search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக ஸ்கூட்டர்கள்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக ஸ்கூட்டர்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக ஸ்கூட்டர்கள்

    • 45 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.
    • சுயதொழில் தொடங்குவதற்கும் தேவையான தொழிற் பயிற்சி, வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கம் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு ரூ38.24 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக ஸ்கூட்டர்களை 45 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி வரை படிப்பதற்கும், சுயதொழில் தொடங்குவதற்கும் தேவை யான தொழிற் பயிற்சி, வங்கிக் கடனுதவி வழங்கப் பட்டு வருகிறது.

    கடுமையாக பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி களுக்கான மருத்துவச் சிகிச்சை திட்டம், பராமரிப்பு நிதியுதவி திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களால் மாற்றுத்திற னாளிகளை பயன்பெற செய்யும் வகையில் தமிழ கத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் மாற்றுத் திறனா ளிகளுக்கெனவே செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    2022-23-ம் நிதி யாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 5,553 மாற்றுத்்திறானளிகளுக்கு ரூ13.58கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பு வனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை), லதா அண்ணாத் துரை (மானாமதுரை), சிவ கங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×