என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மெழுகுவர்த்தி பேரணி
- வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.
- மணிப்பூர் மாநில மக்களின் துயர் நீங்க அருள்நிறை ஆலயத்தில் திருப்பலி நிறை வேற்றப்பட்டது.
புதுச்சேரி:
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.
இதனை வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தல பங்குத் தந்தை ஆல்பர்ட் துவக்கி வைத்தார். லூர்தன்னை பள்ளி தலைமையாசிரியர் ஆல்வின் அன்பரசு முன்னிலை வகித்தார். மாதா கோவில் வீதி, ஒதியம்பட்டு சாலை வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற வர்கள், மணிப்பூர் மாநில கிறிஸ்தவர்களின் துயர் நீங்கி, அங்கு அமைதி நிலவிட வேண்டுமென மெழுகுதிரி ஏந்தி செபமாலை செபித்தனர்.
இதன்பின்னர் மாதா திருக்குளத்தை சுற்றி ஊர்வலம் முடிவடைந்த பின்னர் ஆலய முற்றத்தில் பங்குத்தந்தை ஆல்பர்ட் தலைமையில் மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக மணிப்பூர் மாநில மக்களின் துயர் நீங்க அருள்நிறை ஆலயத்தில் திருப்பலி நிறை வேற்றப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்