என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழைக்கால நோய்களை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்- கலெக்டர் பேச்சு
Byமாலை மலர்14 Oct 2018 4:06 PM GMT (Updated: 14 Oct 2018 4:06 PM GMT)
பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் சாந்தா பேசினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;-
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் டெங்கு நோய் பாதிப்பு உள்ளது என்ற தகவல் கிடைத்தால் உடனடியாக அந்த கிராமத்தில் கொசுக்களை கட்டுப்படுத்த புகை மருந்து அடிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான தடுப்பு மருந்துகளுடன் போதிய முன்னேற்பாடுகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்க கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்யத்தேவையான முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொண்டு, கிராமங்களில் ஆங்காங்கே தேங்கி உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும், அதில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு உலர வைத்த பின்னர்தான் தண்ணீர் ஏற்ற வேண்டும். அனைத்து கிராமங்களிலும் வினியோகிக்கப்படும் குடிநீர் ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் கலந்து தினசரி குளோரினேசன் செய்யப்பட்டு வழங்க வேண்டும். மேலும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X