search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "diseases"

    • சமந்தா 'மயோசிட்டிஸ்' என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார்.
    • சமந்தா அடிக்கடி சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களோடு உரையாடி வருகிறார்.

    பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.இப்படத்தின் தெலுங்கு மொழிபெயர்ப்பில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு ஹீரோயின் ஆகவும் மாறினார்.

    அதன்பின்னர் விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.

    புஷ்பா படத்திற்கு பிறகு, சமந்தா 'மயோசிட்டிஸ்' என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதில் இருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

    சினிமாவில் இருந்து விலகி அவ்வபோது சிகிச்சை பெற்று வரும் சமந்தா அடிக்கடி சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களோடு உரையாடி வருகிறார்.

    இந்த நிலையில், உடல் ரீதியாக தான் எதிர்கொண்ட சவால்கள் பற்றி அவர் கூறியதாவது:-

    நான் 'குஷி' படத்தை முடித்து விட்டு 'சிட்டாடல்' தொடர் படப்பிடிப்பில் பங்கேற்றேன். இப்படத்தில் மிகவும் உடல் ரீதியானதாக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

    படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருந்தது. அதனால் மிகவும் கடினமாக இருந்தது. ஒரு அதிரடி காட்சி யில் மூளை அதிர்ச்சி ஏற்பட்டு மயக்கம் அடைந்தேன்.

    இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சளி, வைரஸ் ஜுரம் போன்ற நோய்களால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
    • நடமாடும் மருத்துவமனை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர்மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பருத்திச்சேரியில் மழை காலத்தில் ஏற்படும் காய்சல், இருமல் , சளி, வைரஸ் ஜுரம் போன்ற நோய்களால் பொதுமக்கள் அவதியுற்று வந்த நிலையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவமனை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது.

    வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் முத்துகுமாரசாமி மேற்பார்வையில் நடந்த முகாமில்பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தேவையானவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    • மாவட்ட சிறைச்சாலையில் இருந்து வெளிவரும் கழிவு நீர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கி குளம் போல் நிற்கிறது.
    • நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள தால் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கோட்டை குளம் சாலையில் அமைந்துள்ளது மேற்கு வட்டாட்சியர் அலுவலகம். இங்கு கோட்ட கலால் அலுவலகம், உணவு பாதுகாப்பு அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் அலுவலகம், முத்திரைத்தாள் திருத்தல் கட்டண தனி வட்டாட்சியர், உதவி சார் கருவூலம், நில அளவை பிரிவு, இ-சேவை, ஆதார் சேவை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் என 250 க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

    இங்கு நாள்தோறும் பட்டா மாறுதல், வாக்காளர் அட்டை புதுப்பித்தல், புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் மாவட்ட சிறைச்சாலையில் இருந்து வெளிவரும் கழிவு நீர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தேங்கி குளம் போல் நிற்கிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுவ தால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மூக்கை பொத்திக் கொண்டு பணி செய்யும் நிலை ஏற்பட்டு ள்ளது.

    கொசுக்கள் உற்பத்தி மையமாகவும் மற்றும் விஷ ஜந்துக்கள் உறைவிடமாகவும் வட்டாட்சியர் அலுவலகம் மாறியுள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆதார் மற்றும் இ சேவை மையங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள்தோறும் வந்து செல்கி ன்றனர்.

    துர்நாற்றத்தில் பொதுமக்கள் கடந்து செல்லும் அவலம் உள்ளதா கவும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள தால் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் முறையான கழிப்பறை வசதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • 3 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
    • சித்த மருத்துவம் காசநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை யொட்டி தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் வெண்டை யம்பட்டி ஊராட்சி ராயமுண்டான்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    பின்னர் கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறியதாவது:-

    வெண்டையாம்பட்டி ஊராட்சியில் ராயமுன்டான்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கும்பகோணம் தாலுக்கா திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பட்டுக்கோட்டை தாலுக்கா அதிராம்பட்டினம் துர்காசெல்லியம்மன் திருமண மண்டபம் ஆகிய மூன்று இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. இந்த 3 இடங்களில் நடந்த முகாம்களில் 4808 பேர் பயன்பெற்றனர்.

    பொதுவான உடல் பரிசோதனை, பல், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், மகப்பேறு, பொது மருத்துவம், சித்த மருத்துவம் காசநோய் மற்றும் தொழுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இம்முகாமில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவக் கண்காணிப்பாளர் ராமசாமி , மருத்துவ பணிகள் துணை இயக்குனர் கலைவாணி , மாவட்ட திட்ட அலுவலர் விஜய்ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    • நோய்கள் கண்டறியப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் கடந்த வாரம் முதல் அரசின் திட்டங்களின் ஒன்றான "கலைஞரின் வரும்முன் காப்போம்" திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டு, வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் நடப்பாண்டிற்கு 36 மருத்துவ முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

    அதனைத்தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டு, 3 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, நமது மாவட்டத்தில் காரைக்குடி, செஞ்சை பகுதியில் உள்ள ஆலங்குடியார் உயர்நிலைப்பள்ளியிலும், திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள லிம்ரா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்கள் அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு மருத்துவர்களை கொண்டு நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு தனியார் மருத்துவமனைக்கு நிகராக உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யவும், முதல் -அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த முகாம்களில் முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் இது போன்று நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இம்முகாமில் 27 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் சஞ்சீவி பெட்டகங்களையும், 4 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளையும் அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநர் விஜய்சந்திரன், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நோய்களால் 30 சதவீதம் வரை விளைச்சல் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
    • 20 சதவீதம் சாணக் கரைசலை (40 கிலோ ஏக்கருக்கு) பயன்படுத்தி பாக்டீரியா இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

    நீடாமங்கலம்:

    குடவாசல் மற்றும் வலங்கை மான் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    குறுவை சாகுபடிக்கு ஏற்ற ஆடுதுறை 43, ஆடுதுறை 45, கோ 51 /டிபிஎஸ் 5 மற்றும் இதர ரகங்களும் குடவாசல், வலங்கைமான் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

    கோடைமழை கிடைத்தவுடன் நிலத்தை 2 - 3 தடவை உழுதுவிடுவதால், மண்ணில் நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்து பயிருக்குத் தேவைப்படும் நீர்த் தேவையை குறைக்கலாம். கடைசி உழவுக்கு முன்பாக ஒரு ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் அல்லது 2.5 டன் பசுந்தாள் உரத்தை இட்டு மண்ணுடன் நன்கு கலக்குமாறு செய்ய வேண்டும்.

    மேலும், தலா 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து சீராக தூவ வேண்டும்.

    மண் பரிசோதனை செய்து அதன்படி உரமிட வேண்டும். யூரியாவுடன் ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கை 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும்.

    நெற்பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களால் 30 சதவீதம் வரை விளைச்சல் பாதிக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பூச்சி நோய் பாதுகாப்பு முகைளை கடைப்பிடிக்க வேண்டும்.

    தழைச்சத்து உரங்களைப் பிரித்து இடுவது அல்லது இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி தழைச்சத்து உரங்களை இட வேண்டும். அதிக நெருக்கம் இல்லாமலும், பட்டம் விட்டும் நடவு செய்தல் வேண்டும்.

    விளக்குப்பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து அதற்கேற்ப பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலையைத் தாண்டினால் பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை உரிய அளவுகளில் பயன்படுத்த வேண்டும். வேப்பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவீதம் பயன்படுத்த வேண்டும். 20 சதவீதம் சாணக் கரைசலை (40 கிலோ ஏக்கருக்கு) பயன்படுத்தி பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

    10 சதவீதம் நொச்சி அல்லது காட்டாமணக்கு இலைச் சாறை தெளிப்பதனால் நெல் நிறமாற்ற நோயை கட்டுப்படுத்தலாம். 5 சதவீதம் வசம்பு தெளிப்பதால் கதிர்நாவாய்ப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    யாருக்கும் சர்க்கரை சேர்த்த இனிப்புகளை வழங்குவதினைக் காட்டிலும் மாதுளம் பழங்களை வாங்கிக் கொடுப்பது அவர்கள் மீது நீங்கள் காட்டும் உண்மையான அன்பாக வெளிப்படும்.
    மாதுளம் பழம் மிகச் சிறந்த உணவாக அனைவராலும் ஏற்கப்படுகின்றது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி, வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் சக்தி, கட்டிகளை எதிர்க்கும் சக்தி, வைட்டமின் ஏ, சி, ஈ, ஃப்போலிக் ஆசிட் என நிறைந்த சத்துக்கள் கொண்டதால் அநேக நோய்களை எதிர்க்கும் சக்தி கொண்டதாக ஆகிவிடுகின்றது.

    * ரத்தத்தினை சுத்தமாய் வைத்திருக்கின்றது.

    * ரத்த குழாய் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்க்கின்றது.

    * ஆக்ஸிஜன் கூடுதலாகச் கிடைக்கின்றது.

    * கொலஸ்டிரால் அளவினை கட்டுப்படுத்துகின்றது.

    * வீக்கம், மூட்டுக்களில் வீக்கம் இவற்றினைத் தவிர்க்கின்றது.

    * இருதய பாதுகாப்பு.

    * ப்ராஸ்டிரேட் புற்றுநோய் (ஆண்களுக்கு) ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.

    * ஞாபக சக்தியினைக் கூட்டுகின்றது.

    * ரத்தக் கொதிப்பினைக் குறைக்கின்றது.

    * ஜீரண சக்தியினைக் கூட்டுகின்றது.

    இத்தனை உதவிகள் செய்யும் மாதுளம் பழத்தினை இனியாவது உட்கொள்வோம். யாருக்கும் சர்க்கரை சேர்த்த இனிப்புகளை வழங்குவதினைக் காட்டிலும் மாதுளம் பழங்களை வாங்கிக் கொடுப்பது அவர்கள் மீது நீங்கள் காட்டும் உண்மையான அன்பாக வெளிப்படும்.
    இயற்கை மருத்துவத்தில் காந்தத்தை பயன்படுத்தும் போது அது உடலில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த மாற்றத்தால் மிகுந்த பலன் கிடைக்கிறது.









    காந்த சிகிச்சையின் போது.. சிகிச்சைக்கு பயன்படுத்தும் காந்த வடிவங்கள்..







    நாம் வாழும் இந்த பூமி காந்த சக்தி கொண்டது. பூமி, ஒரு மிகப்பெரிய காந்தம் போன்றது. பூமியைப்போன்றே மனிதனுக்குள்ளேயும் காந்த சக்தி உள்ளது. இயற்கை மருத்துவத்தில் காந்தத்தை பயன்படுத்தும் போது அது உடலில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த மாற்றத்தால் மிகுந்த பலன் கிடைக்கிறது.

    காந்தத்தில் வட புலம், தென்புலம் என 2 புலங்கள் இருப்பது நாம் அறிந்தது தான். அந்த இருதுருவ புலங்களை வைத்து இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

    பொதுவாக காந்த புலங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்காது. எடுத்துக்காட்டாக, ஒரு காந்தத்தின் தென் துருவமும், மற்றொரு காந்தத்தின் தென் துருவமும் ஈர்க்காது. விலகிச்செல்லும். அதேபோல் தான் வட துருவமும் செயல்படும். ஆனால் ஒரு காந்தத்தின் தென் துருவமும், மற்றொரு காந்தத்தின் வடதுருவமும் ஒன்றை ஒன்று ஈர்க்கும். அத்தகைய வட, தென் என தனித்தனியே இருக்கும் இருகாந்த துருவ புலங்களுக்கென்று தனித்தனி தன்மைகள் உண்டு.

    வடதுருவ காந்த புலன், உடலின் வெப்பத்தை அதிகரிக்கவும், நோய் தொற்றை குறைக்கவும் உதவுகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. தென்துருவ காந்த புலத்தின் சக்தி உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும். அதுவும் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி கொண்டது. உடலின் வீக்கம், கட்டி போன்றவற்றை குணமாக்க வடதுருவ காந்த புலத்தின் சக்தியை பயன்படுத்தலாம். அதேபோல், தென்துருவ காந்த புலத்தின் சக்தியை கொண்டு காயம், நாள்பட்ட புண்களை ஆற்றலாம்.

    ஒரு கண்ணாடி பாட்டிலில், தண்ணீரை ஊற்றி அதை காந்தத்தின் வடதுருவத்தின் மீது 8 மணி நேரம் வைத்திருந்தால் அந்த பாட்டிலில் உள்ள தண்ணீர் மருத்துவ குணம் பெற்று விடும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த மருத்துவ குணம் நிறைந்த தண்ணீரை குடித்து விட்டு காந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும். காந்தத்தின் தென் துருவத்தின் மீதும் மேற்கூறியதுபோல் செய்து பலன் பெறலாம்.

    இதுதவிர மற்றொரு முறையும் உள்ளது. காந்தத்தின் வடதுருவத்தின் மீது எண்ணெய் நிரப்பிய பாட்டிலை வைக்க வேண்டும். அந்த பாட்டிலின் மீது காந்தத்தின் தென் துருவத்தை வைக்க வேண்டும். அவ்வாறு 8 மணி நேரம் வைத்திருந்தால் அந்த பாட்டிலில் உள்ள எண்ணெய் மருத்துவ குணம் பெற்றுவிடும். அவ்வாறு கிடைக்கப்பெற்ற மருத்துவ எண்ணெய்யை கட்டி, வீக்கங்களில் தடவினால் பலன் கிடைக்கும்.

    காந்த சக்தியை காஷ் (விசை) என்ற அளவீட்டில் நிர்ணயிக்கிறார்கள். 50, 100, 200, 500 காஷ் பவரில் இருந்து சுமார் 2 ஆயிரம் காஷ் பவர் வரை உள்ள காந்தங்கள் கிடைக்கிறது. மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவான வடிவங்களில் காந்தங்கள் வடிவமைக்கப்படுகின்றன. அதனை வாங்கி டாக்டரின் ஆலோசனைப்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

    தற்போது காந்த சிகிச்சை அளிக்க காந்த பெல்ட், காந்த படுக்கை என பல்வேறு நவீன கருவிகள் வந்து விட்டன. அவ்வாறு சிகிச்சை அளிக்க உதவும் காந்தங்கள் பெரியது, நடுத்தரமானது, சிறியது என 3 வடிவங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் அதன் வடிவத்தை பொறுத்து சக்தியை பெற்றிருக்கிறது.



    உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, வயிறு வலி, வயிற்று கோளாறுகள், கழுத்து, கணுக்கால், முழங்கால், தலைவலி என அனைத்து வலிகளுக்கும் காந்த பெல்ட் அணியலாம். காந்த பெல்ட்டை 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை அணிய வேண்டும். காந்த படுக்கையில் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை படுக்கலாம். அவ்வாறு படுத்து ஓய்வு எடுப்பதால் உடல்வலி தீரும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    மின்காந்த அதிர்வுகளை உண்டாக்கும் பெல்ட்டுகளைக்கொண்டு, மின்காந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகைய பெல்ட்டுகள் ஒரு வித அதிர்வுகளை உண்டாக்கும். அதேபோல் இதமான வெப்பத்தை கொடுக்கும். சிகிச்சை பெறும் போது அதனை நன்கு உணரலாம்.

    வயிறு, முதுகுவலி இவற்றுக்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை மின்காந்த பெல்ட்டுகள் அணிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும். இந்த வித சிகிச்சையை பெறும்போது வியர்க்கும். பெல்ட் கட்டிய உடல் பகுதியில் சூடு தெரியும். ஆனால் காந்தங்களை கொண்டு அளிக்கப்படும் சிகிச்சையில் அதிர்வு, இதமான வெப்பம் இவற்றை நாம் உணரமுடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் காந்த மற்றும் மின்காந்த சிகிச்சை பெறலாம்.

    தவிர்க்கவேண்டியவர்கள்

    இதய நோயாளிகள் காந்த சிகிச்சையை தவிர்க்க வேண்டும். அதேபோல் பெண்கள் மாதவிலக்கு காலத்திலும், காய்ச்சல் தாக்கிய நேரத்திலும், கர்ப்பிணிகளும் காந்த சிகிச்சையை தவிர்க்க வேண்டும்.

    புற்றுநோயாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை நரம்பு கோளாறுகள், மூக்கடைப்பு, நீர்கோர்த்தல், தலைவலி, வயிறு கோளாறுகளுக்கு காந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இந்த சிகிச்சையை பெறும்போது கண்டிப்பாக மரத்தினால் ஆன நாற்காலி, மேசை இவற்றின் மீது அமர்ந்து, படுத்துதான் காந்த சிகிச்சை எடுக்க வேண்டும். அப்போது தான் மிகுந்த பலன் கிடைக்கும். அதேபோல் காந்த சிகிச்சை அளிக்க உதவும் உபகரணங்களை கண்டிப்பாக தரையிலோ அல்லது இரும்பாலான மேசையின் மீதோ வைக்கக்கூடாது. அவ்வாறு வைத் தால் அத்தகைய உபகரணங்களின் காந்த சக்தி குறையும். அதனால் அதிக பலன் கிடைக்காது.

    பழமையான சிகிச்சைமுறை

    காந்த சிகிச்சை என்பது பண்டைய காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருகிறது. கி.பி.14-ம் நூற்றாண்டில் சீனா விலும், கி.பி.18-ம் நூற்றாண்டில் எகிப்திலும் காந்த சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் கி.மு. 6-ம் நூற்றாண்டில் இருந்தே சித்தா, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ சிகிச்சைகளுடன் சேர்த்து காந்த சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது என வரலாற்று பதிவுகள் கூறுகிறது. ஆனால் காலப்போக்கில் காந்த சிகிச்சை முறை மறைந்து விட்டது. இப்போது மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது.

    விளக்கம்:

    டாக்டர் கல்யாணி,
    யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு,
    அரசு மருத்துவமனை திண்டுக்கல்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் சாந்தா பேசினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;-

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் டெங்கு நோய் பாதிப்பு உள்ளது என்ற தகவல் கிடைத்தால் உடனடியாக அந்த கிராமத்தில் கொசுக்களை கட்டுப்படுத்த புகை மருந்து அடிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான தடுப்பு மருந்துகளுடன் போதிய முன்னேற்பாடுகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்க கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்யத்தேவையான முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொண்டு, கிராமங்களில் ஆங்காங்கே தேங்கி உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும், அதில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு உலர வைத்த பின்னர்தான் தண்ணீர் ஏற்ற வேண்டும். அனைத்து கிராமங்களிலும் வினியோகிக்கப்படும் குடிநீர் ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் கலந்து தினசரி குளோரினேசன் செய்யப்பட்டு வழங்க வேண்டும். மேலும், 

    பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    இந்திய அளவில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார். #mylswamyannadurai

    ஈரோடு:

    இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் ஆண்டு தோறும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் ஊக்குவிப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருந்து இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 150 மாணவ-மாணவிகளுக்கு ‘இன்ஸ்பையர்’ எனப்படும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் திறன் ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. வருகிற அக்டோபர் 3-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமின் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி ஆறுமுகம், நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் வாய்ப்புகளும், சவால்களும் என்ற தலைப்பில் பேசினார்.

    அடுத்த மாதம் புதுடெல்லியில் ரஷ்ய நாட்டை சேர்ந்த, தேர்ந்து எடுக்கப்பட்ட 20 மாணவ-மாணவிகளுடன் மனித வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, பரீட்சார்த்த முறையில் உங்களோடு கலந்துரையாட இருக்கிறேன்.

    தற்போது தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. போர் தொடர்பான அச்சம் இருந்தாலும், போர்கள் நடைபெறாமல் தவிர்க்கும் நிலை உள்ளது. பசி இருந்தாலும் பட்டினியால் மரணம் என்பது இல்லை. எனவே இந்த 3 முக்கிய காரணிகளும் மனித வாழ்நாளை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

    இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

    விழாவில் அவரது மனைவி வசந்தி அண்ணாதுரை, சென்னை பேராசிரியர் சுரேஷ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் கே.அப்துல் நன்றி கூறினார். #mylswamyannadurai

    முகவாதம் 80 வகையான வாத வியாதிகளுள் ஒன்றாகும். இந்த நோய் வருவதற்கான காரணத்தையும், அறிகுறியையும், செய்ய வேண்டிய சிகிச்சை முறைகளையும் பார்க்கலாம்.
    முகம் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும். பயம், கோபம், துக்கம், மகிழ்ச்சி முதலான மனதின் உணர்வுகளை முகம் காட்டிக் கொடுக்கும். முகத்தின் அசைவுகள், உணர்வுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும், வழிநடத்தும் பொறுப்பு தலையுடையது. தலைதான், மனித உடலின் மிக முக்கியமான உறுப்பாகம்.
    மனிதன் மட்டுமே, முக அசைவுகளின் மூலமும், பேச்சின் மூலமும் பிறருடன் தொடர்பு கொள்ள முடியும். முக அசைவு மற்றும் பேச்சு இரண்டுமோ அல்லது இரண்டில் ஒன்று மட்டுமோ தடைப்படுவது முகவாதம் எனப்படும்.

    முகவாதம் 80 வகையான வாத வியாதிகளுள் ஒன்றாகும். வாத தோஷத்தின் இயல்புநிலை மாறி விடுவதால் வரும் இவ்வியாதியால், உடலின் இயல்பான செயல்பாடுகள் குறைந்து, ஊனம் அடைய நேரலாம். இறப்பு கூட வரலாம். உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை வேறுப்படுத்தும் 5 பொறிகளின் வேலை முடங்குகிறது. சூழலுடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

    ஐம்பொறிகளின் வெளிப்பாடுகள் நிகழ காரணமாக திகழ்வது வாதம், இவற்றின் செயல்பாடுகளில் தடை ஏற்படுவதால் வாதம் இந்திரியங்களை பழுதாக்குவதாக கூட சொல்லப்படும். இந்நோய் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. இன்றைய சூழலில் குளிர்ந்த காற்று, குளிர்ந்த சூழ்நிலையில் அதிகம் இருப்போருக்கு அதிகம் இந்நோய் வருகிறது. இந்நோயை கட்டுப்படுத்த ஒழிக்க இது தகுந்த தருணம் ஆகும்.

    முகத்தின் இடது, வலது பக்கம் கோணலாகி விடுவது முகவாதம். அத்துடன் பாதிக்கப்பட்ட இடத்தில் அசைவு, உணர்ச்சி ஆகியன இயல்புநின்ற மாறிவிடும். இந்நோய், முகத்தின் ஒரு பக்கத்தோடு சேர்ந்து உடலின் பகுதிகளிலும் பாதிப்பு வரலாம். அல்லது வராமலும் இருக்கலாம். ஆயுர்வேத சிகிச்சை மூலம் நிலைப்பாடு மாறிய வாததோஷத்தை சரிப்படுத்தி குணமாக்க முடியும். தும்மலை அடக்குவதால் இந்நோய் வருகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

    மேலும் அதிகநேரம் சத்தமாக பேசுவது, கடினமான, உணவுபொருட்களை மெல்லுவது, அதிகப்படியான சிரிப்பு, தும்மல், கொட்டாவி, தலையில் அதிக சுமை சுமத்தல், தலை மற்றும் கழுத்தை, திடீரென திருப்புவது, தூங்கும் போது சரியான நிலையில் தூங்காமை, தலையணை அதிக உயரமாகவோ, குறைந்த உயரமாகவோ இருத்தல் ஆகிய காரணங்களால் கூட நேரலாம். ரத்தசோகை ஏற்படும்போது இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது. மகளிர் கருவுறும்போதும், குழந்தை பிறப்புக்குபின்னும் இந்நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகள், வயதானவர்கள், உடல் மிகவும் மெலிந்து இருப்பவர்கள் ஆகியோருக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

    நோய் வருமுன் காணப்படும் அறிகுறிகள்


    * பார்வை மங்குதல்
    * தோலில் தொடு உணர்ச்சி குறைதல்
    * கழுத்தில் ஒருவித இறுக்கம்
    * தாடைகளில் இறுக்கம்
    * மயிர்க்கூச்செறிதல் ஆகிய அறிகுறிகள் தென்படும்.

    நோய் அறிகுறிகள்

    * முகம் சரியான கோணத்தில் இருந்து விலகி, ஒருபக்கமாக இழுத்துக் கொள்ளல்
    * தலை நடுக்கம்
    * பற்கள் நடுக்கம்
    * கண்களை சரியாக மூட முடியாமை.
    * மூக்கு கோணல்
    * பேசுவதில் சிரமம்
    * குரலில் கரகரப்பு
    * காது கேளாமை

    * காதில் வலி
    * வாசனையை நுகர முடியாமை
    * உணவை, மென்று விழுங்குவதில் சிரமம்
    * கழுத்து, கன்னம், பல் ஆகியவற்றில் கடும் வலி
    * மறதி, பேசும் போதும, சிரிக்கும் போது வாய் கோணல்
    * தூங்கும் போது ஒரு வித பயம் ஆகிய அறிகுறிகள் தென்படும்.  பெல்பால்சி எனப்படும் கடுமையான முகவாதம் முகத்தின நரம்புகளில் நீர் கோர்த்து, பலூன் போல் உப்புவதால் இந் நோய் ஏற்படுகிறது.

    * வழக்கமாக ஒரு பக்கம் மட்டும் வரும் இவ்வகை வாதம் சில சமயம் இரு பக்கமும் வரும்.
    * காதுக்குள், கன்னத்தில், காதுக்கு பின்புறம் சைனஸ் இடத்தில் வலி இருக்கும்.
    * திடீரென உருவாகும்-
    * முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தும் தசைகளில் வாதம் வரும்.
    * புருவத்தை உயர்த்த முமயாமை, இமைகள் மூடிக் கொள்ளல்.
    * கண்களை மூட முடியாமை
    * சாப்பிடும் போது புரையேறுதல்

    * கண்களை மூட முயலும் போது கண்களின் விழிக் கோளம், மேலும் கீழும் உருளும். இது பெல்ஸ் பினோமினம் எனப்படும்.
    * கண்களில் நீர் வடிந்து கொண்டே இருத்தல்.
    * காதின் நடுப்பகுதியில் ரத்த ஓட்டத்தில், பாதிப்பு ஏற்பட்டால் நாக்கில் சுவை உணர்வு குறைந்து விடும்
    * காதுகளில் இயல்பான சப்தத்துக்கு மாறாக, மிக அதிக தொனியில் இரைச்சல் கேட்கும்.
    * சில சமயம் காது கேளாமை கூட நேரும்.

    நோய் வந்திருப்பவர் பலசாலியாக இருப்பின் நோய் விரைவில் குணமாகும். நோய் வந்தவுடன் சிகிச்சை தரப்படினும், நோய் விரைவில் குணமாகும். நோயாளி பலமில்லாதவராக இருப்பினும் கண்களை மூட முடியாமல் இருந்தாலும், பேச்சில் தடுமாற்றம் இருந்தாலும் நடுக்கம் இருந்தாலும், நோய் வந்து 3 வருடங்கள் ஆகியிருந்தாலும் வாய், கண்கள், மூக்கிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தாலும் அந்த நோயாளியை குணப்படுத்துவது சிரமம்.



    சிகிச்சை முறை

    * தலைக்கு எண்ணெய் தேய்ப்பது.
    * மூக்கில், காதில் மருந்து விடுதல்.
    * பாலில் மருந்து கலந்து, அதைச் சூடுபடுத்தி, வெளிவரும் ஆவியை முகருவது.
    * ‘பத்து’ போடுவது.
    * தலைக்கு மேலே எண்ணெயை நிற்குமாறு செய்வது.
    * புகையை நுகருவது.

    * எண்ணெய் தேய்ப்பது ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
    * அத்துடன், தோஷங்களின் நிலைப்பாட்டைப் பொறுத்து நீர்கோர்த்து, உப்பியிருந்தால் ‘வாந்தி’ வருமாறு செய்வர்.
    * தாகம் மற்றும் எரியும் தன்மை இருந்தால், அட்டைப்பூச்சியை உபயோகித்து அல்லது காயப்படுத்தி, ரத்தம் வெளியேறுமாறு செய்வர்.
    * பாதைகள் அடைப்பட்டிருந்தால், முதலில் அடைப்பை நீக்க சிகிச்சை தரப்படும். பின் வாதத்தைக் குறைக்க, சிகிச்சை தரப்படும்.

    மருந்து முறை:

    * தனதநயானதி கஷாயம்.
    * மஹா ராசநாதி கஷாயம்.
    * மாஷாபலாதி கஷாயம்.
    * ராசன தச மூலாதி குவேதா கஷாயம் ஆகியவை உள்ளே சாப்பிடத் தரப்படலாம்.
    * மாஷா தைலம்.
    * மாஷாதி தைலம்.
    * மாஷா பலாதி தைலம்.

    * கார்ப்ப சயாதி தைலம்.
    * தன்வந்த்ரம் தைலம்.
    * மஹாமாஷா தைலம்.
    * ஹீரபலா தைலம்.
    ஆகியவை வெளிப்புற உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும்.

    சிறப்பு சிகிச்சைகள்:

    * ஸ்ரீரதூமம் எனப்படும் பால் கஷாயத்தின் புகையை நுகர்வது நல்ல பலனைத்தரும். முகத்தில் ‘ஸ்ரீரபலா101 தைலத்தைக் பூசிக்கொண்டு சித்தா முட்டி வேரைப் பாலில் போட்டுக் காய்ச்சி, அதிலிருந்து வரும் புகையை முகத்தில் படுமாறு அரை மணி நேரம் செய்ய வேண்டும்.

    பின், மூக்கில் 2 சொட்டு ‘ஸ்ரீரபலா101’ தைலத்தை விட வேண்டும். இருமல், தும்மல் எல்லாம் வந்து முடிந்தபின், (கழிவு வெளியேறும்) முகத்தை வெந்நீரில் கழுவலாம் அல்லது துடைத்து விடலாம். இதனை, தினம் ஒரே ஒரு முறை காலை அல்லது மாலையில் செய்ய வேண்டும், வெயில் நேரம் ஆகாது. இச்சிகிச்சை மிகுந்த பலன் தருவதாகும். * முகத்திலிருக்கும் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    உணவு முறை:

    * வாதத்தை அதிகரிக்கும் உணவுகளான கொண்டைக் கடலை, நிலக்கடலை, கிழங்கு வகைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
     * எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும்
    * நாட்டுக் காய்கறிகளை உண்பது நல்லது.

    தவிர்க்கும் வழிகள்

    * எளிதில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது.
    * அதிக மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றைத் தவிர்ப்பது
    * பயணத்தின் போதும் பிற சமயங்களிலும் அதிக குளிர்ச்சியான காற்று முகத்தில் படாமல் பாதுகாப்பது.
    * தொடர்ந்து ஏசி அறைகளில் இருப்பதை தவிர்ப்பது.
    * வாதத்தை அதிகரிக்கும் உணவுகளை தொடர்ந்து அதிகம் உண்ணாமல் இருப்பது ஆகியன இந்நோய் வராமல் தடுப்பதற்கான சில வழிமுறைகள் ஆகும்.
    உடனிருப்போரின் பெரும் பங்கு

    இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிலை பாதிக்கப்படும் தாழ்வுணர்ச்சி வந்துவிடும். சமூகத்திலிருந்து விலகி இருக்க நினைப்பர், தனிமை மேலும் மன உலைச்சலை அதிகப்படுத்தும். இதனை உடனிருப்போர் உணர்ந்து நோயாளிக்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் தக்க முறையில் பேசி மன உலைச்சல் தவிர்க்கப்பட வேண்டும்.

    உடல் அளவில் அவர்களது பாதிப்புக்கு உதவுவதற்கு மேலே அவர்களது மன பாதிப்பு நீக்கப்பாடுபடுவது மிக முக்கிமானது. குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது, மருந்து கொடுப்பதில் நேரம் தவறாமை, உணவு கொடுப்பதில் கவனம். வெளிளே அழைத்து போவது, அதிக நேரம் அவர்களுக் காக செலவிடுவது என உடனிருப்போர் பங்கு அதிகமானது மிகவும் முக்கியமானது.

    புணர் வாழ்வு

    நோயின் பாதிப்புக்கு தகுந்தபடி குணப்படுத்தும் காலமும் வேறுபடும்.

    * பாதிப்பு குறைவாக இருந்து உடனே சிகிச்சையை மேற்கொண்டால் நோய் சரியாகலாம். இந்நோயுடன் வேறுபாதிப்புகள் இல்லாமலிருந்தாலும் விரைவில் குணமாகலாம்.

    * பாதிப்பு அதிகமாக இருந்தாலோ சிகிச்சை தொடங்க தாமதம் ஆனாலோ கூட வேறு உடல் பாதிப்புகள் இருந்தாலோ முழுதும் குணமாக காலதாமதம் ஆகும். முழுவதும் குணமாகமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.ஆகவே வந்தபின் குணமடையச் சிரமம் மேற்கொள்வதை விட வராமல் பாதுகாப்பது சிறந்தது.

    -டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)
    உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. சீரகத்தை எந்த முறையில் சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும் என்று பார்க்கலாம்.
    சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

    சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

    அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

    நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

    சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

    மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.



    சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.

    உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

    ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

    திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

    அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

    சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

    சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

    ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். 
    ×