search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நன்மைகள் தரும் ராமநாமம்...
    X

    நன்மைகள் தரும் ராமநாமம்...

    • மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ராம அவதாரம் மிகவும் முக்கியமானது.
    • புரட்டாசி மாதம் முழுவதும் வீடுகளில் ராமாயணம் படிப்பது விசேஷம்.

    வாரந்தோறும் சனிக்கிழமை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் மகாவிஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

    மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ராம அவதாரம் மிகவும் முக்கியமானது. ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என்று வாழ்ந்தவர் அவர். புரட்டாசி மாதம் முழுவதும் வீடுகளில் ராமாயணம் படிப்பது விசேஷம். இல்லத்து பூஜை அறையில் ராமபிரானின் பட்டாபிஷேக படம் வைத்து, அதன் முன்பாக அமர்ந்து ராமாயணத்தை படிக்க வேண்டும்.

    இப்படி ராமாயணம் படிப்பவர்களும், அதை கேட்பவர்களும் ராமபிரானின் அருளைப் பெற்று சிறப்புற வாழ்வர். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வந்தால், நல்லவை அனைத்தும் நடைபெறும்.

    Next Story
    ×