search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருடசேவை"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை நடப்பது வழக்கம்.
    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவு கார்த்திகை மாதத்தையொட்டி கருடசேவை நடந்தது. கோவிலில் இருந்து ஊழியர்கள் உற்சவர் மலையப்பசாமியை வாகன மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு உற்சவரை தங்கக் கருட வாகனத்தில் வைத்து சிறப்பு அலங்காரம் செய்தனர். அலங்காரம் முடிந்ததும் சிறப்புப்பூஜைகள் செய்து வாகனச் சேவை தொடங்கியது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏலுகுண்டல வாடா.. வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா.. என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.

    திருவெண்காடு:

    திருவெண்காடு அருகே நாங்கூர் கீழச்சாலையில் மாதவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.

    இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோவில் ஆதீன கர்த்தர் சீனிவாசா பட்டாச்சாரியார், அடியார்கள் திருகூட்டத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பண்ருட்டி காந்தி ரோடு வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி நடந்தது.
    • உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு 108மூலிகைதிரவியங்களில்சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து இன்று காலை சிறப்பு மலர் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஆலயத்தின் முன்பு உதய கருட சேவை நடைபெற்றது.

    கடலூர்:

    பண்ருட்டி காந்தி ரோடு வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கருட சேவை இன்று காலை நடந்தது இதனை முன்னிட்டு நேற்று மாலை உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு 108மூலிகைதிரவியங்களில்சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து இன்று காலை சிறப்பு மலர் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஆலயத்தின் முன்பு உதய கருட சேவை நடைபெற்றது.

    பின்னர் மாடவீதி வீதி உலா நடைபெற்றது மாடவீதியில் பொதுமக்கள் திரண்டு இருந்து கருட சேவையை கண்டு களித்து பெருமாளை உற்சாகமாக வரவேற்றனர். வழிநெடுகவீடுவீடாகபக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள்வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வைகாசி மாத பவுர்ணமி கருடசேவை உற்சவதாரர் எஸ்விஜுவல்லர்ஸ் அதிபர்கள் பி.எஸ்.வைரக்கண்ணு, எஸ்.வி.அருள், ஏ.சண்முநிஷாந்த் ஆகியோர் செய்தனர்.

    ×