search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "christians"

    • 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது
    • கேரளாவின் அங்கமாலியில் உள்ள சஞ்ஜோபுரம் தேவாலயத்தில் ‘மணிப்பூர் கலவரம்’ தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது

    'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு (2023) மே மாதம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது. அந்த படத்தின் கதை சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த படம் வெளியானபோது, அந்த படம் ஓடிய தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தூர்தர்ஷன் டெலிவிஷனில் மார்ச் 5-ம் தேதி) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதற்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் பதிவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நேஷனல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த மட்டுமே முயல்கிற திரைப்படத்தை ஒளிபரப்புவதை தூர்தர்ஷன் கைவிடவேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

    சர்ச்சைக்கு உள்ளான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வெளியிட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மணிப்பூர் ஸ்டோரி ஆவணப்படத்தை கேரளாவில் உள்ள தேவாலயங்களில் திரையிட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கேரளாவின் அங்கமாலியில் உள்ள சஞ்ஜோபுரம் தேவாலயத்தில் 'மணிப்பூர் கலவரம்' தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது இந்த சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.

    கற்பனையான 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடும்போது, ஏன் உண்மை சம்பவமான 'மணிப்பூர் கலவர ஸ்டோரியை மக்களுக்கு காண்பிக்க கூடாது? மக்கள் மணிப்பூரில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கேரளாவில் கிறிஸ்தவர்கள் 18% உள்ளனர். அங்கு அண்மை காலமாக குறிப்பிடத்தக்க கிறிஸ்தவர்கள் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆகையால் மணிப்பூர் கலவர ஆவணப்படம் கேரளாவில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    • இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
    • மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் ஈஸ்டர் பண்டிகையை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய உள்ளதால் 30, 31 (சனி, ஞாயிறு) இரு நாட்களும் அரசு வேலை நாள் என மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூர் பாஜக அரசின் இந்த உத்தரவிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.

    மாநில அரசின் இந்த உத்தரவு கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அம்மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.

    உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று நாகா மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    இதனையடுத்து, ஈஸ்டர் ஞாயிறு வேலை நாள் என்ற அறிவிப்பை மணிப்பூர் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

    2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர்
    • இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறு வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய உள்ளதால் 30, 31 (சனி, ஞாயிறு) இரு நாட்களும் அரசு வேலை நாள் என மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநில அரசின் இந்த உத்தரவு கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அம்மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.

    உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று நாகா மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
    • கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

    சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்–கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.


    கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்துள்ளது.

    இன்றும் ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பர்ண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்களின் ஆன்மாக்க ளின் நினைவு நாளை கல்லறை திருநாளாக கடை பிடிக்கிறார்கள்.
    • இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் காலை யிலேயே தங்களது உறவி னர்களின் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

    நெல்லை:

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்களின் ஆன்மாக்க ளின் நினைவு நாளை கல்லறை திருநாளாக கடை பிடிக்கிறார்கள்.

    கல்லறை திருநாள்

    இந்த நாளில் இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு கல்லறைகளில் மலர் அஞ்சலி செலுத்துவா ர்கள். இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் காலை யிலேயே தங்களது உறவி னர்களின் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

    கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பாளையில் கல்லறை திருநாளை யொட்டி சீவலப்பேரி கல்லறை தோட்டத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் கல்லறையை சுத்தம் செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவினர். பின்னர் அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்கள் உள்ளிட்டவை களை படைத்து அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் கல்லறை தோட்டம் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் முன்னோர்கள் நினைவாக சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. மாநகரில் பாளை, என்.ஜி.ஓ. காலனி, தச்சநல்லூர், சந்திப்பு, டவுன் உள்ளிட்ட இடங்களில் கல்லறை திருநாள் அனு சரிக்கப்பட்டது .

    இதுபோன்று மாவட்டத்திலும் கிறிஸ்தவ மக்கள் கல்லறை தோட்டங்க ளுக்கு சென்று வழிபட்டனர்.

    நெல்லை சந்திப்பு உடையார்பட்டி திரு இருதய ஆலயத்திற்கு சொந்தமான மணிமூர்த்தீஸ்வரம் கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லறைகளை பங்குத்தந்தை மைக்கேல் ராசு புனித நீர் கொண்டு தெளித்து ஜெபம் செய்தார்.இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், கீழப்பாவூர்,பஞ்சபாண்டியூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆர்.சி. கல்லறை தோட்டங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

    பாவூர்சத்திரம் புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    • பாலர் ஞாயிறு பண்டிகை நாளில் தேவாலயங்களில் சிறப்பு பவனிகள் நடைபெறுவது வழக்கம்.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

    நெல்லை:

    சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் ஆண்டுதோறும் பாலர் ஞாயிறு பண்டிகை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நாளில் தேவாலயங்களில் சிறப்பு பவனிகள் நடைபெறுவது வழக்கம். மேலும், ஆராதனையின் வேதபாட வாசிப்பு, பாடல்கள் ஆகியவற்றை சிறுவர்- சிறுமிகளே செய்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான பாலர் ஞாயிறு பண்டிகை சுதந்தரம் - கடவுளின் பரிசு என்ற தலைப்பில் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ. தேவாலயங்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்றன.

    மேலப்பாளையம் அருகே சேவியர்காலனி சேகரத்திற்கு உள்பட்ட தூய பேதுரு ஆலயம் சார்பில் நடைபெற்ற பாலர் ஞாயிறு பவனிக்கு சேகர தலைவர் காந்தையா தலைமை தாங்கினார். சபை ஊழியர் கிறிஸ்டோ பர் முன்னிலை வகித்தார்.

    தேவாலயத்தில் இருந்து ஞாயிறு பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் பவனியாக சென்றனர். காமராஜர் சாலை, அந்தோணியார் ஆலய சாலை உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

    தொடர்ந்து உலகின் அனைத்து பகுதியிலும் வசிக்கும் குழந்தைகள் கல்வி, ஆரோக்கியத்தில் சிறந்து விளங்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் மழைவளம் பெருக வேண்டியும், சமாதானம், சமத்துவம் உருவாக வேண்டி யும் மழலைகள் ஜெபம் செய்தனர்.

    • வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.
    • மணிப்பூர் மாநில மக்களின் துயர் நீங்க அருள்நிறை ஆலயத்தில் திருப்பலி நிறை வேற்றப்பட்டது.

    புதுச்சேரி:

    மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.

    இதனை வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தல பங்குத் தந்தை ஆல்பர்ட் துவக்கி வைத்தார். லூர்தன்னை பள்ளி தலைமையாசிரியர் ஆல்வின் அன்பரசு முன்னிலை வகித்தார். மாதா கோவில் வீதி, ஒதியம்பட்டு சாலை வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற வர்கள், மணிப்பூர் மாநில கிறிஸ்தவர்களின் துயர் நீங்கி, அங்கு அமைதி நிலவிட வேண்டுமென மெழுகுதிரி ஏந்தி செபமாலை செபித்தனர்.

    இதன்பின்னர் மாதா திருக்குளத்தை சுற்றி ஊர்வலம் முடிவடைந்த பின்னர் ஆலய முற்றத்தில் பங்குத்தந்தை ஆல்பர்ட் தலைமையில் மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக மணிப்பூர் மாநில மக்களின் துயர் நீங்க அருள்நிறை ஆலயத்தில் திருப்பலி நிறை வேற்றப்பட்டது.

    • ஊர்வலத்தை பங்குதந்தை அலாய்சியஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.
    • சிறுவர்- சிறுமியர், பெண்கள் உள்பட திரளானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    ஆறுமுகநேரி:

    மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டி ஆறுமுகநேரியில் கிறிஸ்தவர்கள் இன்று ஊர்வலம் நடத்தினர். ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தின் சார்பில் நடந்த இந்த ஊர்வலத்தை பங்குதந்தை அலாய்சியஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஊர் தலைவர் செல்வன் முன்னிலை வகித்தார். சிறுவர்- சிறுமியர், பெண்கள் உள்பட திரளானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கத்தோலிக்க கோவில் தெரு மேட்டுவிளை, மேல தெரு உள்பட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் மடத்துவிளை பங்குமக்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் சரிபாதி அளவுக்கு சிறுபான்மையினர் வாழ்ந்து வருகிறோம்
    • சுய லாபத்துக்காக சிறுபான்மையினர்கள் மீது வேண்டும் என்றே பிரச்சினை செய்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தின் நிறுவனர் சரவணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் சரிபாதி அளவுக்கு சிறுபான்மையினர் வாழ்ந்து வருகிறோம்.இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே தங்களது சுய லாபத்துக்காக சிறுபான்மையினர்கள் மீது வேண்டும் என்றே பிரச்சினை செய்து வருகின்றனர். கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள் புகுந்து மதபோதகர்களைத் தாக்குவது, ஜெபவீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல், பொருள்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் பல சபை வழிபாடுகளுக்காக கட்டடம் கட்டவும், வழிபாடு நடத்தவும் அனுமதி கோரி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுக்கள் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் வீடு கட்டுவதற்காக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் அனுமதி கேட்டால் வழிபாடு நடத்தமாட்டேன் என்று எழுதிக்கேட்கிறார்கள்.

    ஆகவே கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எங்களது வழிபாட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கல்லறைக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
    • குடும்பத்தில் இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்வதற்கு அவர்களுக்கென்று தனியாக எந்த இடமும் சுற்றுவட்டார பகுதிகளில் இல்லை.

    புதுச்சேரி:

    உழவர்கரை, மூலக்குளம், எம்.ஜி.ஆர் நகர், பிச்சாவீராம்பட்டு, தக்ககுட்டை, அரும்பார்த்தபுரம், ஒதியம்பட்டு, ஜெ.ஜெ. நகரை சுற்றியுள்ள இடங்களில் கிறிஸ்தவ சமுதாய பொதுமக்கள் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்வதற்கு அவர்களுக்கென்று தனியாக எந்த இடமும் சுற்றுவட்டார பகுதிகளில் இல்லை.

    தக்ககுட்டை என்கிற இடத்திற்கு பின்புறம் ஒரு இடம் உள்ளதை அறிந்த அவர்கள் இது குறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் அவர்கள் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கல்லறைக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரையை மனுவின் வாயிலாக கோரிக்கை வைத்தார்.

    அவருடன் சிவசங்கர் எம்.எல்.ஏ, அந்தோணி தாஸ், ஜோசப், எட்வின், மணிகண்டன், டேவிட், செல்வகுமார் ஆகியோர் சென்றனர்.

    • புதுவை காங்கிரஸ் வலியுறுத்தல்
    • மத்திய அரசு முன்வர வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறை வேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு, அரசியல் சாசனத்தின் சட்டப்படி அளிக்கப்படுகின்ற, உதவிகள், உரிமைகள், பாதுகாப்புகள், மற்றும் இட ஒதுக்கீடுகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ள அட்டவணை இனத்தில் இருந்த தலித் கிறிஸ்தவ மக்களுக்கும் கிடைக்க வழி செய்யும் ஒரு அரசியல் திருத்த சட்டத்தை நிறைவேற்றி தர மத்திய அரசு முன்வர வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

    இதேபோல புதுவை சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அனுப்ப வேண்டும். தலித் அல்லது ஆதிதிராவிட அட்டவணை ஜாதியில் இருந்த மக்கள், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்பும் அவர்களது சமூக மற்றும் பொருளாதார நிலை அப்படியே உள்ளது. இந்து மதத்தில் இருந்து மாறிய கிறிஸ்தவ மக்களையும் தீண்டாமை எண்ணத்தோடுதான் பார்க்கின்றனர். கிறிஸ்தவ மதத்தில் தீண்டாமை இல்லை என்பதை காரணம் காண்பி த்து அவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்படக்கூடாது. இட ஒதுக்கீடுகளே இல்லாமல் அனைத்து மக்களுக்கும் பொருளாதார அடிப்படையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கொடுக்க முன்வந்தால், இந்த தலித் கிறிஸ்தவர்கள் நிச்சயமாக அதிக ஒதுக்கீடு பெறுவார்கள்.

    கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித் ஆதிதிராவிட மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைகளுக்கு ஏற்ப, பூர்வீக இந்தியர்களா கிய இவர்களுக்கும் உதவு வதுதான் மனித நேயமாகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுகின்றனர்.
    • ஒழுக்கம், கட்டுப்பாடு சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

    திருப்பூர் :

    ஏசு சிலுவையில் அறையுண்டு இறந்த நிகழ்வை புனித வெள்ளியன்று நினைவு கூர்ந்த நிலையில் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுகின்றனர். அதன்படி இன்று ஈஸ்டர் பெருநாளை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.

    இதையொட்டி திருப்பூர் புனித ஜோசப், கேத்ரீன், அவிநாசி புனித தாமஸ், சேவூர் புனித லூர்து அன்னை ஆலயம் உட்பட அனைத்து ஆலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆலயங்களில் நேற்று நள்ளிரவு 12மணிக்கு ஈஸ்டர் திருப்பலி நடத்தப்பட்டது. திருப்பலியில் மெழுகுவர்த்தி கையில் ஏந்தி, தீமையின் சக்தி தலைதூக்க கூடாது என்ற வேண்டுதலை பக்தர்கள் முன்வைத்தனர்.

    இது குறித்து பங்குதந்தைகள் கூறுகையில், கடந்த பிப்ரவரி 22-ந்தேதியில் இருந்து துவங்கிய தவக்காலத்தில் பல்வேறு தவ முயற்சிகளை பக்தர்கள் மேற்கொண்டனர்.அசைவ உணவு தவிர்ப்பது, தேவையற்ற செலவினங்களை தவிர்ப்பது, மது, புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதை தவிர்ப்பது, எளிய வாழ்க்கை வாழ்வது, அனைவரிடத்திலும் அன்பு காட்டுவது, பகைவனையும் நேசிப்பது என, ஒழுக்கம், கட்டுப்பாடு சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.செலவினங்களை தவிர்த்த சேமிப்பின் மூலம் கிடைத்த தொகையை ஏழைகளுக்கு வழங்கினர். இந்த பண்புகளை வாழ்நாள் முழுக்க கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும்.பாவத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காக மனிதாக மண்ணில் வாழ்ந்த ஏசு, சாவை வென்றார். நம் வாழ்க்கையிலும் நீதி, சமத்துவம், மனித நேயம் உயிர்ப்பெற வேண்டும் என்பதைதான் ஈஸ்டர் பெருநாள் உணர்த்துகிறது என்றனர். திருப்பூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, பல்லடம் , காங்கயம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று காலை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனால் ஆலயங்கள் அனைத்தும் களை கட்டின.

    ×