்டவம் புரிந்தார். இத்தலத்தில் பெருமான் ஆனந்த தாண்டவம் புரிந்தார். ஆனந்த தாண்டவம், காளீ நிருத்தம், கவுரீ தாண்டவம், முனி நிருத்தம், ஸந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதா தாண்டவம், ஸம்ஹார தாண்டவம், பைஷாடனம்” ஆகிய ஒன்பது தாண்டவ ஷேத்திரங்களுள் திருவெண்காடு முதன்மையானது. சிதம்பரத்தில் நிற்குணமாக ஆடி முக்தியைத் தருகிறார். திருவெண்காட்டில் சகுணமாக ஆடி இருமைப் பயனும் தருகிறார்.

    விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி, இந்திரன், ஐராவதம் சிவப்பிரியர் வேதராசி, சுவேதகேது, சுவேதன் முதலியவர்கள் இத்தலத்தை வழிபட்டுள்ளனர்.
    சக்தி பீடங்கள் 108 ஆகும். சக்தி பீடங்களுள் இத்தலமும் ஒன்று. நவகோள்களில் புதன் வழிபட்ட தலம். இத்தலத்தில் புதனுக்குத் தனி சன்னிதி உள்ளது. இவரை வழிபட நரம்பு தொடர்புடைய நோய்கள் மட்டுமின்றி சகல நோய்களும் தீரும்.

    சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களுள் ஒன்றாகிய ஸ்ரீஅகாரமூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவ்வூர் சங்கல்பத்தில் “பிர்மஸ்மசானம்” என்று சொல்லப்படுகிறது. பிரமசமாதி அம்பிகைக் கோயிலுக்கு வடபால் உள்ளது. இது, “எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும், மண்மிசை மால்பலர் மாண்டர்”, “நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்” என்ற கணக்கில் இறந்தவர்களுடைய ஈமச்சுடலையாகும்.

    இத்தலத்தில் சுவேதாரண்யேசுவரர், ஸ்ரீநடராஜர், அகோரமூர்த்தி என சிவமூர்த்தங்களாக மூன்று அமைந்துள்ளன. இத்தலத்தில் தீர்த்தங்கள் மூன்று -அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தங்கள். இத்தலத்தில் தல விருட்சங்கள் மூன்று - ஆல், கொன்றை, வில்வம்.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நால்வராலும் திருப்திகம் பெற்றத் தலம் பரஞ்சோதி முனிவர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்தடிகள், சேக்கிழார், கச்சியப்ப சிவாசாரியார், காஞ்சி சிதம்பர முனிவர், சோமசுந்தர தேசிகர், சைவ எல்லப்ப நாவலர் முதலியோர் இத்தலத்தைப் போற்றியுள்ளனர்.

    பதினோராம் திருமுறையில் பாடிய திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் சிவதீட்சை பெற்ற தலம்.சிறுத்தொண்டர் இளமையில் வாழ்ந்ததும், அவர்தம் மனைவி திருவெண்காட்டு நங்கையும், சந்தனத்தாதியும் பிறந்ததுவும் இத்தலமாகும். பன்னிரு சூத்திரங்களைக் கொண்ட சிவஞானபோதம் என்னும் சைவ சித்தாந்த முழுமுதல் நூலை அருளிச் செய்த மெய்கண்டார் அவதரித்த தலம்.

    திருஆவடுதுறை ஆதீன எட்டாவது குருமகா சந்நிதானமாகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலமாணி தேசிகர் அவர்கள் சமாதி இவ்வூரின் மேல வீதியில் மேல்திசையில் உள்ளது. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராசார்ய சுவாமிகளின் பரம்பரையில் வந்தவருமாகிய ஸ்ரீபரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சமாதி இவ்வூரிலுள்ள மணிகர்ணிகை கட்டத்தில் உள்ளது. இத்தல புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகராகாச வித்தையைப் பற்றி ‘தகரவித்யா பிரகாசிகை’ என்னும் நூலை சுவாமிகள் எழுதியுள்ளார்.

    சோழர் காலத்தில் செம்பு, ஐம்பொன் வார்ப்பு விக்ரகங்களை உருவாக்கும் தொழில் கூடமாகத் திருவெண்காடு விளங்கியது. இத்திருக்கோயிலில் உள்ள வார்ப்புச் சிலைகள் மிக நேர்த்தியானவை. திருவெண்காட்டில் தோண்டி எடுக்கப்பட்ட சிலைகள் சென்னையிலும், தஞ்சையிலும் உள்ள கலைக் கூடங்களிலும் சிறப்பாக திகழ்கின்றன.
    ×