search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kurutholai Gnayiru Rally"

    • தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது.
    • 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரிப்பர்.

    திருப்பூர் :

    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருவிழாவை யொட்டி கடை பிடிக்கப்படும் தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது. ஏசு கிறிஸ்து சிலுவை யில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த் தெழுந்தார் என்ற நம்பிக்கை தான் கிறிஸ்தவம். இதை நினைவு கூறும் வகையில் தான் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரிப்பர்.கடந்த பிப்ரவரி 21-ந்தேதி சாம்பல் புதனுடன், தவ க்காலம் துவங்கியது. தினமும் தேவலாயங்களில் ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் தியானிக்கப்பட்டு வருகின்றன.வெள்ளி தோறும் சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப் படுகிறது.

    பக்தர்களை ஆன்மிக பாதையில் வழி நடத்தும் வகையில் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ.., உள்ளிட்ட அனைத்து தேவாலயங்க ளிலும், சிறப்பு நற் செய்தி கூட்டங்கள் நடத் தப்பட்டன. இந்த தவக்கா லத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது. இதையொட்டி தேவாலய ங்களில் குருத்தோ லை பவனி நடத்தப்பட்டன. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்க ளில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக, வருகிற 6-ந் தேதி புனித வியாழன், 7ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப் படுகிறது. 9-ந் தேதி ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப் படுகிறது.

    ×