செயற்கை காலில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்திய மாற்றுத்திறனாளி இளைஞர் கைது

பீகாரில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து பீகாருக்குள் வரும் வாகங்களையே போலீசார் சோதனை செய்தனர்.
Physically-Challenged Man Smuggles Alcohol in His Prosthetic Leg in Bihar
Published on

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. 

அண்மையில் கூட பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 37 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது செயற்கை கால்களுக்குள் மது பாட்டில்களை மறைத்து வைத்து கடத்திய போது போலீசில் பிடிபட்டுள்ள சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பங்கா மாவட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லை பகுதியில் இருந்து பீகாருக்குள் வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வந்தனர். அப்போது மகேஷ்குமார் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்கூட்டியில் அவ்வழியே வந்துள்ளார்.

போலீசாரை பார்தததும் பதட்டப்பட்ட அந்த இளைஞரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அணிந்திருந்த செயற்கை காலில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு ரக மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் அவரின் ஸ்கூட்டியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து மதுபாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தி வந்த மாற்றுத்திறனாளி இளைஞரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com