என் மலர்
நீங்கள் தேடியது "tirupati brahmotsavam"
- பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று ஏழுமலையான் கல்ப விருட்ச வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று காலை ஏழுமலையான் கல்ப விருட்ச வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடைபெற உள்ளது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை பைக்குகள் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அலிபிரி சோதனை சாவடி, கருடா சந்திப்பு, அரசு பள்ளி மைதானங்களில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களது வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே கியூ ஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது.
கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் வாகனங்கள் எந்த வழியாக சென்று வாகன நிறுத்தங்களை அடையாளம் என தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் முடிந்த அளவு அரசு பஸ்களில் திருப்பதி மலைக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிநவீன டிரோன் கேமராக்கள் மூலமும் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரோவுடன் இணைந்து மேக் எ கால் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது. பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் மாநில போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கூடுதலாக 300 போலீசார் வரைய வைக்கப்பட்டுள்ளனர்.
அவசர உதவி தேவைப்படும் பக்தர்கள் போலீசாரையோ அல்லது தேவஸ்தான அதிகாரிகளையோ தொடர்பு கொள்ளலாம்.
முடியாத பட்சத்தில் 112 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம், தமிழகத்துடனும் தொடர்புடையது.
- கருட வாகனத்திற்கு 11 வெண் பட்டுக்குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.
திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம், தமிழகத்துடனும் தொடர்புடையது. ஆம்... விழாவில் 5-ம் நாளன்று நடைபெறும் மோகினி அலங்கார சேவையும், கருடசேவையும் மிக பிரசித்தி பெற்றது. அன்று காலை மலையப்பசாமி, மோகினி அலங்காரத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் கிளி அணிவிக்கப்பட்டு, வண்ணமயமான வஸ்திரங்கள் அணிந்து, மலர்கள் சூடி, ஜொலிக்கும் நகைகள் அணிந்து மைசூரு மகாராணி அளித்த பல்லக்கில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
கருடசேவையின்போது, தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் துளசி மாலை மூலவருக்கு (ஏழுமலையான்) அணிவிக்கப்படும். இந்த மாலையுடன் மூலவிக்ரகமூர்த்தி அணிந்திருக்கும் தங்க சங்கிலி மகரகண்டி, லட்சுமிஹாரம் போன்ற நகைகளை கருடசேவையின் போது மட்டும் உற்சவ மூர்த்தியான மலையப்பசாமிக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இதேபோல, கருட வாகனத்திற்கு 11 வெண் பட்டுக்குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது. இக்குடைகள் சென்னையில் இருந்து திருமலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அந்த திருக்குடைகள் ஏழுமலையானுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.
மோகினி அலங்காரமும், கருடசேவையும் வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது.
- பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.
- 5-வது நாள் காலை மோகினி அவதார உற்சவம்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும்.
சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் 'லவுகீக' முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.
பிரம்மோற்சவ விழாவின் முதல் நாள்: மாலை 6 மணிக்கு வேதகோஷங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்படும். இரவு பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.
2-வது நாள்: காலை- சின்ன சேஷவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளுவார். இரவு- அம்ஸ (அன்னப்பறவை) வாகனத்தில் வெண்பட்டு அணிந்து, கைகளில் வீணையேந்தி பவனி வருவார்.
3-வது நாள்: காலை- பொன்மயமான சிம்மவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி உலா வருவார். இரவு- முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி உலா வருவார்.
4-வது நாள்: காலை- கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா. இரவு- சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி வலம் வருவார்.
மோகினி அவதாரம்-கருட சேவை
5-வது நாள்: காலை மோகினி அவதார உற்சவம். அப்போது பெருமாள், அழகிய மங்கை வேடமேற்று உலா வருவார். இரவு கருடசேவை நடைபெறும். அப்போது ஏழுமலையான் கருட வாகனத்தில் அமர்ந்து மாடவீதிகளில் வீதிஉலா வருவார்.
6-வது நாள்: காலை- 'சிறிய திருவடி' என போற்றப்படும் அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி, பச்சை பட்டாடை அணிந்து, தங்ககிரீடம் சூடி, கையில் வில்லேந்திய ராமப்பிரானாக வலம் வருகிறார். மாலை- தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி மாட வீதிகளில் உலா வருகிறார். இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.
7-வது நாள்: காலை- ஏழு குதிரைகள் இழுக்க தங்கமயமாக ஜொலிக்கும் சூரியபிரபை வாகனத்தில், மலையப்பசாமி மட்டும் எழுந்தருளுகிறார். இரவு- சந்திரபிரபை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் மலையப்பர் சேவை சாதிக்கிறார்.
தேரோட்டம்
8-வது நாள்:- காலை தேரோட்டம். அதிகாலையிலேயே ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி தேரில் எழுந்தருளி பவனி வருவார். இரவு- குதிரை வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறார்.
9-வது நாள்: கோவில் தெப்பக்குளமான புஷ்கரணியில் தீர்த்தவாரி (சக்கரஸ்நானம்) நடைபெறும்.
பின்னர் கொடியிறக்கம் (த்வஜாவரோகணம்) நடைபெற்று திருவிழா இனிதே நிறைவுபெறும்.
பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
பிரம்மோற்சவ விழா நேரத்தில் வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. பிரேக் தரிசன முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 435 முறை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு அழைத்து வரப்பட்டு, மீண்டும் திருப்பதியில் கொண்டு விடப்படுவார்கள்.
திருப்பதியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த 23 வாகன நிறுத்துமிடங்கள் தயாராக உள்ளன.
கோவிலின் நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்கள் வரை அமர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாடவீதிகளில் தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக 35 அகண்ட ஒளித்திரைகள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- திருமலை வேறு, திருமால் வேறு என்பது அல்ல.
- ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
திருமலை வேறு, திருமால் வேறு என்பது அல்ல... திருமலையே திருமால். திருமாலே திருமலை. எனவே ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது வாழ்வில் 'திருப்பம்' தரும் என்பது ஐதீகம். பிரம்மோற்சவத்தின்போது அவரை தரிசித்தால் திருப்பம் மட்டுமல்ல... வேங்கடவன் பேரருளுடன் வற்றாத செல்வமும் வந்து சேரும் என்கிறார்கள்.
"ஏழுமலை வாசா... வேங்கடரமணா... கோவிந்தா... கோவிந்தா..!" என்ற பக்தர்களின் பக்தி கோஷம் திருமலையில் மட்டுமல்ல.. நாடெங்கும் எதிரொலிக்கும்.
- மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.
- கடந்த 2015, 2018-ம் ஆண்டுகளில் 2 பிரம்மோற்சவங்கள் நடந்தன.
புரட்டாசி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளே, திருப்பதி ஏழுமலையானின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.
இந்த நாளுக்கு முன்பாக 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாதான் 'பிரம்மோற்சவம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை 'திருக்கொடி திருநாள்' என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.
கடந்த 2015, 2018-ம் ஆண்டுகளில் 2 பிரம்மோற்சவங்கள் நடந்தன. அதன்பிறகு 2023-ம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற்றன. அதன்படி 2026-ம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் கொண்டாடப்பட இருக்கிறது.
- லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார்.
- திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.
பிரம்மோற்சவம்
திருமலையில் வேங்கடநாதனுக்கு, 'படைத்தல்' கடவுளான பிரம்மனே முன்னின்று நடத்திய விழாதான் 'பிரம்மோற்சவம்'.
புரட்டாசி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளே, உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.
இந்த நாளுக்கு முன்பாக 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாதான் 'பிரம்மோற்சவம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை 'திருக்கொடி திருநாள்' என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
இந்த விழா கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் குறித்து புராணங்களில் கூறப்படுவதாவது:-
பிரம்மோற்சவம் பிறந்த கதை
லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார். அப்போது அவர், சேஷாசலம் என போற்றப்படும் திருமலையில் இருந்த ஒரு புற்றினுள் அமர்ந்து தவம் செய்தார். அப்போது முனிவர்களுக்கும், மக்களுக்கும் அரக்கர்கள் பெருந்துன்பம் செய்து வந்தனர்.
இதனால் துயருற்ற முனிவர்கள், புற்றினுள் தவம் இருந்த திருமாலை சந்தித்து தங்கள் குறை தீர்க்க வேண்டினர். இதைக்கேட்ட திருமால், அந்த அரக்கர்களை அழித்து வருமாறு, தமது கையில் இருந்த சக்கரத்தாழ்வாரான சுதர்சனருக்கு கட்டளையிட்டார்.
அவரும், வீரபுருஷனாக உருக்கொண்டு 4 திசைகளுக்கும் பறந்து சென்று எல்லா அரக்கர்களையும் அழித்து வெற்றிக்கொண்டார்.
பின்னர், திருமால் முன்னால் வந்து நின்ற சுதர்சனருக்கு, பரிசளிக்க விரும்பிய பெருமாள், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
பிரம்ம ரதம்
உடனே சுதர்சனர், "பகவானே, தாங்கள் வீற்றிருக்கும் இத்திருத்தலத்தில் தங்களுக்கு பெரியதொரு உற்சவம் நடத்தி காண விரும்புகிறேன்" என்று வேண்டினார்.
தனக்கென எதுவும் கேட்காத சுதர்சனரின் வேண்டுகோளுக்கு திருமால் இணங்க, பிரம்மதேவர் உரிய ஏற்பாடுகளைச் செய்தார். ஒரு புரட்டாசி மாதத்தில், சுதர்சனரின் வேண்டுகோளின்படி பிரம்மதேவனால் திருமலையில் கோலாகலமாக உற்சவம் நடத்தப்பட்டது. அன்று முதல் திருமலையில் பிரம்மோற்சவம் நடந்து வருவதாக அந்த கதை கூறுகிறது.
அதனால்தான், இன்றளவும் திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.
அதேபோல பிரம்மோற்சவ விழா நாட்களில் நடைபெறும் வாகனசேவைகளின்போது, சக்கரத்தாழ்வார் முன்னே செல்வது வழக்கமாக இருக்கிறது.
9 நாட்கள் உற்சவம்
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும்.
சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் 'லவுகீக' முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.
பிரம்மோற்சவம் நடைபெறும் முந்தைய நாள் ஏழுமலையான் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வாசனை திரவியங்கள் பூசப்படும். தொடர்ந்து, ஏழுமலையானின் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வசேனருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த ஆண்டு இன்று 24-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வரும் உற்சவரான மலையப்ப சாமியை காண, கண்கள் கோடி வேண்டும்.
ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக கருடசேவை, தங்கத் தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை நடைபெறும் நாட்களில், மலையா... பக்தர்களின் தலையா எனும் அளவுக்கு திருமலையே கோலாகலமாக இருக்கும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை கோலாகலமாக நடந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் மூலவரை தரிசனம் செய்யும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் உள்ள பிரதான உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
அந்த காணிக்கைகள் கோவில் வளாகத்திலேயே உடனுக்குடன் எண்ணப்பட்டு வருகின்றன.
10-ந் தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நடந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9 நாட்களில் உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.17 கோடியே 55 லட்சம் வசூலாகியுள்ளது. 6 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 29 லட்சத்து 30 ஆயிரம் லட்டு விற்பனை யாகியுள்ளது.
தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் அனைத்து குடோன்களும் நிரம்பி வழிகின்றன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை விதிகளை தேவஸ்தானம் செய்துள்ளது. #TirupatiTemple
பின்னர் மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை அம்ச வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 10 மணியில் இருந்து 11 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நவராத்திரி கொலு ஆஸ்தானம் நடந்தது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத், பறக்கும்படை அதிகாரி ரவீந்திராரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (புதன் கிழமை) நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை, இரவு இரு வேளைகள் வாகன வீதிஉலா நடக்கிறது. இந்த வாகன வீதிஉலா காலையில் 9 மணிக்கு தொடங்கி 11 மணிவரையிலும், இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணிவரையிலும் நடக்கிறது. கருட சேவை அன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணிவரை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அந்தக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் பிரம்மோற்சவ விழா நடந்ததாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் போருக்குப் புறப்படும் மன்னர் கள் ஏழுமலையானை வழி பட்டுச் செல்வார்கள். போரில் வெற்றி பெற்றால், ஏழுமலையான் கோவிலுக்கு வந்து விழா நடத்துவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அவ்வாறாக ஓராண்டில் 12 மாதங்களிலும் 12 பிரம்மோற்சவ விழாக்கள் நடந்துள்ளதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.
பல்லவ ராணி வழங்கிய வெள்ளி விக்ரகம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில், முதல் முறையாக 614-ம் ஆண்டு பல்லவ பேரரசின் ராணியாக திகழ்ந்த சாமவாய் பெருந்தேவியார் என்பவர் வெள்ளியால் தயார் செய்யப்பட்ட மணவாள பெருமாள் என்கிற போக சீனிவாசமூர்த்தி விக்ரகம் ஒன்றை காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த விக்ரகம் தற்போது ஏழுமலையான் கோவிலில் உள்ளது. புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி கள் தொடங்குவதற்கு முன்பாக போக சீனிவாசமூர்த்தியை கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வருவார்கள். அதன் பின்னரே பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் மற்றும் வாகன சேவைகள் தொடங்கி நடந்துள்ளன.
அதைத்தொடர்ந்து ஆடி திருநாள், மாசி திருநாள் என்றும் அச்சுதராய பிரம்மோற்சவம் என்ற பெயரிலும் விழா நடந்துள்ளன. அது, 1254-ம் ஆண்டு பல்லவ மன்னரான விஜயகண்டா கோபாலதேவுடு என்பவர் சித்திரை மாதத்தில் நடத்தி உள்ளார். 1328-ம் ஆண்டு ஆடி மாதத்தில் ஆடி திருநாள் என்ற பெயரில் திருபுவன சக்கரவர்த்தி, திருவேங்கடநாத யாதவ ராயலு காலத்தில் பிரம்மோற்சவ விழா நடந்துள்ளது.
1429-ம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் மன்னர் வீரபிரதாப ராயலு காலத்தில் பிரம்மோற்சவ விழா நடந்துள்ளது. 1446-ம் ஆண்டு மாசி திருநாள் என்ற பெயரில் மன்னர் ஹரிஹரராயலு பிரம்மோற்சவ விழாவை நடத்தி உள்ளார். 1530-ம் ஆண்டு அச்சுதராய பிரம்மோற்சவத்தை அச்சுதராயலு என்ற மன்னர் நடத்தி உள்ளார். 1583-ம் ஆண்டில் 12 மாதங்களிலும் 12 பிரம்மோற்சவ விழாக்கள் நடந்துள்ளன.
அதன் பிறகு ‘லீப்’ வருடத்தில் அதிக நாட்கள் வந்ததால் ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவ விழாக்கள் நடந்துள்ளன. அதில் ஒன்று வருடாந்திர பிரம்மோற்சவ விழா என்றும், மற்றொன்று நவராத்திரி பிரம்மோற்சவ விழா என்றும் அழைக்கப்பட்டன. பின்னர் நாளடைவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்தது. அந்த நடைமுறையே தற்போதும் பின்பற்றப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. விழாவில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேரோட்டம் ஆகியவை நடக்காது. மற்ற அனைத்து வாகன சேவைகளும் வழக்கம்போல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. சக்கரத்தாழ்வாருக்கு வராகசாமி கோவில் முன்பாக வைத்து திருமஞ்சனம் நடைபெற்றது.
இதையடுத்து மாடவீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்ட சக்கரத் தாழ்வார் தெப்பகுளத்தில் வேதவிற்பண்ணர்கள் வேத மந்திரங்கள் ஓத தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை காண லட்சகணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தெப்பகுளத்தின் அருகில் காத்திருந்தனர்.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்தவுடன் அனைத்து பக்தர்களும் தெப்பகுளத்தில் நீராடினர்.
சக்கர ஸ்நானத்தை தொடர்ந்து மாலை ஊஞ்சல் சேவை நடைபெறும். இதனைத் தொடர்ந்து இரவு பிரம்மோற்சவத்திற்கான கொடி இறக்கும் நிகழச்சி நடைபெறும். இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
அடுத்த மாதம் 10-ந் தேதி, நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கி, 18-ந்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது.
நேற்று முன்தினம் தங்க தேரோட்டம் நடந்தது. 7-ம் நாள் விழாவான நேற்று காலையில் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் ஏழு மலையான் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத்தொடர்ந்து, பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான இன்று காலை மகா தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் மகா ரதத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். மகா ரதத்தை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிந்திருந்தனர்.
பெரிய ரதத்தை ஏராளமான பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்தனர். ‘கோவிந்தா... கோவிந்தா’ என விண்ணதிர பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
மாட வீதிகளில் பவனிவந்த ரதத்திற்கு முன்பு யானை, குதிரை பரிவட்டங்கள் சென்றன. மேலும் மேளதாள நடன வாத்தியங்களுடன் கலைஞர்கள் நடனம் ஆடியபடி சென்றனர்.
இதைத்தொடர்ந்து, இரவு தங்க குதிரை வாகனத்தில் உற்சவர் ஏழுமலையான் பவனி வந்து அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நாளை காலை கோவில் அருகேயுள்ள புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து, பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை தேரோட்டம், இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.






