search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருக்கண்ணபுரம் சவுரி ராஜபெருமாள் கோவில் கருடசேவை
    X

    திருக்கண்ணபுரம் சவுரி ராஜபெருமாள் கோவில் கருடசேவை

    • 108 திவ்யதேச திருத்தலங்களில் 17-வது தலம்.
    • மறுபிறவியின்றி வீடு பேறளிக்கும் பெருமாளாக வழிபடப்படுகின்றார்.

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரி ராஜபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வைணவத்தலங்களில் திவ்யதேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. காளமேகப்புலவர் ஒரு நயமான பாடலை பாடியிருக்கிறார்.

    ``கண்ணபுரமருவே கடவுனினும் நீயதிகம்

    உன்னிலுமோ நான் அதிகம் ஒன்று கேள் – முன்னமே

    உன் பிறப்போ பத்தாம் உயர் சிவனுக் கொன்றுமாம்

    என் பிறப்போ எண்ணத் தொலையாது''

    இத்திருத்தலத்துப் பெருமாள் மறுபிறவியின்றி வீடு பேறளிக்கும் பெருமாளாக வழிபடப்படுகின்றார். இந்த கண்ணபுரத்தானைப் பெரியாழ்வார், குலசேகரர், மங்கை மன்னன், நம்மாழ்வார் நால்வரும் மங்களா சாசனம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து பாடிய பாடல்கள் 128 என்றால், அதில் 104 பாடல்கள் திருமங்கை மன்னன் பாடியவை. கலியனான திருமங்கை மன்னனுக்கு இக்கண்ணபுரத்து அம்மானிடம் உள்ள ஈடுபாடு எழுத்தில் அடங்காது. மாசிமக விழாவில் இன்று கருடசேவை.

    Next Story
    ×