என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 95169
நீங்கள் தேடியது "பெருமாள்"
கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா நடக்கிறது.
மதுரை
மதுரை கூடலழகர் பெரு மாள் கோவில் வைணவத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு வைகாசி பெருந்திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 10.30 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடக்கிறது.
14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை மாலையில் அனு மார், கருடன், சேஷ, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகன ங்களில் பெரு மாள் எழுந்தருளி அருள்பாலிக்கி றார். வருகிற 10-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் 13-ந் தேதி நடக்கிறது. பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி காலை 6:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 14 -ந் தேதி மாலை 7 மணிக்கு திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சியும், 15-ந் தேதி காலையில் தீர்த்தவாரி முடிந்து குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது.
அன்றிரவு கோவில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. 17-ந் தேதி மாலையில் விடையாற்றி உற்சவமும், 18-ந் தேதி உற்சவ சாந்தி, அலங்கார திருமஞ்சனத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமசாமி, உதவி ஆணையர் செல்வி மற்றும் பட்டர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும். இந்த திதியை புண்ணியகாலம் என்பர்.
இதில், மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.
விரதங்களின் சிறப்பு :
ஏகாதசியைவிட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக்கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று 'பாரணை' என்னும் விரதத்தை மேற்கொள்வார்கள்.
ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.ஏகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது.
இதனால், மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது, உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும். விரதத்தை முடித்த உடன், ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக்கூடாது.
உபவாசத்தின்போது, சுருங்கிப்போன குடலை இயங்கச் செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.
25 ஏகாதசிகள் :
1. சித்திரை வளர்பிறை ஏகாதசி, காமதா ஏகாதசி.
2. சித்திரை தேய்பிறை ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி.
3. வைகாசி வளர்பிறை ஏகாதசி, மோகினி ஏகாதசி.
4. வைகாசி தேய்பிறை ஏகாதசி, வருதினி ஏகாதசி.
5. ஆனி வளர்பிறை ஏகாதசி, நிர்ஜல ஏகாதசி.
6. ஆனி தேய்பிறை ஏகாதசி, அபரா ஏகாதசி.
7. ஆடி வளர்பிறை ஏகாதசி, விஷ்ணு சயன ஏகாதசி.
8. ஆடி தேய்பிறை ஏகாதசி, யோகினி ஏகாதசி.
9. ஆவணி வளர்பிறை ஏகாதசி, புத்திரத ஏகாதசி.
10. ஆவணி தேய்பிறை ஏகாதசி, காமிகா ஏகாதசி.
11. புரட்டாசி வளர்பிறை ஏகாதசி, பரிவர்த்தன ஏகாதசி.
12. புரட்டாசி தேய்பிறை ஏகாதசி, அஜ ஏகாதசி.
13. ஐப்பசி வளர்பிறை ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி.
14. ஐப்பசி தேய்பிறை ஏகாதசி, இந்திரா ஏகாதசி.
15. கார்த்திகை வளர்பிறை ஏகாதசி, பிரபோதின ஏகாதசி.
16. கார்த்திகை தேய்பிறை ஏகாதசி, ரமா ஏகாதசி.
17. மார்கழி வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி.
18. மார்கழி தேய்பிறை ஏகாதசி, உற்பத்தி ஏகாதசி.
19. தை வளர்பிறை ஏகாதசி பீஷ்ம, புத்திர ஏகாதசி
20. தை தேய்பிறை ஏகாதசி, சபலா ஏகாதசி.
21. மாசி வளர்பிறை ஏகாதசி, ஜெய ஏகாதசி.
22. மாசி தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி.
23. பங்குனி வளர்பிறை ஏகாதசி, ஆமலகி ஏகாதசி.
24. பங்குனி தேய்பிறை ஏகாதசி, விஜயா ஏகாதசி.
25. அதிக ஏகாதசி, கமலா ஏகாதசி.
இதில், மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.
விரதங்களின் சிறப்பு :
ஏகாதசியைவிட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக்கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று 'பாரணை' என்னும் விரதத்தை மேற்கொள்வார்கள்.
ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.ஏகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது.
இதனால், மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது, உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும். விரதத்தை முடித்த உடன், ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக்கூடாது.
உபவாசத்தின்போது, சுருங்கிப்போன குடலை இயங்கச் செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.
25 ஏகாதசிகள் :
1. சித்திரை வளர்பிறை ஏகாதசி, காமதா ஏகாதசி.
2. சித்திரை தேய்பிறை ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி.
3. வைகாசி வளர்பிறை ஏகாதசி, மோகினி ஏகாதசி.
4. வைகாசி தேய்பிறை ஏகாதசி, வருதினி ஏகாதசி.
5. ஆனி வளர்பிறை ஏகாதசி, நிர்ஜல ஏகாதசி.
6. ஆனி தேய்பிறை ஏகாதசி, அபரா ஏகாதசி.
7. ஆடி வளர்பிறை ஏகாதசி, விஷ்ணு சயன ஏகாதசி.
8. ஆடி தேய்பிறை ஏகாதசி, யோகினி ஏகாதசி.
9. ஆவணி வளர்பிறை ஏகாதசி, புத்திரத ஏகாதசி.
10. ஆவணி தேய்பிறை ஏகாதசி, காமிகா ஏகாதசி.
11. புரட்டாசி வளர்பிறை ஏகாதசி, பரிவர்த்தன ஏகாதசி.
12. புரட்டாசி தேய்பிறை ஏகாதசி, அஜ ஏகாதசி.
13. ஐப்பசி வளர்பிறை ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி.
14. ஐப்பசி தேய்பிறை ஏகாதசி, இந்திரா ஏகாதசி.
15. கார்த்திகை வளர்பிறை ஏகாதசி, பிரபோதின ஏகாதசி.
16. கார்த்திகை தேய்பிறை ஏகாதசி, ரமா ஏகாதசி.
17. மார்கழி வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி.
18. மார்கழி தேய்பிறை ஏகாதசி, உற்பத்தி ஏகாதசி.
19. தை வளர்பிறை ஏகாதசி பீஷ்ம, புத்திர ஏகாதசி
20. தை தேய்பிறை ஏகாதசி, சபலா ஏகாதசி.
21. மாசி வளர்பிறை ஏகாதசி, ஜெய ஏகாதசி.
22. மாசி தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி.
23. பங்குனி வளர்பிறை ஏகாதசி, ஆமலகி ஏகாதசி.
24. பங்குனி தேய்பிறை ஏகாதசி, விஜயா ஏகாதசி.
25. அதிக ஏகாதசி, கமலா ஏகாதசி.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X