search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவெண்காடு"

    • இத்திருக்கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.
    • சித்திரை : திருவோணத்தில் நடராசர் அபிஷேகம்.

    நித்திய பூஜைகள்

    இத்திருக்கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

    அவையானவ:

    1. திருப்பள்ளி எழுச்சி காலை மணி 6.00 முதல் 7.00

    2. காலசந்தி காலை மணி 8.30 முதல் 10.00

    2. உச்சிக்காலம் காலை மணி 11.00 முதல் 12.00

    4. சாயரட்சை மாலை மணி 5.30 முதல் 6.30

    5. இரண்டாம் காலம் மாலை மணி 7.30 முதல் 8.30

    6. அர்த்தசாமம் இரவு மணி 8.30 முதல் 9.30

    திருவிழாக்கள்

    திங்கள் தோறும் நடைபெறுவன.

    சித்திரை: திருவோணத்தில் நடராசர் அபிஷேகம்.

    வைகாசி : அமாவாசையில் சிவப்பிரியர் மணி கர்ணிகையில் தீர்த்தமாடுதல், வெள்ளை யானைக்குச் சாப விமோசனம்.

    ஆனி: உத்திரத்தில் நடராசர் அபிஷேகம்.

    ஆடி: பட்டினத்தார் சிவதீட்சை பெறத் திருவெண்காட்டிற்கு வருதல், சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் மணிகர்ணிகையில் தீர்த்தம் கொடுத்தல், சிவபூஜை செய்வித்தல், இரவு இடப வாகனராய்க் காட்சி தருதல். அம்பாளுக்கு ஆடிப்பூர -பத்து நாள் விழா. ஆடி அமாவாசைக்கு சங்கமத்திற்கு சுவாமி எழுந்தருளல்.

    ஆவணி: வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிஷேகம். கோகுலாட்டமி பெருமாள் சேவை. விநாயகர் சதுர்த்தி. ஆவணி மூலம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.

    புரட்டாசி: வளர்பிறை சதுர்த்தசியில் நடராசர் அபிஷேகம். நிறைபணி, தேவேந்திரபூஜை, நவராத்திரி விழா, விசயதசமி அன்று சுவாமி மணிகர்ணிகை ஆற்றின் கரையில் அம்பு போடல், அம்பாளுக்கு இலட்சார்ச்சனை.

    ஐப்பசி: அசுபதியில் அன்னஆபிஷேகம், வளர்பிறை பிரதமை தொடங்கி கந்தசஷ்டி விழா.

    கார்த்திகை: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஸ்ரீ அகோர மூர்த்திக்கு அபிஷேகமும், பூஜையும் நடைபெறும். மூன்றாவது ஞாயிறு அன்று மகாருத்ராபிஷேகமும், விபூதி அலங்காரமும் நடைபெறும். சோமவாரந்தோறும் சுவேதாரண்யேசுவரருக்கு 1008 சங்கா அபிஷேகமும் நடைபெறும். பரணி, கார்த்திகை தீபவிழாக்கள்.

    மார்கழி: தனுர்மாத பூஜை, சதயத்தன்று மாணிக்கவாசகர் விழா, டோலோற்சவம் திருவாதிரையில் நடராசர் தரிசனம் நடைபெறும்.

    தை: சங்கராந்தி, மறுநாள் அம்பாள் கனுகுளிக்க மணிகர்ணிகைக்குப் போதல், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்குச் செல்லுதல். ஐயனாருக்குப் பந்துநாள் விழா. பிடாரிக்குப் பத்துநாள் விழா.

    மாசி: இந்திரப் பெருவிழா, வளர்பிறை துவாதசி புனர்பூசத்தில் கொடியேற்றம்.

    பங்குனி: சுக்லபட்சப் பிரதமையில் அகோரமூர்த்திக்கு இலட்சார்ச்சனை ஆரம்பம், பங்குனி உத்திரத்தில் (பவுர்ணமியில்) பூர்த்தி, மறுதினம் விடையாற்றி.

    • இம்மரபினர் இன்றும் ஆவணி மாதத்தில் இங்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
    • அவ்விருவரும் நோயுள்ள இடத்திற்குச் சென்று திருநீறு வழங்க நோய் மறையும்.

    காணாபத்யம்

    கணபதி வழிபாடு பற்றிய காணாபத்ய சாத்திரங்கள் மயூரேசத்தில் மறைந்து போனபின் சேத்ரபாலபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ சாம்பசிவ சாஸ்திரிகளுக்கு மீண்டும் காணாபத்ய இரகசியங்களை ஸ்ரீ அகோரமூர்த்தியே அருளிச் செய்தார்.

    காணாபத்யர்களின் குரு அகோரமூர்த்தியே.

    முக்குள நயினார்கள்

    முக்குள நயினார்கள் என்னும் சைவ மரபினர் தலையில் விளக்கைச் சுமந்து கொண்டு முக்குளம் மூழ்கி எழுந்த பின்னும் அவ்விளக்குகள் அணையாதிருந்தனவாம்

    இம்மரபினர் இன்றும் ஆவணி மாதத்தில் இங்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    காலரா ஒழித்தது

    இப்பகுதியில் உள்ள மீனவர் வாழும் இடங்களில் காலரா நோய் கடுமையாகப் பரவும் போது அகோரமூர்த்தியும் காளியும் இருவர் மேல் ஆவேசிப்பர்.

    அவ்விருவரும் நோயுள்ள இடத்திற்குச் சென்று திருநீறு வழங்க நோய் மறையும்.

    • இத்தொல்பதியின் தென்மேற்குத் திசையில் எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீ விலங்கு தறித்த விநாயகர்.
    • சேந்தனாரின் மனைவி மக்கள் அதனைப் பட்டினத்தடிகளிடம் சென்று கூறினர்.

    இத்தொல்பதியின் தென்மேற்குத் திசையில் எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீ விலங்கு தறித்த விநாயகர்.

    துறவி பூண்ட பட்டினத்தடிகள் தம் சொத்துக்களை ஊரார் எடுத்துச் செல்லும்படி நிதியறையைத் திறந்துவிடுமாறு தம் கணக்கர் சேந்தனாருக்கு ஆணையிட்டார்.

    அதன்படிச் செய்த சேந்தனாரை, இழந்த பொருட்களுக்குக் கணக்குக் காட்ட வேண்டும் என்று கூறி, அரசன் விலங்கு பூட்டிச் சிறையில் அடைத்தான்.

    சேந்தனாரின் மனைவி மக்கள் அதனைப் பட்டினத்தடிகளிடம் சென்று கூறினர்.

    பட்டினத்தடிகள் வெண்காட்டு இறைவனிடம்,

    "மத்தளைத் தயிருண்டானும் மலர்மிசை மன்னினானும்

    நித்தமும் தேடிக்காணா நிமலனே யமலமுர்த்தி

    செய்தளைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட

    கைத்தளை நீக்கியென் முன் காட்டு வெண் காட்டுளானே"

    என வேண்டினார்.

    சிவபெருமான் கட்டளைப்படி விநாயகர் சேந்தனாரின் விலங்கைத் தறித்து (உடைத்து) அவரைச் சிறையினின்று விடுவித்தார்.

    அதனால் விலங்கு தறித்த விநாயகர் என்னும் பெயர் பெற்றார்.

    இன்றும் பட்டினத்தடிகள் சிவதீட்சைக்காகத் திருவெண்காட்டிற்கு எழுந்தருளும்போது விலங்கு தறித்த விநாயகரை வந்து வணங்கிச் செல்லுகிற விழா நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    • பெரிய நாயகி அம்மை அங்கு தோன்றி ஆளுடைய பிள்ளையை இடுப்பில் கோவிலுக்கு எடுத்து வந்தார்.
    • அங்குள்ள விநாயகரின் பெயர் ஞானசம்பந்த விநாயகர்.

    திருஞான சம்பந்தர் திருவெண்காட்டின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின.

    ஆதலின், இத்தலத்தை மிதித்தற்கஞ்சி "அம்மா" என்று அழைத்தார்.

    அது கேட்டுப் பெரிய நாயகி அம்மை அங்கு தோன்றி ஆளுடைய பிள்ளையை இடுப்பில் கோவிலுக்கு எடுத்து வந்தார்.

    பிள்ளையைத் தம் இடுப்பில் தாங்கிய வடிவில் உள்ள அம்பாளின் சிலை பிரம்ம வித்தியாம்பிகை கோவிலின் மேற்கு உட்பிரகாரத்தில் உள்ளது.

    சம்பந்தர் அம்பாளைக் கூப்பிட்ட இடத்திலுள்ள குளத்தைக் "கூப்பிட்டான் குளம்" என்பர், அது இன்று "கேட்டான் குளம்" என்று வழங்குகிறது.

    அங்குள்ள விநாயகரின் பெயர் ஞானசம்பந்த விநாயகர்.

    • வடவால், கொன்றை, வில்வம் ஆகிய இங்கு தலவிருட்சங்கள்.
    • ருத்ர பாதங்களின் பக்கத்தில் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

    வடவால், கொன்றை, வில்வம் ஆகிய இங்கு தலவிருட்சங்கள்.

    கயிலாயநதன் கல்லால நிழலில் அமர்ந்திருப்பான்.

    சிவபெருமானுக்கு எத்தனையோ தல விருட்சங்கள் இருப்பினும் ஆலமரமே அவனுக்கு மிகவும் ஏற்புடையது என்பதை ஆலமர் செல்வன் என்னும் அவனுடைய பெயரே காட்டும்.

    சிவன் என்னும் பெயரே காணப்படாத சங்க இலக்கியத்தில் ஆலமர் செல்வன் என்னும் பெயர் பயின்று வருகின்றது.

    அத்தகைய அலமரமே இங்குத் தலவிருட்சமாக இருப்பதும் அந்த ஆலமரத்தடியில் சிவபெருமான் வீற்றிருந்தான் எனப் புராணம் சொல்வதும் இவ்வூரின் தொன்மையையும் சிறப்பையும் காட்டும்.

    கயாவில் உள்ளது போன்றே இதுவும் அக்ஷய வடமெனும் அழியாத ஆலமரம்.

    கயையில் விஷ்ணுபாதம் உள்ளது.

    இங்குள்ள ஆலமரத்தடியில் ருத்ரபாதம் உள்ளது.

    ருத்ர பாதங்களின் பக்கத்தில் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

    பிதிர்க்கடன் செய்ய இது மிகவும் உத்தமமான இடம்.

    சிவபெருமானுக்கு உகந்த மலர்களில் கொன்றை மலர் முதலிடம் பெறுவது. கொன்றை வேணியனாகி சிவனுக்கு கொன்றெயே இங்குத் தலவிருட்சமாக உள்ளது.

    வில்வமில்லாத சிவன்கோவில் உண்டா? வில்வ பத்திரமில்லாத சிவபூஜைதான் உண்டா? இங்கு விவ மரமும் தலவிருட்சம், அதனடியில் பிரம்ம சமாதி உள்ளது.

    • “முக்குளம் தன் க்டையானும்” என்றும் “தட மூன்றுடையான்” என்றும் தம் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
    • மக்கள் இத்திருக்குளங்களில் மூழ்கிக் குழந்தைப்பேறு பெறுகின்றனர்.

    திருஞானசம்பந்தர்,

    "பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடும் நினை

    வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்

    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

    தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாந் தீவினையே"

    என்று முக்குளச் சிறப்பைப் பாடுகிறார்.

    மேலும் "முக்குளம் தன் க்டையானும்" என்றும் "தட மூன்றுடையான்" என்றும் தம் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

    மும்மூர்த்தி தீர்த்தம், மூவிலைச் சூலதீர்த்தம், முக்குள தீர்த்தம், அகர முதலான மூவெழுத்துத் தீர்த்தம், தன்ம தீர்த்தம், தானதீர்த்தம் என்னும் பல பெயர்களால் புராணம் இவைகளை அழைக்கிறது.

    மக்கள் இத்திருக்குளங்களில் மூழ்கிக் குழந்தைப்பேறு முதலிய பேறுகளைப் பெறுகின்றனர்.

    இதன் கரைகளில் தென்புலத்தார் வழிபாடும், தான தருமங்களும் செய்து பெரும் புண்ணியம் ஈட்டுகின்றனர்.

    • காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களாலும் தலபுராணம் இத்திருக்குளங்களை அழைக்கிறது.
    • பூம்புகாரில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் இருதடாகங்கள் இருந்தன

    தீர்த்தச் சிறப்பு மிக்கது திருவெண்காட்டுத் தலம் திருக்கோவிலின் உள்ளேயே அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று பெயர்களில் மூன்று திருக்குளங்கள் உள்ளன.

    காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களாலும் தலபுராணம் இத்திருக்குளங்களை அழைக்கிறது.

    உமையின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவன் இங்கு நடனமாடிய போது அவர் சிந்திய மூன்று துளி

    ஆனந்தக் கண்ணீரும் முக்குளங்களாயினவென்றும், பின்னர் அகோரமூர்த்தியின் மூன்று கண்களும் சிந்திய

    நீர்த்துளிகளும், முக்குளத்திலும் முறையே கலந்தனவென்றும் தலபுராணம் கூறும்.

    பூம்புகாரில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் இருதடாகங்கள் இருந்தனவென்றும் அவைகளில்

    மூழ்கிக் காமவேள் கோட்டத்தைக் கைதொழுவார் தம் கணவரைக் கூடுவர் என்றும் தேவந்தி என்பவள் கண்ணகிக்கு கூறுகிறாள்.

    அவள் குறிப்பிடும் சோம, சூரிய குண்டங்கள் திருவெண்காட்டு சோம, சூரிய தீர்த்தங்களாக இருந்திருக்கக் கூடும் என்று சிலர் கூறுவர் என்று டாக்டர் உ.வே.சா. சிலப்பதிகாரத்தில் குறிப்பு வரைந்துள்ளார்.

    • ராசி : மிதுனம், கன்னி
    • வஸ்திரம் : பச்சை நிற ஆடை

    வழிபட உகந்த தினம்:புதன்கிழமை

    ராசி :மிதுனம், கன்னி

    திக்கு :வடகிழக்கு

    அதிதேவதை :விஷ்ணு

    பிரத்யதி தேவதை :நாராயணன்

    நிறம் :வெளிர்பச்சை

    வாகனம்:குதிரை

    புதனுக்குப் விருப்பமானவை

    மானியம்:பச்சைப் பயறு

    மலர்:வெண்காந்தள்

    வஸ்திரம்:பச்சைநிற ஆடை

    ரத்தினம்:மரகதம்

    நிவேதனம்:பாசிப்பருப்புப் பொடி அன்னம்

    சமித்து:நாயுருவி

    உலோகம்:பித்தளை

    • அங்கு யார் சென்றாலும் பெண்ணாக மாறி விடுவார்கள்.
    • அவள்மேல் மையல் கொண்டார் புதன்.

    இளன் என்ற ராஜகுமாரன், காட்டில் வேட்டையாடச் செல்லும்போது, அங்கு சென்றதும் பெண்ணாக மாறி விட்டான்.

    அங்கு யார் சென்றாலும் பெண்ணாக மாறி விடுவார்கள்.

    அதுசமயம் புதன் அங்கு வந்தார். பெண்ணாக மாறிய இளன், 'இளை' என்ற பெயரில் அந்தக் காட்டில் உலவி வந்தான்.

    அவள்மேல் மையல் கொண்டார் புதன்.

    அந்த இளன் என்ற ராஜகுமாரன் பெண்ணாக மாறியது பார்வதி தேவியின் சாபமே.

    புதன், இளையுடன் சேர்ந்து மகிழ்ந்து வாழ்ந்தார்.

    பெண்ணாக மாறிய இளன் வெட்கமுற்று, ஆணாக மாறுவதற்கு அம்பாளை வேண்டித்தவம் இருந்தான்.

    ஒரு மாதம் ஆணாகவும், ஒரு மாதம் பெண்ணாகவும் இருக்க அம்பாள் அருள்புரிந்தாள்.

    புதனுக்கும் இளனுக்கும் 'புரூரவா' என்ற குழந்தை பிறந்தது.

    இரட்டை வாழ்வு வாழும் இளையின் நிலை மாற முனிவர்களை அழைத்து யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தார் புதன்.

    யாகத் தீயில் சிவபெருமான் தோன்றினார்.

    இளையின் வேண்டுகோளின்படி நிரந்தரமாகவே ஆணாக விளங்கும்படி அருள் புரிந்தார்.

    பிறகு இளனாகவே மாறித் தன் நாட்டுக்குச் சென்றான் அந்த ராஜகுமாரன்.

    சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவர் புதன். சகலகலா வல்லவர்.

    மகாஞானி. சுபகிரகர். புலவர்களையும், சிவனடியார்களையும் காத்து அருள்பவர்.

    தன்னை வழிபடுகிறவர்களுக்கு மிகுதியான அறிவைக் கொடுப்பவர்.

    வாக்கு சாதுர்யம் அளிப்பவர். தீய கிரகங்களால் உண்டாகும் பீடைகளை நீக்கும் சக்தி கொண்டவர்.

    புதன் இளம் பச்சை நிறம் உடையவர்.

    சாத்வீக குணம் கொண்டவர்.

    சுகபோஜனம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத் தொழில், வாத நோய், அலி முதலியவற்றிற்கு புதனே காரகன்.

    புதன், வித்யாகாரகர், மாதுலகாரகன், ஸெளம்யன் எனவும் அழைக்கப்படுகிறார்.

    புதன் அத்திரிகோத்திரம், மகதநாட்டினர்.

    கத்தி, கேடயம் வரதக்கரங்கள் கொண்டவர். மஞ்சள் ஆடை, மரகதமணி மாலை பூண்டவர்.

    நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரில், மஞ்சள் நிறக் கொடியின் கீழ் அமர்ந்து மேருவை வலம் வருபவர்.

    திருமாலை வழிபட்டால் இவருக்கு விருப்பமாகும்.

    சூரியனுக்கு வடகிழக்கில் பாண வடிவான மண்டலத்தில் தங்கப் பிரதிமையாக வடக்கு முகமாக வீற்றிருப்பவர்.

    சூரியனிடம் பிரகாசத்தை இழுத்து, செடி கொடிகளைப் பச்சை நிறமாக்கும் தன்மை உடையவர்.

    பச்சை பதார்த்தங்களிடம் பிரியம் உள்ளவர். பச்சைப் பயறு தானமாகக் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார்.

    • இத்தலத்தின் மூன்றாவது சிறந்தமூர்த்தி அகோரமூர்த்தி.
    • அந்தப் பெருங்கோபம் ஒரு வடிவம் பெற்று சிவபெருமான் முன் தோன்றியது.

    இத்தலத்தின் மூன்றாவது சிறந்தமூர்த்தி அகோரமூர்த்தி.

    அப்படிப் பெயர் வந்ததற்குக் காரணம் இதுதான்.

    மருத்துவன் என்னும் அசுரன், தேவர்களை வெறுத்தான்.

    அவர்களைக் கொடுமைப்படுத்தித் துன்புறுத்தினான்.

    தேவர்கள் அவ்வசுரனுக்குப் பயந்து, இறைவன் ஆணைப்படி திருவெண்காட்டில்

    தவசிகள் வேடம் தாங்கி மறைந்து வாழ்ந்து வந்தனர்.

    இதை அறிந்துகொண்ட அசுரன் அவர்களைத் தேடி வந்து போர் தொடுத்தான்.

    அப்போது அவனோடு போர் செய்யும்படி ரிஷபதேவரை ஏவினார் இறைவன் சுவேதாரண்யேசர்.

    போரில் மருத்துவன் தோற்று ஓடி மறைந்தான்.

    பிறகு அவன் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து ஒரு சூலாயுதம் பெற்றான்.

    இந்தத் தலத்திற்கு வந்து அந்தச் சூலாயுதத்தின் உதவியால் ரிஷப தேவரை எதிர்த்துப் போரிட்டு

    அவருடைய கொம்புகளை முறித்தான். அவருடைய காதுகளை அறுத்தான்.

    அவர் ஓடோடிச் சென்று சுவேதாரண்யப் பெருமானிடம் முறையிட்டார்.

    பெருமானுக்குக் கோபம் மூண்டது.

    அந்தப் பெருங்கோபம் ஒரு வடிவம் பெற்று சிவபெருமான் முன் தோன்றியது.

    அவர் மருத்துவாசுரனைச் சம்கரித்து வருமாறு அந்த வடிவத்தை ஏவினார்.

    அந்தக் பெருங்கோபம் தீ நாக்கு போல் சிவந்த கூந்தலுடன் அனல் கக்கும் நெற்றிக் கண்கொண்ட கோர வடிவமாகத் தோன்றியது.

    பிரகாசமான ஆபரணங்களும், கண்ட மாலையும், உடுக்கை, மணி, வாள், சூலம், மண்டையோடு, குறுந்தடி முதலியவற்றைக் கைகளில் தாங்கி அகோர வடிவமாகி, அசுரனை எதிர்க்கச் சென்றது.

    அசுரன் பயந்து நடுங்கி ஒளி உருவாகி அகோரமூர்த்தி வடிவத்துடன் ஐக்கியமாகி விட்டான்.

    அன்று முதல் தேவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அகோரமூர்த்தி, கோவிலின் நடனசபையின் வடமேற்குப் பகுதியில் எழுந்தருளி இருக்கிறார்.

    ஞாயிறு தோறும் இம்மூர்த்திக்கு இரண்டாம் காலத்தில் அபிஷேக ஆராதனை 'அகோரபூஜை'யாக நடைபெறுகிறது.

    இத்தலத்து இறைவனை ஐராவதம் என்னும் வெள்ளையானை பூசித்துப் பேறு பெற்றது.

    இத்தலத்திற்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு, திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்கள் உள்ளன.

    • திருவெண்காடு ஆலயம் சீர்காழிக்கு மிக அருகில் உள்ளது.
    • வைத்தீஸ்வரன் கோவிலில் கூடுதல் வசதிகளுடன் தங்குவதற்கு உயர்ரக தங்கும் விடுதி இருக்கிறது.

    திருவெண்காடு ஆலயம் சீர்காழிக்கு மிக அருகில் உள்ளது.

    வெளியூர்களில் திருவெண்காடுக்கு செல்ல விரும்புபவர்கள் சீர்காழியை சென்றடைய

    தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பஸ், ரெயில் வசதிகள் உள்ளன.

    சீர்காழியில் பக்தர்கள் தங்கி செல்வதற்கு உரிய லாட்ஜ் வசதிகள் உள்ளன.

    அங்கு தங்குவதற்கு விருப்பம் இல்லாதவர்கள் அருகில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லலாம்.

    வைத்தீஸ்வரன் கோவிலில் கூடுதல் வசதிகளுடன் தங்குவதற்கு உயர்ரக தங்கும் விடுதி இருக்கிறது.

    அங்கு அறைகள் கிடைக்காதபட்சத்தில் மயிலாடுதுறைக்கு செல்லலாம்.

    மயிலாடுதுறையில் நிறைய லாட்ஜ் வசதிகள் இருக்கின்றன.

    உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப அங்கு தங்கும் விடுதிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

    மயிலாடுதுறையில் தங்குவதில் மற்றொரு பலனும் இருக்கிறது.

    அங்கிருந்து திருவெண்காடு தலத்துக்கு மட்டுமல்ல மற்ற பாடல் பெற்ற தலங்களுக்கும் மிக எளிதாக சென்று வரலாம்.

    சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் நகர்ப்பேருந்து எண்கள் 5, 5பி, 5சி.

    சீர்காழியிலிருந்து பொறையாறு செல்லும் ஒரு பேருந்தும் இவ்வூர் வழியாகச் செல்கிறது.

    மயிலாடுதுறையிலிருந்து நாங்கூர் செல்லும் பேருந்து எண். 28, மங்கைமடம் செல்லும் பேருந்து எண்.12, பெருந்தோட்டம் செல்லும் பேருந்து எண்.34 (ஆனந்த்) ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் திருவெண்காட்டின் வழியாகச் செல்கின்றன.

    நாகையிலிருந்து வருவோர் கருவி முக்கூட்டில் இறங்கி திருவெண்காட்டிற்கு வரும் பேருந்தில் வரவேண்டும்.

    பூம்புகார் மேலையூரில் இறங்குவோர் திருவெண்காடு வழியாகச் செல்லும் பேருந்துகளில் வரலாம்.

    சென்னையில் இருந்து செல்ல விரும்புபவர்கள் சீர்காழி சென்றடைய ஏராளமான அரசுப் பேருந்துகள் உள்ளது.

    சீர்காழியில் இறங்கி அங்கிருந்து வாடகை கார் பிடித்து சென்று வரலாம்.

    சென்னையில் இருந்து காரில் செல்லும் வசதி உடையவர்கள் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் கடந்து சீர்காழியை அடையலாம்.

    காரில் செல்பவர்கள் சீர்காழி நகருக்குள் செல்வதை தவிர்ப்பது நல்லது.

    நாகை காரைக்கால் பைபாஸ் சாலையில் சென்று திருவெண்காடுக்கு எளிதில் செல்லலாம்.

    பஸ்சில் செல்பவர்கள் திட்டமிட்டு பயணத்தை அமைத்து கொள்ள வேண்டும்.

    சென்னையில் இருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டால் 11 மணிக்கெல்லாம் சென்று சேர்ந்து விடலாம்.

    மதியம் 1 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    அதற்குள் வழிபாடுகளை முடித்து விட்டு, மதியம் ஆலயத்தில் சற்று ஓய்வு எடுத்து விட்டு பிற்பகலில் புறப்பட்டால் இரவில் சென்னை வந்து சேர்ந்து விடலாம்.

    ஆனால் பயணத்துக்கான திட்டமிடல் சரியாக இருத்தல் வேண்டும்.

    • இதில் திருவெண்காடு தலம் காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.
    • இத்திருத்தலம் நாகை மாவட்டத்தில், சீர்காழி வட்டத்தில் இருக்கிறது.

    உலகத்திலுள்ள உயிர்கள் தம்மை வழிபட்டு உய்யும் பொருட்டு இறைவன் திருமேனி தாங்கித் திருக்கோவில் கொண்டு

    எழுந்தருளி இருக்கும் திருத்தலங்கள் பல உள்ளன.

    அவற்றுள் திருப்பதிகம் பெற்றவை மிகச் சிறந்தவை.

    அவைகளைப் பாடல் பெற்ற பதிகள் என சொல்வார்கள்.

    சோழ நாடு, ஈழ நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, கொங்கு நாடு, நடு நாடு, தொண்டை நாடு,

    துளுவ நாடு, வடநாடு என நாட்டு வகையாக அத்தலங்களை நம் முன்னோர்கள் பிரித்திருக்கின்றனர்.

    அதிலும் சோழ நாட்டை இரு பகுதிகளாக வகுத்துள்ளனர்.

    அவை காவிரியாற்றுக்கு வடகரையில் 63, தென்கரையில் 127 திகழும் தலங்களாகும்.

    இதில் திருவெண்காடு தலம் காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.

    இத்திருத்தலம் நாகை மாவட்டத்தில், சீர்காழி வட்டத்தில் இருக்கிறது.

    மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

    திருவெண்காட்டிற்கு தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் காவிரியாறும், வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் மணிகர்ணிகை என்னும் மண்ணியாறும் ஓடுகின்றன.

    திருச்சாய்காடு (சாயாவனம்), காவிரி பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம், திருவலம்புரம், கீழைத் திருக்காட்டுப்பள்ளி, திருக்கலிக்காமூர் முதலிய தலங்கள் திருவெண்காட்டை சூழ்ந்துள்ளன.

    திருநாங்கூர், திருவாலி, திருநகரி என்ற வைணவப் பதிகளும் இதன் அருகே இருக்கின்றன.

    ×