என் மலர்
நீங்கள் தேடியது "budhan bhagavan"
ஒன்பது கிரகங்களிலும் மிகவும் வித்தியாசமான கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் பகவானுக்கு உகந்த 108 போற்றியை பார்க்கலாம்.
ஓம் அழகனே போற்றி
ஓம் அருளாகரனே போற்றி
ஓம் அறிவிற்கு உவமையே போற்றி
ஓம் அனைவருக்கும் காவலே போற்றி
ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அழகுருவே போற்றி
ஓம் அம்பு பீடனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அலங்காரனே போற்றி
ஓம் ஆனந்தனே போற்றி
ஓம் ஆயில்ய நாதனே போற்றி
ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
ஓம் இரு வாகனனே போற்றி
ஓம் இளை நாதனே போற்றி
ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
ஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி
ஓம் உயர்ந்தவனே போற்றி
ஓம் உகந்தவனே போற்றி
ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி
ஓம் உடலிற் தோலானவனே போற்றி
ஓம் கலைவாணனே போற்றி
ஓம் கல்வியருள்பவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
ஓம் கவியரசே போற்றி
ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
ஓம் கிரஹபதியே போற்றி
ஓம் கிரகபீடாஹரனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
ஓம் குஜன் பகைவனே போற்றி
ஓம் குதிரை வாகனனே போற்றி
ஓம் கேடயதாரியே போற்றி
ஓம் கேட்டை நாதனே போற்றி
ஓம் சசி சுதனே போற்றி
ஓம் சந்திர குலனே போற்றி
ஓம் சத்வ குணனே போற்றி
ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுப கிரகமே போற்றி
ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞான நாயகனே போற்றி
ஓம் தவசீலனே போற்றி
ஓம் தவயோகியே போற்றி
ஓம் தயாகரனே போற்றி
ஓம் தனிக்கோயிலானே போற்றி
ஓம் தாரை மகனே போற்றி
ஓம் தரித்ர நாசகனே போற்றி
ஓம் திருவுருவனே போற்றி
ஓம் திருவெண்காட்டில் அருள்பவனேபோற்றி
ஓம் துதிக்கப்படுபவனேபோற்றி
ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனேபோற்றி
ஓம் தேவனேபோற்றி
ஓம் தேரேறி வருபவனேபோற்றி
ஓம் நட்சத்ரேசனேபோற்றி
ஓம் நல்லுரு அருள்பவனேபோற்றி
ஓம் நாற்கரனேபோற்றி
ஓம் நாயுருவி சமித்தனேபோற்றி
ஓம் நான்காமவனேபோற்றி
ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனேபோற்றி
ஓம் பயிர்க் காவலனேபோற்றி
ஓம் பசும்பயறு விரும்பியேபோற்றி
ஓம் பச்சை வண்ண கிரகமேபோற்றி
ஓம் பதினேழாண்டாள்பவனேபோற்றி
ஓம் பித்தளை உலோகனேபோற்றி
ஓம் பின் னகர்வுடையோனேபோற்றி
ஓம் பிரமனருள் பெற்றவனேபோற்றி
ஓம் புராணத் தேவனேபோற்றி
ஓம் புலவர் பிரானேபோற்றி
ஓம் புலமையளிப்பவனேபோற்றி
ஓம் பூங்கழலடியனேபோற்றி
ஓம் புண்ணியனேபோற்றி
ஓம் புரூரவன் தந்தையேபோற்றி
ஓம் புகழ் சேர்ப்பவனேபோற்றி
ஓம் பொன்னணியனேபோற்றி
ஓம் பொற்கொடியோனேபோற்றி
ஓம் பொன்மேனியனேபோற்றி
ஓம் பொன்னாடையனேபோற்றி
ஓம் போகமளிப்பவனேபோற்றி
ஓம் மணிமுடியனேபோற்றி
ஓம் மரகதப் பிரியனேபோற்றி
ஓம் மனோகரனேபோற்றி
ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனேபோற்றி
ஓம் மதுரையில் பூசித்தவனேபோற்றி
ஓம் ரவி மித்ரனேபோற்றி
ஓம் ரவிக்கருகிருப்பவனேபோற்றி
ஓம் ரேவதிக் கதிபதியேபோற்றி
ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியேபோற்றி
ஓம் வள்ளலேபோற்றி
ஓம் வல்லபிரானேபோற்றி
ஓம் வாட்கரனேபோற்றி
ஓம் வடகீழ் திசையனேபோற்றி
ஓம் வாக்கானவனேபோற்றி
ஓம் வாழ்வளிப்பவனேபோற்றி
ஓம் வித்தகனேபோற்றி
ஓம் விஷ்ணுரூபனேபோற்றி
ஓம் விஷ்ணு அதிதேவதையனேபோற்றி
ஓம் விதி மாற்றுபவனேபோற்றி
ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனேபோற்றி
ஓம் ‘ஜம்’ பீஜ மந்திரனேபோற்றி
ஓம் புத பகவானே போற்றிபோற்றி
ஓம் அருளாகரனே போற்றி
ஓம் அறிவிற்கு உவமையே போற்றி
ஓம் அனைவருக்கும் காவலே போற்றி
ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அழகுருவே போற்றி
ஓம் அம்பு பீடனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அலங்காரனே போற்றி
ஓம் ஆனந்தனே போற்றி
ஓம் ஆயில்ய நாதனே போற்றி
ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
ஓம் இரு வாகனனே போற்றி
ஓம் இளை நாதனே போற்றி
ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
ஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி
ஓம் உயர்ந்தவனே போற்றி
ஓம் உகந்தவனே போற்றி
ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி
ஓம் உடலிற் தோலானவனே போற்றி
ஓம் கலைவாணனே போற்றி
ஓம் கல்வியருள்பவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
ஓம் கவியரசே போற்றி
ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
ஓம் கிரஹபதியே போற்றி
ஓம் கிரகபீடாஹரனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
ஓம் குஜன் பகைவனே போற்றி
ஓம் குதிரை வாகனனே போற்றி
ஓம் கேடயதாரியே போற்றி
ஓம் கேட்டை நாதனே போற்றி
ஓம் சசி சுதனே போற்றி
ஓம் சந்திர குலனே போற்றி
ஓம் சத்வ குணனே போற்றி
ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுப கிரகமே போற்றி
ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞான நாயகனே போற்றி
ஓம் தவசீலனே போற்றி
ஓம் தவயோகியே போற்றி
ஓம் தயாகரனே போற்றி
ஓம் தனிக்கோயிலானே போற்றி
ஓம் தாரை மகனே போற்றி
ஓம் தரித்ர நாசகனே போற்றி
ஓம் திருவுருவனே போற்றி
ஓம் திருவெண்காட்டில் அருள்பவனேபோற்றி
ஓம் துதிக்கப்படுபவனேபோற்றி
ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனேபோற்றி
ஓம் தேவனேபோற்றி
ஓம் தேரேறி வருபவனேபோற்றி
ஓம் நட்சத்ரேசனேபோற்றி
ஓம் நல்லுரு அருள்பவனேபோற்றி
ஓம் நாற்கரனேபோற்றி
ஓம் நாயுருவி சமித்தனேபோற்றி
ஓம் நான்காமவனேபோற்றி
ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனேபோற்றி
ஓம் பயிர்க் காவலனேபோற்றி
ஓம் பசும்பயறு விரும்பியேபோற்றி
ஓம் பச்சை வண்ண கிரகமேபோற்றி
ஓம் பதினேழாண்டாள்பவனேபோற்றி
ஓம் பித்தளை உலோகனேபோற்றி
ஓம் பின் னகர்வுடையோனேபோற்றி
ஓம் பிரமனருள் பெற்றவனேபோற்றி
ஓம் புராணத் தேவனேபோற்றி
ஓம் புலவர் பிரானேபோற்றி
ஓம் புலமையளிப்பவனேபோற்றி
ஓம் பூங்கழலடியனேபோற்றி
ஓம் புண்ணியனேபோற்றி
ஓம் புரூரவன் தந்தையேபோற்றி
ஓம் புகழ் சேர்ப்பவனேபோற்றி
ஓம் பொன்னணியனேபோற்றி
ஓம் பொற்கொடியோனேபோற்றி
ஓம் பொன்மேனியனேபோற்றி
ஓம் பொன்னாடையனேபோற்றி
ஓம் போகமளிப்பவனேபோற்றி
ஓம் மணிமுடியனேபோற்றி
ஓம் மரகதப் பிரியனேபோற்றி
ஓம் மனோகரனேபோற்றி
ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனேபோற்றி
ஓம் மதுரையில் பூசித்தவனேபோற்றி
ஓம் ரவி மித்ரனேபோற்றி
ஓம் ரவிக்கருகிருப்பவனேபோற்றி
ஓம் ரேவதிக் கதிபதியேபோற்றி
ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியேபோற்றி
ஓம் வள்ளலேபோற்றி
ஓம் வல்லபிரானேபோற்றி
ஓம் வாட்கரனேபோற்றி
ஓம் வடகீழ் திசையனேபோற்றி
ஓம் வாக்கானவனேபோற்றி
ஓம் வாழ்வளிப்பவனேபோற்றி
ஓம் வித்தகனேபோற்றி
ஓம் விஷ்ணுரூபனேபோற்றி
ஓம் விஷ்ணு அதிதேவதையனேபோற்றி
ஓம் விதி மாற்றுபவனேபோற்றி
ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனேபோற்றி
ஓம் ‘ஜம்’ பீஜ மந்திரனேபோற்றி
ஓம் புத பகவானே போற்றிபோற்றி
உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இங்கே புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். புதன் பகவானுக்கு உரியவற்றை அறிந்து கொள்ளலாம்.
வழிபட உகந்த தினம் : புதன்கிழமை
ராசி : மிதுனம், கன்னி
திக்கு : வடகிழக்கு
அதிதேவதை : விஷ்ணு
பிரத்யதி தேவதை : நாராயணன்
நிறம் : வெளிர்பச்சை
வாகனம் : குதிரை
புதனுக்குப் விருப்பமானவை
பயிறு : பச்சைப் பயறு
மலர் : வெண்காந்தள்
வஸ்திரம் : பச்சைநிற ஆடை
ரத்தினம் : மரகதம்
நிவேதனம் : பாசிப்பரும்புப் பொடி அன்னம்
சமித்து : நாயுருவி
உலோகம் : பித்தளை
வழிபாட்டுக்கு ஏற்ற நாள், நேரம்
திருவெண்காடு, புதன் பகவானை வழிபட, புதன் பகவான் உச்சம், ஆட்சிபெறும் புரட்டாசி மாதமும், ஆட்சிபெறும் ஆனி மாதமும், புதன் நட்சத்திரங்கள் ஆகிய ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை வருகின்ற புதன் கிழமைகளில், புதன் ஓரையில், வழிபாட்டுப் பரிகாரம் செய்வது மிக, மிக சிறப்பாகும்.
புதன்கிழமையில், புதன் ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் காலை 9 மணி வரையிலும் ஆகும்.
ராசி : மிதுனம், கன்னி
திக்கு : வடகிழக்கு
அதிதேவதை : விஷ்ணு
பிரத்யதி தேவதை : நாராயணன்
நிறம் : வெளிர்பச்சை
வாகனம் : குதிரை
புதனுக்குப் விருப்பமானவை
பயிறு : பச்சைப் பயறு
மலர் : வெண்காந்தள்
வஸ்திரம் : பச்சைநிற ஆடை
ரத்தினம் : மரகதம்
நிவேதனம் : பாசிப்பரும்புப் பொடி அன்னம்
சமித்து : நாயுருவி
உலோகம் : பித்தளை
வழிபாட்டுக்கு ஏற்ற நாள், நேரம்
திருவெண்காடு, புதன் பகவானை வழிபட, புதன் பகவான் உச்சம், ஆட்சிபெறும் புரட்டாசி மாதமும், ஆட்சிபெறும் ஆனி மாதமும், புதன் நட்சத்திரங்கள் ஆகிய ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை வருகின்ற புதன் கிழமைகளில், புதன் ஓரையில், வழிபாட்டுப் பரிகாரம் செய்வது மிக, மிக சிறப்பாகும்.
புதன்கிழமையில், புதன் ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் காலை 9 மணி வரையிலும் ஆகும்.
புதபகவான் பூஜித்து பேறு பெற்ற ஸ்தலம். இவரை துதித்தால் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகிவிடும்.
சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாக புதன் பிறந்தார். இவர் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து நவகோள்களில் ஒன்றான கிரகபதவியை அடைந்தார். நான்கு குதிரைகள் கொண்ட தேரினை உடையவர். சந்திரனுக்கு அவிட்டத்தில் உதித்தவர். சுக்கிரனுக்கு மேல் இரண்டு லட்சம் யோசனை தூரத்தில் இருக்கிறவர்.
சூரியனை சுற்றிவரும் முதல் கிரகம் புதனாகும். புதன் சூரியனுக்கு 5 கோடியே 79 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.
24 மணிக்கணக்கில் தன்னைத்தானே ஒரு தரம் சுற்றிக் கொண்டும் 88 நாட்களில் சூரியனை ஒருமுறை சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 9500 மைல், குறுக்களவு 3000 மைல் என்றும் கூறுவர்.
சந்திரன் புதனுடன் திருவெண்காடு அடைந்து சுவேதாரண்யப் பெருமானை வழிபட்டு குருத்துரோகம் செய்த பாவத்தையும், இக்சயதுரோகத்தையும் நீங்கப் பெற்றான்.இத்தலத்தில் புதனுக்கு தனிக்கோவில் இருக்கிறது.
சுவேதாரண்யப் பெருமானை வழிபட்டு புதன் பகவானை தரிசித்தால் கல்வி அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை பெறலாம். கல்விக்கு காரணமாக இவர் விளங்குவதால் வித்யாகாரகன் என்றும் இவரை கூறுவர். வித்தையைத் தரும் இவருடைய சன்னிதி பிரம்மவித்யாம்பிகையின் இடது பாகத்தில் அமைந்திருப்பது பொருத்தமேயாகும்.
மேலும் வித்தைக்கு அதிபதியான பிரம்மனின் சமாதியும் புதன் சன்னதிக்கு தென்பால் அமைந்துள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் கோவிலும், சந்திர தீர்த்தமும் புதன் சந்நிதிக்கு எதிரே அமைந்துள்ளன.
மேலும் அலிக்கிரகமான புதன் ஐந்தாம் இடச்சம்பந்தம் பெறுவதனால் சிலருக்கு குழந்தை பிறக்காது. மேற்படி தோஷம் உள்ளவர்களும் இத்தலத்திற்கு வந்து மூன்று தீர்த்தத்தில் மூழ்கி நீராடி சுவேதாரண்ய பெருமானை வழிபட்ட பின்பு புதனை வழிபட்டால் குழந்தை பேற்றினை பெறலாம்.
புதன் ஜாதகத்தில் சரியாக அமையாவிட்டால் அறிவுக் குறைபாடும், கல்வியில் மந்தமான நிலையும், நரம்புத் தளர்ச்சியும் ஏற்படலாம். இத்தகைய குறைகளையும் இத்தலத்துக்கு சென்று வழிபட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இங்கே புதபகவான் நிரம்பவும் பெருமை உடையவர். மகிமை வாய்ந்தவர் என்பது கண்கூடு. புத பகவான் வெண்காட்டு ஈசனாரை நோக்கி தவம் செய்து தன் அலிதோஷம் நீங்கி ஒன்பது கிரகங்களில் ஒன்றானார் என்பது வரலாறு. இவர் செய்த தவத்தின் காரணமாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிகாரியானார் என்கிறது அபிதான சிந்தாமணி எனும் நூல்.
புதபகவான் பூஜித்து பேறு பெற்ற ஸ்தலம். இவரை துதித்தால் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகிவிடும்.புதன் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவர்கள் சிறந்த அறிவாளிகளாகவும், பண்டிதர்களாகவும் இருப்பர். செய்யும் தொழில் மேன்மை அடையவும், பேச்சுத்திறன், கணிதம், தர்க்கம், கலை ஆகியவற்றில் சிறப்பு மிக்கவராகவும் விளங்க முடியும். அரசியல் மேன்மை, வைத்தியத்தில் நிபுணத்துவம், இசை, நாட்டியம், பண்மொழிகளில் புலமை புத்திரப்பேறு முதலியவை புதபகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகும்.
உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இங்கே புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். புதனுக்கு பன்னிரண்டு ராசிகளில் மிதுனமும் கன்னியும் சொந்த வீடு. கன்னிராசியை உச்ச வீடாகவும், மிதுனம் நீச வீடாகவும் அமையப்பெற்றவர்.
இங்கே இவருக்குப் பதினேழு தீபம் ஏற்றி, பதினேழு முறை வலம் வந்து புதபகவானை வழிபட்டால் திருமண தோஷம், புத்திரதோஷம் முதலியன நீங்கும். இவருக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து, வெண்காந்தள் மலர் சூட்டி, பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும்.
சூரியனை சுற்றிவரும் முதல் கிரகம் புதனாகும். புதன் சூரியனுக்கு 5 கோடியே 79 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.
24 மணிக்கணக்கில் தன்னைத்தானே ஒரு தரம் சுற்றிக் கொண்டும் 88 நாட்களில் சூரியனை ஒருமுறை சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 9500 மைல், குறுக்களவு 3000 மைல் என்றும் கூறுவர்.
சந்திரன் புதனுடன் திருவெண்காடு அடைந்து சுவேதாரண்யப் பெருமானை வழிபட்டு குருத்துரோகம் செய்த பாவத்தையும், இக்சயதுரோகத்தையும் நீங்கப் பெற்றான்.இத்தலத்தில் புதனுக்கு தனிக்கோவில் இருக்கிறது.
சுவேதாரண்யப் பெருமானை வழிபட்டு புதன் பகவானை தரிசித்தால் கல்வி அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை பெறலாம். கல்விக்கு காரணமாக இவர் விளங்குவதால் வித்யாகாரகன் என்றும் இவரை கூறுவர். வித்தையைத் தரும் இவருடைய சன்னிதி பிரம்மவித்யாம்பிகையின் இடது பாகத்தில் அமைந்திருப்பது பொருத்தமேயாகும்.
மேலும் வித்தைக்கு அதிபதியான பிரம்மனின் சமாதியும் புதன் சன்னதிக்கு தென்பால் அமைந்துள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் கோவிலும், சந்திர தீர்த்தமும் புதன் சந்நிதிக்கு எதிரே அமைந்துள்ளன.
மேலும் அலிக்கிரகமான புதன் ஐந்தாம் இடச்சம்பந்தம் பெறுவதனால் சிலருக்கு குழந்தை பிறக்காது. மேற்படி தோஷம் உள்ளவர்களும் இத்தலத்திற்கு வந்து மூன்று தீர்த்தத்தில் மூழ்கி நீராடி சுவேதாரண்ய பெருமானை வழிபட்ட பின்பு புதனை வழிபட்டால் குழந்தை பேற்றினை பெறலாம்.
புதன் ஜாதகத்தில் சரியாக அமையாவிட்டால் அறிவுக் குறைபாடும், கல்வியில் மந்தமான நிலையும், நரம்புத் தளர்ச்சியும் ஏற்படலாம். இத்தகைய குறைகளையும் இத்தலத்துக்கு சென்று வழிபட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இங்கே புதபகவான் நிரம்பவும் பெருமை உடையவர். மகிமை வாய்ந்தவர் என்பது கண்கூடு. புத பகவான் வெண்காட்டு ஈசனாரை நோக்கி தவம் செய்து தன் அலிதோஷம் நீங்கி ஒன்பது கிரகங்களில் ஒன்றானார் என்பது வரலாறு. இவர் செய்த தவத்தின் காரணமாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிகாரியானார் என்கிறது அபிதான சிந்தாமணி எனும் நூல்.
புதபகவான் பூஜித்து பேறு பெற்ற ஸ்தலம். இவரை துதித்தால் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகிவிடும்.புதன் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவர்கள் சிறந்த அறிவாளிகளாகவும், பண்டிதர்களாகவும் இருப்பர். செய்யும் தொழில் மேன்மை அடையவும், பேச்சுத்திறன், கணிதம், தர்க்கம், கலை ஆகியவற்றில் சிறப்பு மிக்கவராகவும் விளங்க முடியும். அரசியல் மேன்மை, வைத்தியத்தில் நிபுணத்துவம், இசை, நாட்டியம், பண்மொழிகளில் புலமை புத்திரப்பேறு முதலியவை புதபகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகும்.
உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இங்கே புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். புதனுக்கு பன்னிரண்டு ராசிகளில் மிதுனமும் கன்னியும் சொந்த வீடு. கன்னிராசியை உச்ச வீடாகவும், மிதுனம் நீச வீடாகவும் அமையப்பெற்றவர்.
இங்கே இவருக்குப் பதினேழு தீபம் ஏற்றி, பதினேழு முறை வலம் வந்து புதபகவானை வழிபட்டால் திருமண தோஷம், புத்திரதோஷம் முதலியன நீங்கும். இவருக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து, வெண்காந்தள் மலர் சூட்டி, பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார். அவரை உலகமே திரும்பிப் பார்க்கும்.
நவக்கிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார். அவரை உலகமே திரும்பிப் பார்க்கும். எந்த நேரமும் கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும் பேசும் இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.
அரசனுக்கே அறிவுரை கூறி ஆட்சியை வழிபடுத்தும் சக்தியைத் தருவது புதன் கிரகம். ஒருவர் ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த நபரிடம் ஆலோசனைக் கேட்க பலரும் காத்திருப்பார்கள். அந்த நபர் மருத்துவம், ஜோதிடம், இசை, ஆயக்கலைகள், கைகடிகாரம், மோட்டார் தொழில் நுட்ப அறிவு போன்றவற்றில் ஞானம் உடையவராக இருப்பார். புதன் கிரகம் ஒருவருக்கு கவர்ச்சி நிறைந்த கம்பீர தோற்றம் தந்து அவரை வசீகரிக்க வைக்கும். பிறரால் முடியாத வேலைகளைக் கூட புதன் யோகம் பெற்றவர்கள் எளிதாக செய்து விடுவார்கள். கணித சாஸ்திரம், வான சாஸ்திரம், கணினி துறையில் சிறப்புற்று விளங்குவர். நாட்டு வைத்தியம் செய்பவராக இருந்தால், கைராசியானவர் என்று பெயர் எடுப்பார்கள்.
புதன் யோகம் அல்லது உச்சம் பெற்றவர்கள், நவபாஷாணம் மற்றும் ரசவாத கலைகளிலும், யோகா மற்றும் தியான கலைகளிலும் வல்லுனராக இருப்பார்கள். மிகப்பெரிய பல்பொருள் அங்காடிக்கு அதிபதியாகும் வாய்ப்பு புதனால் வரக்கூடியதுதான். நினைத்ததும் கவிபாடும் திறன், இலக்கண இலக்கிய அறிவு போன்றவற்றைத் தருபவரும் புதனே. கோவில்களில் இருக்கும் சிற்ப வேலைபாடுகளுக்குரிய அறிவைத் தருபவரும் புதன் தான். புதன் ஆதிக்கம் பெற்றவர்கள், மேஜிக் மற்றும் வேடிக்கை நிகழ்வு களை நடத்துபவராக இருப்பார்கள். ஒருவர் பல ஆண்டுகளாக பத்திரிகை தொழிலில் முதன்மை பெற்றவராக திகழவும் புதனே காரணமாக உள்ளார்.
அரசனுக்கே அறிவுரை கூறி ஆட்சியை வழிபடுத்தும் சக்தியைத் தருவது புதன் கிரகம். ஒருவர் ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த நபரிடம் ஆலோசனைக் கேட்க பலரும் காத்திருப்பார்கள். அந்த நபர் மருத்துவம், ஜோதிடம், இசை, ஆயக்கலைகள், கைகடிகாரம், மோட்டார் தொழில் நுட்ப அறிவு போன்றவற்றில் ஞானம் உடையவராக இருப்பார். புதன் கிரகம் ஒருவருக்கு கவர்ச்சி நிறைந்த கம்பீர தோற்றம் தந்து அவரை வசீகரிக்க வைக்கும். பிறரால் முடியாத வேலைகளைக் கூட புதன் யோகம் பெற்றவர்கள் எளிதாக செய்து விடுவார்கள். கணித சாஸ்திரம், வான சாஸ்திரம், கணினி துறையில் சிறப்புற்று விளங்குவர். நாட்டு வைத்தியம் செய்பவராக இருந்தால், கைராசியானவர் என்று பெயர் எடுப்பார்கள்.
புதன் யோகம் அல்லது உச்சம் பெற்றவர்கள், நவபாஷாணம் மற்றும் ரசவாத கலைகளிலும், யோகா மற்றும் தியான கலைகளிலும் வல்லுனராக இருப்பார்கள். மிகப்பெரிய பல்பொருள் அங்காடிக்கு அதிபதியாகும் வாய்ப்பு புதனால் வரக்கூடியதுதான். நினைத்ததும் கவிபாடும் திறன், இலக்கண இலக்கிய அறிவு போன்றவற்றைத் தருபவரும் புதனே. கோவில்களில் இருக்கும் சிற்ப வேலைபாடுகளுக்குரிய அறிவைத் தருபவரும் புதன் தான். புதன் ஆதிக்கம் பெற்றவர்கள், மேஜிக் மற்றும் வேடிக்கை நிகழ்வு களை நடத்துபவராக இருப்பார்கள். ஒருவர் பல ஆண்டுகளாக பத்திரிகை தொழிலில் முதன்மை பெற்றவராக திகழவும் புதனே காரணமாக உள்ளார்.
நவக்கிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. புதன் கிரக பாதிப்பால் உண்டாகும் நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.
புதன் கிரக பாதிப்பால் உண்டாகும் நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.
நமது உடலில் தலை முதல் பாதம் கடைசி வரை செல்லும் நரம்புகளுக்கு எல்லாம் ஒட்டு மொத்த அதிபதி புதனே ஆகும். நரம்புகளில் ரத்தம் உறைவதும், ரத்தம் கசிவுகளுக்கும் புதனே காரணமாக உள்ளார். தலைக்கு செல்லும் ரத்தம் குறைந்தாலும், அதிக ரத்தம் சென்றாலும் அதற்கும் புதன் தான் காரணம். வலிப்பு நோய், கை- கால் முடக்கம், மனநிலை பாதிப்பு, திருநங்கையாக மாறுதல் ஏற்பட, தாய் வழி, தாய்மாமன் வழி, பரம்பரை நோய்கள் வருவது போன்றவற்றிற்கு புதனே காரணம் ஆவார். தூசி, மாசுகளால் ஏற்படும் நோய்கள், அலைச்சல்களால் ஏற்படும் நோய்கள், உடலில் வாயு தொல்லையால் தசைப் பிடிப்பு அல்லது நரம்பு இழுத்து பிடிப்பது போன்றவற்றிற்கு புதனே பொறுப்பு.
தனிமையில் சுயஇன்பம் காணும் ஆவலை தூண்டும் கிரகம் புதன் ஆகும். ஓரினச் சேர்க்கைகள் மூலம் உண்டாகும் நோய்கள், பறவைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மூலம் உண்டாகும் நோய்கள், விஷ வாயு தாக்கி கை, கால்கள் செயல் இழப்பு மற்றும் மூளை சாவு, அறிவுக்கும் புத்திக்கும் தெரிந்தே செய்யும் செயல்களால் வரக்கூடிய நோய்கள் அனைத்துக்கும் புதனே காரணமாக திகழ்கிறார்.
ஜாதகத்தில் புதன் தரும் பலன்
* புதன் கிரகம் தனது பகை ராசியான கடகத்தில் நின்று இருந்தால், நரம்பு தளர்வு, பக்கவாதம், முடக்கு வாதம் போன்ற நோய்கள் வரலாம்.
* புதன் நீச்ச ராசியான மீனத்தில் இருந்தால், வாயுத் தொல்லையால் கை கால் பிடிப்பு இருக்கும். ஞாபக சக்தி குறையும். தலை உச்சி பகுதியில் வலி இருக்கும்.
* புதன் பகை கிரகமான சந்திரனுடன் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த நபருக்கு திக்கு வாய் ஏற்பட வாய்ப்புண்டு. காலநிலைக்கு ஏற்றவாறு தொற்று நோய்கள் வரலாம். போதை வஸ்துகளாலும் நோய்கள் வரக்கூடும்.
* புதன் பகை கிரகமான சந்திரனின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகர் உடலில் கெட்ட நீர் சேரும். எந்த நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பதால், புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல நடந்துகொள்வார். அடிக்கடி தலைவலி வரும்.
* புதன், லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், புதன் மறைவைக் குறிப்பதாகும். இதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு நரம்புக்குழாயில் கெட்ட கொழுப்பு அடைப்பு, உடல் சோர்வுகள், மயக்க நிலை, புது வகையான நோய்கள் தென்படும்.
* புதன் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியுடன் இணைந்து, அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த நபரின் புத்தியும் செயலும் கெட்ட வழியில் சென்று நோய்களை தேடிக்கொள்பவர்களாக இருப்பார்கள்.
* புதன் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ ஜாதகருக்கு நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. வாத நோய் உண்டாகும். பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். தலை உச்சியில் நரம்பு முடிச்சில் பாதிப்பு வரக்கூடும்.
* புதனே லக்னத்திற்கு பாவியாக அமைந்து பாதக ஸ்தானத்தில் இருந்தால், ஜாதகருக்கு அடிக்கடி புத்தி தடுமாற்றங்களையும் குழப்பங்களையும் உண்டாக்குவார். சோம்பேறியாக இருப்பதுடன் நோய் நீங்குவதற்காக எந்த முயற்சிகளும் செய்யமாட்டார்.
* புதன் பகை கிரகங்கள் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது பாதாதி பதியுடன் பார்வை இருந்தால் புதிய தொற்று நோய்கள் தாக்கக்கூடும். நோய் விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்வார்கள்.
-ஆர்.சூரியநாராயணமூர்த்தி
நமது உடலில் தலை முதல் பாதம் கடைசி வரை செல்லும் நரம்புகளுக்கு எல்லாம் ஒட்டு மொத்த அதிபதி புதனே ஆகும். நரம்புகளில் ரத்தம் உறைவதும், ரத்தம் கசிவுகளுக்கும் புதனே காரணமாக உள்ளார். தலைக்கு செல்லும் ரத்தம் குறைந்தாலும், அதிக ரத்தம் சென்றாலும் அதற்கும் புதன் தான் காரணம். வலிப்பு நோய், கை- கால் முடக்கம், மனநிலை பாதிப்பு, திருநங்கையாக மாறுதல் ஏற்பட, தாய் வழி, தாய்மாமன் வழி, பரம்பரை நோய்கள் வருவது போன்றவற்றிற்கு புதனே காரணம் ஆவார். தூசி, மாசுகளால் ஏற்படும் நோய்கள், அலைச்சல்களால் ஏற்படும் நோய்கள், உடலில் வாயு தொல்லையால் தசைப் பிடிப்பு அல்லது நரம்பு இழுத்து பிடிப்பது போன்றவற்றிற்கு புதனே பொறுப்பு.
தனிமையில் சுயஇன்பம் காணும் ஆவலை தூண்டும் கிரகம் புதன் ஆகும். ஓரினச் சேர்க்கைகள் மூலம் உண்டாகும் நோய்கள், பறவைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மூலம் உண்டாகும் நோய்கள், விஷ வாயு தாக்கி கை, கால்கள் செயல் இழப்பு மற்றும் மூளை சாவு, அறிவுக்கும் புத்திக்கும் தெரிந்தே செய்யும் செயல்களால் வரக்கூடிய நோய்கள் அனைத்துக்கும் புதனே காரணமாக திகழ்கிறார்.
ஜாதகத்தில் புதன் தரும் பலன்
* புதன் கிரகம் தனது பகை ராசியான கடகத்தில் நின்று இருந்தால், நரம்பு தளர்வு, பக்கவாதம், முடக்கு வாதம் போன்ற நோய்கள் வரலாம்.
* புதன் நீச்ச ராசியான மீனத்தில் இருந்தால், வாயுத் தொல்லையால் கை கால் பிடிப்பு இருக்கும். ஞாபக சக்தி குறையும். தலை உச்சி பகுதியில் வலி இருக்கும்.
* புதன் பகை கிரகமான சந்திரனுடன் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த நபருக்கு திக்கு வாய் ஏற்பட வாய்ப்புண்டு. காலநிலைக்கு ஏற்றவாறு தொற்று நோய்கள் வரலாம். போதை வஸ்துகளாலும் நோய்கள் வரக்கூடும்.
* புதன் பகை கிரகமான சந்திரனின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகர் உடலில் கெட்ட நீர் சேரும். எந்த நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பதால், புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல நடந்துகொள்வார். அடிக்கடி தலைவலி வரும்.
* புதன், லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், புதன் மறைவைக் குறிப்பதாகும். இதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு நரம்புக்குழாயில் கெட்ட கொழுப்பு அடைப்பு, உடல் சோர்வுகள், மயக்க நிலை, புது வகையான நோய்கள் தென்படும்.
* புதன் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியுடன் இணைந்து, அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த நபரின் புத்தியும் செயலும் கெட்ட வழியில் சென்று நோய்களை தேடிக்கொள்பவர்களாக இருப்பார்கள்.
* புதன் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ ஜாதகருக்கு நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. வாத நோய் உண்டாகும். பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். தலை உச்சியில் நரம்பு முடிச்சில் பாதிப்பு வரக்கூடும்.
* புதனே லக்னத்திற்கு பாவியாக அமைந்து பாதக ஸ்தானத்தில் இருந்தால், ஜாதகருக்கு அடிக்கடி புத்தி தடுமாற்றங்களையும் குழப்பங்களையும் உண்டாக்குவார். சோம்பேறியாக இருப்பதுடன் நோய் நீங்குவதற்காக எந்த முயற்சிகளும் செய்யமாட்டார்.
* புதன் பகை கிரகங்கள் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது பாதாதி பதியுடன் பார்வை இருந்தால் புதிய தொற்று நோய்கள் தாக்கக்கூடும். நோய் விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்வார்கள்.
-ஆர்.சூரியநாராயணமூர்த்தி






