search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector santha"

    பெரம்பலூரில் பாராளு மன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாராளு மன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    ஆலோசனை கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சாந்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) மற்றும் பெரம்பலூர் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் முன்னேற்பாடுகள், நகர்புறங்களிலும், கிராமபுறங்களிலும் பொது மற்றும் தனியார் சுவர்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் தற்போது செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், கொடி கம்பங்கள் உள்ளிட்ட வற்றை அகற்றுதல், தேர்தல் விதிமுறைகள் கண் காணித்திடும் பொருட்டும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் கேட்டறிந்தார்.

    மேலும் கலெக்டர் சாந்தா பதற்றமான மற்றும் நெருக்கடியான வாக்குச்சாவடி மையங்களின் விபரம், அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் அமைக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள், வாக்குச் சாவடி மையங்களில், மைய எண்ணை குறியிடுதல், அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியலை சமர்ப்பித்தல், தேர்தல் தொடர்பான மண்டல அளவிலான அலுவலர்களை நியமித்தல் மற்றும் தேர்தல் நாளில் வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்படும் அலுவலர்களை நியமித்தல், அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல் காப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குபதிவு எந்திரங்களின் விபரம் குறித்தும் கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதிவியாளர் (பொது) ராஜராஜன், அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிறித்துவ தேவாலயங்களை சீரமைக்க நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

    தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நடப்பாண்டிற்கு (2018–19) நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு கிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தின் பெயரில் தேவாலயம் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயத்தினை சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டில் இருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். பழமையான தேவாலயங்கள் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு நிதியுதவியாக 10 முதல் 15 வருடங்கள் வரை ரூ.1 லட்சமும், 15 முதல் 20 வருடங்கள் வரை ரூ.2 லட்சமும், 20 வருடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பழமையான தேவாலயங்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது.

    விண்ணப்ப படிவத்தை அனைத்து உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

    மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, அவ்விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொண்டு, கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்து அனுப்பப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் பதிவு மற்றும் உரிம சான்றிதழை ஆன்லைனில் பெறுவது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டமன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

    தமிழ்நாடு உணவுபாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவின்படி, வருகிற 2019 ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல், பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கு இ-பேமெண்ட் வாயிலாக மட்டுமே பெற முடியும். இணையதளத்தின் மூலம் அவரவர் வங்கி கணக்கில் இருந்து அதற்கான தொகை யினை உரிமம் அளிக்கும் அரசு நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

    தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றாலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்களை ஓட்டல்கள் அல்லது உணவு நிறுவனங்களில் பயன்படுத்தினாலும் மற்றும் உணவு பொருட்களில் கலப்படம் இருந்தாலும் 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்-ஆப் மூலம் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கலாம். 24 மணி நேரத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சவுமியாசுந்தரி மற்றும் வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் சாந்தா பேசினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சியில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;-

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் டெங்கு நோய் பாதிப்பு உள்ளது என்ற தகவல் கிடைத்தால் உடனடியாக அந்த கிராமத்தில் கொசுக்களை கட்டுப்படுத்த புகை மருந்து அடிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான தடுப்பு மருந்துகளுடன் போதிய முன்னேற்பாடுகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் சாக்கடைகளில் கழிவுநீர் தேங்காமல் இருக்க கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்யத்தேவையான முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொண்டு, கிராமங்களில் ஆங்காங்கே தேங்கி உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும், அதில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு உலர வைத்த பின்னர்தான் தண்ணீர் ஏற்ற வேண்டும். அனைத்து கிராமங்களிலும் வினியோகிக்கப்படும் குடிநீர் ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் பிளீச்சிங் பவுடர் கலந்து தினசரி குளோரினேசன் செய்யப்பட்டு வழங்க வேண்டும். மேலும், 

    பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை நடக்கிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை 27-ந்தேதி காலை 10.15 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு நேரில் அளிக்கலாம். 

    இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவன செய்யப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

    இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    அரசின் திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசியுள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 
    இதில் பெரம்பலூர் ஒன்றியம், நொச்சியம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அக்கிராமத்தில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. 

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ்வேலை வாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் செயல் படுத்தப்பட்ட  வளர்ச்சிப்பணிகள் குறித்தும், இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பொதுமக்களுடன் விவாதிக்கப்பட்டது. 

    ஊராட்சியில் குடிநீர் வழங்கும் பணி, சுகாதாரம், பால் உற்பத்தி, தெரு விளக்குகள், கழிப்பிட வசதி, விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், நியாய விலைக்கடைகளில் பொருட்கள் இருப்பு, பசுமை வீடுகள் திட்டபயனாளிகள், வீட்டுகட்டும் திட்ட பயனாளிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. 

    கூட்டத்தில் கலெக்டர் சாந்தா கலந்து கொண்டு பேசுகையில், தங்கள் கிராமங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்டவைகளை இது போன்ற கிராம சபை கூட்டங்கள் மூலமாக தீர்மானம் நிறைவேற்றி அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ளலாம். 

    மேலும் கிராமப்புறங்களில் வாழும் பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் அடைவதற்காக, வேலை வாய்ப்பு பெறும் வகையில் பெண்கள் அனைவருக்கும் அரசு வழங்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது மிக முக்கியமாகும். இதன் மூலம் பெண்களை சார்ந்திருக்கும் குடும்பம் பொருளாதார வகையில் முன்னேற்றம் அடையலாம். அரசின் திட்டங்களை முழு மையாக பெண்கள் பயன் படுத்திக் கொண்டு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், ஆர்டிஓ விஸ்வநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் சேகர், முரளிதரன், தாசில்தார் பாரதிவளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என்று கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எரிவாயு உருளைகள் மறு நிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின்மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனப்போக்கு தொடர்பாக வரப்பெறும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்குட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக, எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (18.05.2018) பிற்பகல் 4 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு நுகர்வோர்கள் எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின், மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×