search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்
    X

    குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்

    • ரூ.2 லட்சம் மதிப்புள்ள சந்தனம் அரைப்பதற்கான பிரத்யேக எந்திரத்தை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வழங்கினார்.
    • குருவாயூர் கிருஷ்ணன் கோவில் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். தனது சகோதரி ஜெயந்தி மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் வந்த அவர், கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்பு 32 பவுன்(256கிராம்) எடையுள்ள தங்க கிரீடத்தை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அதனை கோவில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். துர்கா ஸ்டாலின் காணிக்கையாக வழங்கிய தங்க கிரீடத்தின் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.

    இதேபோல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சந்தனம் அரைப்பதற்கான பிரத்யேக எந்திரத்தையும் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வழங்கினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×