search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Handicapped"

    • மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகர அரசு பஸ்(எண்101)சென்றது. பூந்தமல்லி அருகே கல்லறை தோட்டம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ் கடந்து சென்றபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியை மாநகர பஸ் ஏற்றாமல் சென்றதால் பஸ்நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சமூக ஆர்வலர் ஒருவர் உடனடியாக அந்த மாற்றுதிறனாளியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்த மாநகர பஸ்சை விரட்டி வந்தார். சிறிது தூரத்தில் அந்த பஸ்சை மடக்க நிறுத்தி மாற்றுத்திறனாளியை ஏற்ற மறுத்து வந்தது தொடர்பாக டிரைவர், கண்டக்டரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த பஸ்சில் இருந்த கண்டக்டர் ஆவேசமாக சமூக ஆர்வலரை ஒருமையில் தரக்குறைவாக பேசினார். மேலும் எதுவும் செய்யமுடியாது என்று மிரட்டும் வகையில் கூறினார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மாற்றுத்திறனாளி பின்னர் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.

    கண்டக்டரும், டிரைவரும் வாக்குவாதம் செய்யும் காட்சியை சமூகஆர்வலர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்
    • தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், ஊக்கத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பு போராடிய போது, அவற்றை நிறைவேற்றித் தருவதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

    தங்களது கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் முறையிட அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் பார்வை மாற்றுத் திறனாளிகள் கூறுகின்றனர். தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களுக்கு பணி நியம னங்கள் வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மழைநீர் கால்வாய் பணியில் போதுமான தடுப்புகள் அமைக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
    • போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    திருவொற்றியூரை சேர்ந்தவர்கள் ஸ்ரீதேவி(40), கலைவாணி(30). உறவினர்களான இருவரும் மாற்றுத்திறனாளிகள். நேற்று மாலை அவர்கள் இருவரும் 3 சக்கர மொபட்டில் திருவொற்றியூர் நோக்கி சேர்ந்து சென்று கொண்டு இருந்தனர்.

    மண்ணடி, வடக்கு கடற்கரை ராஜாஜி சாலையில் சென்றபோது அங்கு சாலையோரம் இருந்த சேதம் அடைந்த பாதாள சாக்கடை மூடியின் மீது மொபட் மோதியது. இதில் ஸ்ரீதேவியும், கலைவாணியும் அருகில் நடைபெற்ற மழை நீர் வடிகால் பணிக்கு போடப்பட்டு இருந்த கான்கி ரீட் கம்பி மீது விழுந்தனர்.

    ஸ்ரீதேவிக்கு கை, நெற்றியிலும், கலைவாணிக்கு வயிற்றுப் பகுதியிலும் கம்பி குத்தி பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டுஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சகிச்சை பெற்று வருகிறார்கள். பாதாளசாக்கடை மூடி கடந்த சில நாட்களாக சேதம் அடைந்து உள்ளது. இதனால் அதில் கற்கள் மற்றும் செடிகளை போட்டு வைத்து உள்ளனர். அதன் மீது ஸ்ரீதேவி, கலைவாணி வந்த மொபட் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. மேலும் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணியில் போதுமான தடுப்புகள் அமைக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

    இது குறித்து கொத்தவால் சாவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து நடந்த பின்னர் அந்த இடத்தில் புதிதாக பாதாள சாக்கடை மூடி போடப்பட்டு உள்ளது.

    • மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடந்தது.
    • முகாமில் வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 18 வயது வரையிலான மாற்றுதிறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடந்தது.

    முகாமில் வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர், பேரூராட்சி துணைத் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனசேகர், வாலாஜாபாத் மேற்பார்வையாளர் குணசேகரன், பள்ளி தலைமை ஆசிரியை சொர்ணலட்சுமி, வட்டார கல்வி அலுவலர்கள் நந்தாபாய், அசோக்குமார், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும்
    • 423 மனுக்கள் பெறப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 423 மனுக்கள் பெறப்பட்டது அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68,400 மதிப்பீட்டில் தையல் எந்திரமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,35,400 மதிப்பீட்டில் திறன்பேசியும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36,200 மதிப்பீட்டில் 3 சக்கர மிதிவண்டியும், 12 பயனாளிகளுக்கு புதிரை வண்ணார் சாதிச்சான்றிதழ் என மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். இக்கூட்டத்தில், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா , தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் மாற்றுத்திறனாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • கடன் பிரச்சினையில் இந்த விபரீத சம்பவம் நடந்தது.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே அடசிவயல் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகநாதன் (வயது36). இவர் கட்டுமான பணிக்கு தேவை யான பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு திருப்பத்தூர் சாலையில், ஸ்டேட் பேங்க் வீதி அருகே உள்ள செல்போன் கடை முன்பு நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு நல்லாங்குடியை சேர்ந்த பாண்டி மகன் மணிகண்டன் (30), புதுக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் காளீஸ்வரன் (31) ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாள், அரிவாளால் நாகநாதனை வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் தலை, கைகள் மற்றும் கால் பகுதியில் நாகநாதனுக்கு காயம் ஏற்பட்டது. ரத்த காயத்துடன் கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மணிகண்டன் டாக்சி டிரைவராகவும், காளீஸ்வரன் கடை மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்தி வருவதாகவும் தெரியவந்தது.

    மேலும் காளீஸ்வரனிடம் தொழில் தேவைக்காக நாகநாதன் பல தவணை களில் ரூ.60 ஆயிரம் கடன் பெற்றதும், அதில் ரூ.40 ஆயிரம் திருப்பி கொடுத்த நிலையில் ரூ.20 ஆயிரம் திருப்பிக் கொடுக்க வேண்டியுள்ளதும் தெரியவந்தது. கடன் பிரச்சினை காரணமாக நாகநாதனை அவர்கள் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மற்றும் காளீஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 45 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.
    • சுயதொழில் தொடங்குவதற்கும் தேவையான தொழிற் பயிற்சி, வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கம் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு ரூ38.24 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக ஸ்கூட்டர்களை 45 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி வரை படிப்பதற்கும், சுயதொழில் தொடங்குவதற்கும் தேவை யான தொழிற் பயிற்சி, வங்கிக் கடனுதவி வழங்கப் பட்டு வருகிறது.

    கடுமையாக பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவச் சிகிச்சை திட்டம், பராமரிப்பு நிதியுதவி திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களால் மாற்றுத்திற னாளிகளை பயன்பெற செய்யும் வகையில் தமிழ கத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் மாற்றுத் திறனா ளிகளுக்கெனவே செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    2022-23-ம் நிதி யாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 5,553 மாற்றுத்்திறானளிகளுக்கு ரூ13.58கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பு வனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), லதா அண்ணாத் துரை (மானாமதுரை), சிவ கங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 12-வது ஆண்டாக தமிழகம் முழுவதும் 11 இடங்களில் சுயம்வர நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
    • கூடுதல் தகவல்களுக்கு www.tndfctrust.com எனும் இணையதள முகவரியில் அணுகலாம்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் 11 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழச்சி நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து கடந்த 11 ஆண்டுகளாக திருமணம் நடத்தி வருகிறது. 12-வது ஆண்டாக தமிழகம் முழுவதும் 11 இடங்களில் சுயம்வர நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. சுயம்வரமானது திருவாரூர் (ஜூன் 4), கடலூர் (ஜூன் 18), கோவை (ஜூன் 25), ஈரோடு (ஜூலை 2), விழுப்புரம் (ஜூலை 9), திருவண்ணாமலை (ஜூலை 15), வேலூர் (ஜூலை 23), அரியலூர் (ஜூலை 23), விருதுநகர் (ஆக.5), மதுரை (ஆக.6), சென்னை (ஆக.13) நகரங்களில் நடைபெறவுள்ளது.

    இதில் தேர்வாகும் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு செப்.9-ந் தேதி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து நவ.19-ந் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு www.tndfctrust.com எனும் இணையதள முகவரியில் அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலு வலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது
    • மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலு வலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலு வலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிற னாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 47 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 26 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 19 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 32 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 22 மனுக்களும், இதர மனுக்கள் 147 ஆக மொத்தம் 293 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதார ருக்கு தீர்வு வழங்க வேண்டும்.

    மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலு வலர்களுக்கு உத்தரவிட்டார். குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கடலூர் வட்டத்தை சேர்ந்த 4 மாற்று திறனாளி பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா விற்கான ஆணையை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சையில் நாளை மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் நடை பெறுகிறது.
    • மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பயிற்சி சாதனம், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச் போன்ற உபகரணங்கள் அவர்களின் தகுதிக்கேற்ப தேர்வு செய்து வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தேசிய பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுவனம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்வதற்கான மதிப்பீட்டு முகாம் 4 இடங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி தஞ்சாவூர் மேம்பாலம் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை வீரசோழன் கோசி மணி மண்டப வளாகத்திலும், 27ஆம் தேதி (திங்கள் கிழமை) கும்பகோணம் சாக்கோட்டை இலங்கா நகர் சங்கமம் மகாலிலும், 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பட்டுக்கோட்டை வடசேரி ரோடு த்ரீ ஸ்டார் திருமண மஹாலிலும் நடைபெற உள்ளது.

    சென்னை முட்டுக்காடு தேசிய பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுவனத்தில் இருந்து உபகரணங்கள் தேர்வு செய்வதற்கான குழுக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாம்களில் முடநீக்கு சாதனம், செயற்கைக்கால், மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, ரோலேட்டர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பயிற்சி சாதனம், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச், பிரெய்லி சிலேட், டெய்சி பிளேயர் மற்றும் காதொலிக்கருவி போன்ற உபகரணங்கள் அவர்களின் தகுதிக்கேற்ப தேர்வு செய்து வழங்கப்பட உள்ளது.

    உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்று திறனாளிகள் ஆதார் அட்டை நகல், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், கைபேசி எண், வருமானச் சான்று மற்றும் இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும், முகாம் பற்றிய தகவல்களை என்ற 04362-236791 தொலைபேசி எண்ணிலும் பெறலாம்.

    எனவே, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த உதவி உபகரணங்கள் தேவைப்படும் மனவளர்ச்சி குன்றிய, பார்வை திறன் பாதிக்கப்பட்ட, கால் பாதிக்கப்பட்ட, செவித்திறன் பாதிக்கப்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளும் மதிப்பீட்டு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உதவி உபகரணங்கள் குறித்து பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 233 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
    • மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் செல்போன்களை கலெக்டர் வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டார். கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 233 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளி த்தனர்.

    அதனை அவர் பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவல ர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கண்பார்வை குறைபா டுடைய மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.13,500 வீதம், பத்து மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் செல்போன்களை கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்தர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிக்கு 4 மணி நேரம் முழு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிக்கு 4 மணி நேரம் முழு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும்.

    உசிலம்பட்டி

    மதுரை புறநகர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் சின்ன கருப்பு, ஒன்றிய செயலாளர் சின்னச்சாமி, ஒன்றிய தலைவர் நாகராஜ், ஒன்றிய பொருளாளர் வீரய்யா மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிக்கு 4 மணி நேரம் முழு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யூனியன் ஆணையாளரிடம் மனு கொடுத்தனர். 

    ×