என் மலர்
நீங்கள் தேடியது "துர்கா ஸ்டாலின்"
- துர்கா தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார்!
- வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமண நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் துர்கா ஸ்டாலினுடன் சென்று மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து தன் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து இருவரும் ஆசி பெற்றனர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக - என்னில் பாதியாக துர்கா அவர்கள் நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார்!
அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி!
எதிர்பார்ப்புகளற்ற அன்பும் - விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம்.
வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் - சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள்.
- பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப்பிள்ளை - அம்மா என்றால் கண்டிப்பு.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமண நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அம்மா - அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அம்மாவும் - அப்பாவும் இல்வாழ்வில் இன்று பொன்விழா காண்கிறார்கள்!
வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் - சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள்.
மணமான சில மாதங்களிலேயே மிசா சிறைவாசம் - இடைவெளியில்லா சுற்றுப்பயணங்கள் - கடும் அரசியல் சூழல்கள் - தொடர் மக்கள் பணி என எல்லாவற்றிலும் அப்பாவுக்கு பெருந்துணையாக இருந்து வருகிறார் அம்மா!
அம்மாவின் உணர்வுகள்- நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் குடும்பத்தலைவராக அவருக்கு பக்கபலமாக திகழ்கிறார் அப்பா!
பொதுவாழ்வுக்கு நான் வரும் வரை, அப்பாவுக்கு செல்லப்பிள்ளை - அம்மா என்றால் கண்டிப்பு.
இப்போது, அப்பா கண்டிப்பவராகவும் - அம்மா அன்பு காட்டி அரவணைப்பவராகவும் பொதுவாழ்வில் என்னை வழிநடத்துகிறார்கள்!
அம்மா - அப்பா இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ந்திருக்க என் அன்பு வாழ்த்துகள் - முத்தங்கள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.
- எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமணநாளை கொண்டாடுகிறார். இதற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்த்து தெரிவித்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.
இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன் என அறிக்கையில் கூறினார்.
- இந்த நூல் உருவான வகையில் நான் மீண்டும் நன்றி சொல்ல வேண்டியது என் கணவருக்குதான்.
- இந்த நூல் என் கணவர் பற்றியும், என்னை பற்றியும், எங்கள் 50 ஆண்டுகால வாழ்க்கை பற்றியும் என்னுடைய பார்வையில் சொல்லும் நூல்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் 'அவரும், நானும்' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில் தொடராக எழுதினார். இதை அவர், புத்தகமாக வெளியிட விரும்பினார். அதன்படி 'அவரும், நானும்' புத்தகத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி அன்று வெளியிடப்பட்டது.
இந்த புத்தகத்தின் 2-ம் பாகத்தை கடந்த 19-ந்தேதி அன்று வெளியிடுவதற்கு துர்கா ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க.முத்து மரணம் அடைந்ததால் இந்த விழா நேற்று ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உடல்நலக்குறைவால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் இந்த விழா திட்டமிட்டப்படி நடக்குமா? நடக்காதா? என்று கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழாவை ஒத்திவைக்காமல் நடத்த வேண்டும் என்று துர்கா ஸ்டாலினிடம் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' 2-ம் பாகம் புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

2-ம் பாகத்தின் முதல் பிரதியை எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட்டார். அதனை 'டாபே' குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார். சிறப்பு பிரதியை துர்கா ஸ்டாலினின் பேரன்கள் இன்பநிதி, நலன் சபரீசன், பேத்திகள் தன்மயா, நிலானி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல் முறையீட்டு ஆணைய தலைவருமான பவானி சுப்பராயன், கோவை சந்திரா, ஜி.ஆர்.ஜி.நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
துர்கா ஸ்டாலின் ஏற்புரையாற்றி பேசியதாவது:-
பத்திரிகையில் வெளிவந்த 2 பாகங்களுக்கு பிறகு, என்னுடைய கணவர் முதலமைச்சரான பிறகான நிகழ்வுகளை புதிய அத்தியாயங்களாக இதில் சேர்த்துள்ளோம்.
இந்த நூல் உருவான வகையில் நான் மீண்டும் நன்றி சொல்ல வேண்டியது என் கணவருக்குதான். மனப்பூர்வமாக, முழுமையாக எனக்கு ஆதரவு அளித்து, 'நீ எழுது துர்கா' என சொல்லி உற்சாகப்படுத்திய எனது கணவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்த நூல் என் கணவர் பற்றியும், என்னை பற்றியும், எங்கள் 50 ஆண்டுகால வாழ்க்கை பற்றியும் என்னுடைய பார்வையில் சொல்லும் நூல்.
சிறப்பாக விழா நடக்கட்டும் என என்னை வாழ்த்தி அனுப்பியதே, மருத்துவமனையில் இருந்து விழாவை பார்த்துக்கொண்டு இருக்கும் என் கணவர் தான்.
எப்போதும் என்னுடைய கணவர் உங்களில் ஒருவன் நான் என்று சொல்லுவார். நூலும் அதே தலைப்பில் வெளியிட்டார். அதேபோல், நானும் உங்களில் ஒருத்தியாக இருக்கவே எப்போதும் ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. வரவேற்று பேசினார். 'உயிர்மை' நிர்வாக ஆசிரியர் செல்வி ராமச்சந்திரன் நன்றி கூறினார். விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்களும், தி.மு.க. வர்த்தகரணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, பத்திரிகையாளர்கள் இந்து என்.ராம், நக்கீரன் கோபால், கிருத்திகா உதயநிதி, லோகநாயகி, புத்தகத்தின் பதிப்பாளர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் மற்றும் துர்கா ஸ்டாலின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் வரிசையாக வந்து துர்கா ஸ்டாலினிடம் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.
- சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோரமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
- கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
சீர்காழி:
சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற திருவெண்காட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவில் காசிக்கு இணையான கோவில்களில் ஒன்றாகும். நவகிரகங்களில் ஒன்றான புதனின் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோரமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் உள்ள கொடிமரம் பழுதடைந்து காணப்பட்டது.
இதை அடுத்து புதிய கொடிமரம் பிரதிஷ்டை இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்தது. முன்னதாக கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு கொடிமரத்தை வழிபட்டார். இதைத் தொடர்ந்து கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி, தஷ்ணாமூர்த்தி சிவாச்சாரியார், கந்தசாமி சிவாச்சாரியார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின்படி அகோர மூர்த்தி சன்னதியில் மலர்களால் பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
- துர்கா ஸ்டாலின் பூம்புகார் அருகே கீழபெரும்பள்ளத்தில் உள்ள குலதெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு பகுதியில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. காசிக்கு இணையான ஆறு கோயில் முதன்மையாக விளங்கும் இக்கோயிலில் அகோர மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனது குடும்பத்தினருடன் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இதேபோல் திரளான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து அகோரமூர்த்திக்கு பல்வேறு நறுமண பொருட்களால் 4 மணி நேரம் அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த விழாவையொட்டி துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின்படி அகோர மூர்த்தி சன்னதியில் மலர்களால் பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அதன் பின்னர் துர்கா ஸ்டாலின் பூம்புகார் அருகே கீழபெரும்பள்ளத்தில் உள்ள குலதெய்வ கோவிலான அங்காளம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
- மலைக்கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்து பின்னர் மூலவருக்கு நடந்த உச்சிகால பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார்.
- முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணிசாமி கோவில் செவ்வாய்க்கு உரிய அதிபதியாக விளங்கி வருகிறார். இங்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி இன்று நடந்த பூஜையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா கலந்து கொண்டார். இதற்காக மதுரையில் இருந்து கார் மூலம் பழனிக்கு வந்த அவர் அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு வந்தார்.
அவருடன் பழனி எம்.எல்.ஏ செந்தில்குமாரின் மனைவி மெர்சி செந்தில்குமார் வந்தார். மலைக்கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்து பின்னர் மூலவருக்கு நடந்த உச்சிகால பூஜையில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முருகப்பெருமானுக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பூஜையில் துர்கா ஸ்டாலின் பங்கேற்று மனமுருக வழிபட்டார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. துர்கா ஸ்டாலின் பழனி கோவிலுக்கு வந்ததை அறிந்ததும் பக்தர்கள் அவருடன் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்தனர். மேலும் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
- ரூ.2 லட்சம் மதிப்புள்ள சந்தனம் அரைப்பதற்கான பிரத்யேக எந்திரத்தை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வழங்கினார்.
- குருவாயூர் கிருஷ்ணன் கோவில் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். தனது சகோதரி ஜெயந்தி மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் வந்த அவர், கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்பு 32 பவுன்(256கிராம்) எடையுள்ள தங்க கிரீடத்தை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அதனை கோவில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். துர்கா ஸ்டாலின் காணிக்கையாக வழங்கிய தங்க கிரீடத்தின் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.
இதேபோல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சந்தனம் அரைப்பதற்கான பிரத்யேக எந்திரத்தையும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வழங்கினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
- நோய் கிருமிகளை எதிர்த்து நாம்தான் போராடியாக வேண்டும்.
- சாதி, மதத்தின் பெயரால் நாட்டை நாசம் செய்ய நினைக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராக நாம் மோதிக் கொண்டிருக்கிறோம்.
சென்னை:
தி.மு.க. சமூக வலைதள ஐ.டி.பிரிவு தன்னார்வலர்கள் கலந்து கொண்ட கூட்டம் சென்னை செனாய் நகரில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக ஊடகங்கள் மூலமாக மக்களை எளிதில் சென்றடைய முடியும்... அவர்களின் 'ரியாக்ஷன்' என்ன என்பதையும் தெரிந்துக் கொள்ள முடியும்.
அவதூறு பரப்பி, திட்டி ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் வந்து விடுகிறது. நமது கருத்துக்கள் நொடியில் கோடிக்கணக்கான பேருக்கு போய் சேர்ந்து விடுகிறது. 'முரசே முழங்கு' நாடக வெற்றி விழா நிகழ்ச்சிக்கு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த போது அதிகாலை 4 மணி இருக்கும். நோட்டீஸ் ஒட்டக் கூடாது என்று குறிப்பிட்டிருந்த கல்லூரி சுவற்றில் போய் போஸ்டரை ஒட்டி விட்டேன்.
அதனால் என் மீது வழக்கும் போட்டார்கள். அப்போது முதலமைச்சர் மகன் நான். அப்போதைய நமது ஆட்சி அப்படி இருந்தது. இன்றும் அப்படி தான் உள்ளது. சமூக வலைதளங்களை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
திராவிட இயக்கம் தமிழர்கள் தலை நிமிர்வதற்காக பிறந்த இயக்கமாகும். யாருடைய தலையையும் எடுக்க பிறந்த இயக்கம் இல்லை. இன்று சீவிடுவேன் சீவிடுவேன் என்று சொல்கிறார்களே. அதற்காகத்தான் இதை சொல்கிறேன். வலை தளங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்கு கொண்டு போய் சேர்க்கும். ஒருவர் பல காலம் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்து விடும். நெகட்டிவ் பிரசாரங்கள் மூலமாக எதிரிகளை வீழ்த்துவதை விட பாசிட்டிவ் பிரசாரங்கள் மூலமாக நம்மை வளர்த்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.
தன்னை யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்று தந்தை பெரியார் பட்டியல் போட்டு சொல்லி இருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் அன்று இருந்த தலைவர்கள், இயக்கங்கள் பத்திரிகைகள் என எல்லோராலும் எதிர்க்கப்பட்டவர் பெரியார்.
அவர்களின் பெயரையெல்லாம் பட்டியல் போட்டால் பலரை உங்களுக்கு தெரியாது. ஆனால் பெரியார் இன்னும் வாழ்கிறார்.
வாழ்க வசவாளர்கள் என்று கூறிக்கொண்டே எதிரிகளை வீழ்த்தியவர் பேரறிஞர் அண்ணா. கூட்டில் இருக்கிற புழுக்களைப் போல கொட்டப்பட்டு கொட்டப்பட்டு வளர்ந்தவன் நான்.
எதிரிகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நான் வளர்ந்திருக்கவே முடியாது. யாருக்கெல்லாம் நன்மை செய்தேனோ அவர்களால் அதிகமாக தாக்கப்பட்டவன் என்று கலைஞர் கூறி உள்ளார்.
இதெல்லாம் நமக்கான பாடங்கள். அதற்காக யாருக்கும் பதில் சொல்லக்கூடாது. எல்லா விமர்சனங்களையும் ஏற்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குறை சொல்பவர்கள் எல்லா காலத்துக்கும் இருந்து உள்ளனர்.
மருந்து கண்டுபிடித்து விட்டால் நோய் கிருமிகள் ஒழிந்து விடுமா என்ன? சமூகத்தை பின்நோக்கி இழுத்துக் கொண்டிருந்த நோய் கிருமிகளை ஒழிக்க உருவான மருந்துதான் திராவிட இயக்கம்.
நோய் கிருமிகளை எதிர்த்து நாம்தான் போராடியாக வேண்டும். இன்னைக்கு சோசியல் மீடியாவும், சில மீடியாக்களும் அவர்கள் கண்ட்ரோலில் உள்ளது. அதனால் பொய் சொல்லவும், அவதூறு பரப்பவும் அவர்கள் தயங்குவது இல்லை.
இதற்கு சரியான பதிலை நாம் சொல்ல வேண்டும். ராணுவத்தோட முன்கள வீரர்கள் மாதிரி கழகத்தோட முன்தள வீரர்கள் நீங்கள். களமும் தளமும் கை கோர்த்தால் தான் வெற்றி கிடைக்கும்.
களத்தில் நிற்கும் வேட்பாளர்களுக்கு களமாடி வெற்றியை தேடி தருபவர்கள்தான் நீங்கள். இங்கு வந்துள்ள உங்களுக்கு பாலோவர்ஸ் எண்ணிக்கை 92 லட்சத்து 62 ஆயிரத்து 618. ஏறத்தாழ ஒரு கோடிக்கு பாலோவர்ஸ் வந்திருக்காங்க. தன்னலமற்ற செயல்பாட்டால் நீங்கள் கழகத்துக்கு கிடைத்திருக்கீங்க.
தொண்டர்களின் உழைப்பு கழகத்துக்கு ரத்த நாளம் எனக்கு கலைஞர் சொல்லி இருக்கிறார். அதனால்தான் தலைமை கழகத்தில் இருந்து வெளியிடும் அறிக்கைகளுக்கு முன்பே உங்களிடமிருந்து ரியாக்ஷன் வந்து விடுகிறது. நாங்கள் சொல்ல முடியாததை சொல்ல தயங்குவதை உங்களால் சொல்ல முடியும்.
அந்த வகையில் தி.மு.க.வுக்கு நீங்கள் மிகப்பெரிய பலம். ஏராளமான அரசியல் எதிரிகளை வெற்றி கண்ட வரலாறு நம்மோடது. கொம்பாதி கொம்பர்கள் என்று சொல்லப்பட்டவர்களை எல்லாம் எதிர்த்து நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம்தான் அழிந்து போயிருக்கிறது. தி.மு.க.வை கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை ஒழிப்பேன் என்று சொன்ன பலர் கடைசியில் இங்கேதான் அடைக்கலமாகி உள்ளனர்.
மூதறிஞர் ராஜாஜியும், சிலம்பு செல்வர் ம.பொ.சி.யும் இந்த இயக்கத்தை எதிர்த்தவர்கள். ஆனால் 1967-ல் தி.மு.க.வை ஆதரித்தார் ராஜாஜி. மயிலாப்பூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார் ம.பொ.சி.
அந்த தலைவர்களுக்கெல்லாம் மாற்று கொள்கை இருந்தது. ஆனால் இன்று பாரதிய ஜனதா, அ.தி.மு.க. போன்ற வெகுஜன விரோதிகளோடு நாம் மோதிக்கொண்டிருக்கிறோம். பாசிசத்துக்கு எதிராக நேரடியாக மோதிக்கொண்டிருக்கிறோம்.
சாதி, மதத்தின் பெயரால் நாட்டை நாசம் செய்ய நினைக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராக நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். பாரதிய ஜனதாவின் சாதித் தன்மை இந்தியாவுக்கே எதிரானதாகும். ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கே எதிரானது.
இப்படிப்பட்ட பாசிசவாதிகள் ஒருபக்கம். இவர்களோட பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டை அடகு வைத்த அ.தி.மு.க. ஒரு பக்கம். கொள்கை என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் கொள்கையற்ற கூட்டம்தான் அ.தி.மு.க.
இனி மேலும் பாரதிய ஜனதாவோடு இருந்தால் தமிழக மக்களால் மொத்தமாக புறக்கணிக்கப்படுவோம் என்று பயந்து உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாரதிய ஜனதாவும், அண்ணா பெயரால் கட்சி நடத்தி அதை பா.ஜனதாவிடம் அடகு வைத்த அ.தி.மு.க.வும், வேறு வேறு அல்ல. நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்.
அரசியல் எதிரிகள் மீது மட்டுமல்ல ஊடகவியலாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என எல்லோர் மீதும் பா.ஜனதா அத்துமீறல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட சோசியல் வைரசைத்தான் நாம் துணிவோடு எதிர்த்து நிற்கிறோம். மிசா, தடா, பொடா எல்லாவற்றையும் பார்த்தாச்சு. மிரட்டல், உருட்டல் இதெல்லாம் நம்மை ஒன்றும் செய்யாது. பொய் மூட்டைகளையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
ஹிட்லருக்கு ஒரே ஒரு கோயபல்ஸ்தான் இருந்தாரு. ஆனால் கோயபல்ஸ் எல்லாம் ஒன்று சேர்ந்து கட்சி ஆரம்பித்தால் எப்படி இருக்குமோ? அப்படித்தான் அந்த கூட்டம் உள்ளது. தம் பிடிச்சி அவர்கள் ஊதும் பொய் பலூனை உண்மை என்கிற ஊசியை வைத்து நாம் உடைத்து விடுவோம் என்கிற எரிச்சல் அவர்களுக்கு உள்ளது. பொய்களுக்கு பொய்கள் எப்போதுமே பதில் ஆகாது.
போலியான பெருமைகள் நமக்கு தேவையில்லை. உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும். நமது செய்திகள் உண்மையானவையாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினர் போல போலியானதாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு இப்போது ஒரே வேலை தான். எனது மனைவி துர்கா ஸ்டாலின் எந்த கோவிலுக்கு போகிறார்னு பார்க்கிறார்கள்.
அதை போட்டோ எடுத்து கோவிலுக்கு போகிறார் என பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள எல்லா கோவிலுக்கும்தான் அவர் போய்க் கொண்டிருக்கிறார். அது அவரது விருப்பம்.
அதனை நான் தடுக்க விரும்பவில்லை. தடுக்கவும் தேவையில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்துக்கு எதிரி இல்லை. கோவிலும் பக்தியும் அவரவர் உரிமை. அவரவர் விருப்பம். ஏராளமான போராட்டங்களை நடத்தி கோவில் வழிபாட்டு உரிமையை வாங்கி கொடுத்தது திராவிட இயக்கம்.
கலைஞரின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்கு பதில். கோவில்கள் கூடாது என்பது அல்ல. கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது.
கோவிலையும், பக்தியையும் பாரதிய ஜனதா தனது அரசியலுக்கு பயன்படுத்த நினைக்கிறது. கோவில்களை இடித்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் பூகம்ப படங்களை போட்டு வதந்தி பரப்புகிறார்கள். 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திய ஆட்சிதான் நமது ஆட்சி. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்ட ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. அதனை புத்தகமாகவே அச்சிட்டு வெளியிட்டிருக்கிறோம். இதெல்லாம் அவர்களுக்கு பிடிக்கவில்லை.
லைட் எரிந்தால் திருடனுக்குத்தான் பிடிக்காது. கோவிலை பராமரிப்பது மதவெறியை தூண்டி குளிர்காய நினைக்கும் அந்த கும்பலுக்கு பிடிக்கவில்லை. அதனால் உண்மைகளை தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.
இந்தியா முழுவதும் அதனை எடுத்துச் சொல்வோம். இது தொடர்பாக நான் பேசிய பேச்சுக்கள் 2 பகுதியாக வந்துள்ளது. 20 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர். இது எத்தனை மாநாடுகளுக்கு சமம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இப்படி நமது கருத்துக்கள் அனைவரையும் சென்றடைய சமூக வலைதளங்களில் நாம் அதிகம் கவனம் செலுத்துவோம்.
இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த ஐ.டி.பிரிவு செயலாளர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் துணையாக இருப்பவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு வெளியிடப்பட்டுள்ள 'கலைஞர் 100' புத்தகத்தை படித்து அதன் மூலமாக எதிரிகளுக்கு பதிலடி கொடுங்கள். நாற்பதும் நமதே நாடும் நமதே.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடை பெறுகிறது.
- தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது.
சென்னை:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடை பெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் வீடு வீடாக அழைப்பிதழ் மற்றும் அட்சதை பிரசாதம் வழங்கி அழைத்து வருகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிசத் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக 22-ந்தேதி நடை பெறும் கும்பாபிஷேக அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் வழங்கினார்கள்.
அவரும் பக்தியுடன் பெற்றுக் கொண்டு விரைவில் தரிசனம் செய்ய வருவதாக தெரிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளான நாளை (15-ந்தேதி) வரை இந்த பணிகள் நடக்கிறது.
- வெயில் அதிகமாக இருந்ததால் கூலிங்கிளாஸ் அணிந்து இருந்தனர்.
- பிரமுகர்களுக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
சென்னை:
விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுடன் மெரினா கடற்கரை பகுதிக்கு வந்தார்.
அங்கு அமைக்கப்பட்டு இருந்த நிழல் பந்தலில் மு.க.ஸ்டாலின், மனைவியுடன் விமான சாகசங்களை பார்த்தார். வெயில் அதிகமாக இருந்ததால் மு.க.ஸ்டாலினும், துர்கா ஸ்டாலினும் கூலிங்கிளாஸ் அணிந்து இருந்தனர். அவர்கள் கைதட்டி ரசித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை ஏர்மார் ஷல் ஏ.பி.சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விமான சாகசத்தை கண்டு களித்தனர்.
விமான சாகசத்தை பார்ப்பதற்காக மெரினாவில் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். இதனால் முக்கிய பிரமுகர்களுக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் இருந்து சாகச நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர்.
- நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் ‘அமுதக் கரங்கள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 1-ந்தேதி 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து அவரது பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் 'அமுதக் கரங்கள்' திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் 'அமுதக் கரங்கள்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.






