search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garudaseva"

    • 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • கருட வாகன வீதிஉலா மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று அதிகாலை மூலவரை துயிலெழுப்பி சுப்ரபாதம், கொலு, பஞ்சாங்க சிரவணம், மாலை அங்குரார்ப்பணம் நடந்தது.

    மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புண்யாஹவச்சனம், மிருதங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்ததும், சிறப்புப்பூஜைகள் செய்து புற்று மண் எடுத்து வந்து முளைப்பாரிக்காக விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளர் செங்கல்ராயுலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8.40 மணியில் இருந்து 9 மணிக்குள் மீன லக்னத்தில் பாரம்பரிய முறைப்படி பிரம்மோற்சவ விழா `கருட' கொடியேற்றம் நடக்கிறது.

    முன்னதாக இன்று காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது. வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், மீண்டும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் நடக்கிறது.

    வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழாவின் `சிகர' நிகழ்ச்சியாக கருடவாகன வீதிஉலா (கருட சேவை) மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

     விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்காக கோவில் புஷ்கரணி சுத்தம் செய்து தூய புனிதநீர் நிரப்பப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை நடப்பது வழக்கம்.
    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவு கார்த்திகை மாதத்தையொட்டி கருடசேவை நடந்தது. கோவிலில் இருந்து ஊழியர்கள் உற்சவர் மலையப்பசாமியை வாகன மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு உற்சவரை தங்கக் கருட வாகனத்தில் வைத்து சிறப்பு அலங்காரம் செய்தனர். அலங்காரம் முடிந்ததும் சிறப்புப்பூஜைகள் செய்து வாகனச் சேவை தொடங்கியது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏலுகுண்டல வாடா.. வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா.. என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    • பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.

    திருவெண்காடு:

    திருவெண்காடு அருகே நாங்கூர் கீழச்சாலையில் மாதவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.

    இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோவில் ஆதீன கர்த்தர் சீனிவாசா பட்டாச்சாரியார், அடியார்கள் திருகூட்டத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றம் நடந்தது.
    • இரவு 7 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி,மதுரகவி ஆழ்வார் மாட வீதி, ரதவீதி புறப்பாடு நடந்தது.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி தலங்களில் 8-வது தலமான திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றம் நடந்தது. நேற்று 5-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 7.30 மணிக்கு திருமஞ்சனம். 8 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி மாடவீதி புறப்பாடு நடந்தது. 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஹோமம், பூர்ணாகுதி திருவாராதனம், சாத்துமுறை நடந்தது. பின்னர் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    மாலை 5 மணிக்கு சாயரட்சை, 5.30 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வார் இருவரும் வாகன குறட்டிற்கு வந்து அலங்காரம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்னவாகனத்திலும் மாட வீதி, ரதவீதி புறப்பாடு நடந்தது.

    நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரகு, பாலாஜி, சீனிவாசன், சுந்தரம், ஸ்தலத்தார் திருவாய்மொழி பிள்ளை ஸ்ரீதரன் ஸ்வாமி சடகோபன் ஸ்வாமி, ஆத்தான் கீழத்திருமாளிகை சுவாமி, ராமானுஜன், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவில் மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 108 திவ்யதேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது
    • அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ண புரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    திருவரங்கம் மேலை வீடு எனவும், திருவேங்கடம் வடக்கு வீடு எனவும், திருமாலிருஞ்சோலை தெற்கு வீடு எனவும், திருக்கண்ணபுரம் கீழை வீடு எனவும் போற்றப்ப டுகிறது.

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவதுவழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருட சேவையும், சவுரிராஜ பெருமாள் ஓலை சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நேற்று முதல் நாள் இரவு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை யொட்டி, வருகிற 2-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 3-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • சித்ரா பௌர்ணமியையொட்டி கருட சேவை வீதி உலா நடைபெற்றது
    • திருவீதி உலா வெளிபிரகாலத்தில் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம்

    மண்ணச்சநல்லூர்,

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருச்சிக்கு அருகில் துறையூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.108 வைணவத் திருத்தலங்களில் நான்காவது திவ்ய தேசமான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று கருட சேவை திருவீதி உலா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கருடசேவையைத் தரிசிப்பது பாவம் போக்கும், நாக தோஷம் போக்கும் என்பது ஐதீகம். மேலும் திருமணமான பெண்கள் கருட பஞ்சமி நாளில் கருடனை தரிசித்து பூஜை செய்தால் பிறக்கும் குழந்தைகள் அறிவும், வீரமும் உடையவர்களாக விளங்குவர் என்று நம்பப்படுகிறது.இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி நாளல் மாலை கருடசேவை திருவீதிஉலா நடைபெறும் கோவில் வெளிப்பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆனால் மழை பெய்யும் என்ற காரணத்தால் கோயில் உட்பிரகாரத்தில் மட்டுமே கருடசேவை நடைபெற்றது. இதனால் கருடசேவை வெளிப்பிரகாரத்தில் திருவீதிஉலா நடைபெறாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    • இவர்களுக்கு நேரே தனி பந்தலில் ஆஞ்சநேயர் எழுந்தருளி எதிர்சேவை சாதித்தார்.
    • ஒரே நேரத்தில் 14 பெருமாள் மற்றும் ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சுவாமிமலை:

    ஆண்டுதோறும் சித்திரை மாத வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 14 வைணவ கோவில்களிலிருந்து 14 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள்கள் புறப்பட்டு ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

    14 கருட சேவை நிகழ்ச்சி

    அதேபோல், இந்த ஆண்டு கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரிய தெருவில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் 14 கருட சேவை நிகழ்ச்சி இன்று மதியம் நடந்தது.

    இதில் சாரங்கபாணி, சக்ரபாணி, ஆதிவராக பெருமாள், ராமசாமி, ராஜகோபாலசாமி, அகோபில மடம் லட்சுமி நரசிம்ம பெருமாள், சீனிவாசப்பெருமாள், கொட்டையூர் நவநீதகிருஷ்ணன், வேணுகோபாலசாமி, பட்டாச்சாரியார் தெரு நவநீதகி ருஷ்ணன், சோலைப்பன்தெரு ராமசாமி, மேலக்காவேரி வரதராஜபெருமாள், பிர்மன்கோவில் வேதநாராயண பெருமாள், பிர்மன்கோவில் வரதராஜ பெருமாள் என 14 கோவில்களில் இருந்து உற்சவ பெருமாள்கள் தனித்தனி கருட வாகனங்களில் ஒருசேர ஒரே இடத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    மகா தீபாராதனை

    இவர்களுக்கு நேரே தனி பந்தலில் ஆஞ்சநேயர் எழுந்தருளி எதிர்சேவை சாதித்தார்.

    பெருமாள்கள் கருட வாகனத்தில்எழுந்த ருளியவுடன், திருமங்கை யாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளி மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஒரே நேரத்தில் 14 பெருமாள் மற்றும் ஆஞ்சநேயருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    இதனை காண கும்பகோணம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ தேவி பூதேவி நீளாதேவி ஆதி நாயகி குருகூர் நாயகி சமேதராக சீனக் குறட்டில் எழுந்தருளினார்.
    • அண்ணாவியார் பாலாஜி கைசிக ஏகாதசி புராணம் ஆன நம்பாடுவான் கதையை படித்தார்

    தென்திருப்பேரை:

    நவதருப்பதிகளில் ஒன்பதாம் திருப்பதி ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆகும். இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கருடசேவை நடந்தது.

    ஏகாதசியை முன்னிட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், திருவாராதனம், பின்னர் சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ தேவி பூதேவி நீளாதேவி ஆதி நாயகி குருகூர் நாயகி சமேதராக சீனக் குறட்டில் எழுந்தருளினார்.

    இடது மண்டபத்தில் நம்மாழ்வார் தொடர்ந்து கூரத்தாழ்வார். ராமானுஜர். தேசிகர். மணவாளமாமுனி மற்றும் ஆழ்வாராதிகள். எழுந்தருளினர். மதுரகவி பரம்பரையின் அண்ணாவியார் பாலாஜி சுவாமியை அரிவாணம் கொண்டு அழைத்து வந்தனர்.

    சுவாமி முன்னிலையில் அண்ணாவியார் பாலாஜி கைசிக ஏகாதசி புராணம் ஆன நம்பாடுவான் கதையை படித்தார். பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    நம்மாழ்வார் தனது சன்னதி வந்தவுடன் அண்ணாவியார் சுவாமியை அவரது திரு மாளிகைக்கு பிரம்ம ரதத்தில் கொண்டு விடுவர அருளிப்பாடு சாதிப்பார். உடன் கோவில் ஸ்ரீ பாதம் தாங்கிகள் அவரை அவரது திரு மாளிகையில் கொண்டு விட்டனர். இரவு 7.30 மணிக்கு பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் மாட வீதி புறப்பாடு நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, முன்னாள் அறங்காவலர் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.
    • புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதயகருட சேவை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு உதயகருட சேவை நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி பெருமாள் அலங்கரிக்கப் பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி பவளக்கால் சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    இதைதொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதில் கோவில் செயல் அலுவலர் பரமானந்தம், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×