search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reviews"

    • ரீ-ரிலீஸ் படங்கள் ரசிகர்களுக்கு வரப் பிரசாதமாக அமைகிறது.
    • ஃப்லிக்ஸ் (iFLICKS) என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தினத்தந்தி.

    படங்களை திரையரங்குகளில் பார்ப்பதே ஒரு சுகம். மனிதன் எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும் அவனை மூன்று மணி நேரம் கவலைகளை மறக்கச் செய்து , அவன் மீண்டும் இயங்குவதற்கான உத்வேகத்தை சினிமா தருகிறது எனலாம். ஒருவன் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்றாலும், நண்பர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்றாலும், தன் காதலியுடன் நேரம் செலவிட வேண்டும் என்றாலும் அவன் திரையரங்கத்திற்கே செல்கிறான். காதல், குடும்பம், நட்பு என மூன்றிலும் பொதுவாக இருக்கும் ஒன்று சினிமா. அதிலும் திரையரங்கம்.

    தற்போது வெளியாகும் படங்கள் எல்லாம் ஒரு மாத இடைவெளிக்கு பின் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதனால் மக்கள் சிலரிடம் படங்களை திரையரங்குகளில் சென்று பார்க்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படத்திற்கு மட்டும் திரையரங்களில் பார்க்கும் பழக்கம் சமீபத்தில் உருவாகியுள்ளது. இதனால் சாதாரண படங்களும், குறைந்த பட்ஜட் படங்களும் மக்கள் பார்வைக்கு வருவதற்கு முன்னரே காணாமல் போய்விடுகிறது.

    என்னதான் படங்கள் ஓடிடியில் வெளியானாலும் அதனை திரையரங்கில் மக்களுடன் மக்களாக அமர்ந்து பார்க்கும் அனுபவத்தை தருவதில்லை. சமீபத்தில் பல தமிழ்ப் படங்கள் ரீ - ரிலீஸ் செய்யப்படுகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான 3 , மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி. கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, விருமாண்டி. விக்ரம் நடித்த அந்நியன், சாமி. ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி. சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைபடம் எல்லாம் 10 - 15 வருடங்களுக்கு முன்னால் வந்த திரைபடமாக் இருந்தாலும், ஓடிடி தளங்களில் இருந்தாலும் கூட மக்கள் திரையரங்குகளில் வந்து பார்க்க விரும்புகின்றனர்.

    படங்கள் வெளியான போது திரையரங்கிற்கு சென்று பார்க்க முடியாமல் போனதால், அப்பொழுது சிறு வயதில் இருந்த காரணத்தினாலும், இம்மாதிரி ரீ-ரிலீஸ் படங்கள் ரசிகர்களுக்கு வரப் பிரசாதமாக அமைகிறது.

    அதனை ஊக்குவிக்கும் வகையில் ஐஃப்லிக்ஸ் (iFLICKS) என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தினத்தந்தி. இத்தளத்தில் உங்கள் ஊரில் உள்ள திரையரங்குகளைப் பற்றியும், அத்திரையரங்குகளில் என்ன படங்கள் வெளியாகியுள்ளது என்பது பற்றிய தகவல்கள் இருக்கும்.

    மேலும், சமீபத்தில் வெளியான படங்களைப் பற்றியும் அதன் நடிகர்கள், படக்குழுவினர் பற்றிய தகவல்களும், படத்தின் விமர்சனங்களையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

    இப்பொழுது நாம் பட டிக்கெட்டுகளை பெறுவதற்கு கார்ப்பரேட் தளங்களை உபயோகித்து வருகிறோம். அதில் பெரும்பான்மையாக மாலில் உள்ள தியேட்டர்களும், பிரபலமான தியேட்டர்களும் மட்டும் தான் காண்பிக்கப்படுகிறது.

    ஆனால், ஐபில்க்ஸ் தளத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் என்ன படம், எத்தனை மணிக்கு திரையிடப்படும் என்ற தகவல்களை அறிந்துகொள்ள முடியும். பெரிய திரையரங்குகள் முதல், சாதாரண திரையரங்குகள் வரை இதில் பட்டியலிடப்படும். விரைவில் சினிமா டிக்கெட்டுகளை புக்-செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    • தமிழக அரசு அறிவித்தபடி துறையூர் நகராட்சி கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்டது
    • முதல் மதிப்பூதியத்தை துறையூர் நகராட்சி கமிஷனர் நாராயணன் வழங்கினார்

    துறையூர்,

    தமிழக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போதைய திமுக அரசு, நகர்மன்ற தலைவருக்கு ரூபாய் 15,000, துணைத் தலைவருக்கு பத்தாயிரம், நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் மதிப்பூதியமாக வழங்க உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக துறையூர் நகர மன்ற கூட்ட அரங்கில், மதிப்பூதியம் வழங்குவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது நகராட்சி ஆணையர் (பொ) நாராயணன், தமிழக அரசால் வழங்கப்பட்ட மதிப்பூதியத்திற்கான காசோலைகளை நகர மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதிப்பூதியத்திற்கான காசோலைகளைப் பெற்றுக் கொண்ட நகர்மன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.

    ×