என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி பிரம்மோற்சவம்"

    • பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று ஏழுமலையான் கல்ப விருட்ச வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று காலை ஏழுமலையான் கல்ப விருட்ச வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடைபெற உள்ளது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை பைக்குகள் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அலிபிரி சோதனை சாவடி, கருடா சந்திப்பு, அரசு பள்ளி மைதானங்களில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களது வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே கியூ ஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது.

    கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் வாகனங்கள் எந்த வழியாக சென்று வாகன நிறுத்தங்களை அடையாளம் என தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் முடிந்த அளவு அரசு பஸ்களில் திருப்பதி மலைக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதிநவீன டிரோன் கேமராக்கள் மூலமும் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இஸ்ரோவுடன் இணைந்து மேக் எ கால் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது. பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் மாநில போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கூடுதலாக 300 போலீசார் வரைய வைக்கப்பட்டுள்ளனர்.

    அவசர உதவி தேவைப்படும் பக்தர்கள் போலீசாரையோ அல்லது தேவஸ்தான அதிகாரிகளையோ தொடர்பு கொள்ளலாம்.

    முடியாத பட்சத்தில் 112 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம், தமிழகத்துடனும் தொடர்புடையது.
    • கருட வாகனத்திற்கு 11 வெண் பட்டுக்குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம், தமிழகத்துடனும் தொடர்புடையது. ஆம்... விழாவில் 5-ம் நாளன்று நடைபெறும் மோகினி அலங்கார சேவையும், கருடசேவையும் மிக பிரசித்தி பெற்றது. அன்று காலை மலையப்பசாமி, மோகினி அலங்காரத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் கிளி அணிவிக்கப்பட்டு, வண்ணமயமான வஸ்திரங்கள் அணிந்து, மலர்கள் சூடி, ஜொலிக்கும் நகைகள் அணிந்து மைசூரு மகாராணி அளித்த பல்லக்கில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    கருடசேவையின்போது, தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் துளசி மாலை மூலவருக்கு (ஏழுமலையான்) அணிவிக்கப்படும். இந்த மாலையுடன் மூலவிக்ரகமூர்த்தி அணிந்திருக்கும் தங்க சங்கிலி மகரகண்டி, லட்சுமிஹாரம் போன்ற நகைகளை கருடசேவையின் போது மட்டும் உற்சவ மூர்த்தியான மலையப்பசாமிக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    இதேபோல, கருட வாகனத்திற்கு 11 வெண் பட்டுக்குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது. இக்குடைகள் சென்னையில் இருந்து திருமலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அந்த திருக்குடைகள் ஏழுமலையானுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

    மோகினி அலங்காரமும், கருடசேவையும் வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது.

    • பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.
    • 5-வது நாள் காலை மோகினி அவதார உற்சவம்.

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும்.

    சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் 'லவுகீக' முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.

    பிரம்மோற்சவ விழாவின் முதல் நாள்: மாலை 6 மணிக்கு வேதகோஷங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்படும். இரவு பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.

    2-வது நாள்: காலை- சின்ன சேஷவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளுவார். இரவு- அம்ஸ (அன்னப்பறவை) வாகனத்தில் வெண்பட்டு அணிந்து, கைகளில் வீணையேந்தி பவனி வருவார்.

    3-வது நாள்: காலை- பொன்மயமான சிம்மவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி உலா வருவார். இரவு- முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி உலா வருவார்.

    4-வது நாள்: காலை- கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா. இரவு- சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி வலம் வருவார்.

    மோகினி அவதாரம்-கருட சேவை

    5-வது நாள்: காலை மோகினி அவதார உற்சவம். அப்போது பெருமாள், அழகிய மங்கை வேடமேற்று உலா வருவார். இரவு கருடசேவை நடைபெறும். அப்போது ஏழுமலையான் கருட வாகனத்தில் அமர்ந்து மாடவீதிகளில் வீதிஉலா வருவார்.

    6-வது நாள்: காலை- 'சிறிய திருவடி' என போற்றப்படும் அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி, பச்சை பட்டாடை அணிந்து, தங்ககிரீடம் சூடி, கையில் வில்லேந்திய ராமப்பிரானாக வலம் வருகிறார். மாலை- தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி மாட வீதிகளில் உலா வருகிறார். இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.

    7-வது நாள்: காலை- ஏழு குதிரைகள் இழுக்க தங்கமயமாக ஜொலிக்கும் சூரியபிரபை வாகனத்தில், மலையப்பசாமி மட்டும் எழுந்தருளுகிறார். இரவு- சந்திரபிரபை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் மலையப்பர் சேவை சாதிக்கிறார்.

    தேரோட்டம்

    8-வது நாள்:- காலை தேரோட்டம். அதிகாலையிலேயே ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி தேரில் எழுந்தருளி பவனி வருவார். இரவு- குதிரை வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறார்.

    9-வது நாள்: கோவில் தெப்பக்குளமான புஷ்கரணியில் தீர்த்தவாரி (சக்கரஸ்நானம்) நடைபெறும்.

    பின்னர் கொடியிறக்கம் (த்வஜாவரோகணம்) நடைபெற்று திருவிழா இனிதே நிறைவுபெறும்.

    பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

    பிரம்மோற்சவ விழா நேரத்தில் வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. பிரேக் தரிசன முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 435 முறை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு அழைத்து வரப்பட்டு, மீண்டும் திருப்பதியில் கொண்டு விடப்படுவார்கள்.

    திருப்பதியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த 23 வாகன நிறுத்துமிடங்கள் தயாராக உள்ளன.

    கோவிலின் நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்கள் வரை அமர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மாடவீதிகளில் தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக 35 அகண்ட ஒளித்திரைகள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • திருமலை வேறு, திருமால் வேறு என்பது அல்ல.
    • ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

    திருமலை வேறு, திருமால் வேறு என்பது அல்ல... திருமலையே திருமால். திருமாலே திருமலை. எனவே ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது வாழ்வில் 'திருப்பம்' தரும் என்பது ஐதீகம். பிரம்மோற்சவத்தின்போது அவரை தரிசித்தால் திருப்பம் மட்டுமல்ல... வேங்கடவன் பேரருளுடன் வற்றாத செல்வமும் வந்து சேரும் என்கிறார்கள்.

    "ஏழுமலை வாசா... வேங்கடரமணா... கோவிந்தா... கோவிந்தா..!" என்ற பக்தர்களின் பக்தி கோஷம் திருமலையில் மட்டுமல்ல.. நாடெங்கும் எதிரொலிக்கும்.

    • மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.
    • கடந்த 2015, 2018-ம் ஆண்டுகளில் 2 பிரம்மோற்சவங்கள் நடந்தன.

    புரட்டாசி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளே, திருப்பதி ஏழுமலையானின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.

    இந்த நாளுக்கு முன்பாக 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாதான் 'பிரம்மோற்சவம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை 'திருக்கொடி திருநாள்' என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.

    கடந்த 2015, 2018-ம் ஆண்டுகளில் 2 பிரம்மோற்சவங்கள் நடந்தன. அதன்பிறகு 2023-ம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற்றன. அதன்படி 2026-ம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் கொண்டாடப்பட இருக்கிறது.

    • லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார்.
    • திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.

    பிரம்மோற்சவம்

    திருமலையில் வேங்கடநாதனுக்கு, 'படைத்தல்' கடவுளான பிரம்மனே முன்னின்று நடத்திய விழாதான் 'பிரம்மோற்சவம்'.

    புரட்டாசி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளே, உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.

    இந்த நாளுக்கு முன்பாக 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாதான் 'பிரம்மோற்சவம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை 'திருக்கொடி திருநாள்' என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

    இந்த விழா கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் குறித்து புராணங்களில் கூறப்படுவதாவது:-

    பிரம்மோற்சவம் பிறந்த கதை

    லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார். அப்போது அவர், சேஷாசலம் என போற்றப்படும் திருமலையில் இருந்த ஒரு புற்றினுள் அமர்ந்து தவம் செய்தார். அப்போது முனிவர்களுக்கும், மக்களுக்கும் அரக்கர்கள் பெருந்துன்பம் செய்து வந்தனர்.

    இதனால் துயருற்ற முனிவர்கள், புற்றினுள் தவம் இருந்த திருமாலை சந்தித்து தங்கள் குறை தீர்க்க வேண்டினர். இதைக்கேட்ட திருமால், அந்த அரக்கர்களை அழித்து வருமாறு, தமது கையில் இருந்த சக்கரத்தாழ்வாரான சுதர்சனருக்கு கட்டளையிட்டார்.

    அவரும், வீரபுருஷனாக உருக்கொண்டு 4 திசைகளுக்கும் பறந்து சென்று எல்லா அரக்கர்களையும் அழித்து வெற்றிக்கொண்டார்.

    பின்னர், திருமால் முன்னால் வந்து நின்ற சுதர்சனருக்கு, பரிசளிக்க விரும்பிய பெருமாள், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

    பிரம்ம ரதம்

    உடனே சுதர்சனர், "பகவானே, தாங்கள் வீற்றிருக்கும் இத்திருத்தலத்தில் தங்களுக்கு பெரியதொரு உற்சவம் நடத்தி காண விரும்புகிறேன்" என்று வேண்டினார்.

    தனக்கென எதுவும் கேட்காத சுதர்சனரின் வேண்டுகோளுக்கு திருமால் இணங்க, பிரம்மதேவர் உரிய ஏற்பாடுகளைச் செய்தார். ஒரு புரட்டாசி மாதத்தில், சுதர்சனரின் வேண்டுகோளின்படி பிரம்மதேவனால் திருமலையில் கோலாகலமாக உற்சவம் நடத்தப்பட்டது. அன்று முதல் திருமலையில் பிரம்மோற்சவம் நடந்து வருவதாக அந்த கதை கூறுகிறது.

    அதனால்தான், இன்றளவும் திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.

    அதேபோல பிரம்மோற்சவ விழா நாட்களில் நடைபெறும் வாகனசேவைகளின்போது, சக்கரத்தாழ்வார் முன்னே செல்வது வழக்கமாக இருக்கிறது.

    9 நாட்கள் உற்சவம்

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும்.

    சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் 'லவுகீக' முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.

    பிரம்மோற்சவம் நடைபெறும் முந்தைய நாள் ஏழுமலையான் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வாசனை திரவியங்கள் பூசப்படும். தொடர்ந்து, ஏழுமலையானின் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வசேனருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்த ஆண்டு இன்று 24-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

    9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வரும் உற்சவரான மலையப்ப சாமியை காண, கண்கள் கோடி வேண்டும்.

    ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக கருடசேவை, தங்கத் தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை நடைபெறும் நாட்களில், மலையா... பக்தர்களின் தலையா எனும் அளவுக்கு திருமலையே கோலாகலமாக இருக்கும்.

    • ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா.
    • திருப்பதி மலை மேல் தனியார் வாகனங்கள் செல்ல தடை.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் ஏழுமலையான் எழுந்திருளினார். இன்று இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது. நாளை காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் எழுதருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை நாளை நடக்கிறது. இந்த ஆண்டு கருட சேவை வழக்கத்தை விட 30 நிமிடம் முன்கூட்டியே அதாவது மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இரவு 11 மணி வரை மாட வீதிகளில் தங்க கருட வாகனத்தில் பல்வேறு நகை அலங்காரங்களுடன் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.

    கருட சேவையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே திருப்பதி மலைக்கு வர தொடங்கினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாளை திருப்பதி மலை மேல் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



    மாலை 6 மணி க்கு மேல் இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழ் திருப்பதியில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    எந்தெந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்தலாம் என்பதை பக்தர்கள் அறிந்து கொள்ள கியூஆர் கோடு வசதியுடன் கூடிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    வேலூர் சென்னை மற்றும் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கருட சேவையொட்டி ஆந்திர மாநில போக்குவரத்து சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இது தவிர மாட வீதியில் 2 லட்சம் பக்தர்கள் அமர்ந்தும் நின்றபடியும் கருட சேவை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் மாடவீதிகளில் உள்ள கேலரிகளுக்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை கொண்டு வர வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    மேலும் கூடுதல் இடங்களில் அன்னதானம் பால் போன்றவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலையில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்.
    • நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    திருப்பதி:

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் உற்சவங்களில் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கருட சேவையின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வழக்கமாக இரவு 7 மணிக்கு தொடங்கும் கருட சேவை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனால் பக்தர்கள் முழு திருப்தியுடன் கருட சேவை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய அனைத்து வசதிகளும் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதற்காக திருப்பதி மலையில் பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு கருட சேவை நடந்தது. இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் தங்க வைர நகை அலங்காரத்துடன் ஏழுமலையான் எழுந்தருளினார். 4 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் திரண்டு இருந்தனர்.

    பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பினர். முதலில் ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் மாட வீதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளியில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்களை மாடவீதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் பக்தர்கள் அனைவரும் சிரமம் இன்றி கருட சேவையை தரிசனம் செய்தனர். கருட சேவை முதல் முறையாக நள்ளிரவு 1.30 மணி வரை 7 மணி நேரம் நடந்தது.

    தேவஸ்தானத்தின் புதிய முயற்சியால் மனமுருக ஏழுமலையானை தரிசித்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு 4 லட்சம் இளநீர் பாட்டில்கள், 3 லட்சம் மோர் பாட்டில்கள் மற்றும் 3 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று காலை ஏழுமலையான் அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று மாலை தங்க தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதியில் நேற்று 82,043 பேர் தரிசனம் செய்தனர். 30,100 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.10 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ×