என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது
Byமாலை மலர்17 May 2019 6:53 AM GMT (Updated: 17 May 2019 6:53 AM GMT)
காஞ்சீபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சீபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தருகே எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள்வேத மந்திரங்கள் ஒலிக்க கோலாகலமாக கருடாழ்வார் பொறித்த கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
பின்னர் வரதராஜ பெருமாள் தங்க சப்பர வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
இத்திருவிழாவில் பெருமாள் சிம்மவாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை மாலை இரு வேளைகளிலும் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
மேலும் பிரம் மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் கருடசேவை வருகிற 19-ந் தேதியும், திருத்தேர் விழா 23-ந் தேதி (வியாழக்கிழமை) விமர்சையாக நடைபெற உள்ளது.
வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநில பக்தர்களும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர்.
இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமாணி உத்திரவின் பேரில் காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் வரதராஜ பெருமாள் தங்க சப்பர வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
இத்திருவிழாவில் பெருமாள் சிம்மவாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை மாலை இரு வேளைகளிலும் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
மேலும் பிரம் மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் கருடசேவை வருகிற 19-ந் தேதியும், திருத்தேர் விழா 23-ந் தேதி (வியாழக்கிழமை) விமர்சையாக நடைபெற உள்ளது.
வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநில பக்தர்களும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர்.
இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமாணி உத்திரவின் பேரில் காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X