என் மலர்
நீங்கள் தேடியது "Rama"
எந்த பெருமாள் கோவில்களில், இறைவனுக்கு நீராட்டல் என்னும் திருமஞ்சனம் நடைபெற்றாலும், அங்கு அந்த நீராக சபரியே இருக்கிறாள் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம்.
சபரி, ஒரு வேடுவ குலத்தைச் சேர்ந்த பெண். அவள், தன் வாழ்நாளில் ஒரு முறையாவது ராமபிரானைப் பார்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து வந்தவள். நினைவு தெரிந்த நாளில் இருந்து அந்த தருணத்திற்காகவே காத்திருப்பவள். காலம் கடகடவென்று ஓடியதில், இப்போது தள்ளாத வயதை எட்டியிருந்தாள், சபரி. ஆனாலும் அவளுக்கு, தான் ராமபிரானைப் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் குறையவில்லை.
கைகேயி பெற்ற வரத்தின் காரணமாக, ராமபிரான் தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனோடு காட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. அப்படி வசித்த போது, ராவணனால் சீதை கடத்திச் செல்லப்பட்டு விட்டாள். சீதையைத் தேடி வனம் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள், ராமனும், லட்சுமணனும். அப்படி அவர்கள் சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில்தான், சபரியின் குடிசையைத் தேடி அவர்கள் வந்தனர்.
தனக்காகவே காத்திருக்கும் சபரிக்கு, ராமபிரான் இப்போது நேரடியாக காட்சிக்கொடுத்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தும் செய்வதறியாது திகைத்த, அந்த மூதாட்டிக்கு எப்படி அவரை உபசரிப்பது என்று கூடத் தெரியவில்லை. அவ்வளவு பதற்றம், தன் மனதில் நிறைந்த இறைவனைக் கண்ட காரணத்தால் ஏற்பட்ட பதற்றம் அது.
சபரியிடம் ஒரு செய்கை இருந்தது. ராமபிரானை என்றாவது ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில் அவள், தினமும் வனத்தில் இருந்த பழ மரங்களில் இருந்து பழங்களைப் பறித்து பாதுகாப்பாள். அதுவும், எந்த கனி சுவையாக இருக்கிறது என்பதைக் கடித்துப் பார்த்து, அதில் சுவை மிகுந்த கனியை பத்திரப்படுத்தி வைப்பாள். அவளது அதீத அன்பின் காரணமாக, அந்தக் கனிகள் அனைத்தும் இன்று கனிந்ததுபோலவே இருந்தன. அந்த கனிகளையெல்லாம் எடுத்து வந்து, ராமருக்கும், லட்சுமணனுக்கும் உண்ணக் கொடுத்தாள்.
அந்த கனிகளின் சுவையில் மெய்மறந்து போனார், ராமபிரான். அதில் கனியின் சுவை மட்டுமா இருந்தது. காலம் காலமாக சபரி சேர்த்து வைத்திருந்த அன்பும் அல்லவா கலந்திருந்தது. சபரியின் அன்பில் நெகிழ்ந்து போன ராமபிரான், “தாயே.. தங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள். நீங்கள் கேட்பதை நான் தருவேன்” என்றார்.
அப்போது அந்த மூதாட்டி, “இறைவா.. நான் எப்போதும் உங்களுடனேயே இருக்க வேண்டும். தினமும் என்னுடைய அன்பால் உங்களை நீராட்ட வேண்டும். அந்த பாக்கியத்தை எனக்கு அருளுங்கள்” என்றாள்.
அப்படியே ஆகட்டும் என்று கூறிய ராமபிரான், “எனக்கு செய்யப்படும் வழிபாட்டின்போது என்னை நீராட்டும், தீர்த்தமாக நீயே இருப்பாய்” என்று அருளினார்.
ஆம் எந்த பெருமாள் கோவில்களில், இறைவனுக்கு நீராட்டல் என்னும் திருமஞ்சனம் நடைபெற்றாலும், அங்கு அந்த நீராக சபரியே இருக்கிறாள் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம்.
புல்லாங்குழலாக மாறிய சபரி
ராமபிரான், சபரிக்கு இன்னொரு வரத்தையும் தர விரும்பினார். அதையும், சபரியே கேட்கும்படி பணித்தார். அதற்கு சபரி, “இறைவா... நான் உங்கள் மீது கொண்ட அன்பை புரிந்து கொண்டு எனக்கு காட்சி தர இவ்வளவு தூரம் வந்தீர்கள். நான் எச்சில் படுத்தி வைத்திருந்த கனிகளைக் கூட, எந்தச் சலனமும் இல்லாமல் உண்டு மகிழ்ந்தீர்கள். நானும் மறுபிறவியில் உங்கள் எச்சில்படும் பொருளாக இருக்க ஆசைப்படுகிறேன்” என்றாள்.
அதன்படியே அடுத்த அவதாரத்தில் கண்ணனான அவதரித்த திருமால், தன்னுடைய கைகளில் புல்லாங்குழலாக சபரியை ஏந்திக் கொண்டார். அதை இசைப்பதன் மூலம், கண்ணபிரானின் எச்சில் சபரியின் மீது பட்டு, அவளைப் புனிதப்படுத்திக் கொண்டே இருந்தது.
கைகேயி பெற்ற வரத்தின் காரணமாக, ராமபிரான் தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனோடு காட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. அப்படி வசித்த போது, ராவணனால் சீதை கடத்திச் செல்லப்பட்டு விட்டாள். சீதையைத் தேடி வனம் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள், ராமனும், லட்சுமணனும். அப்படி அவர்கள் சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில்தான், சபரியின் குடிசையைத் தேடி அவர்கள் வந்தனர்.
தனக்காகவே காத்திருக்கும் சபரிக்கு, ராமபிரான் இப்போது நேரடியாக காட்சிக்கொடுத்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தும் செய்வதறியாது திகைத்த, அந்த மூதாட்டிக்கு எப்படி அவரை உபசரிப்பது என்று கூடத் தெரியவில்லை. அவ்வளவு பதற்றம், தன் மனதில் நிறைந்த இறைவனைக் கண்ட காரணத்தால் ஏற்பட்ட பதற்றம் அது.
சபரியிடம் ஒரு செய்கை இருந்தது. ராமபிரானை என்றாவது ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில் அவள், தினமும் வனத்தில் இருந்த பழ மரங்களில் இருந்து பழங்களைப் பறித்து பாதுகாப்பாள். அதுவும், எந்த கனி சுவையாக இருக்கிறது என்பதைக் கடித்துப் பார்த்து, அதில் சுவை மிகுந்த கனியை பத்திரப்படுத்தி வைப்பாள். அவளது அதீத அன்பின் காரணமாக, அந்தக் கனிகள் அனைத்தும் இன்று கனிந்ததுபோலவே இருந்தன. அந்த கனிகளையெல்லாம் எடுத்து வந்து, ராமருக்கும், லட்சுமணனுக்கும் உண்ணக் கொடுத்தாள்.
அந்த கனிகளின் சுவையில் மெய்மறந்து போனார், ராமபிரான். அதில் கனியின் சுவை மட்டுமா இருந்தது. காலம் காலமாக சபரி சேர்த்து வைத்திருந்த அன்பும் அல்லவா கலந்திருந்தது. சபரியின் அன்பில் நெகிழ்ந்து போன ராமபிரான், “தாயே.. தங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள். நீங்கள் கேட்பதை நான் தருவேன்” என்றார்.
அப்போது அந்த மூதாட்டி, “இறைவா.. நான் எப்போதும் உங்களுடனேயே இருக்க வேண்டும். தினமும் என்னுடைய அன்பால் உங்களை நீராட்ட வேண்டும். அந்த பாக்கியத்தை எனக்கு அருளுங்கள்” என்றாள்.
அப்படியே ஆகட்டும் என்று கூறிய ராமபிரான், “எனக்கு செய்யப்படும் வழிபாட்டின்போது என்னை நீராட்டும், தீர்த்தமாக நீயே இருப்பாய்” என்று அருளினார்.
ஆம் எந்த பெருமாள் கோவில்களில், இறைவனுக்கு நீராட்டல் என்னும் திருமஞ்சனம் நடைபெற்றாலும், அங்கு அந்த நீராக சபரியே இருக்கிறாள் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம்.
புல்லாங்குழலாக மாறிய சபரி
ராமபிரான், சபரிக்கு இன்னொரு வரத்தையும் தர விரும்பினார். அதையும், சபரியே கேட்கும்படி பணித்தார். அதற்கு சபரி, “இறைவா... நான் உங்கள் மீது கொண்ட அன்பை புரிந்து கொண்டு எனக்கு காட்சி தர இவ்வளவு தூரம் வந்தீர்கள். நான் எச்சில் படுத்தி வைத்திருந்த கனிகளைக் கூட, எந்தச் சலனமும் இல்லாமல் உண்டு மகிழ்ந்தீர்கள். நானும் மறுபிறவியில் உங்கள் எச்சில்படும் பொருளாக இருக்க ஆசைப்படுகிறேன்” என்றாள்.
அதன்படியே அடுத்த அவதாரத்தில் கண்ணனான அவதரித்த திருமால், தன்னுடைய கைகளில் புல்லாங்குழலாக சபரியை ஏந்திக் கொண்டார். அதை இசைப்பதன் மூலம், கண்ணபிரானின் எச்சில் சபரியின் மீது பட்டு, அவளைப் புனிதப்படுத்திக் கொண்டே இருந்தது.
வைணவத் திருத்தலங்களில் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த ஆலயம் பற்றி சில தகவல்கள் இங்கே பார்க்கலாம்.
வைணவத் திருத்தலங்களில் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் சிறப்பு வாய்ந்தது. ராமநாதபுரம் அருகில் இருக்கிறது திருப்புல்லாணி திருத்தலம். இந்த பெருமாள் கோவில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் சேதுக்கரை அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் பற்றி சில தகவல்கள் இங்கே பார்க்கலாம்.
சமுத்திர ராஜன் உருவம்
ராமபிரான், கடலில் பாலம் கட்ட அனுமதி வேண்டி நின்றான். ஆனால் கடல் அரசன், ராமர் முன்பாக தோன்றவில்லை. எனவே ராமர், கடலின் மீது பாணம் எய்த முயன்றார். இதனால் பயந்து போன சமுத்திர ராஜன், தன் மனைவியுடன் அங்கு தோன்றி ராம பிரானை சரணடைந்தான். இதை நினைவூட்டும் விதமாக, இந்த ஆலயத்தில் சயனராமர் சன்னிதி முன் மண்டபத்தில், சமுத்திர ராஜனும், சமுத்திர ராணியும் வீற்றிருக்கின்றனர். அருகில் ராமருக்கு உதவிய விபீஷணனும் இருக்கிறார்.
சயன ராமர்
கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி வேண்டி, மூன்று நாட்கள் காத்திருந்தார், ராம பிரான். அந்த மூன்று நாட்களும் தர்ப்பைப் புல்லின் மீது சயனம் கொண்டார். அதன் அடிப்படையில் இந்த ஆலயத்தில் ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து சயனித்த நிலையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம் என்பதால் இங்கு சீதை இல்லை. ஆதிசேஷன் இருப்பதால், அவரது வடிவமான லட்சுமணனும் இங்கு இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். கருவறை சுவரில், கடலில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள்.
குழந்தை வரம்
குழந்தை பாக்கியத்திற்காக தசரதர், புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் இருந்து தேவதூதன் ஒருவன் அளித்த பாயசத்தை தனது மூன்று மனைவிகளுக்கும் வழங்கினார். அவர்கள் அதை சாப்பிட்டனர். அதன் பலனாக அவர்களுக்கு ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகியோர் பிறந்தனர்.
இத்தலம் அருகில் உள்ள சேதுக்கரையில் நீராடி விட்டு, கோவிலுக்கு வந்து நாகர் சிலைக்கு முன்பாக கணவனும் மனைவியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நாக பிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக பால் பாயசம் தரப்படும். இதனை அருந்தினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
சமுத்திர ராஜன் உருவம்
ராமபிரான், கடலில் பாலம் கட்ட அனுமதி வேண்டி நின்றான். ஆனால் கடல் அரசன், ராமர் முன்பாக தோன்றவில்லை. எனவே ராமர், கடலின் மீது பாணம் எய்த முயன்றார். இதனால் பயந்து போன சமுத்திர ராஜன், தன் மனைவியுடன் அங்கு தோன்றி ராம பிரானை சரணடைந்தான். இதை நினைவூட்டும் விதமாக, இந்த ஆலயத்தில் சயனராமர் சன்னிதி முன் மண்டபத்தில், சமுத்திர ராஜனும், சமுத்திர ராணியும் வீற்றிருக்கின்றனர். அருகில் ராமருக்கு உதவிய விபீஷணனும் இருக்கிறார்.
சயன ராமர்
கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி வேண்டி, மூன்று நாட்கள் காத்திருந்தார், ராம பிரான். அந்த மூன்று நாட்களும் தர்ப்பைப் புல்லின் மீது சயனம் கொண்டார். அதன் அடிப்படையில் இந்த ஆலயத்தில் ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து சயனித்த நிலையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம் என்பதால் இங்கு சீதை இல்லை. ஆதிசேஷன் இருப்பதால், அவரது வடிவமான லட்சுமணனும் இங்கு இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். கருவறை சுவரில், கடலில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள்.
குழந்தை வரம்
குழந்தை பாக்கியத்திற்காக தசரதர், புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் இருந்து தேவதூதன் ஒருவன் அளித்த பாயசத்தை தனது மூன்று மனைவிகளுக்கும் வழங்கினார். அவர்கள் அதை சாப்பிட்டனர். அதன் பலனாக அவர்களுக்கு ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகியோர் பிறந்தனர்.
இத்தலம் அருகில் உள்ள சேதுக்கரையில் நீராடி விட்டு, கோவிலுக்கு வந்து நாகர் சிலைக்கு முன்பாக கணவனும் மனைவியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நாக பிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக பால் பாயசம் தரப்படும். இதனை அருந்தினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
சுக்ரீவனுக்கு ராமனின் நட்பு கிடைத்தது, சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்ட ராமர் உதவிய கதையை அறிந்து கொள்ளலாம்.
கிஷ்கிந்தையை ஆட்சி செய்து வந்த வானர அரசன் வாலியின் சகோதரன் சுக்ரீவன். ஒருமுறை வாலி, அசுரன் துன்துபி என்பவனோடு சண்டையிட்டான். ஒரு குகைக்குள் சென்ற அந்த அசுரனை பின் தொடர்ந்து சென்றான் வாலி. அப்போது வெளியே தம்பி சுக்ரீவனை காவலுக்கு வைத்தான். நீண்ட நாள் ஆகியும் வாலி வெளியில் வரவில்லை.
அதனால் அண்ணன் இறந்து விட்டதாக கருதி, பெரிய பாறையால் அந்த குகையை மூடிவிட்டு அரண்மனை திரும்பினான் சுக்ரீவன். பின்னர் அரசனாக பதவி ஏற்று நாட்டை ஆட்சி செய்து வந்தான். இந்த நிலையில் அந்தக் குகையில் இருந்து வெளியே வந்த வாலி, தன் தம்பி அரசாட்சி செய்வதை அறிந்து, அவன் தன்னை வேண்டுமென்றே ஏமாற்றிவிட்டதாக கருதி, நாட்டை விட்டே துரத்தி விட்டான். அதோடு சுக்ரீவனின் மனைவியையும் தன்னோடு வைத்துக் கொண்டான்.
பின்னாளில் சுக்ரீவனுக்கு ராமனின் நட்பு கிடைத்தது. அவர் மூலமாக வாலியை அழிக்க சுக்ரீவன் எண்ணினான். அதன்படியே வாலியை சண்டைக்கு அழைக்கும்படி சுக்ரீவனிடம், ராமன் கூறினார். இருவரும் வெட்ட வெளியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த ராமர், வாலியின் மீது அம்பு விட்டு அவனை கொன்றார். அதன்பிறகு, சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். பின்னர் நன்றிக் கடனாக தன்னுடைய சேனைகளை ராமனுக்குக் கொடுத்து ராவண யுத்தத்திற்கு துணை நின்றான்.
அதனால் அண்ணன் இறந்து விட்டதாக கருதி, பெரிய பாறையால் அந்த குகையை மூடிவிட்டு அரண்மனை திரும்பினான் சுக்ரீவன். பின்னர் அரசனாக பதவி ஏற்று நாட்டை ஆட்சி செய்து வந்தான். இந்த நிலையில் அந்தக் குகையில் இருந்து வெளியே வந்த வாலி, தன் தம்பி அரசாட்சி செய்வதை அறிந்து, அவன் தன்னை வேண்டுமென்றே ஏமாற்றிவிட்டதாக கருதி, நாட்டை விட்டே துரத்தி விட்டான். அதோடு சுக்ரீவனின் மனைவியையும் தன்னோடு வைத்துக் கொண்டான்.
பின்னாளில் சுக்ரீவனுக்கு ராமனின் நட்பு கிடைத்தது. அவர் மூலமாக வாலியை அழிக்க சுக்ரீவன் எண்ணினான். அதன்படியே வாலியை சண்டைக்கு அழைக்கும்படி சுக்ரீவனிடம், ராமன் கூறினார். இருவரும் வெட்ட வெளியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த ராமர், வாலியின் மீது அம்பு விட்டு அவனை கொன்றார். அதன்பிறகு, சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். பின்னர் நன்றிக் கடனாக தன்னுடைய சேனைகளை ராமனுக்குக் கொடுத்து ராவண யுத்தத்திற்கு துணை நின்றான்.
ராமபிரானுக்கு விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
ராமாயணத்தின் நாயகனாகவும், மனித உருவில் வாழ்ந்த தெய்வமாகவும் போற்றப்படுபவர், ராமபிரான். இவர் சித்திரை மாதம் வளர்பிறையான நவமி திதியில் பிறந்தவர். அதைத் தான் ‘ராம நவமி’ என்ற பெரும் விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். எந்த ஒரு காரியத்தை அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் செய்யாமல், மக்கள் தவிர்த்து விடுவார்கள். இதனால் அந்த இரண்டு திதிகளும் மிகவும் வருத்தம் கொண்டன. அவை தங்களின் கவலையை, மகா விஷ்ணுவிடம் சென்று வெளிப்படுத்தின.
“இறைவா! நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களை மட்டும் மற்ற திதிகளைப் போல் பார்க்காமல், மக்கள் ஒதுக்கி வைக்கிறார்களே. எங்களுக்கு இதில் இருந்து விமோசனம் இல்லையா?” என்றனர்.
அதைக் கேட்டு மனம் இரங்கிய மகாவிஷ்ணு, “மக்கள் உங்கள் இருவரையும் போற்றித் துதிக்கும் நாள் ஒன்று வரும். நான் உலக நன்மைக்காக பூமியில் அவதரிக்கும் போது, உங்களின் இந்த வருத்தம் மறைந்து போகும்” என்று அருள்புரிந்தார்.
அதன்படியே தசரதர்- கவுசல்யா தம்பதியருக்கு, நவமி திதியில் ராமனாக அவதரித்தார், மகாவிஷ்ணு. அதே போல் மற்றொரு அவதாரத்தில் வசுதேவர்-தேவகி தம்பதியருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணராக பிறந்தார். இந்த இரண்டு அவதாரங்களின் மூலமாக, அஷ்டமி மற்றும் நவமி திதிகள் பெரும் பேறு பெற்றன. இறைவனின் அவதாரங்கள் உதித்த அந்த இரண்டு நாட்களையும் மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.
நவமியில் பிறந்த ராமபிரான், இலங்கையை ஆட்சி செய்து வந்த ராவணனை வதம் செய்வதற்காகவே அவதரித்தவர். சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் பல சக்திவாய்ந்த வரங்களைப் பெற்றிருந்த ராவணன், அந்த வரங்களைக் கொண்டு, முனிவர்களையும், தேவர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யம் இன்றி துன்புறுத்தினான்.
கர்மவினையின் பயனாக, ராம அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக ராமபிரான் வனவாசம் செல்ல நேர்ந்தது. அவரோடு சீதையும், லட்சுமணரும் உடன் சென்றனர். வனத்தில் இருந்தபோது, சீதையின் அழகு பற்றி அறிந்த ராவணன், அவளைக் கடத்திச் சென்றான். இதனால் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் வந்தது. வானர வீரர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு, கடலில் பாலம் அமைத்து, இலங்கை சென்ற ராமர், ராவணனை அழித்து சீதையை மீட்டார். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்டது.
ராமபிரான் அவதரித்த நாளில் விரதம் இருப்பது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. இந்த விரதமானது, இரண்டு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சித்திரை மாதம் வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்களுக்கு கடைப் பிடிக்கும் விரதத்திற்கு ‘கர்ப்போஸ் தவம்’ என்று பெயர். நவமி திதியில் இருந்து அடுத்துவரும் ஒன்பது நாட்களுக்கு கடைப்பிடிக்கப்படுவது ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர்.
விரதம் இருப்பதற்கு முன்தினம் வீட்டை சுத்தம் செய்துவிட வேண்டும். விரத தொடக்க நாள் முதல், ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும். விரதம் இருக்கும் ஒன்பது நாட்களும் ராம நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். ஒன்பது நாட்களும் ராமபிரானுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம் என நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வணங்குங்கள். ஒன்பது நாட்களும் நைவேத்தியம், மாலை அணிவிக்க முடியாதவர்கள், ராமநவமி அன்று மட்டுமாவது அதைச் செய்வது நல்லது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
“இறைவா! நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களை மட்டும் மற்ற திதிகளைப் போல் பார்க்காமல், மக்கள் ஒதுக்கி வைக்கிறார்களே. எங்களுக்கு இதில் இருந்து விமோசனம் இல்லையா?” என்றனர்.
அதைக் கேட்டு மனம் இரங்கிய மகாவிஷ்ணு, “மக்கள் உங்கள் இருவரையும் போற்றித் துதிக்கும் நாள் ஒன்று வரும். நான் உலக நன்மைக்காக பூமியில் அவதரிக்கும் போது, உங்களின் இந்த வருத்தம் மறைந்து போகும்” என்று அருள்புரிந்தார்.
அதன்படியே தசரதர்- கவுசல்யா தம்பதியருக்கு, நவமி திதியில் ராமனாக அவதரித்தார், மகாவிஷ்ணு. அதே போல் மற்றொரு அவதாரத்தில் வசுதேவர்-தேவகி தம்பதியருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணராக பிறந்தார். இந்த இரண்டு அவதாரங்களின் மூலமாக, அஷ்டமி மற்றும் நவமி திதிகள் பெரும் பேறு பெற்றன. இறைவனின் அவதாரங்கள் உதித்த அந்த இரண்டு நாட்களையும் மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.
நவமியில் பிறந்த ராமபிரான், இலங்கையை ஆட்சி செய்து வந்த ராவணனை வதம் செய்வதற்காகவே அவதரித்தவர். சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் பல சக்திவாய்ந்த வரங்களைப் பெற்றிருந்த ராவணன், அந்த வரங்களைக் கொண்டு, முனிவர்களையும், தேவர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யம் இன்றி துன்புறுத்தினான்.
கர்மவினையின் பயனாக, ராம அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக ராமபிரான் வனவாசம் செல்ல நேர்ந்தது. அவரோடு சீதையும், லட்சுமணரும் உடன் சென்றனர். வனத்தில் இருந்தபோது, சீதையின் அழகு பற்றி அறிந்த ராவணன், அவளைக் கடத்திச் சென்றான். இதனால் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் வந்தது. வானர வீரர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு, கடலில் பாலம் அமைத்து, இலங்கை சென்ற ராமர், ராவணனை அழித்து சீதையை மீட்டார். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்டது.
ராமபிரான் அவதரித்த நாளில் விரதம் இருப்பது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. இந்த விரதமானது, இரண்டு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சித்திரை மாதம் வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்களுக்கு கடைப் பிடிக்கும் விரதத்திற்கு ‘கர்ப்போஸ் தவம்’ என்று பெயர். நவமி திதியில் இருந்து அடுத்துவரும் ஒன்பது நாட்களுக்கு கடைப்பிடிக்கப்படுவது ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர்.
விரதம் இருப்பதற்கு முன்தினம் வீட்டை சுத்தம் செய்துவிட வேண்டும். விரத தொடக்க நாள் முதல், ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும். விரதம் இருக்கும் ஒன்பது நாட்களும் ராம நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். ஒன்பது நாட்களும் ராமபிரானுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம் என நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வணங்குங்கள். ஒன்பது நாட்களும் நைவேத்தியம், மாலை அணிவிக்க முடியாதவர்கள், ராமநவமி அன்று மட்டுமாவது அதைச் செய்வது நல்லது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
ராம நவமி அன்று விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும்.
ராமநவமி விரதம் இரண்டு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது, சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் முதல் வகையாகும். இதற்கு 'கர்ப்போஸ்தவம்' என்று பெயர். சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது இரண்டாவது வகை.
இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.
இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.
ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. இன்று ராமபிரானை விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். அனுமன் வழிபாட்டால் தம்பதியர் ஒற்றுமை உருவாகும்.
இதற்கு 'ஜன்மோதீஸவம்' என்று பெயர். இவ்வாறு ராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், ராமர் , பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, ராமநவமியை பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
விரதம் தொடங்கும் நாளன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் வரும் ஒவ்வொரு நாளும் சர்க்கரை பொங்கல், பாயசம் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைத்து வழிபடுவதுடன், ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.
இதனை ஒன்பது நாளும் சாத்த முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராம நவமி விரத நாட்களில் மட்டும் அல்லாத எல்லா காலங்களிலும், ராமஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்பு தகட்டில் வரைந்து வைத்தோ வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.
ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்- மேஷ ராசியிலும், செவ்வாய்- மகர ராசியிலும், குரு- கடக ராசியிலும், சுக்ரன்- மீன ராசியிலும், சனி- துலாம் ராசியிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்ற ஜாதகம் என்பதால் அவரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஜாதகத்தை வைத்து வழிபடுவதால், நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. இன்று ராமபிரானை விரதமிருந்து வழிபடுவதன் மூலமும், ராமருடன் இணைந்து சீதா, லட்சுமணர், அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமும் லட்சியங்கள் நிறைவேறும். அனுமன் வழிபாட்டால் தம்பதியர் ஒற்றுமை உருவாகும்.
இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி நாம் ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறைந்து விடும்.
உத்ய தாதித்ய ஸங்காசம் உதார புஜ விக்ரமம்
க்ந்த்தர்ப கோடி லாவண்யம் ஸர்வ வித்யா விசாரதம்
ஸ்ரீராம ஹ்ருதயா/நந்தம் பக்த கல்ப மஹிருஹம்
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம்
பயன்கள்: ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கிருபை உண்டாக இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறைந்து விடும்.
க்ந்த்தர்ப கோடி லாவண்யம் ஸர்வ வித்யா விசாரதம்
ஸ்ரீராம ஹ்ருதயா/நந்தம் பக்த கல்ப மஹிருஹம்
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம்
பயன்கள்: ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கிருபை உண்டாக இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறைந்து விடும்.
ராமனுக்கு உதவி செய்த சுக்ரீவனின் படைத் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் நளன். ராமனுக்கு நளன் உதவிய கதையை அறிந்து கொள்ளலாம்.
ராமனுக்கு உதவி செய்த சுக்ரீவனின் படைத் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் நளன். வானர வீரரான இவர், சிறந்த போர் வீரராக இருந்தார். இலங்கை சென்று சீதையை மீட்க வேண்டுமானால், கடலைக் கடக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
அந்த நேரத்தில் ஒரு முனிவரின் சாபத்தால் ‘எதை கடலில் எறிந்தாலும் அது மிதக்கும்’ என்று சாபம் பெற்றிருந்த நளன், கடலின் நடுவே பாலம் அமைக்க முன் வந்தார். தன்னைப் போலவே சாபம் பெற்றிருந்த நீலனுடன் சேர்ந்து அவர் பாலம் அமைக்கத் தொடங்கினார்.
அதன்படி மற்ற வாரன வீரர்கள் பாறைகளை கொண்டு வந்து குவிக்க, அவற்றை நளனும், நீலனும் தங்கள் கரங்களால் கடலில் போட்டனர். அந்த பாறைகள் மிதந்தன.
இவ்வாறாக கடலில் பாலம் அமைக்கப்பட்டது. ராவண யுத்தத்தில், அசுர படை தளபதிகளில் ஒருவரான தபனன் உள்பட பல அசுரர்களை, நளன் அழித்தார். அதே நேரம் ராவணனின் மகன் இந்திரஜித் வீசிய அம்பு ஒன்று, நளனை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார்.
அந்த நேரத்தில் ஒரு முனிவரின் சாபத்தால் ‘எதை கடலில் எறிந்தாலும் அது மிதக்கும்’ என்று சாபம் பெற்றிருந்த நளன், கடலின் நடுவே பாலம் அமைக்க முன் வந்தார். தன்னைப் போலவே சாபம் பெற்றிருந்த நீலனுடன் சேர்ந்து அவர் பாலம் அமைக்கத் தொடங்கினார்.
அதன்படி மற்ற வாரன வீரர்கள் பாறைகளை கொண்டு வந்து குவிக்க, அவற்றை நளனும், நீலனும் தங்கள் கரங்களால் கடலில் போட்டனர். அந்த பாறைகள் மிதந்தன.
இவ்வாறாக கடலில் பாலம் அமைக்கப்பட்டது. ராவண யுத்தத்தில், அசுர படை தளபதிகளில் ஒருவரான தபனன் உள்பட பல அசுரர்களை, நளன் அழித்தார். அதே நேரம் ராவணனின் மகன் இந்திரஜித் வீசிய அம்பு ஒன்று, நளனை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார்.
அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கனா படத்தின் விமர்சனம். #Kanaa #KanaaReview #AishwaryaRajesh #Sathyaraj #ArunrajaKamaraj
கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார் சத்யராஜ். குடும்பம், விவசாயம், கிரிக்கெட் மூன்றையும் உயிராக கருதுபவர். அவரது மகள் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒருமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்றுப்போக அதை பார்த்து சத்யராஜ் கண் கலங்குகிறார்.
தனது அப்பா கண் கலங்குவதை முதல்முறையாக பார்த்து வருத்தப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது அப்பா முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க தானே இந்திய அணிக்காக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும். அப்பா முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

மேலும் தனது கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் அண்ணன்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட தொடங்குகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி பசங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை விரும்பாத அவரது அம்மாவான ரமா அதற்கு முட்டுக்கட்டை போட நினைக்கிறார்.
மேலும் ஊர் மக்கள், சூழ்நிலை, தேர்வாளர்கள், சக அணி வீராங்கனை, எதிர் அணி என வரிசையாக முட்டுக்கட்டைகளை ஐஸ்வர்யா ராஜேஷ் சந்திக்க வேண்டி இருக்கிறது. அதேநேரத்தில் சத்யராஜும், விவசாயத்தில் சரிவை சந்திக்கிறார்.

அதேநேரத்தில் அதே கிராமத்தில் வசித்து வரும் நாயகன் தர்ஷனுக்கு ஐஸ்வர்யா மீது காதல் வருகிறது. தனது காதலை ஐஸ்வர்யாவிடம் சொல்ல பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்.
இவ்வாறாக தனக்கு வரும் தடைக்கற்களை எல்லாம், ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி படிக்கற்களாக மாற்றினார்? இந்திய அணியில் விளையாடி தனது அப்பவை எப்படி சந்தோஷப்படுத்துகிறார்? தர்ஷனின் காதல் என்னவானது? என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
தனது கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு முக்கிய படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கிரிக்கெட் விளையாடியதற்காக அம்மாவிடம் அடி வாங்குவது, பீல்டிங் செய்ய தெரியாமல் விழுவது என ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சாதாரண கிராமத்து பெண்ணாகவே தெரிவது அவரது நடிப்பின் சிறப்பு. அப்பாவிடம் பாசம், அம்மாவிடம் பிடிவாதம், அணிக்காக விளையாட முடியவில்லையே என்ற ஏக்கம் என அத்தனை உணர்ச்சிகளையும் அழகாக காட்டுகிறார். சோகத்தை மறைத்து அப்பாவிடம் பேசும் காட்சி அவரின் நடிப்புத்திறமைக்கு ஒரு பதம்.

விவசாயியாக விவசாயத்தின் அருமையை புரிய வைக்கும் கதாபாத்திரத்தில் சத்யராஜ் மனதில் பதிகிறார். வாழ்ந்து கெட்ட விவசாயியை பிரதிபலிக்கிறார். அவருக்கு இணையாக ரமா கிராமத்து சராசரி தாயாக தனது பாணியில் நடித்து கவர்கிறார்.
ஜெட் வேகத்தில் செல்லும் படம் நெல்சன் திலீப்குமாராக சிவகார்த்திகேயன் வந்த பிறகு ராக்கெட் வேகத்துக்கு பறக்கிறது. அவர் பேசும் தன்னம்பிக்கை வசனம் ஒவ்வொன்றும் பாடம். கடைசி அரை மணி நேரம் இருக்கை நுனிக்கே கொண்டு வருகிறார்.
இளவரசு, தர்ஷன், முனீஸ்காந்த், சவரி முத்து, ஆண்டனி பாக்கியராஜ் மற்றும் ஐஸ்வர்யாவின் கிரிக்கெட் தோழர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரு தமிழ்ப்பெண்ணின் கனவு, தமிழ்நாட்டு விவசாயியின் வேதனை நிலை என இரண்டு வெவ்வேறு கதையை ஒரே நேர்க்கோட்டில் அழகாக இணைத்து ரசிக்கத்தக்க பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாராட்டுக்கள். அழிந்து வரும் விவசாயத்தை மக்களுக்கு புரிய வைக்க விளையாட்டை தேர்ந்தெடுத்தது சிறப்பு. கிரிக்கெட்டுக்காக உயிரைக் கொடுக்கும், கொண்டாடும் நம் நாட்டில், சோறு போடும் விவசாயிகளையும், விவசாயத்தையும் கண்டுகொள்வதில்லையே என்ற ஆதங்கத்தை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்கள்.
விளையாட்டில் சாதிக்க ஆசைப்படும் தமிழ்ப்பெண்ணுக்கும், விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிக்கும் தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதற்கு இந்த படத்தை உதாரணமாக காட்டலாம். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருப்பது இயக்குநரின் திறமை.

“இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற நாங்க 11 பேர் இருக்கோம்... ஆனா இந்தியாவில் விவசாயத்த காப்பாற்ற யார் இருக்கா”, “ஒண்ணு லஞ்சம் கொடு, இல்ல மரியாதை கொடு... ஏன்யா ரெண்டுத்தையும் கொடுத்து கெடுக்குறீங்க”, “ஜெயிச்சுடுவேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது, ஜெயிச்சுட்டு சொன்னா தான் கேட்கும்” என வசனங்கள் ஒவ்வொன்றும் மனதில் பதிகிறது. கிரிக்கெட் போலவே சினிமாவும் கூட்டுமுயற்சி தான். அனைத்து துறைகளும் ஒருசேர கனாவை சாம்பியனாக்கி இருக்கின்றன.
திபுநிணன் தாமஸ் தனது இசையால் படத்தையே தாங்கி பிடித்து இருக்கிறார். பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசையில் நம்மை ஒன்ற வைக்கிறார். பசுமை, வெறுமை, வறுமை, தேசபக்தி அனைத்தையும் வண்ணங்களால் பிரித்து காட்டுகிறது தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு. ரூபனின் படத்தொகுப்பு கச்சிதம்.
மொத்தத்தில் `கனா' வெற்றி. #Kanaa #KanaaReview #AishwaryaRajesh #Sathyaraj #ArunrajaKamaraj #Darshan
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியின் இரு கண்களாக கருதப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலும், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுமாகும்.
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியின் இரு கண்களாக கருதப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலும், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுமாகும். வைணவம், சைவத்தின் அடையாளங்களாக கருதப்படும் இந்த இரு ஆலயங்களும் மிகவும் தொன்மை வாய்ந்தவையாகும். இவற்றின் வரலாறானது இதிகாச காலத்தில் இருந்தே தொடங்குகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் மூலவர் விமானம் ராமபிரானின் முன்னோர்களான இசுவாகு மன்னனால் வைகுண்டத்தில் இருந்து பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்டு அவன் வழிபட்டு வந்ததாகும். ராமபிரான் தனது பட்டாபிஷேகத்தில் பங்கேற்ற ராவணனின் உடன் பிறந்த சகோதரர் விபீஷணன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவன் வழிபடுவதற்கான அன்பு பரிசாக இந்த விமானத்தை வழங்கினார். இந்த விமானத்தை இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் தரையில் வைத்து விட்டு கரைபுரண்டு ஓடிய காவிரியில் நீராடி மகிழ்ந்து சந்தியாவதனம் செய்த போது பெருமாள் அந்த இடத்திலேயே நிலை கொண்டு விட்டார் என ஸ்ரீரங்கம் கோவில் தல வரலாறு கூறுகிறது.
இதே போன்ற ராமாயண இதிகாச தொடர்பு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும் உள்ளது. ராம பிரான் இலங்கை வேந்தன் ராவணனை போரில் கொன்று சீதையை மீட்டபோது ராவணனின் தம்பி கும்பகர்ணனும் கொல்லப்பட்டான். ராவணனும் அவனது தம்பியான கும்பகர்ணனும் அசுர குலத்தில் பிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் பிரம்ம குலமரபில் வந்தவர்கள் என்பதால் அவர்களை கொன்ற பாவம் ராமபிரானை பிரம்ம ஹத்தி தோஷமாக நிழலுருவில் தொடர்ந்தது.
இதில் ராவணனை கொன்ற பிரம்ம ஹத்தி தோஷத்திற்காக ராமன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை வடிவமைத்து நடத்திய பூஜையில் அந்த தோஷத்தில் இருந்து விடுதலையானார். பாவத்தில் இருந்தும் விடுதலை பெற்றார். ஆனால் கும்பகர்ணனை கொன்ற தோஷம் அவரை பின் தொடர்ந்தது. இதனால் ராமன் அயோத்தி செல்லும் பயணம் தடைபட்டது. பொன்னியாற்றங்கரையில் தவம் செய்து வந்த முனிவர்களிடம் ராமன் இதற்கு தீர்வு என்ன என கேட்க அதற்கு அவர்கள் ஞானபூமியாகிய வெண்ணாவல் காட்டில் (திருவானைக்காவல் கோவில் அமைந்துள்ள இடம்) சிவலிங்கம் அமைத்து சிவவழிபாடு செய்ய ஆலோசனை வழங்கினர்.
உடனே ராமனும் ஜம்பு முனிவர் திருக்கோவிலின் மேற்கு பகுதியில் குளம்வெட்டி அதன் தரையில் கோவில் எடுத்தார். அங்கதனை கொண்டு சிவலிங்கம் அமைத்து முறைப்படி சிவவழிபாடு செய்து தன்னை தொடர்ந்த பிரம்ம ஹத்தி பாவம் நீங்கப்பெற்றான். இதுவே ராமபிரான் வழிபட்ட இத்திருத்தலத்தின் வரலாறாகும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் மூலவர் விமானம் ராமபிரானின் முன்னோர்களான இசுவாகு மன்னனால் வைகுண்டத்தில் இருந்து பூலோகத்திற்கு கொண்டு வரப்பட்டு அவன் வழிபட்டு வந்ததாகும். ராமபிரான் தனது பட்டாபிஷேகத்தில் பங்கேற்ற ராவணனின் உடன் பிறந்த சகோதரர் விபீஷணன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவன் வழிபடுவதற்கான அன்பு பரிசாக இந்த விமானத்தை வழங்கினார். இந்த விமானத்தை இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் தரையில் வைத்து விட்டு கரைபுரண்டு ஓடிய காவிரியில் நீராடி மகிழ்ந்து சந்தியாவதனம் செய்த போது பெருமாள் அந்த இடத்திலேயே நிலை கொண்டு விட்டார் என ஸ்ரீரங்கம் கோவில் தல வரலாறு கூறுகிறது.
இதே போன்ற ராமாயண இதிகாச தொடர்பு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும் உள்ளது. ராம பிரான் இலங்கை வேந்தன் ராவணனை போரில் கொன்று சீதையை மீட்டபோது ராவணனின் தம்பி கும்பகர்ணனும் கொல்லப்பட்டான். ராவணனும் அவனது தம்பியான கும்பகர்ணனும் அசுர குலத்தில் பிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் பிரம்ம குலமரபில் வந்தவர்கள் என்பதால் அவர்களை கொன்ற பாவம் ராமபிரானை பிரம்ம ஹத்தி தோஷமாக நிழலுருவில் தொடர்ந்தது.
இதில் ராவணனை கொன்ற பிரம்ம ஹத்தி தோஷத்திற்காக ராமன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தை வடிவமைத்து நடத்திய பூஜையில் அந்த தோஷத்தில் இருந்து விடுதலையானார். பாவத்தில் இருந்தும் விடுதலை பெற்றார். ஆனால் கும்பகர்ணனை கொன்ற தோஷம் அவரை பின் தொடர்ந்தது. இதனால் ராமன் அயோத்தி செல்லும் பயணம் தடைபட்டது. பொன்னியாற்றங்கரையில் தவம் செய்து வந்த முனிவர்களிடம் ராமன் இதற்கு தீர்வு என்ன என கேட்க அதற்கு அவர்கள் ஞானபூமியாகிய வெண்ணாவல் காட்டில் (திருவானைக்காவல் கோவில் அமைந்துள்ள இடம்) சிவலிங்கம் அமைத்து சிவவழிபாடு செய்ய ஆலோசனை வழங்கினர்.
உடனே ராமனும் ஜம்பு முனிவர் திருக்கோவிலின் மேற்கு பகுதியில் குளம்வெட்டி அதன் தரையில் கோவில் எடுத்தார். அங்கதனை கொண்டு சிவலிங்கம் அமைத்து முறைப்படி சிவவழிபாடு செய்து தன்னை தொடர்ந்த பிரம்ம ஹத்தி பாவம் நீங்கப்பெற்றான். இதுவே ராமபிரான் வழிபட்ட இத்திருத்தலத்தின் வரலாறாகும்.
ராவணனால் கடத்தப்பட்ட சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம், ராமபிரானின் கணையாழியை அனுமன் கொடுத்த இடம், என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, இலங்கையில் உள்ள சீதாஎலியா திருத்தலம்.
ராவணனால் கடத்தப்பட்ட சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம், சீதை நீராடி தவமியற்றிய தலம், ராமபிரானின் கணையாழியை அனுமன் கொடுத்த இடம், தொல்லியல் சான்றுகள் நிறைந்த தலம், ராவணன் கோட்டைக்கு எதிரே அமைந்த தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, இலங்கையில் உள்ள சீதாஎலியா திருத்தலம்.
தல வரலாறு :
தமிழர்களுக்குக் கிடைத்துள்ள இரண்டு இதிகாசங்கள், ராமாயணமும், மகாபாரதமும் ஆகும். இவை இரண்டும் உண்மையே என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள், இந்தியாவிலும், இலங்கையிலும் நிறைந்துள்ளன. அந்த வகையில்.. சீதையை சிறைபிடித்த ராவணன், அவளை காவலில் வைத்த இடமே, சீதாஎலியா என்ற தலம். இங்கு அமைந்துள்ள கோவிலே, சீதை அம்மன் திருக்கோவில் ஆகும். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கு பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
கைகேயின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, மன்னன் தசரதன் தந்த வரங்களின் படி, ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்தது. ராமபிரானுடன் சீதையும் லட்சுமணனும் வனம் சென்றனர்.
ராமன் தண்டகாவனம் சென்று தங்கியபோது, ராவணனின் தங்கை சூர்ப்பனகை, ராமனின் அழகைக் கண்டு மயங்கினாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினாள். சீதை இருக்கும் வரை ஏக பத்தினி விரதனான ராமன் தன்னை மணம்புரிய மாட்டான் என்று எண்ணிய சூர்ப்பனகை, சீதையைத் தூக்கிச் செல்ல முயன்றாள். இதைக் கண்ட லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தெறிந்தான்.
ராவணன் அரசபைக்குச் சென்ற சூர்ப்பனகை, தனது அண்ணனிடம் புலம்பித் தீர்த்தாள். ‘அழகுமிக்க சீதையை உனக்காக கொண்டுவர முயன்று இந்த கதி ஏற்பட்டது’ என்று பொய் கூறினாள். சீதையின் பேரழகு, ராவணனின் கண்ணை மறைத்தது.
மாரீசன் என்ற தன் மாமனோடு, சீதை தங்கி யிருந்த பஞ்சவடிக்கு வந்தான். ராவணனுக்காகப் பொன் மான் வடிவம் எடுத்த மாரீசன், லட்சுமணனின் அம்பு பட்டு இறந்தான். என்றாலும், சந்நியாசி வடிவில் வந்த ராவணன், சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றான்.
தன் அரண்மனையில் வைத்துப் பார்த்தால் சீதையின் கோபம் குறையும் என்று நினைத்த ராவணனின் எண்ணம் ஈடேறவில்லை. வேறு வழியின்றி அசோக வனத்தில் சிறை வைத்தான் என்கிறது இந்த ஆலயத்தின் புராணக் கதை.
சீதை சிறைவைக்கப்பட்ட தலமே, சீதாஎலியா என்ற ஊராக விளங்குகிறது. அவ்வூரில் தான் சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. புராண காலத்தில் அசோக வனம் என்று குறிப்பிடப்படும் இந்தப் பகுதி, தற்போது இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா அருகில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இத்தலம் குழந்தைப்பேறு, தம்பதியர் ஒற்றுமைக்கு ஏற்றத் தலமாகத் திகழ்வதால், உள்நாட்டவர் பலரும் தவறாமல் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
ராமாயணம் தொடர்புடைய பழம்பெரும் தலங்களான ஹக்கலா, மலிகடென்னா, ராமராசாலா, சீத்தாவாகா, கெலனியா இன்றும் காணப்படுகிறது. இதேபோல, ராவணன் குகை, ராவண எல்லா எனும் இடங்கள் இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளன. ராவணனின் மற்றொரு கோட்டை தென்கிழக்கு கடற்கரைக் கோவிலாக இருக்கிறது.

ஆலய அமைப்பு :
இவ்வாலயம் கண்டி - நுவரெலியா நெடுஞ்சாலையை ஒட்டி, சீதை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த இடமே சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனம் ஆகும். சாலையில் இருந்து சில படிகள் கீழே இறங்கி தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். உள்ளே இரண்டு கருவறை விமானங்கள் உள்ளன. ஒன்றில் பழைய மூல மூர்த்திகளும், மற்றொன்றில் புதிய மூல மூர்த்திகளும் உள்ளன. எதிரில் அனுமன், ராமபிரானை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றார். இரண்டு கருவறைகளிலும் ராமபிரான், சீதை, லட்சுமணன் அருள்காட்சி வழங்குகின்றனர். ஆலயத்தின் தலமரமாக அசோக மரம் உள்ளது. பிரார்த்தனை செய்வோர் கட்டிய ஏராளமான துணி முடிச்சுகள் அதில் காணப்படுகின்றன.
ஆலயத்தின் பின்புறம் சீதை ஆறு ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மறுகரையில் அனுமன் பாதங்களின் சுவடு கள் பாறையில் அமைந்துள்ளன. அதன் மேலே சிறிய மேடை அமைந்து, அதில் ராமபிரான் கொடுத்த கணையாழியை அனுமன் சீதையிடம் தரும் காட்சி, சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்புறம் மலைகள் நிறைந்திருக்க, அதில் அசோக மரங்கள் நிறைந்துள்ளன.
ஆலயத்தை ஒட்டிய ஒரு பகுதி மண்ணின் நிறம் கருமை நிறமாகவும், மறுபகுதி இயல்பான நிறத்திலும் அமைந்துள்ளது. இதற்குக் காரணம், இலங்கையை அனுமன் எரித்ததால் ஏற்பட்டது என்ற ஐதீகம் கூறப்படுகிறது.
கோவில் நிர்வாகம் தனியார் வசம் இருக்கிறது. இங்குள்ள அர்ச்சகர்கள் பெரும்பாலானோர் தமிழகத்தில் இருந்து வந்து செல்பவர்களாக உள்ளனர். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 2 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ராமாயணத்தைக் கதையாகப் படித்து, படமாகப் பார்த்த நமக்கு, அசோக வனத்தையும், சீதை அம்மன் திருக்கோவிலையும் கண்டு வணங்கி, அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களை எல்லாம் பார்த்து திரும்பும் போது, நம் மனதிற்குள்ளும் ராமாயண காலத்தில் வாழ்ந்த பிரமிப்பு ஏற்படும். அந்த மெய்சிலிர்ப்பை அங்கு செல்லும் எவராலும் தவிர்க்க இயலாது.
தேங்காய் எப்படி உடைபட வேண்டும்?:
வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரி பாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். சிறிய மூடியும், பெரிய மூடியும் உடைந்தால் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும். உள்ளே பூ இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும். குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள். எக்காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை மூடிப் பார்க்க கூடாது. ஆனால் சிதறு காய் உடைக்கும் பொழுது நன்றாகச் சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக் கூடாது. சிறு, சிறு துண்டுகளாகச் சிதறி ஓடினால் தான் நமது துன்பங்களும் சிதறும் என்பது ஐதீகம்.
வாழ்வில் வசந்தம் உருவாக...
சூரியனுடைய அருளைப் பெற விரும்புபவர்கள் சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் சூரிய வழிபாட்டைத் தினமும் மேற்கொள்ள வேண்டும். அதோடு ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரை நேரத்தில் கோதுமை தானமும், ஏழு குதிரைகளுக்கு ஏழு கைப்பிடி கொள்ளும் தானம் கொடுத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் வசந்தம் உருவாகும்.
அமைவிடம் :
இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில், கண்டி- நுவரெலியா நெடுஞ்சாலையில் உள்ளது சீதாஎலியா என்ற ஊர். இந்த ஊரின் நெடுஞ்சாலையை ஒட்டியே சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. நுவரெலியா, இலங்கை நாட்டின் மலைவாசத் தலம் ஆகும். கண்டியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், கொழும்பில் இருந்து 105 கிலோமீட்டர் தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலும் சீதா எலியா என்ற ஊர் அமைந்திருக்கிறது.
தல வரலாறு :
தமிழர்களுக்குக் கிடைத்துள்ள இரண்டு இதிகாசங்கள், ராமாயணமும், மகாபாரதமும் ஆகும். இவை இரண்டும் உண்மையே என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள், இந்தியாவிலும், இலங்கையிலும் நிறைந்துள்ளன. அந்த வகையில்.. சீதையை சிறைபிடித்த ராவணன், அவளை காவலில் வைத்த இடமே, சீதாஎலியா என்ற தலம். இங்கு அமைந்துள்ள கோவிலே, சீதை அம்மன் திருக்கோவில் ஆகும். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கு பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
கைகேயின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, மன்னன் தசரதன் தந்த வரங்களின் படி, ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்தது. ராமபிரானுடன் சீதையும் லட்சுமணனும் வனம் சென்றனர்.
ராமன் தண்டகாவனம் சென்று தங்கியபோது, ராவணனின் தங்கை சூர்ப்பனகை, ராமனின் அழகைக் கண்டு மயங்கினாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினாள். சீதை இருக்கும் வரை ஏக பத்தினி விரதனான ராமன் தன்னை மணம்புரிய மாட்டான் என்று எண்ணிய சூர்ப்பனகை, சீதையைத் தூக்கிச் செல்ல முயன்றாள். இதைக் கண்ட லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தெறிந்தான்.
ராவணன் அரசபைக்குச் சென்ற சூர்ப்பனகை, தனது அண்ணனிடம் புலம்பித் தீர்த்தாள். ‘அழகுமிக்க சீதையை உனக்காக கொண்டுவர முயன்று இந்த கதி ஏற்பட்டது’ என்று பொய் கூறினாள். சீதையின் பேரழகு, ராவணனின் கண்ணை மறைத்தது.
மாரீசன் என்ற தன் மாமனோடு, சீதை தங்கி யிருந்த பஞ்சவடிக்கு வந்தான். ராவணனுக்காகப் பொன் மான் வடிவம் எடுத்த மாரீசன், லட்சுமணனின் அம்பு பட்டு இறந்தான். என்றாலும், சந்நியாசி வடிவில் வந்த ராவணன், சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றான்.
தன் அரண்மனையில் வைத்துப் பார்த்தால் சீதையின் கோபம் குறையும் என்று நினைத்த ராவணனின் எண்ணம் ஈடேறவில்லை. வேறு வழியின்றி அசோக வனத்தில் சிறை வைத்தான் என்கிறது இந்த ஆலயத்தின் புராணக் கதை.
சீதை சிறைவைக்கப்பட்ட தலமே, சீதாஎலியா என்ற ஊராக விளங்குகிறது. அவ்வூரில் தான் சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. புராண காலத்தில் அசோக வனம் என்று குறிப்பிடப்படும் இந்தப் பகுதி, தற்போது இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா அருகில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இத்தலம் குழந்தைப்பேறு, தம்பதியர் ஒற்றுமைக்கு ஏற்றத் தலமாகத் திகழ்வதால், உள்நாட்டவர் பலரும் தவறாமல் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
ராமாயணம் தொடர்புடைய பழம்பெரும் தலங்களான ஹக்கலா, மலிகடென்னா, ராமராசாலா, சீத்தாவாகா, கெலனியா இன்றும் காணப்படுகிறது. இதேபோல, ராவணன் குகை, ராவண எல்லா எனும் இடங்கள் இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளன. ராவணனின் மற்றொரு கோட்டை தென்கிழக்கு கடற்கரைக் கோவிலாக இருக்கிறது.
சீதா எலியா ஆலயத்தின் எதிரே பிரமாண்ட மலை அமைந்துள்ளது. அதன் உச்சியில் ராவணன் கோட்டையும், அரண் மனையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மலையின் முன்பகுதியைப் பார்த்தால் அது அனுமனின் முகம் போல் காட்சி தருவது வியப்பாக உள்ளது.

ராமர், சீதையுடன் லட்சுமணன்
ஆலய அமைப்பு :
இவ்வாலயம் கண்டி - நுவரெலியா நெடுஞ்சாலையை ஒட்டி, சீதை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த இடமே சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனம் ஆகும். சாலையில் இருந்து சில படிகள் கீழே இறங்கி தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். உள்ளே இரண்டு கருவறை விமானங்கள் உள்ளன. ஒன்றில் பழைய மூல மூர்த்திகளும், மற்றொன்றில் புதிய மூல மூர்த்திகளும் உள்ளன. எதிரில் அனுமன், ராமபிரானை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றார். இரண்டு கருவறைகளிலும் ராமபிரான், சீதை, லட்சுமணன் அருள்காட்சி வழங்குகின்றனர். ஆலயத்தின் தலமரமாக அசோக மரம் உள்ளது. பிரார்த்தனை செய்வோர் கட்டிய ஏராளமான துணி முடிச்சுகள் அதில் காணப்படுகின்றன.
ஆலயத்தின் பின்புறம் சீதை ஆறு ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மறுகரையில் அனுமன் பாதங்களின் சுவடு கள் பாறையில் அமைந்துள்ளன. அதன் மேலே சிறிய மேடை அமைந்து, அதில் ராமபிரான் கொடுத்த கணையாழியை அனுமன் சீதையிடம் தரும் காட்சி, சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்புறம் மலைகள் நிறைந்திருக்க, அதில் அசோக மரங்கள் நிறைந்துள்ளன.
ஆலயத்தை ஒட்டிய ஒரு பகுதி மண்ணின் நிறம் கருமை நிறமாகவும், மறுபகுதி இயல்பான நிறத்திலும் அமைந்துள்ளது. இதற்குக் காரணம், இலங்கையை அனுமன் எரித்ததால் ஏற்பட்டது என்ற ஐதீகம் கூறப்படுகிறது.
கோவில் நிர்வாகம் தனியார் வசம் இருக்கிறது. இங்குள்ள அர்ச்சகர்கள் பெரும்பாலானோர் தமிழகத்தில் இருந்து வந்து செல்பவர்களாக உள்ளனர். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 2 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ராமாயணத்தைக் கதையாகப் படித்து, படமாகப் பார்த்த நமக்கு, அசோக வனத்தையும், சீதை அம்மன் திருக்கோவிலையும் கண்டு வணங்கி, அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களை எல்லாம் பார்த்து திரும்பும் போது, நம் மனதிற்குள்ளும் ராமாயண காலத்தில் வாழ்ந்த பிரமிப்பு ஏற்படும். அந்த மெய்சிலிர்ப்பை அங்கு செல்லும் எவராலும் தவிர்க்க இயலாது.
தேங்காய் எப்படி உடைபட வேண்டும்?:
வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரி பாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். சிறிய மூடியும், பெரிய மூடியும் உடைந்தால் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும். உள்ளே பூ இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும். குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள். எக்காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை மூடிப் பார்க்க கூடாது. ஆனால் சிதறு காய் உடைக்கும் பொழுது நன்றாகச் சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக் கூடாது. சிறு, சிறு துண்டுகளாகச் சிதறி ஓடினால் தான் நமது துன்பங்களும் சிதறும் என்பது ஐதீகம்.
வாழ்வில் வசந்தம் உருவாக...
சூரியனுடைய அருளைப் பெற விரும்புபவர்கள் சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் சூரிய வழிபாட்டைத் தினமும் மேற்கொள்ள வேண்டும். அதோடு ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரை நேரத்தில் கோதுமை தானமும், ஏழு குதிரைகளுக்கு ஏழு கைப்பிடி கொள்ளும் தானம் கொடுத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் வசந்தம் உருவாகும்.
அமைவிடம் :
இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில், கண்டி- நுவரெலியா நெடுஞ்சாலையில் உள்ளது சீதாஎலியா என்ற ஊர். இந்த ஊரின் நெடுஞ்சாலையை ஒட்டியே சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. நுவரெலியா, இலங்கை நாட்டின் மலைவாசத் தலம் ஆகும். கண்டியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், கொழும்பில் இருந்து 105 கிலோமீட்டர் தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலும் சீதா எலியா என்ற ஊர் அமைந்திருக்கிறது.
சுந்தரகாண்ட பாராயணத்தை எளிய வழியில் தினமும் முழுமையாக வாசித்து பலன் பெற, இதோ… இந்த எளிய பாடலைப் படித்து மகிழுங்கள்.
ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண பரத சத்ருக்ண அனுமத் சமேதா சரணம்
வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் 66 சர்க்கங்களை உடையது. இதை தினமும் பாராயணம் செய்வது என்பது சிரமம். எனவே, சுந்தரகாண்ட பாராயணத்தை எளிய வழியில் தினமும் முழுமையாக வாசித்து பலன் பெற, இதோ… இந்த எளிய பாடலைப் படித்து மகிழுங்கள்.
சுந்தரகாண்ட பாராயணம் மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் உரிய பலன் கிடைக்கும்.
ஸ்ரீ ராம ஜெயம்
சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான்
இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி
இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான்.
அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.
இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்.
சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்
சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்
ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க !
கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு
அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்
ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.
மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து
ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ
அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை
அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.
அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்
அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு.
(எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ
அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே
உனை பணிகின்றோம் பலமுறை)
ஸ்ரீமத் ராமாயணம்/ சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை/ சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும். ‘ராம’ நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே பிரஸன்னமாவார் என்பது ஐதிகம். அவர் அமருவதற்காகத்தான் அந்த ஆசனம்.
ஆஞ்சநேயருக்கு குங்குமப் பொட்டு வைத்து வழிபடும்பொழுது சிறிது வெண்ணெயை பொட்டாக வைத்து, பிறகு அதன்மேல் குங்குமப் பொட்டு வைத்தால், காய்ந்தபின்னும் குங்குமம் உதிராமல் அழகாகக் காட்சியளிக்கும்.
வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் 66 சர்க்கங்களை உடையது. இதை தினமும் பாராயணம் செய்வது என்பது சிரமம். எனவே, சுந்தரகாண்ட பாராயணத்தை எளிய வழியில் தினமும் முழுமையாக வாசித்து பலன் பெற, இதோ… இந்த எளிய பாடலைப் படித்து மகிழுங்கள்.
சுந்தரகாண்ட பாராயணம் மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் உரிய பலன் கிடைக்கும்.
ஸ்ரீ ராம ஜெயம்
சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான்
இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி
இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான்.
அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.
இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்.
சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்
சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்
ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க !
கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு
அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்
ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.
மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து
ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ
அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை
அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.
அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்
அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு.
(எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ
அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே
உனை பணிகின்றோம் பலமுறை)
ஸ்ரீமத் ராமாயணம்/ சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை/ சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும். ‘ராம’ நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே பிரஸன்னமாவார் என்பது ஐதிகம். அவர் அமருவதற்காகத்தான் அந்த ஆசனம்.
ஆஞ்சநேயருக்கு குங்குமப் பொட்டு வைத்து வழிபடும்பொழுது சிறிது வெண்ணெயை பொட்டாக வைத்து, பிறகு அதன்மேல் குங்குமப் பொட்டு வைத்தால், காய்ந்தபின்னும் குங்குமம் உதிராமல் அழகாகக் காட்சியளிக்கும்.