search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிகாரம்"

    • குரு பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்.
    • குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடைபெற உள்ளது.

    குரு பெயர்ச்சி வரும் மே 1-ந் தேதி நடைபெற உள்ளது. குரு பெயர்ச்சியானது சில ராசியினரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் என்பது பலரின் நம்பிக்கை ஆகும். குரு பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் எந்தெந்த கோயிலுக்கு செல்லலாம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

     வலிதாயநாதர் கோவில்:

    சென்னை, பாடியில் உள்ள வலிதாயநாதர் கோவில் குருபெயர்ச்சி தினத்தில் சென்று வழிபட வேண்டிய கோவில் ஆகும். பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது ஆகும். இந்த கோவில் குருபகவான் வழிபட்ட தலம் என்று புராணங்களில் கூறப்படுகிறது. இந்த தலமானது குருபகவானுக்கு மிகச்சிறந்த பரிகார தலம் என்று புராணங்கள் கூறுகிறது.

     தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோவில்:

    தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில். இந்த கோயிலில் தேவாரம் பாடல் பாடப்பெற்றுள்ளதாக புராணங்களில் கூறப்படுகிறது. மங்காம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரராக காட்சி சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சி தரும் இந்த கோலத்தில், இவர்கள் இருவருக்கும் நடுவில் நின்ற கோலத்தில் குருபகவான் ராஜகுருவாக காட்சி தருகிறார். தோஷங்கள் நீங்க இந்த கோயிலில் உள்ள மங்காம்பிகை - சமேத வசிஷ்டேஸ்வரருடன் காட்சி தரும் குருபகவானை வணங்கினால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

     திருவாரூர் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்:

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் மிகச்சிறந்த குரு பரிகாரத் தலம் ஆகும். இங்கு தட்சிணாமூர்த்தியாக குரு பகவான் காட்சி தருகிறார். குருபகவான் தனது சீடர்களுக்கு 24 அட்சரங் மந்திரத்தை உபதேசித்த காரணத்தால், இங்கு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும். குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமைகளில், குருபகவானுக்கு மஞ்சள் நிற பட்டுடுத்தி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதும் சிறப்பு என்று கூறப்படுகிறது.

     மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்:

    மயிலாடுதுறையில் உள்ள அமைந்துள்ளது மயூரநாதர் கோவில். இந்த கோவில் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் குரு பகவான் தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். காசிக்கு நிகரான இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும்.

     காரைக்குடி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவில்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் அமைந்துள்ளது. இங்கு குரு வடிவத்தில் சிவ பெருமான் தோன்றி கார்த்திகை பெண்களின் சாபத்தை நீக்கியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த கோயிலில் மட்டும் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வியாழக்கிழமைகளில் இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தியையும், அந்த கோயிலுக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் வழிபட்டு 12 முறை வலம் வந்தால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.

     ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி:

    நவ திருப்பதிகளில் ஒன்றாக ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார் திருநகரி கோவில் கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த கோவில் உள்ளது. நம்மாழ்வார் அவதரித்த இந்த கோயிலில் குருவாக ஆதிநாத பெருமாள் காட்சி தருகிறார். அவரை வணங்கினால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

     திருச்செந்தூர் முருகன் கோவில்:

    அறுபடை வீடுகளில் ஒன்றான புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குரு பகவான் மேதா தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். முருகப்பெருமானை வணங்கி இவரையும் வணங்குவதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிட்டும் என்பது பக்தர்களின் பூரண நம்பிக்கை ஆகும்.

     வல்லநாடு கைலாச நாதர் கோவில்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லநாடு. இங்குள்ள முறப்பநாட்டில் இந்த கோவில் உள்ளது. நவ கைலாயங்களில் ஒன்றான இந்த கோயிலில், குருவின் அம்சமாக கைலாச நாதர் உள்ளார். இவரை வணங்குவதால் குரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

    மேலே கூறிய கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பாகும்.

    • குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை `பித்துருக்கள்’ என்கிறோம்.
    • ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம்.

    குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை `பித்துருக்கள்' என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் `பித்ரு தோஷம்', இந்த தோஷம் நமக்கு உள்ளதா என்பதை எளிமையாக கண்டறிய முடியும்.

    பரிகாரம்:

    ராமேஸ்வரம் சென்று `திலஹோமம்' செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும், `திருவெண்காடு' சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப் பரிகாரம்.

     திலஹோமம்:

    குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டும் `திலஹோமம்' செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் இயற்கை மரணம் அடைந்திருந்தால் திலஹோமம் செய்ய வேண்டியதில்லை.

    தோஷத்தினால் ஏற்படும் தீயவிளைவுகள்:

    * பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம் அல்லது அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைபாக்கியம் இருக்காது.

    * ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதை. மனநோய் காரணமாக தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.

    * ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

    * கலப்புத்திருமணம், ரகசியதிருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. தோஷம் வர பல்வேறு காரணம்:

    * கருச்சிதைவு

    * பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது.

    * இளையதாரத்துப்பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது.

    * தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும் அனைவருக்கும் தவறாமல் திதி தர வேண்டும்.

    * ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் பித்ரு தோஷம் வரும்.

    * துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

     தோஷத்தில் மிக கொடிய தோஷம் பித்ரு தோஷம்:

    இவர்களது குடும்பம் ஜோதிடரீதியில் எவ்வளவு அதிர்ஷ்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும், அந்த பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருகளும், பித்ரு தேவதைகளும் தடை செய்வார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் தன்மை உடையது.

    பரிகாரம்

    `சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம்' செய்ய வேண்டும். இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய வேண்டும். இந்த அபிஷேகத்தை பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் விலகும்.

    பித்ரு பூஜை செய்ய சிறந்த தலம்

    சிவன் கோயில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள், 100 கிராம் பச்சரிசி, அகத்திக்கீரை, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், ஒரு வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டுக்கு கொடுக்க `பித்ரு தோஷம்' நீங்கும். தொடர்ந்து ஒன்பது அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும் இதனால் `பித்ரு தோஷம்' முழுமையாக நீங்கும்.

    உலகம் முழுவதும் பல்வேறு பறவைகள் இருந்தாலும் குறிப்பிட்ட ஊரில் தான் சில பறவைகளைக் காண முடியும். ஆனால் காக்கை உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஒரே பறவை இனமாகும். இந்த காக்கையை `சனிபகவானின்' வாகனமாக மட்டும் பார்க்காமல் நமது முன்னோர்களின் வடிவான பித்ருகளாகவும் வழிபட்டுள்ளனர்.

    நமது முன்னோர் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளால் உழல்பவர்கள். தினமும் காக்கைக்கு ஒரு பிடி உணவு அளித்தால் அவர்களின் பிரச்சினையின் தீவிரமும் பிடி அளவு வீதம் கரையத் தொடங்குவதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த பழக்கம் மெதுவாக மறைந்து தற்போது அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற நாட்களில் மட்டும் காக்கைக்கு உணவிடுகிறோம். முன்னோர் பழக்கத்தை நாமும் பின்பற்றினால் பிரச்சினைகளின் தீவிரத்தில் இருந்து விடுபடுவோம்.

    • தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    • கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

    வியதீபாதம் யோகத்தில் ஒருவன் பிறந்தால், அவன் குடும்பத்தில் மோட்சம் அடையாத ஆன்மாக்களின் சாபம் ஏற்படும். அப்படி இந்த யோகத்தில் பிறந்தவரோ அல்லது அவரது தந்தையோ, ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற வியதீபாதம் யோக நாளில் (ஜோதிடர் மூலம் இந்த நாளை அறிந்து கொள்வதே சரியானது)

    அதிகாலை நேரத்தில் இந்தத் திருத்தலத்தில் உள்ள தாமிரபரணி நதியில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் நதிக்கரையில் உள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள பக்தவத்சலப் பெருமாளை வணங்கி, அர்ச்சனை மற்றும் ஆராதனைகளைச் செய்ய வேண்டும். பின்னர் தங்களால் முடிந்த அளவு (குறைந்தது 10 பேருக்கு) அன்னதானம் செய்தால், பித்ரு தோஷம் மற்றும் கர்மவினைகள் நீங்கி நல்வாழ்வு பெற பெருமாள் அருள்புரிவார்.

     பரிகாரம் செய்வது எப்படி?

    அசுப யோகங்களின் தோஷம் உள்ளவர்கள், முதலில் இந்தத் திருத்தலத்தின் புனித நீரான தாமிரபரணி நதியில் நீராட வேண்டும். நீராடும்போது உடுத்தி இருந்த ஆடையை அங்கேயே களைந்து, அதற்கென வைக்கப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டுவிட்டு, புதிய ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும், பழைய ஆடைகளை ஆற்றில் விட்டு, அதனை மாசுபடுத்தக்கூடாது.

    பின்னர் ஆலயத்திற்குள் சென்று பக்தவத்சலப் பெருமாள் முன்பாக நின்று, அவரை வழிபட வேண்டும். பெருமாளுக்கு உகந்த துளசி மாலையை வாங்கிச் சென்று, பூஜை செய்யும் பட்டாச்சாரியாரிடம் கொடுத்து சுவாமிக்கு அணிவிக்கச் செய்ய வேண்டும். அதோடு சுத்தமான நெய் வாங்கிச் சென்று, சுவாமியின் முன்பாக இருக்கும் விளக்கில் சேர்க்கச் சொல்ல வேண்டும். பின்னர் உங்களது குறைகள் தீர இறைவனை வழிபட வேண்டும்.

    இறுதியாக நாம் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது. அது என்னவென்றால், கோவிலில் இருந்து வீட்டிற்கு வரும் முன்பாக, கோவிலிலோ, அல்லது வரும் வழியிலோ குறைந்தது 10 பேருக்கு கட்டாயமாக அன்னதானம் செய்ய வேண்டும். இதற்கான பணத்தை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்யச் சொல்வதில் எந்த பலனும் இல்லை. நீங்களே நேரடியாக உங்கள் கைகளால் இந்த அன்னதானத்தை வழங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடன் வாங்கும் முன் யோசித்தாலே கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம்.
    • ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது.

    சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும்பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்த கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.

    கடன் வாங்கும் முன் யோசித்தாலே நாம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். ஆடம்பர தேவைக்காக கடன் வாங்கக் கூடாது. அடைக்க முடியும் என்றால் மட்டுமே அவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டும். நம்முடைய கடன் பிரச்சினை தீர நம்முடைய முன்னோர்கள் பல பரிகாரங்களை கூறி வைத்துள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் கடன்களை தீர்க்கும் பரிகாரங்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

    மேஷம்

    தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலையில் பசுவுக்கு கொடுத்துவர கடன் நீங்கி வளம் பெறலாம்.

    ரிஷபம்

    ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயார் செய்து அதை வெள்ளிக்கிழமை அன்று பசுவிற்கு கொடுத்து வந்தால் கடன்களை அடைத்து சுகம் பெறலாம்.

    மிதுனம்

    தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வர வேண்டும். மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன் இதனை செய்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கடன் பிரச்சினை தீரும்.

    கடகம்

    ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறிது வெல்லக்கட்டியை எடுத்து ஓடும் நீரில் விட வேண்டும். அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று வெல்லக்கட்டியை எடுத்து குரங்குகளுக்கு கொடுத்துவர கடன் பிரச்சினைகள் தீரும்.

    சிம்மம்

    ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் செக்கு நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு நிற திரி போட்டு 8 விளக்குகள் ஏற்றிவர கடன்கள் தீர வழி பிறக்கும்.

    கன்னி

    சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்ய வேண்டும். (நீங்கள் அதை உண்ணக்கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர்வார்த்து ஒரு மண் அகலில் செக்கு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வர கடன் பிரச்சினைகள் தீரும்.

    துலாம்

    பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்ற வேண்டும். இதனை 24 வாரங்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நிச்சயமாக கடன்கள் தீரும். வெள்ளிக்கிழமை அன்று அரச மரத்தடியில் உள்ள விநாயகருக்கு 11 அகலில் தீபமேற்றி அதனை 11 முறை சுற்றி வந்து வழிபட்டால் கடன்கள் தீரும்.

    விருச்சிகம்

    ஓம் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை சொல்ல வேண்டும். லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் பிரசாதமாக வைக்கலாம். 48 நாட்கள் தொடர்ந்து இந்த பூஜை செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழி ஏற்படும்.

    தனுசு

    வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்ட அல்லது கோவில் கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து வளம் பெருகும்.

    மகரம்

    சனிக்கிழமைகளில் எள்ளு உருண்டை செய்து தானமாக கொடுத்துவர கடன்தொல்லைகள் தீரும்.

    கும்பம்

    வியாழக்கிழமை மாலை 5 அல்லது 6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்னர் மற்றவர்களுக்கு தானமாய் பிரசாதமாக கொடுத்துவர கடன்கள் அடைபடும்.

    மீனம்

    தொழுநோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்க்கிழமை மதியம் 1 அல்லது 2 மணி அல்லது இரவு 8 மணி அல்லது 9 மணிக்குள் கொடுத்துவர கடன்கள் வேகமாக அடைய ஆரம்பிக்கும். குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் தெரியும்.
    • சந்திர கிரகணத்தால் 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து.

    சந்திர கிரகணம் நாளை (28-ந்தேதி) இரவு நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் தெரியும். இந்த சந்திர கிரகணத்தால் 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து இருப்பதாக ஆற்காடு பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    சந்திர கிரகணம் நாளை (சனிக்கிழமை) இரவு 1.05 மணிக்கு தொடங்குகிறது. சந்திர கிரகணத்தின் மத்திய காலம் இரவு 1.44 மணி ஆகும். இரவு 2.23 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணம் 1 மணி 18 நிமிடங்கள் நீடிக்கிறது.

    இந்த சந்திர கிரகணத்துக்கான தோஷ கிழமை சனி ஆகும். எனவே சனிக்கிழமை பிறந்தவர்கள் தோஷ பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்த கிரகணத்தால் அஸ்வினி, பரணி, மகம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தோஷம் உள்ளது.

    மேஷம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஆபத்து ஏற்படும். இவர்கள் தோஷ நிவர்த்திக்காக பரிகாரம் செய்ய வேண்டும். சந்திர கிரகணம் நிகழும் போது இவர்கள் தோஷ நிவர்த்தி மந்திரத்தை உச்சரிக்கலாம்.

    `இந்த்ரோ அநலோ யமோ ரிக்ஷோ வருணோ

    வாயு ரேவச குபேர ஈசோக்நந்து இந்து

    உபராக உத்தவ்யதாம் மம றீறீ '

    கிரகணம் முடிந்த பிறகு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் மற்றும் வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குளித்து அவரவர் சம்பிரதாயப்படி பரிகார பூஜை செய்ய வேண்டும்.

    வீட்டில் பரிகார பூஜை செய்பவர்கள் வீட்டை கழுவி சுத்தப்படுத்திய பிறகு குளித்து விட்டு விநாயகர், குலதெய்வம், இஷ்ட தெய்வங்களுக்கு வெல்லத்தால் செய்த பலகாரங்களை படைத்து பரிகார பூஜை செய்யலாம். அதாவது அதிரசம், இனிப்பு முருக்கு, எள் உருண்டை, கொழுக்கட்டை ஆகியவற்றை படைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.

    அஸ்வினி, பரணி, மகம், மூலம், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், மேஷம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசியில் பிறந்தவர்களும் பரிகார பூஜை செய்ய வேண்டும்.

    மேலும் பூஜை செய்யும் முன்பு குளிக்கும் போது அதே மந்திரத்தை செப்பு தகடு அல்லது காகிதத்தில் எழுதி கையில் கட்டிக்கொண்டு குளிக்கலாம். குளித்ததும் அதை அப்படியே தண்ணீரில் விட்டு விட வேண்டும்.

    மேலும் இந்த சந்திர கிரகணத்தால் பல்வேறு பொதுவான பலன்களும் ஏற்படும். செல்வந்தர்களுக்கு மிகுந்த கெடுதல்கள் உண்டாகும். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை, வடமாநிலங்களில் நோய் பாதிப்பு அதிகரிக்கும். குப்பைகள் மூலம் நோய் பரவும். விவசாயம் செழிப்பாக இருக்கும்.

    அதே நேரத்தில் பூச்சிகள் தொல்லை அதிகமாக இருக்கும். விலைவாசி உயர்வு உச்சத்தை தொடும். கரும்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கும்.

    தமிழ்நாட்டில் சில இடங்களில் சுமாரான மழை பெய்யும். எதிர்காலத்தில் கடுமையான மழை பொழியும். புயல் சின்னம் உருவாகும். சூறாவளி காற்றும் வீசும். விவசாயம் 2 போகம் விளையும். தென் மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு அதிகமாக இருக்கும். உஷ்ணம் அதிகரிக்கும். வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும்.

    பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் நீதிபதிகள் நீதிமன்றங்களில் பணியமர்த்தப்படுவார்கள். சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கும். வெளி மாநில திருடர்கள் கண்டுபிடித்து தண்டிக்கப்படுவார்கள். சாதி பாகுபாடு முற்றிலும் அகலும். வாகன உற்பத்தி அதிகரிக்கும். அதே நேரத்தில் விபத்துக்களும் அதிகரிக்கும்.

    சந்திர கிரகணம் நிகழும் அன்று இரவு 10 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும். கர்ப்பிணிகள் இரவு 1 மணி முதல் 2.30 மணி வரை சந்திரனை பார்க்கக்கூடாது.

    • மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
    • ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம்.

    பித்ரு தோஷம் என்றால் என்ன?

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    பித்ரு தோஷத்துக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

    பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

    பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்காது. மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

    கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வ தில்லை.

    எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

    கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

    ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும்

    பித்ரு தோஷம் வருவது ஏன்?

    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும். இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம்.

    • ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு கால சர்ப்ப மகாயாகம் நடைபெற்றது
    • ராகு மேஷ ராசியி லிருந்து மீன ராசிக்கும், கேது துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயற்சி யாகின்றனர்

    கடலூர்:

    சிதம்பரம் நடராஜர் நகர் ஸ்ரீவித்யா பாலா பீடத்தில் மகா திருபுரசுந்தரி சந்நிதியில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு கால சர்ப்ப மகாயாகம் நடைபெற்றது.ஞாயிற்றுக்கிழமை மாலை 3.40 மணிக்கு ராகு மேஷ ராசியி லிருந்து மீன ராசிக்கும், கேது துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயற்சி யாகின்றனர். இதனை முன்னிட்டு கால சர்ப்ப மகாயாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினர் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவித்தியா பாலா பீட நிறுவனர் செல்வரத்தின தீட்சிதர் செய்திருந்தார்.

    • சிம்மம், கன்னி, கும்பம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் பரிகார வழிபாடுகள் செய்வது நல்லது.
    • திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூட பூஜை செய்யுங்கள்.

    ராகு மற்றும் கேது பெயர்ச்சி 2023-ம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நாளை (8-ந் தேதி) நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அக்டோபர் 30-ந் தேதி நடக்க உள்ளது என ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025ம் ஆண்டு மே 18-ந் தேதி இரவு 7.35 மணி வரை இந்த கிரகங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ராசியில் சஞ்சரிக்கும். மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் ராகுவும், கேதுவும் எப்போதும் பின்னோக்கி அதாவது வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவை. இவை சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சர்ப்ப கிரகங்களின் இடையில் மற்ற கிரகங்கள் அமைந்துவிட்டால் அதனை கால சர்ப்ப தோஷம் அல்லது யோகம் என்பார்கள். நாளை பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு ராகு, தான் இருந்த மேஷ ராசியில் இருந்து, மீன ராசிக்கு வருகின்றார்.

    கேது, தான் இருந்த துலாம் ராசியில் இருந்து கால புருஷனுக்கு ஆறாம் ராசியான கன்னிராசிக்கு வருகிறார். ராகுவுக்கு இடம் தந்து குரு வலிமையுடன் இருப்பதால் ராகுவின் பாதிப்பு குறையும்.

    அதுபோல் ராகுவின் எதிர் ராசியான கன்னி ராசியும் புதனின் சுபத்தன்மையை பொறுத்து கெடுபலன்களை குறைத்து கொள்ளும். இந்த ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நாளை சிறப்பு வழிபாடுகளும் சர்ப்ப சாந்தி பரிகாரங்களும் செய்து கொள்வது நல்லது. குறிப்பாக சிம்மம், கன்னி, கும்பம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் பரிகார வழிபாடுகள் செய்வது நல்லது. மற்ற ராசிக்காரர்கள் சாதாரண பூஜைகள் செய்யலாம்.

    ராகு-கேது பெயர்ச்சி பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள அம்மன் கோவில்களில் உள்ள நாகப் பிரதிஷ்டைகளை வணங்கி வாருங்கள். அதுவே பரிகாரத்துக்கு போதுமானது. வேறு எந்த சிறப்பு பரிகார பூஜைகளும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலும் இந்த முறை ராகு-கேது தோஷம் பெரும் பாதிப்பு செய்வதில்லை. மாறாக தன்னம்பிக்கை துணிச்சலை வளர்க்கும். எனவே கவலை தேவையில்லை.

    சிம்மம்

    இதுவரை ராகு ராசிக்கு 9ம் இடத்திலும், கேது 3ம் இடத்திலும் சஞ்சரித்து வந்தனர். தற்போது இந்த பெயர்ச்சி மூலம் ராகு 8-ம் இடத்திலும், கேது 2-ம் இடத்திலும் அமர்கின்றனர். இதன் காரணமாக பொதுவாக உங்களுக்கு கடன் தொல்லை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். அஷ்டம ஸ்தானத்தில் ராகு அமர்வதோடு, ராசிக்கு 2ல் தன ஸ்தானத்தில் கேது இருப்பதால் உங்களின் வருவாய் குறையும். அதனால் வருமானம் குறைவதற்கும் வாய்ப்பு உண்டு. தேவையற்ற சிந்தனைகள், மன குழப்பங்கள் வரும். ஆனால் பனி போல அவை மறைந்து விடும். எனவே எந்த விஷயத்தையும், செலவையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குறிப்பாக உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

    கன்னி

    இந்த ராகு கேது பெயர்ச்சியினால் கன்னி ராசியிலேயே கேது பகவான் அமர்கிறார். 7-ம் இடத்தில் ராகு அமர உள்ளார்.

    லக்கினத்தில் கேதுவும், 7-ல் ராகு அமர்வதால் திருமண வாழ்க்கையில் சிறு, சிறு சலசலப்பு வரலாம். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூட பூஜை செய்யுங்கள். மேலும் கன்னி ராசியினரின் வளர்ச்சி தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் முன்னேற்றத்தை தடுக்க சிலர் கங்கனம் கட்டிக் கொண்டு வருவார்கள். கவனமாக இருங்கள். நீங்கள் எடுக்கும் முடிவு, செயல்களில் உங்களின் சிந்தனை நிலையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

    கும்பம்

    கும்ப ராசிக்காரர்களுக்கு 2ம் இடத்தில் ராகுவும், 8ல் கேதுவும் இந்த பெயர்ச்சியின் போது அமையப் பெறுவார்கள்.

    இரண்டாம் இடத்தில் ராகு, 8ல் கேது அமர்வதால் உங்களின் குடும்ப வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும். மேலும் தற்போது ஜென்ம சனி நடந்து கொண்டிருப்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். மேலும் குடும்ப விருத்தி அடைவதில் கவனம் தேவை.

    மீனம்

    மீன ராசியிலேயே ராகு வருவதும், கேது 7ம் இடத்தில் அமர்வதாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. புத்திர தோஷம், சொத்து தகராறு போன்ற விஷயங்கள் வர வாய்ப்புள்ளதால் சற்று பொறுமையை கையாழுங்கள். எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடப்பது அவசியம்.

    ராகு-கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி. அதற்கு பயப்பட தேவையில்லை. குண்டலினி சக்தியை தன்னுள்கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில் சென்று வழிபட்டால் போதும். ராகு-கேது பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுங்கள்.

    • புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் ராமசாமி. கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை வழக்கம்போல் மாடிப்படி அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியூர் சென்றுவிட்டார்.

    பின்னர் 16-ந் தேதி வந்து பார்த்தபோது வீட்டின் சாவி அருகில் உள்ள வீட்டின் பகுதியில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் சாவியை எடுத்து வீட்டின் உள்ளே சென்று பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம், நகை கிடைக்காத நிலையில் வெள்ளாங்கோயில் பகுதியில் நகை மற்றும் பணத்தை எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அதனை அங்கேயே வைத்து விடும்படியும், இல்லையென்றால் (இன்று) வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் கோழி குத்தி பரிகாரம் செய்யப் போவதாகவும் இந்த பரிகாரம் செய்யும்போது பணம், நகை எடுத்தவர்கள் குடும்பமே கடும் பாதிப்புக்கு உள்ளாகும் எனவும்,

    இதனை தவிர்க்க வீட்டில் இருந்த பணம், நகை எடுத்தவர்கள் கொண்டு வந்து அங்கேயே வைக்குமாறு பாதிக்கபட்ட குடும்பத்தினர் பிளக்ஸ் பேனர் அடித்து வீட்டின் முன்புள்ள சாலையில் வைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. அப்பகுதி மக்கள் இந்த பேனரை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    இந்நிலையில் திருடிய நகை வைக்கப்படாததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேனரில் கூறியவாறு மாங்காளியம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த சூலாயுதத்தில் இன்று சேவலை குத்தி பரிகாரம் செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அம்பாள் பெயர், “சௌந்தர நாயகி, மின்னனையாள்” என்பதாகும்.
    • இங்குள்ள நடராசர், அற்புதமான வேலைப்பாடுடைய, பெரிய அழகுமிக்க மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

    திருப்பூவனம் புஷ்பவனேஸ்வரர் வைகை தீர்த்தம்

    வைகைக் கரையில் அமைந்துள்ள இத்திருகோவிலுக்கு, வைகை ஆறே தீர்த்தமாக உள்ளது.

    இத்தலத்து இறைவன் பெயர், "புஷ்பவனேஸ்வரர், பூவன நாதர்" என்பனவாகும்.

    அம்பாள் பெயர், "சௌந்தர நாயகி, மின்னனையாள்" என்பதாகும்.

    தல மரம், பாலமரம் ஆகும். தேவார பாடல் பெற்ற திருத்தலம், இது.

    இங்குள்ள நடராசர், அற்புதமான வேலைப்பாடுடைய, பெரிய அழகுமிக்க மூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.

    இங்கு பங்குனியில் பெரும் விழா நடைபெறுகிறது.

    காசிக்கு சமமான தலங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    இங்குள்ள மூலவர் சிவலிங்கத் திருமேனி அழகான மூர்த்தம், நிறைவான தரிசனம் இது.

    பொன்னனையாள் என்னும் ஒருத்திக்காக இறைவன் சித்தராக வந்து, இரசவாதம் செய்து, அவளுக்கு பொன்னைக் கொடுக்க, அதனை வைத்து அவள் இங்கு சிவலிங்கம் அமைத்து, வழிபட அதுவும் மிகவும் அழகாக இருப்பதைக் கண்டு ஆசையுடன் அந்த சிவலிங்கத்தைக் கிள்ளி முத்தமிட்டாளாம்.

    இவ்வாறு அவள் கிள்ளிய அடையாளம் சிவலிங்கத்தில் உள்ளதை இன்றும் காணலாம்.

    இக்கோவிலில் "பொன்னனையாள்", "சித்தர்கள்" ஆகியோர் உருவங்கள் உள்ளன.

    திருவாசகத்திலும், கருவூர்த் தேவரின் திவிசைப்பாவிலும் இத்தலம் போற்றப்படுகிறது.

    பிரம்மன் வழிபட்ட தலம், இது.

    இத்தலத்தில் உள்ள கொடுங்கைகள் மிகவும் அழகானவை.

    அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவருக்கும் வைகை மணல், சிவலிங்கமாக தோன்றியதால், மூவரும் மறுகரையில் இருந்தே இக்கரையை மிதிக்க அஞ்சி வணங்க, அதற்கு இறைவன் அவர்கள் நேநேர கண்டு வணங்குவதற்கு ஏதுவாக, நந்தியை விலகச் செய்தருளினார்.

    அதனால் இத்தலத்தில் இன்றும் இந்த நந்தி சாய்ந்துள்ளதைக் காணலாம்.

    வைகையின் மறுகரையில் இருந்து அவர்கள் தொழுத இடம், "மூவர் மண்டபம்" என்று அழைக்கப்படுகிறது.

    இத்தலம், புஷ்பவன காசி, பிதுர் மோட்சபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரம்மபுரம், ரசவாதபுரம்" என அழைக்கப்படுகிறது.

    இத்தலத்து தீர்த்தமான வைகை ஆறு வடக்கு நோக்கி, "உத்தரவாகினி"யாக இங்கு ஓடுகிறது.

    எனவே, இந்த தீர்த்தம் விசேஷமாகக் கூறப்படுகிறது.

    • இத்தலத்து இறைவன் பெயர் “விருத்தகிரீஸ்வரர், பழமலை நாதர்” என்பதாகும்.
    • இத்தலத்து விநாயகர் “ஆழத்துப்பிள்ளையார்” என அழைக்கப்படுகிறார்.

    விருத்தாசலம் மணிமுத்தாறு தீர்த்தம்

    "திருமுதுகுன்றம்" என அழைக்கப்படும், விருத்தாசலம் "பழமலை நாதர் திருக்கோவிலில்" உள்ளது "மணிமுத்தாறு தீர்த்தம்".

    இத்தலத்து இறைவன் பெயர் "விருத்தகிரீஸ்வரர், பழமலை நாதர்" என்பதாகும்.

    அம்பாள் பெயர், "விருத்தாம்பிகை, பெரிய நாயகி பாலாம்பிகை" என்பதாகும்.

    இத்தலத்து மரம், "வன்னி" ஆகும். இத்தலத்து விநாயகர் "ஆழத்துப்பிள்ளையார்" என அழைக்கப்படுகிறார்.

    இது ஒரு தேவாரத் தித்தலம். இத்தலத்தை, அருணகிரி நாதர், குரு நமசிவாயர் சிவப்பிரகாசர், வள்ளலார் முதலிய மகான்கள் புகழ்ந்து பாடியுள்ளார்.

    இத்தலத்தில் மாசிமகப் பெருவிழாவும், ஆடிப்பூரத் திருக்கல்யாணமும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

    பிரம்மனும், அகத்தியரும் வழிபட்ட திருத்தலம், இது. முருகக் கடவுள் 28 ஆகமங்களையும் சிவலிங்கமாய் வைத்து பூசித்த தலம், இது.

    சுந்தரர் இத்தலத்து இறைவனை வேண்டி பொன்னைப் பெற்று, இங்குள்ள மணிமுத்தாற்றில் போட்டு திருவாரூர் கமலாலயத்தில் எடுத்துக் கொண்டார்.

    இத்தலத்திற்கு "விருத்தகாசி" என்ற பெயரும் உண்டு. இத்தலம் முக்தி தரும் தலங்களுள் ஒன்றாகும்.

    இத்திருத்தலத்தின் தீர்த்தமாகிய மணிமுத்தாற்றில், இந்த ஆலயத்தின் வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே உள்ள "வடபால் மணிமுத்தாற்றில்" நீராட வேண்டும்.

    இவ்விடமே "புண்ணிய மடு" என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் நீராடி, பிள்ளையார், இறைவன், அம்பாளை வழிபட முக்தி நிலை கிட்ட சிறந்தொரு பரிகாரமாகும்.

    • “கற்பகநாதர் குளம்” விநாயக தீர்த்தத்திற்கு “கடிக்குளம்” என்ற பெயரும் உண்டு.
    • இத்தலத்து இறைவன் பெயர், “கற்பக நாதர்.

    கற்பகநாதர் குளம் விநாயகர் தீர்த்தம்

    "கற்பகநாதர் குளம்" விநாயக தீர்த்தத்திற்கு "கடிக்குளம்" என்ற பெயரும் உண்டு.

    எனவே, இத்தலத்திற்கு "கடிக்குளம்" என்று பெயர். தீர்த்தத்தின் பெயரே ஊரின் பெயராக இருப்பது தனிச்சிறப்பாகும்.

    கடிக்குளம் என்பதே தற்போது மக்களால், "கற்பகநாதர் குளம்" என்றும், "கற்பகனார் கோவில்" என்றும் அழைக்கப்படுகிறது.

    இத்தலத்து இறைவன் பெயர், "கற்பக நாதர், கற்பகேஸ்வரர்" என்றும், அம்பாள் பெயர், "சௌந்தரநாயகி, பால சௌந்தரி என்றும் அழைக்கப்படுகிறது.

    மூலவர், சிறிய மூர்த்தியாக, எட்டுப் படைகளுடன், எழிலாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

    அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது. விநாயகர் இறைவனை வழிபட்டு, மாங்கனி பெற்ற தலம், இது.

    இத்தலத்து சிறப்புமிக்க தீர்த்தமாகிய "விநாயக தீர்த்தம்" (கடிக்குளம்) இந்த ஆலயத்தின் வலது பக்கத்தில் உள்ளது.

    ஒருவர் தமது முன்னோரின் எலும்புகளை, ஒரு கலத்தினுள் வைத்து தீர்த்த யாத்திரையாக இந்த தீர்த்தத்தை வந்து அடைந்த போது, அந்தக் கலயத்தில் இருந்த எலும்புத் துண்டுகள் தாமரைப் பூவாக மலர்ந்ததாம்.

    அப்போது தான் தெரிந்தது. இந்தத் தலமும், தீர்த்தமும் முக்தி தரும் இடம் என்று அன்று முதல் இந்த சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி செய்வது வழக்கமாக உள்ளது.

    திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டிய காடு செல்லும் பேருந்தில் சென்றால், இத்தலத்தை அடையலாம்.

    ×