search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கருடசேவை வழிபாடு
    X

    கருடசேவை வழிபாடு

    • விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் “பெரிய திருவடி” என்று அழைக்கப்படுகிறார்.
    • கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன்.

    மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் "பெரிய திருவடி" என்று அழைக்கப்படுகிறார்.

    இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.

    ஒரு காலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களை தாங்குவதற்காக நீட்டியிருப்பார்.

    இரு புறமும் பெரிய இறக்கைகள் இருக்கும்.

    பெருமாள் கோவில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம் பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது.

    பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, "வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்" என்று வரமளித்தார்.

    கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன்.

    வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.

    கோவிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

    Next Story
    ×