என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேசுவரம்"

    • ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
    • ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    மண்டபம்:

    வங்கக்கடலில் பலத்த சூறைக்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுபடகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

    அதன்படி இன்று ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    ராமேசுவரம் துறைமுக பகுதியில் திடீர் மீன்பிடி தடையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலை ராமேசுரம், ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.

    சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அதிகமாக கடல் கொந்தளிப்புடன் இருந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    • ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
    • அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.

    ராமேசுவரம்:

    புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரானதாகவும் கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருபட்ச காலத்தில் மேலுலகில் வாழும் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் ஆத்மா தன் குடும்பத்தினரை காண பூலோகம் வருவதாக இந்துக்களின் நம்பிக்கை.

    அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசிகளுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது. 

    பின்னர் புனித நீராடிய பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து முன்னோர்களின் பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்தின் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவி பட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

    • ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
    • மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 61 பேர் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட் டது.

    கைதான மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

    இதனால் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று 10-வது நாளாக ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. வேலைநிறுத்தத்தால் இதுவரை ரூ.15 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். 10 நாட்களாக நீடிப்பதால் வருமானமின்றி குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. இதனால் கடன் வாங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    இதே நிலை நீடித்தால் மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு தான் செல்ல வேண்டும். எனவே இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். வேலைநிறுத்தம் வாபஸ் பெறாவிட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கவலையுடன் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று மீனவர்களின் விடுதலை கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தங்கச்சிமடம் ரெயில் தண்டவாளத்தில் போராட்டக்காரர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் ராமேசுவரம்-தாம்பரம் ரெயில் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் அதன் பின் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதனிடையே இலங்கை சிறையில் உள்ள பாம்பன் நாட்டு படகை மீனவர்கள் ஒன்பது பேருக்கு தலா ரூ.3.50 கோடி (இலங்கை பணம்-இந்திய மதிப்பில் ரூ.ஒரு கோடி) கூடிய அபராதத்துடன் விடுதலை செய்து புத்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் பாம்பன் பகுதி மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வருகிற 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    • ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகம் மற்றும் பெங்களூருவில் இருந்தும் பொதுமக்கள் ஆடி அமாவாசை அன்று புண்ணிய தலமான ராமேசுவரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இதன்படி வருகிற 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    எனவே நாளை (புதன்கிழமை) அன்று சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேசுவரத்திற்கும், வருகிற 24-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • தொடர் விடுமுறையையொட்டி ராமேசுவரத்தில் இன்று குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்

    ெதன்தமிழகத்தின் பிர சித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்ேதாறும் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்தகடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

    இதன் காரணமாக ராமே சுவரத்தில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் காணப் படும். குறிப்பாக அமா வாசை, விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    இந்த நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமையான இன்று வழக்கத்தைவிட பக்தர்கள், சுற்றுலா பயணி களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    அதிகாலை முதலே அக்னி தீர்த்தகடலில் பெண்கள் உள்பட ஏராள மானோர் புனித நீராடி பின்னர் கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் ராமேசு வரத்தில் உள்ள தனுஷ் கோடி, அரிச்சல் முனை, அப்துல்கலாம் நினைவு மண்டபம் போன்ற பகுதி களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

    • ராமேசுவரத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடித்தேரோட்டம் நடந்தது.
    • பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதிஉலா வந்தார்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலில் கடந்த 13-ந் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, இரவில் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்து வருகின்றனர்.

    கடந்த 17-ந் தேதி ஆடி அமாசாசையன்று ராமர் தங்ககருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 19-ந் தேதி பர்வதவர்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதிஉலா வந்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான ஆடித்தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) விமரிசையாக நடந்தது. முன்னதாக ராமநாத சுவாமி-பர்வதவர்தினிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கா ரங்கள் நடைபெற்றன. காலை 9.30 மணியளவில் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்த பின் தேரோட்டம் தொடங்கியது. பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக ராமேசுவரம் கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.
    • உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார்.

    ராமேசுவரம்

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை ராமேசுவரத்தில் நேற்று தொடங்கினார். இதன் தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தின் பாரம்பரி யத்தையும், பெருமையையும் பதிய வைக்கும் பயணமாக அண்ணாமலையின் நடைபயணம் அமையும். இது வெறும் அரசியல் சார்ந்த பயணம் அல்ல. தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்கும் பயணமாக இருக்கும்.

    ஏழைகளில் நலன் கருதி முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது. அதனை மீண்டும் செயல்படுத்த இந்த நடைபயணம் வழிவகுக்கும். தமிழ் மொழியின் பெருமை யை பிரதமர் மோடி உலகெங்கும் பறை சாற்றி வருகிறார்.

    ஐக்கிய நாடுகள் சபை, ஜி20 மாநாடு என உலக ளவிலான நிகழ்வுகளில் தமிழ் மொழி பெருமை குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழர்களின் பாரம்பரி யத்தை பாதுகாக்க இலங்கை யில் ரூ.120 கோடி மதிப்பில் கலாச்சார மையம் அமைக் கப்பட்டுள்ளது.

    பாரதியாரின் பிறந்தநாள் இந்திய தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது என எண்ணற்ற தமிழ் பணிகளை பிரதமர் மோடி செய்துள்ளார்.

    நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக தமிழகத்தின் தி.மு.க. அரசு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. அமலாக்கத் துறையால் ஊழல் வழக்கில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப டுகிறார். அவரை பதவியில் இருந்து நீக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிக்கிறார். அதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்.

    மத்தியில் 10 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. மக்களிடம் வாக்கு கேட்க செல்லும் போது 2ஜி, காமன்வெல்த், ஹெலிகாப்டர், இஸ்ரோவில் செய்த ஊழல்கள் தான் நினைவுக்கு வரும். இலங்கை தமிழர்களை அழிக்க கார ணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி.

    உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார். அவரை போல் அவரது கூட்டணி தலைவர்களும் தங்களது குடும்ப உறுப்பினர்களை முன்னிலைப் படுத்து கின்றனர். அண்ணா மலையின் இந்த நடை பயணம் முடியும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும். வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அதிக எம்.பிக்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆர். சி. பால் கனகராஜ், வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் வி. வணங்காமுடி, மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் ராமசாமி, மற்றும் மாநில செயலாளர்கள், ஆர். பரமசிவம், பா. வஜ்ரவேலு, எஸ். திவாகர், ஆர். சி. கார்த்திகேயன், சி. எம். சஜு,

    ராமநாதபுரம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேஷன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ். நாகேந்திரன், ஓ.பி.சி அணி மாநில செயலாளர் கவுன்சிலர் முருகன், பட்டியணி முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன், உள்ளபட பலர்.

    முதுகுளத்தூர் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் அணி செயலாளர் டாக்டர் ராம்குமார், பா.ஜ.க. மாநில ராணுவ அணி செயலாளர் எம்.சி. ரமேஷ்,

    மாநில பொதுச் செய லாளர் ராம.சீனிவாசன், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர்கள் சுப்பா நாகலு, ஓம்சக்தி தனலட்சுமி, கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் காந்திகுமாரி, மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் சரவணகுமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மதுரை காளவாசல் மண்டல பொதுச்செயலாளர் ஸ்ரீராம், ஊடக பிரிவு மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமேசுவரம் பகுதியில் 2 நாட்கள் மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்தில் அரியமான் முதல் ராமேசுவரம் வரை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (7-ந்தேதி) மற்றும் மறுநாள் (8-ந்தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் வருமாறு:-

    அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்கா யர் பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் , நீதிமன்றம், திட்டக்குடி, கோவில், வேர்க்கோடு, புதுரோடு தங்கச்சிமடம், ஆத்திக்காடு, சத்யா நகர், செம்ம மடம், மெய்யம்புளி.

    பொந்தபுளி, ராமர் தீர்த்தம் வடக்கு மற்றும் தெற்கு, மார்க்கெட் தெரு, பருவதம், பாரதி நகர், முருங்கை வாடி, எம் ஆர் டி நகர், கரையூர், மல்லிகை நகர், ெரயில்வே பீடர் ரோடு, பேக்கரும்பு , அரி யான் குண்டு, பகுதி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இதேபோல் பட்டினம் காத்தன் துணை மின் நிலையத்தில் உள்ள ராமநாதபுரம் உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் நாளை (7-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவனூர் சுற்றியுள்ள பகுதிகள், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவ னேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வண்ணிவயல், கவரங்குளம். தேவிபட்டினம் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல் ,சிறுவயல் , நரியனேந்தல்,மரப்பாலம், இலந்தை கூட்டம்.

    திருப்பாலைக்குடி சுற்றியுள்ள பகுதிகள், பொட்டகவயல், கருப்பூர், சம்பை,வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமானூர், சோழந்தூர். காட்டூரணி சுற்றியுள்ள பகுதிகள், ஆர்.கே. நகர், எம்.ஜி.ஆர் நகர், ரமலான் நகர், மேலக்கோட்டை, மாடக் கோட்டான், இளமனூர், பேராவூர்.

    தில்லைநாயகி புரம், பழங்குளம், திருப்புல்லானி, அம்மன் கோவில், தெற்கு தரவ, கருங்குளம், மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்குதரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்க னேந்தல், பால்கரை, நாக நாதபுரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    • எடப்பாடி முதல்-அமைச்சராக வேண்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜல பிரதட்சனம் செய்தார்.
    • தீய சக்தி கூடாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா ஜல பிரதட்சணம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடை கோடி தொண்டனுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம் அ.தி.மு.க. நல்லாட்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்பதற்காக இந்த வேண்டுதலை நிறைவேற்றினேன்.

    மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு கட்டுப்படுத்த முடியாத விலைவாசி ஏற்றம், கள்ளச்சாராயம், சாதிக் கலவரம், வழிப்பறி, கொலை, கொள்ளை, சட்ட ஒழுங்கு சீர்கேடு என்று ஒட்டுமொத்த தீய சக்தி கூடாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எம்.ஜி.ஆர். அம்மா அருளாசியோடும் மீண்டும் முதலமைச்சராக ஆவார் என்றார்.

    • கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
    • ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

    இந்த நிலையில், இன்று சர்வ அமாவாசையை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்துக்கு கார், பஸ், வேன், ரெயில்கள் மூலம் குவிந்தனர்.

    அவர்கள் அதிகாலையில் இருந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப்பணி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் வரும் பக்தர்கள் இடையூறு இன்றி நீராடுவது, தரிசனம் செய்வது உள்ளிட்ட வசதிகளை செய்திருந்தனர். 

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரத்தில் விநாயகர் சிலை விற்பனை மும்முரம் நடந்தது.
    • பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை வைத்துள்ளனர்.

    ராமேசுவரம்

    நாடு முழுவதிலும் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டா டப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று சிலையை வைத்து வழிபாடு நடத்தி நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    இந்த நிலையில், ராமேசுவரத்தில் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்திடும் வகையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வைக்கப் பட்டுள்ளது. இதில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த வியாபாரிகள் செந்தில் மற்றும் ராமன் ஆகியோர் 800 விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய கொண்டு வந்து பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை வைத்துள்ளனர்.

    கண்மாய் மணல் மூலம் தயாரிக்கப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கும் போது மீன்களுக்கும், நீரின் தன்மை மாசுபடாமல் இருக்கும் வகையில் வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தனர். வீடுகளில் வழிபாடு செய்திடும் வகையில் பல வர்ணங்களில் சிறிய அளவி லான சிலைகள் விற்ப னைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    • திடீரென கடல் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை உள்வாங்கியது.
    • கடந்த சில வருடங்களாக கடல் அடிக்கடி உள்வாங்கும் நிகழ்வு நடக்கிறது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

    அதன்படி இன்று காலை பக்தர்கள் வழக்கமாக அக்னி தீர்த்த கடலுக்கு நீராட வந்தனர். அப்போது திடீரென கடல் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை உள்வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தது. பக்தர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் சேறும் சகதியுமாக காணப்பட்டது. ஆனால் சில நிமிடங்களில் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு மாறியது. இதையடுத்து பக்தர்கள் புனித நீராடினர்.

    இதேபோல் ராமேசுவரத்தில் உள்ள ஓலைக்குடா, சங்குமால் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டியது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில வருடங்களாக கடல் அடிக்கடி உள்வாங்கும் நிகழ்வு நடக்கிறது. அதிகாலையில் கடலில் நீரோட்டம் மாறுபடுவதால் இதுபோன்று நடக்கிறது. சில நிமிடங்களில் கடல் இயல்பு நிலைக்கு மாறிவிடும். இது வழக்கமான ஒன்றுதான் என்றனர்.

    கடல் உள்வாங்கியது உள்ளூர் மக்களுக்கு வழக்கமான நிகழ்வுதான் என்றாலும் வெளியூரில் வந்த சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்தனர். 

    ×